பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் தொல்காப்பியம் குறித்த நேர்காணல்…
Вставка
- Опубліковано 21 вер 2024
- மதுரையில் அமைந்துள்ள நான்காம் தமிழ்ச்சங்கத்தில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 151 ஆம் பிறந்தநாள் விழா 21.03.2017 காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவுற்றதும் இந்த விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனார் அவர்களிடம் தொல்காப்பியம் குறித்த அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டினேன். என் வேண்டுகோளை அன்புடன் நிறைவேற்றினார்கள்.
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனார் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேராற்றலும், பெரும்புலமையும் பெற்றவர்கள். சங்க நூல்களை எழுத்தெண்ணிக் கற்றவர்கள். இணைசொல்ல முடியாத தமிழறிவுபெற்ற இப்பெருமகனாரின் ஆற்றொழுக்கான உரையினை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். இந்த ஒளிப்பதிவு முயற்சிக்கு அருந்துணை செய்த மதுரை, நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் வழக்குரைஞர் ச. மாரியப்ப முரளி அவர்களுக்கும், பெரியார் பற்றாளர் திரு. பி. வரதராசன் அவர்களுக்கும், எங்களின் படப்பிடிப்புக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையவன் ஆவேன். இந்தக் காணொளியைத் தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பரப்புவோம்.
அருமையான காணொளி ஐயா, மிக்க நன்றி! உங்கள் சேவையை உளமார பாராட்டுகிறோம்! மேலும் தொல்காப்பியம் கற்க விழைபவர்கள் எப்படித் தொடங்கலாம் என்று சிறு குறிப்பு தர முடியுமா?
மிக அருமை. இது போன்ற உரையாடல்களை காணும் போது தான் ' தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றை பொய்யாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பது நினைவில் வருகிறது. இந்த மொழி விரைவாக அழிவை சந்திக்கும் மொழி வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. தொன்மை மாறாமல் இளமை ததும்பும் நம் மொழி வாழ எல்லோரும் பாடுபட வேண்டும். இந்த நல்ல உரையாடலுக்கு மீண்டும் நன்றி, இளங்கோவன் அய்யா.
அருமையான உரை. கொடுத்தவர்க்கும் அதை பகிர்ந்து கொண்டவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பயன்மிக்க காணொலி ... அருமை.. இளங்கோவனாருக்குப் பாராட்டுகள் ...
தங்களிடம் பயிலவில்லையே என்று மனம் ஏங்குகிறது. அருமையான பதிவு
ஐயாவின் ஆசிரியர் அண்ணாசாமி பற்றிய நினைவு அருமை.
அவரது தமிழ்ப் பற்று; விவரிக்க சொற்களை எங்கே தேடுவது? பாகலைப் பற்றிய இனிப்பாகச் சொல்லியதும் அருமை.
நன்றி சகோதரரே.
மிக அருமையான பதிவு நன்றி ஐயா மிக்க நன்றி
Elangovan & Balasubramanian this is a great discussion. Long live your service
மிக அரிய பொக்கிஷம்
மிக மிக அருமையான நிகழ்பட வுரை! மிக மிக நன்றி. வாழ்த்துகள் முனைவர் இளங்கோவன்.
தொல்காப்பியச் சிறப்பினைச் செம்மொழி அறிஞர் முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் விளக்கிய முறை மிக மிக அருமை. தமிழர் அனைவரும் கேட்டுப் பயன்பெறவேண்டும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றி. - - இந்திய அரசின் தேசிய விருதாளர் முனைவர் மு. செல்வசேகரன்
நன்றி ஐயா
மிகச் சிறப்பான கருத்துக்களை தெளிவாக அறிந்து கொண்டேன்
தொல்காப்பியம் முறையாக கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது
தயவுசெய்து துணை தலைப்புகள் கூட வீடியோவில் சேர்க்கவும் ..அது இன்னும் அதிகமான மக்களை சென்றடையும்
அய்யா.. தங்களுடைய எழுத்துகளால் நான் பெரிதும் நெகிழ்ந்தேன். தங்களின் இளைஞர்களின் ஒளிமயமான எதிர் காலத்துக்கு என்ற புத்தகத்தை பொக்கிஷம் போல் வைத்திருந்தேன். இன்று அதை காணவில்லை.. மீண்டும் கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்....
பல தரமான நூல்களைப் படைத்த திறமைசாலி
Pls can you specify books authored by him?.. Thank you
🙏🙏🙏
🌹🙏🌹
Wonderful and meaningful speech. Depth of knowledge of Tholkappium is amazing. Keep up the good work.
உங்களைப்போன்றோர்களின்பேச்சைக்கேட்பதேஎன்போன்றவர்களின்பாக்யம்
சூத்திரம் என்பது ஒருபொருள் குறித்தன (பொ.செய்.சூ.470,471) நன்னூல் பல சூத்.பொருள் கூறும் குறிப்பினப் பா அதை நூற்பா எனலாம். ஆனால் தொல். சூத்திரத்தைக் குறிப்பிட நூற்பா எனக் கூறுவதைத் தவிர்த்துச் சூத்திரம் என்றே கூறவும்.நன்றி.
மிக அரிய பொக்கிஷம்