சிவபுராணம் |Sivapuranam|Manikkavacakar|Sooryanarayanan

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • An Official UA-cam Channel Of "Soorya Narayanan"
    Click To Subscribe / @sooryanarayanan
    Song: #sivapuranam
    Composer: #manikkavasagar
    #tamil #trending #mahadev #sooryanarayanan #bhakti
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
    திருச்சிற்றம்பலம்!!!

КОМЕНТАРІ • 774

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 Рік тому +339

    அருமை கண்ணே. பாடல் இடையே ஒலிக்கும் அந்த வீணை நாதம் உனது தெய்வீக குரலோடு போட்டி போட்டு தோற்று போகிறது கண்ணா. எங்களது ஆன்மீக வாழ்வு உனது பாடல்களால் புத்துணர்வு பெற்றதையா.. எல்லா புகழும் உன்னை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கே... வாழ்க பல்லாண்டு மகனே.....

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Рік тому +10

      🙏🔔🙏வெகு அருமை ஜீ🎉வீணை மிருதுவான தாக👌 கரம் கோர்த்து நடைபோடும் தோழமையாக, குரலோடு..ஆஹா.மஹாகவிகாளிதாசன்ப ட கொடுமுடித்தாய்..சிம்மக்குரலோனோடும் மற்றும் அக்காலத்திரைத்திலகங்கள்பலரோடும் கேட்டு மயங்கி னேன்🐦🙏🐤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍⚛️

    • @lingamst1374
      @lingamst1374 Рік тому +4

      சிறப்பு நிகழ்வுகள்

    • @mariyappanmuniyappan3380
      @mariyappanmuniyappan3380 Рік тому +3

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @lakshmib5037
      @lakshmib5037 Рік тому +1

      U

    • @hemasudhakarbabu9591
      @hemasudhakarbabu9591 Рік тому

      ​@@lingamst1374😊😊

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Рік тому +123

    சூரியா நீங்க இக்கால திருஞான சம்பந்தர் கண்ணு வாழ்க வளர்க 🙏❤️

  • @SivaSiva-tj6fw
    @SivaSiva-tj6fw Рік тому +88

    இக் கலியுகத்தில் வீரீட்டுஎழுந்த வித்தக சிவகுமாரனே வாழ்க நீ

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 11 місяців тому

      ❤❤❤வாழ்த்துக்கள்

  • @kasthurisekaran3099
    @kasthurisekaran3099 Рік тому +44

    கண்ணே உன் குரலில் திருவாசகத்தை கேட்டு மெய்மறந்து போனேன்.அந்த ஈசனே உன் மழலை குரலில் திருவாசகத்தை கேட்டு மயங்கி இருப்பார்.இறைவன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும் செல்லம்

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Рік тому +53

    கலியுக திருஞான சம்பந்தர்.வாழ்க வளம் பெறுக சூர்யா..இந்த இளம் வயதில் சிவபுராணம் பாடும் பாக்கியம் பெற்ற அருள் குழந்தை நீ.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +105

    இந்த குழந்தைக்காக பதிவை மேற்கொண்ட அனைவருக்கும் சிவன் பாதம் அன்பான வணக்கம்,

  • @kiruba.s210
    @kiruba.s210 8 місяців тому +3

    நன்றி வணக்கம் உன் மைதான் என்று உங்கள் சொந்த

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Рік тому +111

    எல்லா குழந்தைகளும் இந்த ஒரு பாடலை மட்டுமாவது கற்றுக் கொள்ள வேண்டும்

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 Рік тому +19

    எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைதிடாது தம்பி 🙏🙏🙏 தெய்வ குழந்தை யா நீங்க 🙏🙏🙏

  • @radhakavi6724
    @radhakavi6724 4 місяці тому +7

    தெய்வத்தின் அருள் பெற்ற செல்வமே எம்மை யும் உன்னோடு அழைத்து செல்லு கிறாய் அவன் அருள் பெற வாழ்க வாழ்க🙏💕

  • @devotional5596
    @devotional5596 Рік тому +74

    பக்தியோடு உனது அருமையானகுரலில் சிவபுராணம் கேட்க என்ன தவம் செய்தேனோ ❤❤❤🙏🙏🙏

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому +11

    தம்பி வணக்கம் 🙏
    இலங்கையின் பொன் சுந்தரலிங்கம் ஐயா பாடிய திருவாசகப் பாடலை கேட்டு மனம் உருகி தானும் பாட வேண்டும் என்று நினைத்து பாடிவிட்டாய் என நினைக்கிறேன்......
    இந்த சிறு வயதில் உனது ஞானம் பெருமை கொள்ளத்தக்கது.....
    ஞானசம்பந்தப் பெருமான் சிறு வயதில் உன்னைப் போல பாடினரோ என் நினைக்கிறேன்......
    வாழ்க வளர்க....
    ஓம்குமார் மதுரை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Рік тому

      திரு பொன் சுந்தரலிங்கம் அய்யா அவர்களே மானசீக குரு இந்த சிவபுராணம் 🙏

    • @kanapathippillairajenthira5288
      @kanapathippillairajenthira5288 3 місяці тому

      😊😅😢🎉😂

    • @kanapathippillairajenthira5288
      @kanapathippillairajenthira5288 3 місяці тому

      ஓம் நமசிவாய பாடல் இனிமை தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @narayanaswamip91
    @narayanaswamip91 8 місяців тому +12

    என்ற பொழுதின் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியமேபாக்கியம் ❤

  • @seetharamansambasivam8483
    @seetharamansambasivam8483 9 місяців тому +19

    இனிது இனிது திருவாசகத் தேன் இனிது, உன் குரலில் இனிதோ இனிது 🙏🏼

  • @thavamaniramasamy
    @thavamaniramasamy Рік тому +41

    சொல்ல வார்த்தைகள் இல்லா நெகிழ்ச்சி செல்லமே...
    பக்தியில் நெக்குருகி கண்கள் கலங்க கேட்டு கொண்டிருக்கிறேன் கண்ணே..
    சிவாய நம.

  • @EzhilraniS-df8dr
    @EzhilraniS-df8dr Рік тому +8

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என உம்மை பார்த்து தெளிந்த து என் மனம்

  • @sriramsma
    @sriramsma Рік тому +30

    கருவில் திருவருள்‌ பெற்ற எம் சுடரே...வாழ்க...சிவ சிவ

  • @kannammalisha346
    @kannammalisha346 9 місяців тому +9

    கண்ணா உன் பாட்டில் இறைவன் மிகவும் சந்தோஷமாக உள்ளதை என் மனம் நினைவு கூர்கிறது.

  • @18stepssolai22
    @18stepssolai22 Рік тому +31

    ஈசன் அருளுடன் தொடரட்டும் உந்தன் இறைப்பணி....

  • @NandhaKumar-dm3hr
    @NandhaKumar-dm3hr Рік тому +17

    சொல்வதற்கு ஒன்றுமில்லை எம்பெருமான் ஈசனை உனது குரலில் கண்டேன்

  • @kasthurirangan137
    @kasthurirangan137 Рік тому +17

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது .
    இறையருள் உனக்கு என்றும் உன் அருகே இருக்கே வேண்டுகின்றேன்.

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 Рік тому +28

    குருமணி தன் தாள் வாழ்க என்று வர வேண்டும். இந்த சிறிய வயதில் இந்த குழந்தை எவ்வளவு நன்றாக பாடுகிறான்
    .எல்லாம் சிவன் செயல்
    சிவாயநம 🙏🙏🙏

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Рік тому +17

    என் தங்கமே கேட்கக்கூடும் சிவபுராணம் கண்களில் நீர் வழிந்தது கொண்டே தான் இருக்கிறது இறைவனை முழுமையாக உணர்கிறேன் நீ நீடுழி வாழ லலிதான்பிகை அருள் எப்பொழுது ம் இருக்கும் துணையாக ❤❤❤

  • @sankarlingam3399
    @sankarlingam3399 9 місяців тому +13

    பால மணிவாசகரே நின் புகழ் இவ்வையகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian7755 Рік тому +22

    அற்புதம் கண்ணே பதினாறு வகை செல்வங்களோடும் இறைவன் உங்களை வாழவைக்க ப்ரார்த்திக்கிறேன்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Рік тому +7

    குழந்தைகள் மட்டுமால்ல பெரியோர்களும் பின்பற்ற வேண்டும் வேண்டும்
    வாழ்க தமிழுடன்

  • @selvapandiyan7959
    @selvapandiyan7959 9 місяців тому +2

    சிவாய நமக, தங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையும் நீங்களும் இவ்வுலகம் உள்ளவரை வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு. சிவாய நமக, எஸ்பி செல்வ பாண்டியன் தலைவர், பாரதமாதா கோவில் ,பாரத பண்பாட்டு அறக்கட்டளை. விருதுநகர்.

  • @MuthuMmuthu-mf1qz
    @MuthuMmuthu-mf1qz 8 місяців тому +4

    எனக்கு இப்படி ஒரு மகன் பிறந்தா புன்னியம் ஓம் நமசிவாய

  • @selvirajendra8884
    @selvirajendra8884 Рік тому +7

    நான் தஞ்சை அருகில் பிறந்தும் இக்கோயில்களை உங்கள் பாட்டு கேட்டு அறிந்து கொண்டேன்.நன்றிகள் பல.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்,ஆரோக்யம்,ஐஸ்வர்யம்,கல்வி,எல்லாம் கொடுத்து உங்களை காக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Рік тому

      மிக்க நன்றி 🙂🙏

    • @kesavangovidasamy
      @kesavangovidasamy 4 місяці тому

      பல்லாண்டுகள்.வாழ்க
      வாழ்கவே🙏🙏🙏👌

  • @ttjeganathan26
    @ttjeganathan26 Рік тому +9

    ❤சிந்தனைகள் என்றும் வீனாகா. செல்லக்குட்டி சூரியநாராயணனா என்றும் உன் குரல் கேட்டேன். சர்தோஷம் .நல்ல ஆத்மா சிவனே என்று நினை.

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 8 місяців тому +5

    மனம் கசிந்துருகி கண்ணில் நீர் வடியசிவன்பால் இனைந்து விட்டது 🙏🌷👌

  • @aksankarraj977
    @aksankarraj977 7 місяців тому +1

    🙏🙏🙏🙏 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏

  • @chellamuthugounder9242
    @chellamuthugounder9242 Місяць тому +1

    அருமை அருமை வெகு அருமை வாழ்க வளர்க வானுயரபுகழ் பெற்று இந்துமதம் பரப்பும் சிவனடியாராக உலகையே வலம் வர இறைவனை வணங்கி உன்னை வாழ்த்துகிறேன் 😊

  • @boopathyr5862
    @boopathyr5862 Рік тому +11

    அருமையிலும் அருமை
    என்னவென்று சொல்ல
    எம் பெருமான் லீலை
    குழந்தையும் தெய்வமும் ஒன்று
    உனது நாதம் எட்டு திசையும்
    பறைசாற்றும் வணங்குகிறேன்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @amuthaa87
    @amuthaa87 10 місяців тому +6

    இறைவன் அருள் பரிபூரணமாக உனக்கு உள்ளது சூரியநாராயணா, மனம் நிறைந்தது , வாழ்க வளமுடன் ❤😊

  • @janagalakshmi-hu1ll
    @janagalakshmi-hu1ll Рік тому +30

    இந்தியாவின் முத்தே கிருபானந்த வாரியாரே நீ மனிதனல்ல அறிவு பெட்டகம் ❤❤❤❤

    • @devarajm7445
      @devarajm7445 11 місяців тому

      😀👌👍🙏🙏🙋❤❤JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS
      boyer boyer 👍 boyer 👍 🙏 jeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp

  • @sasikalasasikala8053
    @sasikalasasikala8053 Рік тому +13

    என்னுள்ளிருந்து உங்கள் குரலை அனுபவித்தான் என் அப்பன் சிவன்

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU Рік тому +17

    கேட்கும்போது மனம் உருகும் நமசிவாயம் அம்மையப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @leelanatrajan7417
    @leelanatrajan7417 Рік тому +31

    ஓம் நமசிவாயம். இந்தக்குழந்தை எல்லாம் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 Рік тому +5

    சிவாய நம

  • @வேடந்தாங்கல்

    சக்திவேங்கடேஷ் கலியுகஞானசமபந்தரேநீவீர்வாழ்க

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Рік тому +25

    மிக அருமையாக தேனாய் தித்தித்தது 👌சிவன் அருள் பெற்று ,வாழ்க பல்லாண்டு 🙌வாழ்க நலமுடன் 🙏வளர்க சிவ தொண்டு🙏🎖️🧁🍰🍨🥭🌟

  • @narayanasamyarc9144
    @narayanasamyarc9144 Місяць тому

    நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் குறைவற்ற ஆரோக்கியம் பெற்று வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 9 місяців тому +3

    சூர்யாவின் தெய்வபற்று வாழ்க வளர்க என்றும் அன்புடன்
    ஓம் நமசிவாய

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Рік тому +9

    ஈசனின் பேரருள் எப்பொழுதும் உன்னோடு இருக்க அவன் தாள் பணிகிறேன்! கண்ணா நீ வாழ்க🙏🙏🙏வாழ்க👍👍👍👍👍👍😁

  • @subbalakshmimahalingam8789
    @subbalakshmimahalingam8789 Рік тому +5

    சொல்ல வார்த்த்தைகளில்ல்லை கண்களில் நீர் பெருக்கு வாழ்க பல்லாண்டு

  • @helenenagamouttou8248
    @helenenagamouttou8248 Рік тому +23

    அருமை மகனே அருமை உனது குரலும் பாடலும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் இனிதே உனது
    இறைபணி

  • @parvathykugan1285
    @parvathykugan1285 25 днів тому

    🙏சில புராணம் உன் நாவில் தவழ்ந்து இனிமை ஐயா 🔱

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Рік тому +13

    ❤வாழ்க நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் உங்களுக்கு இறைவன் அருள் எப்பொழுது ம் இருக்கும் ❤

  • @aruljothi5417
    @aruljothi5417 Рік тому +13

    திருச்சிற்றம்பலம் உங்களது இறை பணி தொடர மேலும் மேலும் ஓம் நமசிவாய சிவாய நமஹ ❤❤❤

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 10 місяців тому +4

    Kettu kondu irukalam Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💛💛💛💛💛💛💛💛💛❣️❣️❣️❣️❣️❣️❣️🎈🎈🎈🎈😍😍😍

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Рік тому +5

    அருமை கண்ணா உன் குரலுக்கு சிவனே வருவார்

  • @Erajes22Erajes22
    @Erajes22Erajes22 2 місяці тому

    சுாியநாராயணன் வாழ்க வளமுடன் ❤🎉😊

  • @Siva_Aalayangal
    @Siva_Aalayangal Рік тому +13

    போற்றி ஓம் நமசிவாய
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏

  • @srimachallenge
    @srimachallenge 2 місяці тому

    நான் எத்தனையோ தடவை சிவபுராணம் கேட்ருக்கேன் ஆன இந்த தம்பி பாடுனத கேட்டு என் மனம் உருகி கண்கள் கசிந்து உடம்பு சிலிர்த்து விட்டது சிவன் அப்பா வந்து என்னை ஆசிர்வாதம் செய்த மாதிரி ஒரு உணர்வு 🙏

  • @bhuvanaeswari8216
    @bhuvanaeswari8216 8 місяців тому +4

    தங்கம்மே உனக்கு ஆண் டவன் எல்ளாபுகலும் தரவேண்டும் உன் னைபார்த்து நான்திருப்புகழ் கற்ருகொண்டேன சாமி❤ வாழ்க வளமுடன்

  • @SakthiVel-h1w
    @SakthiVel-h1w Рік тому +2

    சிவாயநமஹநீரேஇறறைவனின்பிள்ளைசிவசிவ

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Місяць тому +2

    மிகவும் அற்புதமான பதிவு... காலையிலே எழுந்தவுடன் மனதிற்கிற்கு இனிமையான தெய்வீக குரலில் சிவபுராணம் கேட்டது மனதில் ஏதோ இனம்புரியா மகிழ்ச்சி..... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻.. தங்களின் தெய்வீக பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்..

  • @பொன்முத்துஆ

    தங்கமடி நீ எனக்கு சிவாய நம

  • @eswarim9482
    @eswarim9482 9 місяців тому +2

    நமஸ்காரம் குழந்தை மிகவும் சந்தோஷம் நீ கடவுளின் வரம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @manikandan1689
    @manikandan1689 2 місяці тому

    ஓம் நமச்சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @suriakalakarunamoorty3072
    @suriakalakarunamoorty3072 Рік тому +3

    2:15 ஈசன் அடி போற்றி.

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 3 місяці тому

    🎉தினமும்உனதுகானம்
    கேட்டுசிவனருள்பெற
    வணங்குகிரேன்வாழி
    வாழியவே. தம்பி🙏🙏🙏

  • @palanivel8376
    @palanivel8376 Рік тому +6

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 10 місяців тому +2

    Arputham arputham arputham Om Namah Shivaya Shivaya Namah Om super super Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SVengadaramanan
    @SVengadaramanan Рік тому +2

    வணக்கம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்.

  • @LathaKrishnamoorthy-s3m
    @LathaKrishnamoorthy-s3m Рік тому +2

    வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் சி

  • @panchanathantambaram2001
    @panchanathantambaram2001 3 місяці тому

    அருமை. . அந்தக்கால சம்பந்தரை உன் உருவில் வந்து உரு கி. பாடும் பாடலைக் கேட்டு பரவசமானேன். வாழ்க! வளமும் நலமுடனும் பஞ்சநாதன் ராஜகீழ்பாக்கம்.
    கிப்

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Рік тому +2

    என் அப்பன் ஈசனின் குழந்தை

  • @kanagasabai1734
    @kanagasabai1734 Рік тому +2

    சிவா

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Рік тому +2

    வாழ்க வாழ்க

  • @parameswaria5294
    @parameswaria5294 Рік тому +2

    தங்கம் உனக்கு என் ஆசிகள் பலகோடி!!!

  • @bharathidasang6965
    @bharathidasang6965 Рік тому +2

    ,வாழ்க வளமுடன்

  • @muthumeena8768
    @muthumeena8768 6 місяців тому +1

    Vahzhavalamuan, thiruchitrambalam 🙏

  • @andrewspandian5802
    @andrewspandian5802 Рік тому +2

    தெய்வீக ராகம் இனிய

  • @swathimahadevan934
    @swathimahadevan934 7 місяців тому +1

    கேட்கக்கேட்ககண்களில்நீர்பெருகிஉடல்சிலிர்க்கிறது. உனதுமதுரமானகுரலால்உன்உள்ளிருந்து ஈசன்என்னுள்ளேபுகுந்ததைஉணர்ந்தேன்
    வாழ்கவளமுடன், 🙏💐🥀கவிஞர். திருமதிசரோஜாமகாதேவன்.புதுப்பெருங்களத்தூர்.

  • @KrishnaKumar-ov2nn
    @KrishnaKumar-ov2nn 4 місяці тому

    இறை பனி உலகம் எங்கும் ஒலிக்கட்டும் பல பல தலமுறைகள்

  • @birunthaselva3285
    @birunthaselva3285 4 дні тому

    அடியே னுக்காக சேந்தனை கந்தனை பாடல் உங்கள் குரலில் கேட்க திருவருள் கிடைக்குமா

  • @LalithaLali-gs2ex
    @LalithaLali-gs2ex Рік тому +2

    தெய்வம் தந்த கோயில்

  • @EhanayakyLagugumar
    @EhanayakyLagugumar 4 місяці тому

    குழந்தையே உன்பாடல் மூலமாவது கோயில்களைப் பார்க்கும் பலன் பெற்றேன் நன்றி.

  • @parimaladevi8760
    @parimaladevi8760 6 місяців тому +1

    கண்ணே உன் குரல் அருமை குட்டி முருக உன் அடிமை அப்பா

  • @andrewspandian5802
    @andrewspandian5802 Рік тому +2

    தெய்வீக ராகம்இக்குழந்தைபையனின்நாவில்உள்ளதுஇனிமறைந்தடிஎம்எஸ்இடத்தைநிரப்புவார்வாழ்கஅவரின்இசைஉலகபயணம்byartdTeacherTmgMdu

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Рік тому +7

    கருவிலே திருவுடைய குழந்தை வாழ்த்துக்கள் ஐயா

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Рік тому +4

    அருமையான பதிவு வாழ்க வளமுடன். நமசிவாய வாழ்க.

  • @swaasagamrathnakumar8535
    @swaasagamrathnakumar8535 Рік тому +4

    சுவாசகம்🙏காஞ்சி மகாபெரியவர் சொன்ன தெய்வத்தின்குரல்🙏

  • @thenmozhivadamalai9371
    @thenmozhivadamalai9371 6 місяців тому +1

    வாழ்க வளத்துடன் சூரியா

  • @soolammobile8280
    @soolammobile8280 7 місяців тому +1

    சிவனாருள் பெற்று வளமுடன் வாழ்க

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 5 місяців тому +1

    அவனிதனிலேபிறந்து சிவபுராணம்தனிலேவளர்ந்து எங்களை ஆட்கொண்ட சூர்யநாராயணாநமஸ்காரம்❤🎉

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  5 місяців тому

      மிக்க நன்றி 😀🙏🙂

  • @perumalmurugesan4550
    @perumalmurugesan4550 6 місяців тому +1

    அருமை செல்லமே ❤⚘️👌

  • @shankarsongs9374
    @shankarsongs9374 11 місяців тому +1

    En makane sivane née vazhga

  • @premilasairamchander9446
    @premilasairamchander9446 Рік тому +14

    Blessed child Surya..great rendition of Divine padigam.. மிக அருமையான, ஆழமான குரலும், உச்சரிப்பும் அவருக்கு வரபிரசாதம்..அற்புதமான பதிவு.. ஈசனின் அருள் என்றென்றைக்கும் தங்களை வழி நடத்தும்..வாழ்க வளமுடன் 🕉️🪷🌺🌹🌷🙏

  • @SenthilKumar-px2eh
    @SenthilKumar-px2eh Рік тому +1

    அவனருளால் அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை செப்பிய சிவக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
    வணக்கங்கள்.
    சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk Рік тому +5

    ஓம் நமசிவாய ஓம்சிவாயநமஹ அருமை அருமை வாழ்த்துக்கள் வாழக வளமுடன்

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Рік тому +4

    சூர்யா குரலில் சிவபுராணம் கேட்டேன் அமிர்தம் அற்புதம் ❤❤❤❤❤❤❤

  • @murugesankrishnamoorthy8848
    @murugesankrishnamoorthy8848 2 місяці тому

    நமச்சிவாய வாழ்க
    என்று பாடவேண்டும்.
    முதல் வரி
    நமஷிவாய என்று
    பாடுவது பிழையாகும்.

  • @kidsmaze1132
    @kidsmaze1132 Рік тому +1

    மாணிக்கவாசகரின் மறுபிறப்பு 🙏🙏🙏

  • @CoolthayaV-te1mk
    @CoolthayaV-te1mk 6 місяців тому +1

    Theiva kural magane unnaku😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @natashasantha7516
    @natashasantha7516 Рік тому +1

    அருமை‌என்‌செல்லமே

  • @sstech8488
    @sstech8488 Рік тому +1

    ஐயா சாமி நீ தவத்திரு அருணகிரி நாதர் ஐயா மறுபடியும் வந்துள்ளார் உன் வடிவில். இல்லை முருகன் பெருமான் வந்து விட்டாரோ என என் உள்ளம் சொல்கிறது. உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஓம் சரவண பவ!!

  • @jayanthir9162
    @jayanthir9162 Рік тому +1

    கணணா நான் உன்னுடைய ரசிகை உன் குரலுக்கு நான் அடிமை நீடுழி வாழ்க