105. பாகப்பிரிவினை சம்பந்தமான கேள்விகள் & பதில்கள் Partition deed - Questions & Answers

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2021
  • பாகப்பிரிவினை சம்பந்தமான கேள்விகள் & பதில்கள்

КОМЕНТАРІ • 609

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +15

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 роки тому +3

      ஐயா 🙏கடல் போல பிரச்சனைகள் உள்ள இந்த சிவில் வழக்கு விஷயத்தை மிகவும் தெளிவாக கேள்வி பதில் நிகழ்ச்சிவாயிலாக எந்த ஒரு விபரம் தெரியாத மக்களுக்கு உங்களது சேவை இந்த காலகட்டத்தில் நாட்டிற்கு தேவை, கண்டிப்பாக உங்களது பதிவின்படி வளர்ச்சிக்கு உதவ முன் நிற்பது எனது கடமை ஆகும் நன்றி 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@nagarajannagarajan7946 மகிழ்ச்சி

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 роки тому

      @@selvampalanisamyஐயா 🙏நேற்று ரூ 200 நன்கொடை செய்த மெசேஜ் வரவில்லை, உங்கள் கணக்கில் வரவு வந்து உள்ளதா என்பதை தெரிவிகவும் நன்றி 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@nagarajannagarajan7946 வரவில்லை

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 роки тому

      ஐயா 🙏 உங்கள் thanks செயலி வழியாக நன்கொடை செலுத்த முயற்சிதும் முடியவில்லை, வேறு வழி சொல்லுக, அனுப்புகிறேன் நன்றி 🙏

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 2 роки тому +3

    ஐயா நான் இது வரை பார்த்த கேட்ட பதிவுகளில் இதுபோல் ஒரு அருமையான பதிவுவாக பார்க்கிறேன், அருமை 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 2 роки тому +2

    நல்லபதிவு பலவிஷயங்கள் தெளிவு படுத்துள்ளீர்கள் நன்றி...

  • @rajasekaranrajendran294
    @rajasekaranrajendran294 2 роки тому +3

    ஐயா, வணக்கம், தங்களது வீடியோகல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன.
    நன்றி

  • @bs9950
    @bs9950 2 роки тому +1

    Sir unga channel very clarity....thanks for info sir

  • @nithi_nithilan
    @nithi_nithilan 2 місяці тому +1

    எங்கள் குடும்பத்தில், பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சினை, சொத்து எங்கள் தகப்பனாரல் எங்களுக்கு காண செட்டில்மன்டு செய்யப்பட்டது, எங்கள் அண்ணன் காலமாகிவிட்டார், அவரின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சினை இருப்பதால், அவர்கள் பாக் பிரிவினைக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை, இப்போது நாங்கள் எங்கள் பாகங்களை எப்படி பாகப்பிரிவினை செய்துகொள்ள முடியும்

  • @rajamoulimouli9333
    @rajamoulimouli9333 Рік тому +1

    ஐயா இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எனக்கு நன்றாக புரிந்தது

  • @rameshneshan3810
    @rameshneshan3810 Рік тому +1

    நீங்கள் சொல்லும் அத்தனை செயலும் எனக்கும் சேர்ந்துள்ளது எங்களுக்கும் நேர்ந்துள்ளது

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 місяців тому +1

    6:04 இது மாதிரி சட்டத்தில் சொல்லியிருந்தால் பிரிவுகள் அல்லது நீதிமன்ற தீர்புகள் குறிப்பிடவும்.
    நீங்க சொன்ன மாதிரி பிரித்தால் முன் பக்கம் கடைசி வாரிசுக்கு போகும்.
    முன் பாகத்தில் ஒரு வீடு இருக்கும் பின்னாடி ஒரு 100 அடி நீளத்துக்கு காலி இடம் இருந்தால்.
    கடைசி வாரிசுக்கு மட்டும் வீடு மற்றும் பிரதான வழி கிடைக்கும் அதன் மதிப்பு அதிகம்.
    மீதம் உள்ள மூத்த வாரிசுகள் சந்து வழியாக சென்று தான் தங்கள் பாகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதன் மதிப்பு குறைவு. இது எப்படி சரி சமமான பங்காக இருக்கும்.
    ஆனால் மற்ற பதில்கள் அருமை. நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому +1

      நான் சொன்னது சட்டப்படி அல்ல. அது போன்ற வழக்கம் இருந்துள்ளது.

    • @Rajtamizhan
      @Rajtamizhan 9 місяців тому

      @@selvampalanisamyஎங்களிடம் சொத்து அவணம், வாரிசு மற்றும் தந்தை இறப்பு சான்றிழ்கள் எதுவும் கிடையாது. இவை எல்லாம் 1 மகனிடம் உள்ளது.இவையெல்லாம் இல்லாமல் பாக பிரிவினை வழக்கு தொடர முடியுமா என் சொன்னால் கூட உதவியாக இருக்கும்.
      எங்க அப்பா உயிருடன் இருக்கும் போதே தன் மறைவுக்கு பிறகு மகன்கள் சரி சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என settlement பத்திரம் செய்து விட்டார் ஊரிலும் இது போல தான் பிரிக்கும் வழக்கம் இருக்கு என்று சொல்றாங்க. ஆனால் இப்படி பிரித்தால் எங்க பாகம் கடைசியில் இருப்பதால் மிகவும் குறைவான பணம் தான் கிடைக்கும்.
      அதனால் பாக பிரிவினைக் வழக்கு போடலாமா அல்லது வேறு வழிகளில் சுமுகமாக பிரித்து கொள்ளும் முறைகள் என்ன என்பது குறித்து உங்களிடம் ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்தி ஆலோசனை பெரும் வசதி ஏதேனும் உள்ளதா சார்.
      .

  • @x_xeshx_x
    @x_xeshx_x 3 місяці тому +3

    எங்கள் வீடு கட்டபோகிறோம் என் அப்பாவிற்கு முதல் உரிமையா இல்ல என் அப்பாவின் அக்காவிற்கு முதல் உரிமையா?

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Рік тому +1

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤️👍👌❤️👍👌🤝💐🎉🎊

  • @velusamy1900
    @velusamy1900 4 місяці тому

    Velu. DUBAI. Very super. Video. Sar. And. PERAMBALUR. D.k

  • @hajimohamed7890
    @hajimohamed7890 2 роки тому +3

    நல்ல தகவல் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மகிழ்ச்சி

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Рік тому +1

      @@selvampalanisamy sir fmly l lamd property pro doubt clear panuvinkala sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@geethahariniboomigeetha4904 சொல்கிறேன். தமிழில் கேளுங்கள்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Рік тому +2

    சட்டம் பணம் உள்ளவர்களுக்கு, frame சட்டம் ஏழைகளுக்கு.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 2 роки тому

    Sir, my father's house document is missed by the collectorate and they gave a letter for missing, and we got a copy of the document from the register office. my father is no More now, legalizers of my father's can divide the assets, by the copy of the document or original document is must need for the registration. Please reply.

  • @mssheshathri1977
    @mssheshathri1977 4 місяці тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @diamondcreationvlogs
    @diamondcreationvlogs Рік тому

    👍

  • @francisxavier6509
    @francisxavier6509 9 місяців тому

    சார் வணக்கம்
    என்னுடைய தந்தை 2018 இறந்து விட்டார் .சொத்துக்கள் கூட்டு பட்டா வில் உள்ளது .நானும் என்னுடைய அம்மா , அக்கா,வாரிசு தாரர்.சித்தப்பாவும் உள்ளார், பத்திரம் எழுத சென்றால் பகாபிரிவினை பண்ண முடியாது .கிரையபதிரம் தன் எழுத முடியும் சொல்றார் ரெஜிஸ்டர் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      தவறாக சொல்கிறார்

  • @uthrajose7898
    @uthrajose7898 2 роки тому

    Sir naanga 2021 la land vaangunom..but 2009 la register pannavanga varisu certificate ellama register pannirukaanga.. Idhanala problem varuma?

  • @rajadurairajakumar3732
    @rajadurairajakumar3732 2 роки тому +6

    தெற்கு நோக்கிய மனை. இதில் அகலம் சுமார் 50அடி நீளம் 200அடி. இதில் முன்று நபருக்கு பங்கு எப்படி பிரிப்பது. இதில் அனைவருக்கும் மனை தேவை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      நீதிமன்றம் முடிவு செய்யும்

  • @lingavaal8169
    @lingavaal8169 2 роки тому +3

    பட்டாவிற்கு முன்பு சாலையோர புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி ஒரு காணொளி விண்ணப்பத்தை பதிவிடுங்கள் ஐயா

  • @pksunilkumarsavitha369
    @pksunilkumarsavitha369 19 днів тому

    காலமான என் தாத்தாவின் சொத்தில் உரிமையாளர்கள் ஐந்து பிலைகல .. இதை விற்கும் பட்சத்தில் ஒருவர் மட்டும் சம்மதிக்கவில்லை.. பக்ஷத்தில் எப்படி விற்பனை... செயவதூ

  • @angelantony1299
    @angelantony1299 Рік тому +1

    Sir thanks for your message even I got confused. My father married my mom after death first wife
    1stwife has 1son 1doughter
    2nd wife has 2son 4doughter
    How to divide the property sir. Could you advise me.

  • @NaalaiNamNaadu
    @NaalaiNamNaadu 2 місяці тому

    பாகப்பிரிவினை இரண்டு பத்திரமாக பதிவு செய்ய முடியுமா?

  • @pashanmuk
    @pashanmuk 2 роки тому +1

    அய்யா வணக்கம் உங்களது பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தற்பொழுது எனக்கு உள்ள பிரச்னை என்ன வென்றால், ஆண் வாரிசு மூன்று பேர் பெண் வாரிசு மூன்று பேர் ஆகமொத்தம் ஆறு நபர்கள், ஆண் வாரிசுகள் முறையே ஆளுக்கு 94சென்ட் என வாரிசு தாரரர்களின் தகப்பனார் வாய்வழியாக பிரித்து கொடுத்தார் ஆண்டு 1994, அந்த ஆண்டே தகப்பனார் இறந்தும் விட்டார், முதல் இரண்டு வாரிசு இருவரும் வேற சர்வே நம்பர் கொண்ட சொத்தை விற்று விட்டனர்., மூன்றாம் ஆண் வாரிக்கு தனி சர்வே நம்பர், அதற்க்கு கையப்பமிட அழைத்தால் இருக்கும் சொத்தில் பாகப்பிரிவினையாக பங்கு கேட்டு வருகின்றனர், நான்தான் கடைக்குட்டி வாரிசு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,.தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன் தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என நம்புகிறேன்,...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வழக்கறிஞரை அணுகி பலன் பெறுங்கள்

  • @maragathavalli-kv6bj
    @maragathavalli-kv6bj Рік тому +2

    ஐயா, நாங்கள் 6 சகோதரர்கள் ஒரு சகோதரர் ஊனமுற்றவர், திருமணம் ஆகவில்லை. அவரும் இறந்துவிட்டார், எங்களுக்கு தனிப்பட்ட பட்டா உள்ளது, ஆனால் சில பட்டா வெவ்வேறு அளவீடுகள். எப்படி சரிசெய்வது. ஒரு சகோதரர் வீட்டு சர்வேயை ஏற்கவில்லை, 3 சகோதரர்கள் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்வதை எதிர்க்கின்றனர். அடுத்து என்ன செய்வது.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்

  • @muthukrishnant6577
    @muthukrishnant6577 Рік тому +1

    ஐயா, எங்களுடையா நிலத்திற்கு பட்டா உள்ளது ஆனால் pathirathil settlement kiraiyam panna villai (pakapirivinai seiyya villai) ippoluthu naan antha land use பண்ண முடியும ethir manuthaarar பிரச்சனை பண்ணுகிறார் enna pannuvathu

  • @blacklub4602
    @blacklub4602 19 днів тому

    அண்ணன் தம்பிக்கு இடையில் பாகப்பிரிவினை பிரச்சனை வந்து கேஸ் கொடுத்தால் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை எத்தனை மாதங்கள் முதல் எத்தனை வருடங்கள் வரை அந்த கேஸ் எடுத்துக் கொள்ளும்

  • @sastigalechumi81
    @sastigalechumi81 Рік тому +1

    ஐயா, எங்க வீட்லா இரண்டு ஆண்பிள்ளைகள்... நான் மூத்தவன். கிராமத்துல என்னுடய சம்பாத்தியத்தில் ஒரு வீடு போட்டு இருக்கேன்.. சென்னை ல என் அப்பா என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு ஒரு சிறு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இருக்கு... என்னால சம்பாதித்தில் தான் என் குடும்ப வளர்த்துச்சு...
    ஆனா இப்போ.. நான் உடம்பு முடியாம இருக்கேன்.. அம்மா, அப்பா, தம்பி எல்லாம் என்னை ஏமாற்றுராங்க..... நான் சம்பாதித்து போட்ட property எனக்கே கிடையாது னு சொல்லுராங்க...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ஆதாரம் இருந்தால், அவர்களால் அப்படி சொல்ல முடியாது

  • @bows8975
    @bows8975 5 днів тому

    ஐயா வணக்கம் எங்களுடைய தாத்தா சொத்து நத்தம் புறம்போக்காக இருக்கும் சொத்தை எங்கள் சகோதரர்கள் நான்கு பேர் உள்ளோம் இதைப் பிரித்துக் கொள்வது சிக்கல் உண்டு ஒருவர் மட்டும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணிக்கிறார் அதில் எங்களுக்கு பாகம் உண்டா இதற்கு நாங்கள் வழக்கு தொடலாமா

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 2 роки тому

    Hi anna, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலத்தை என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் என் சித்தப்பா😢😢? அவர்கள் காவல் ஆய்வாளர்க்கு காசு குடுத்து போலீஸ் காரர்களும் அவர் அனுபவம் என்கிறார்கள் 2 ஆண்டு முன்பு என் நிலத்தை பயன்படுத்தி விட்டால் அவர்கள் அனுபவமா
    இப்போ
    என்ன செய்வது. ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். சரிவரவில்லை என்றால் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும்

  • @senthilsubramanian2802
    @senthilsubramanian2802 Рік тому

    Sir enoda family la 3 children's. Father drinker na la family partition 2childrens porantha apaye divide panitanga. But partition panni 4 years apram porantha child ku property la rights iruka?

  • @Tailorpc
    @Tailorpc 2 роки тому

    வணக்கம் ஐயா என் கணவர் கடைசி பிள்ளை . மொத்த வாரிசு நான்கு நபர்...பாகம் பிரித்ததில் என் கடைசிபிள்ளை அவருக்கு தெற்கு பாகம் கொடுக்கப்பட்டுள்ளது... எங்கள் மாமனார் தானசெட்டுல்மெண்ட் பேரன்கள் பெயருக்கு கொடுத்து விட்டார் இப்போது என் மகன் அந்த சொத்தின் பெயரில் கேஸ் போட்டால் எங்கள் பாகங்களை மாற்றி கொடுப்பார் களா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அது அவரது இஷ்டம். பாகமே கொடுக்காமல் இருக்கவும் அவரால் முடியும்.

    • @Tailorpc
      @Tailorpc 2 роки тому

      எங்க மாமனார் இறந்து விட்டார் ....மணியார் வந்து அளக்கும் போது மோட்டார் கிணறு பாதை மூன்றில் ஒரு பங்கு என்றும் என் கணவருக்கும் பங்கு கொடுக்க வில்லை நாங்கள் வேறு ஊரில் இருக்கிறோம் என்று மோட்டார் செட் கிணறு பாதை மொத்தம் ஆறு செண்ட் என் கணவருக்கு கொடுக்க வில்லை....இதற்கு நீங்கள் மூவரும் பணம் கொடுக்கல் என்றும் கேட்டோம்.... அதுவும் கொடுக்க வில்லை இப்போது வீடு இடம் பிரிக்கும் போது அதுபோல செய்ய இருக்கிறார்கள்.. ஆனால் மாமானர் காலமாகிவிட்டார்.... இப்போது நாங்கள் என்ன செய்ய.... சொல்லுங்கள் சார் எங்களுக்கு வேற வழியே இல்லை யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@Tailorpc தாசில்தாரிடம் புகார் அளியுங்கள்

  • @venkataramang8608
    @venkataramang8608 19 днів тому

    வணக்கம் ஐயா. திருமணம் ஆன ஒருவர் அகால மரணம் அடைந்துவிட்டார்.மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இறந்தவர் பேரில் உள்ள சொத்துkku அவரின் அப்பா அம்மா இருவருக்கும் vaarisu உரிமை உள்ளதா? ஆம் என்றால் எவ்வளவு சதவீதம்?

  • @rohe8413
    @rohe8413 2 роки тому +1

    Sir pls reply. Still soththu pathiram 50 cent nilam Grandpaa name la irukku but patta illa. Grandpaa passed. 4 legal heirs all r Gents. All r partitioned the land and built house when Grandpaa was alive without Baagapirivinai.After Grandpaa death ivanga serndhu ivanga 4 members name la koottu patta pottaachu. Ippo indha 4 members melayum paththiram register pannalaam nu solraanga. Ippo idha Baagaprivinai paththiram panna mudiumaa bcz Grandpaa passed or Dhana settlement paththiram panna mudiumaa

  • @srinivasanib3448
    @srinivasanib3448 11 місяців тому

    Amount of share of the property to other legalheirs- Market value or guideline value?

  • @swamynathan936
    @swamynathan936 5 місяців тому

    ஐயா,வணக்கம்.
    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தந்தையின் சொத்தில் பாகப்பிரிவினை செய்து அதில் உள்ள வரிவிதிப்பு எண்ணில் தென்புறம் பாகம் ஒருவருக்கும் அதே வரிவிதிப்பு எண்ணில் வடபுறம் பாகம் மற்றொரு குடும்ப உறுப்பினரருக்கும் இருந்தால் சொத்துவரி விதிப்பில் யார் பெயரில் சட்டப் படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      இருவரும் இணைந்து விண்ணப்பியுங்கள்

  • @muruganessaki1873
    @muruganessaki1873 2 роки тому

    SIR PARTION DOCUMENT LA PIRATHI KU PAYMENT KATTIYACHU ANA PIRATHIKALIN ENNIKAI SELECT PANNAL SO TN REGINET OPTION LA VERA ETHAVATHU OPTIONS IRUKA

  • @user-wr9ei9bd7m
    @user-wr9ei9bd7m 5 місяців тому

    ஐயா வணக்கம் உங்கள் பதில்கள் என்னை சிலிர்க்க வைக்கிறது ஐயா எனது குடும்பத்தில் சொத்து பாகப்பிரிவினை வழக்கில் உள்ளது இதில் ஆறு பேர் வழக்கு உள்ளது இதில் எனக்கு எனது அக்காள் இருவரின் சொத்தை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அவர்களும் பங்கை பெறுவது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      வழக்கு முடிய வேண்டும்

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 роки тому +2

    Very good information

  • @jambup4478
    @jambup4478 2 роки тому

    [02/06, 9:01 pm] Sambath: சார் ஒரு ஊரில் ராமன கவுண்டர் தான் சுய சம்பாத்தியத்தில் 1964 வருடம் 2.5 ஏக்கர்,1965 வருடம் 1 ஏக்கர் வாங்குகிறார். அவர் காலம் சென்ற பிறகு அவருடைய ஒரே மகளான ராமாத்தாள் அனுபவித்து வருகிறார். ராம் ஆத்தாளுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூன்று மகள்களின் திருமணத்திற்கு பிறகு 1981 வருடம் ராமாத்தாள் தனது மகனுக்கு பாகப்பிரிவினை செய்கிறார். அதில் மகனுக்கு 2.5 ஏக்கர் தமக்கு ஒரு ஏக்கர் தாம் காலம் சென்ற பிறகு அந்த ஒரு ஏக்கரும் மகனுக்கே என்றும் ரத்த சொந்தத்தில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும் பாகப்பிரிவினை செய்கிறார். ஆனால் தற்போது மூன்று மகள்களும் சொத்தில் பங்கு கேட்கிறார்கள். மகள்களுக்கு பங்கு செல்லுமா செல்லாதா என்று தெளிவாக கூறுங்கள்.
    [02/06, 9:01 pm] Sambath: பாகப்பிரிவினை பதியப்பட்டுள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ராமாத்தாள் அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 2 роки тому +3

    விதவை பெண்க்கு வாரிசு இல்லா நிலையில், அவரது தந்தையின் செத்தை அந்த கவிதையின் உடன் பிறந்தவர்கள் எப்படி பங்கு செய்ய வேண்டும்.

  • @karambakudi
    @karambakudi Рік тому

    ஐயா. எங்கள் தந்தை 2007ல் இறந்து விட்டார். என் கூட பிறந்தவர்கள் 3பேர் 2மூத்த சகோதரி 1மூத்த சகோதர். 2008ல் நானும் என் சகோதரும் பாக பிரிவினை செய்து கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்துள்ளது அவர் அதில் அதிக மதிப்பு கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் அவர் பாகத்தில் எழுதி கொண்டார் என்று தெரியவந்துள்ளது இப்போது நான் என் பங்குகளை பெற நீதிமன்றம் செல்லாம இதில் என் சகோதரிகள் கையெழுத்து இடவில்லை

    • @senthilkumaaran8951
      @senthilkumaaran8951 Рік тому +1

      சகோதரிகள் கையெழுத்து இல்லாததால் இந்த பாகப்பிரிவினை செல்லாது

    • @karambakudi
      @karambakudi Рік тому

      Nantri..

  • @Vinothkumar-lo7xb
    @Vinothkumar-lo7xb Рік тому +1

    ஐயா, 1961 ஆம் அண்டு என்னுடைய தாத்தா மற்றும் தாத்தாவின் சகோத்தார் இருவரும் சேர்ந்து பாகப்ரிவினை செய்கிறனார். அதில் 3.56 சென்ட் விஸ்திரம் கொண்ட பூமியில் இதில் சரிபாதி தென்புறம் 1.78 சென்ட் பூமி என்னுடைய தாத்தாவிற்கும், இதில் சரிபாதி வடபுரம் 1.78 சென்ட் பூமி தாத்தா வின் சகோதற்கும் பாகப்ரிவினை செய்கிறனார். இதில் என்னுடைய தாத்தாவிற்கு பாத்தியா பட்டா 1.78 சென்ட் பூமியில் இதில் 0.03 சென்ட் பூமியை தாத்தாவின் சகோத்தார் தென்னை மரம் நட்டு சாகுபடி செய்துள்ளார். இந்த 0.03 சென்ட் பூமி எங்குளுக்கு பாத்திய பட்டா பூமி என்று தெரிய வந்துள்ளது. 2021 ஆண்டு தாத்தாவின் சகோத்தார் வாரிசுகள் இந்த 0.03 சென்ட் பூமியை என்னுடைய கையெழுத்து இல்லாமல் கிரியம் செய்துள்ளனர். கேட்ட நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்று சொல்லறாங்கள்...இது செல்லுமா, இல்லா மோசடி ஆவணம் ரத்து செய்யமுடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யுங்கள்

  • @chithranca4778
    @chithranca4778 2 роки тому

    Sir idhu ennoda grandfather property andha property ya en peyarukku mattum ezuthivachitaru idhanala ennoda sister edhavathu problem panna rights irukka

  • @krvelu5506
    @krvelu5506 9 днів тому

    ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் பாக பிரிவினை செய்யும் போது வழி விடாமல் பிரித்து விட்டனர். இப்போது வழி வாங்க முடியுமா

  • @garudacollections416
    @garudacollections416 Рік тому +1

    வணக்கம் அய்யா. எனது அப்பாவிற்கு நீதிமன்ற உத்தரவு படி 2005 ஆம் ஆண்டு பாகப்பிரிவினை நடந்தது. எங்கள் வீட்டு பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது. எனது அப்பா எனது பெயரில் செட்டில்மென்ட் செய்துள்ளார்கள். நீதிமன்ற உத்தரவை இதுவரை ரிஜிஸ்டர் செய்யவில்லை. இதனால் ஏதாவது பிரட்சைனை வருமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      செய்தால் நல்லது. இப்போதுகூட செய்யலாம்.

  • @cajayachander
    @cajayachander 2 роки тому +1

    ஐயா,மாமுல் பொது வழித்தட பாத்தியம் என்று ஆவணங்களில் இருந்தாள் அந்த மாமுல் போது வழித்தடத்தை எப்படி கண்டறிவது? பிற்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வராமல் இருக்க அந்த தடத்தை மட்டும் கண்டறிந்து ஒரு ஆவணத்தை உருவாக்க முடியுமா? அந்த தடத்திற்கு அனைத்து பங்குதாரர்கள் ஒப்புகை வேண்டுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      நில அளவைத்துறை அலுவலத்தில் உள்ள பழைய ஆவணங்களில் இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.

  • @palaniraja4054
    @palaniraja4054 Рік тому +2

    ஐயா 2010ல எனது தம்பியும் நானும் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து கொண்டோம் அந்த சொத்தில் எனது தம்பி பெயரில் எங்க அம்மா எழுதி வச்ச சொத்தை ஒரு ஏக்கரை அவர் பாகத்தில் காட்டாமல் ஏமாற்றிவிட்டார் அது தற்பொழுது தான் எங்களுக்கு தெரியும் பாராட்டணியில் கட்டுப்படாமல் சில சொத்து நின்று போய்விட்டால் அந்த பாக அட்டவனை செல்லுமா செல்லாதா எனக்கு ரிப்ளை கொடுக்கவும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பாகப்பிரிவினை செய்யும் போது, அதில், தனிப்பட்ட முறையில் அம்மா தனக்கு எழுதி வைத்த சொத்தை உங்கள் தம்பி காட்டாதது தவறு இல்லை.

    • @manjuladevi8372
      @manjuladevi8372 Рік тому

      En ammavin appa udaiya poorviga sothai en ammavin than gai mattum eluthi vaangittar. Idu selluma

  • @keruthigababy7848
    @keruthigababy7848 24 дні тому

    ஐயா என் அப்பா வர வேண்டிய பாகத்தை எங்க பெரியப்பா எடுத்துட்டு அவர் பாகத்தை எங்க அப்பா பதிவு பண்ணிட்டு இடம் விற்க முயற்சி பண்ண வாங்க வருபவர் முன் இடம் வேணும் சொல்லுறாங்க இப்ப நாங்க வழக்கு போட்டு முதல் பாகம் கேட்டு ஜெயிக்க முடியுமா எனக்கு உதவி பண்ணுங்க ஐயா எனக்கு அவசரம்

  • @mishalmobile6708
    @mishalmobile6708 2 роки тому +3

    ஐயா வணக்கம்
    1)பாகப்பிரிவினை செய்யும்போது அனைத்து வாரிசுதாரர்களும் கையெழுத்திட வேண்டுமா
    2) பாகப்பிரிவினையின் போது ஒரு மட்டும் சம்மதிக்கவில்லை என்றால் எப்படி பிரச்சனை இல்லாமல் பாகப்பிரிவினை செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +2

      நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை

  • @sathisharumugam9304
    @sathisharumugam9304 Рік тому +1

    சார், என் அப்பா இறந்துவிட்டார், என் தாத்தா மற்றும் பாட்டியும் இறந்துவிட்டனர். என் தாத்தாவிற்கு மொத்தம் 5 மகன்கள். எனக்கு சேரவேண்டிய பங்கை பிரித்துத்தர சம்மதிக்க மாட்டுகிறர்கள். நீதிமன்றம் சென்றால், கோர்ட் பீஸ் என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் எனது பங்கை பேர என்ன செய்யவேண்டும்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      முதலில் அவர்களிடம் நேரடியாக அல்லது நண்பர்கள் , உறவினர்கள் மூலமாக பேசி பாருங்கள்

  • @annamalaidharmapuri8665
    @annamalaidharmapuri8665 Рік тому

    Enadhu appa irandhu vittar, 7 members varisu, adhil en oru annan mattum pagapirivinai seiya vara marukkirar karanam avar konjam nilathai en matroru annanukku 2011 appo vitruvittar anal adhai en annan pathiram seiyavillai, adhanal ippoludhu en annan andha nilam venum endru Adam pidikkirar, panam kettal thara marukkirar avarai vittutu avar vitradhu poga meedhi nilathai vittutu matravar pathiram seidhal selluma, please reply pannunga sir please

  • @ckr7948
    @ckr7948 14 днів тому

    வேறொரு ரிஜிஸ்டர் ஆஃபீஸ் எல்லைக்கு உட்பட்டு பல சொத்துக்கள் இருக்கிறது அதை எப்படி பாகம் அட்டவணையில் பிரித்துக் கொள்வது

  • @GaneshKumar-qk3tm
    @GaneshKumar-qk3tm Рік тому +1

    எங்கள் வீட்டில் 6 பாகங்கள் உள்ளன அதில் 4 பெண்கள் 2 ஆண்கள் உள்ளன 4 நபர்கள் இந்த குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் விற்க முயற்சி செய்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒரு ஆளாகிய நான் அதை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறேன் என்னால் வேறு ஒருவர் வாங்குவதை நிறுத்த முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அடுத்தவர் கொடுக்கும் தொகையினை நீங்கள் கொடுத்தால் முடியும்

  • @kandasamy-8890
    @kandasamy-8890 Місяць тому

    ஐயா, ஆறு பேர் வாரிசு கொண்ட ஒரு நிலத்தை மூன்றாவது நபர் மட்டும் வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் அதும் அவருடைய தந்தை பெயரில் உள்ள நிலத்தை சட்டப்படி இந்த பதிவு செல்லுமா?

  • @s.gpandian.3193
    @s.gpandian.3193 Рік тому +1

    ஐய்ய வணக்கம் எனக்கு ஒருதகவல் வேண்டும் தந்தைக்கு 3 மகன்கள் ஒருமகனுக்குதெரியாமல் மற்றமகன்கள் தனித்தனி நாட்களில் அவர்களே ஒருபாகத்தை ஒதுக்கிவிட்டு பாகப்பிரிவினை செய்தால் அது செல்லுமா மற்றவர்அந்த பாகப்பிரிவினையை மருக்கமுடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மறுக்க முடியும். அது செல்லாது.

  • @vaikundarajraj5720
    @vaikundarajraj5720 2 роки тому +3

    வணக்கம் ஐயா..
    எங்கள் ஊரில் ஐந்து சகோதரர்களுக்கு பாகப்பிரிவினை மூலமாக சமமான நிலம் கிடைத்தது. அதில் ஒருவர் (Raj), தனது சகோதரரின் மனைவிக்கு (Rani) 1993 வருடம் விற்றுவிட்டார். தற்போது நிலத்தை வாங்கிய(Rani) என்பவர் நிலத்திற்கு DTCP உரிமை பெற்று பிளாட் செய்து விற்று வருகிறார். ஆனால் 1993ஆம் வருடம் நிலத்தை விற்றவரின்(Raj) மகன் மற்றும் மகள் எங்களுக்கு தாத்தா சொத்தில் உரிமை உண்டு என வழக்கு செய்து நிலுவையில் உள்ளது. நிலத்தை விற்றவர் தற்போது உயிரோடு உள்ளார். இப்போது இந்த வழக்கில் யார் வெற்றி பெறுவார்? அந்த நிலம் பிளாட்டை வாங்கலாமா? தயவு செய்து விடை அளிக்கவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +3

      இந்த விசயத்தை பொறுத்த அளவில், தாத்தா சொத்தில் உரிமை இருக்கிறது என்று பேரன் பேத்திகள் கேஸ் போட்டால் அது செல்லாது. அந்த பிளாட்டை தாராளமாக வாங்கலாம்

    • @prakash8910
      @prakash8910 Рік тому

      அதுவே பாகபிரிவினை மூலமாக வந்த சொத்தாக இருந்தால்

  • @raviiravii8906
    @raviiravii8906 Рік тому

    4 per Baga pirivil oruvaruku sothum matra 3 per kum amount aa kudukura mari pathivu panna mudiuma?

  • @selvarasur2131
    @selvarasur2131 Рік тому +1

    தாத்தாவின் உயில் மூலம் பெற்ற கிராமநத்தம் மனையை தாத்தா பெயரில் இருந்த பட்டாவையும் முறைப்படி தாசில்தார் மூலம் மூன்று சகோதரர்கள் பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து கொண்டோம் .அதன் பின்னர் சர்வே எண் சப்டிவிஷன் செய்து மூன்று பேரும் தனித்தனி பட்டா வாங்க மூன்று பேரில் ஒருவர் ஒத்துழைப்பு இல்லை என்ன செய்யலாம் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அவரது ஒத்துழைப்பு தேவை இல்லை.

  • @vasavicomputers5267
    @vasavicomputers5267 Рік тому +2

    பாகப்பிரிவினை செய்யும் போழுது பொது வழி பாதை எப்படி பிரிக்க வேண்டும். அடுத்த கேள்வி அப்படி பிரித்த பொது வழி பாத்தியை கிழே பொதுவாக விட்டுட்டு விட்டு மேல அவர் அவர் பாகத்துக்கு வழியை மறைத்து கட்டிக்கொள்ளலாம் ? அல்லது கிழே பொதுவாக விட்டது போல் மேலேயும் விடவேடுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 місяців тому

      அந்த சொத்தை பொறுத்தும், உங்களது தேவையை பொறுத்தும், உங்கள் அனைவரது ஒத்துழைப்பைப் பொறுத்தும் பாதை பிரிக்கப்படும்.

  • @NAVEENSELVAMA
    @NAVEENSELVAMA Місяць тому

    Partition deed pani registration lam mudincha piragu... Antha bhaaga pirivinai equal ahh pirikalanu case poda mudiyuma

  • @anbumurugan12
    @anbumurugan12 Рік тому

    1) சொத்தில் ஆண் பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு அதில் பெண் தன்னுடைய சொத்தை ஆண் வாரிசுகளை பகிர்த்து கொள்ளட்டும் என்று கூறினால் ஆண் வாரிசுகள் மட்டும் பாகப் பிரிவினை செய்யலாமா?
    2) பாகப் பிரிவினையின் போது 4 ஆண் வாரிசுகள் உள்ளனர். அதில் இறுதி ஆண் வாரிசு இறந்து விட்டார் அவருக்கு குழந்தைகளும் இல்லை ஆனால் மனைவி உயிருடன் உள்ளார் அவர் நிலத்திற்கு பதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று கொள்ள தயாராக உள்ளார் அப்படி ஆனால் மற்ற 3 ஆண் வாரிசுகள் நிலத்தை பாக பிரிவினை செய்யலாமா?

  • @ganeshkumararumugam7773
    @ganeshkumararumugam7773 Рік тому +3

    ஐயா பத்திரம் எனது பெயரிலும், சகோதரர்(மூத்தவர்)பெயரிலும் உள்ளது.18*18 மனையின் அளவு.Ground floor & first floor building உள்ளது.Partition deed பண்ணிணால் எப்படி பிரிப்பார்கள்.Main street east west direction. 3 அடி சந்து South north direction. எந் த Direction l Partition deed ண்ணுவாங்க....9*18,9*18 East west a or south north direction la partition deeDபண்ணுவாங்களா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      பொதுவாக இது போன்ற சொத்துக்களை பிரிக்கும்போது சில சிக்கல்கள் வரலாம். உங்கள் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால் நல்லது.

    • @ganeshkumararumugam7773
      @ganeshkumararumugam7773 Рік тому

      I m ready to deal anyone ( me or him) settled as per market rate. He told doesnt has money . He doesn't want to settle me also thats y i m asking ur opinion i have idea to go legally so court how is divide this land(building)main street(east to west) or sandhu (north south).

    • @ganeshkumararumugam7773
      @ganeshkumararumugam7773 Рік тому

      What kind of issue will come can u tell me pls

    • @Rajtamizhan
      @Rajtamizhan 9 місяців тому

      @@ganeshkumararumugam7773 எங்களுக்கும் இதே மாதிரி பிரட்சனை தான். பேசாமல் வீட்டை 3 நபரிடம் விற்று வரும் பணத்தில் 1/2 போட்ட கொள்ளலாம் இல்லை என்றால் வழக்கு.

  • @rameshneshan3810
    @rameshneshan3810 Рік тому +1

    ஐயா எங்கள் பாகப்பிரிவினை இயர் லிஸ்ட் மட்டும் தான் உள்ளது நாங்கள் என்ன செய்வது அது பூர்வீக சொத்து. எங்கள் பங்காளி அவருடைய சொத்து என்று உயிர் எழுதி வைத்துள்ளார் அதை வைத்து அவர்கள் விட்டுக் கொண்டு வருகிறார் என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அந்த சொத்து குறித்த பழைய ஆவணங்களை திரட்டுங்கள். புகார் அளியுங்கள். மீட்கலாம்!

  • @chinnathambi8906
    @chinnathambi8906 Рік тому +1

    ஐயா ,எனது தந்தையும்,அவருடைய அண்ணனும்,1982ல் 2.75 ஏக்கர் நிலத்தை கூட்டு பத்திரம் மூலமாக வாங்கி அனுபவித்து வரும்பொழுது 1991 ல் எனது பெரியப்பா மட்டும் பாகபிரிவினை செய்யாமல் ரோட்டிற்கு அருகாமையிலே 1.28 ஏக்கர் நான்கு புறம் எல்லை போட்டு விற்றுவிட்டார் எங்களுக்கு பாதை ஏதும் விடாமல் தற்பொழுது என்ன செய்வது உடனடியாக கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பாகப்பிரிவினை செய்யாமல் விற்பனை செய்தது செல்லாது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @vijis8087
    @vijis8087 2 роки тому

    Pagaprivinai case eviction suit ku matha முடியுமா

  • @ModernHouse24
    @ModernHouse24 Рік тому +1

    Sir, என் அண்ணன் ஹோம் லோன் எடுத்து வீடு வாங்கினான். அதில் என் அப்பாவும் பணம் கொடுத்து இருக்கார். இதில் நான் பங்கு கேட்க முடியுமா? நாங்க கூட்டு குடும்பம். நான் பங்கு கேக்க முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் தந்தை உயிருடன் இருக்கிறாரா?. இல்லை என்றால், உங்கள் தந்தை பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? உங்கள் அண்ணன் பெயரில் அந்த வீடு இருக்கின்ற நிலையில் நீங்கள் பங்கு கேட்க வாய்ப்பில்லை.

  • @karthielavarasan4747
    @karthielavarasan4747 6 місяців тому

    Sir property adamanathula iruku..... Varisu tharargal oruthar kitta thara virupam illa..... Adamanam vangiya person antha varisu tharagal kulla iruka orutharku adamana medovar vanga mudiyuma sir

  • @vijayakumarelumalai9714
    @vijayakumarelumalai9714 2 роки тому +1

    உடன் பிறந்த தம்பியும் தங்கைகளும் பாக பிரிவினைக்கே வரவில்லை இருக்கின்ற இடமோ 800 ச.அடியில் உள்ள பழைய 1+1 வாரிய குடியிருப்பு வீடு, இரண்
    டு தங்கைகளுக்கு தனியாக 2400 ச.அடி மனை எங்கள் தாயார் வாங்கி கொடுத்து விட்டார்கள். தந்தையும் தாயாரும் உயிருடன் இல்லை பாகபிரிவினை பேசுவதற்கே வராமல் இழுத்தடிக்கிறார்கள் இதற்கு நல்ல ஒரு வழியை கூறுங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      நீதிமன்றம் செல்லுங்கள்

  • @nagaraja1766
    @nagaraja1766 2 роки тому +1

    Uil whoit peparil elurhalama athu sattapati selluma

  • @rithickroshen4241
    @rithickroshen4241 Рік тому +1

    ஐயா வணக்கம் அண்ணா தம்பி இருவர் தம்பிக்கு தேரியமல் அம்மா அண்ணக்கு தான செட்டில்மெண்ட் அவருடைய பங்கை எழுதி வைத்தார் தம்பிக்கு எழுதி தர முடியாது என்று கூறுகிறார் இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ஒன்றும் செய்ய முடியாது

  • @tamilarasia8407
    @tamilarasia8407 Рік тому +1

    எங்களுடைய சொத்து கேஸ் கடந்த 2012 முதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கேஸ் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ஆனால் பாகம் பிரிக்கவில்லை. வக்கீல் ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். கமிஷனர் பேப்பர் தொலைந்து விட்டதாகவும் அதற்கு ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். விரைவில் கேஸ் முடிக்க என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் வழக்கறிஞரை கேளுங்கள்.

  • @kangayan6554
    @kangayan6554 9 місяців тому +1

    ஐயா வணக்கம் , லேக் அடல்த்தில் முடிக்கப்பட்ட பாகப் பரிவினையை சார்பதிவாளர் அலுவலத்தில் பத்திரம் பதிய வேண்டுமா???

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      பதிவு செய்தால்தான் நல்லது.

  • @iyappan..s8179
    @iyappan..s8179 2 роки тому +1

    Sir, எங்களுடைய பட்டா நகள் இருக்கு, பாக பிரிவினை செய்தார்களா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை, ஒரு வேளை செய்திருந்தால் அதை எப்படி தெரிந்துகொள்வது. அதனுடைய நகலை எப்படி online la எடுப்பது. பாக பிரிவினை செய்தார்களா? அல்லது செய்யவில்லையா என்பதை ஆன்லைனில் பார்ப்பது எப்படி.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வில்லங்கம் பாருங்கள். தெரிந்துவிடும்

  • @ElumalaiP-rt8ec
    @ElumalaiP-rt8ec 2 місяці тому

    சார் எங்க பாட்டாவிண் சதத்தை எங்கலுக்கு எங்க அப்பா பாகப்பிரிவினை பிரித்து கொடுத்தால் அந்த சொத்தை நாண் வெரு நபருக்கு கிரையம் எழுதி கொடுத்து விட்டெண் ஆணால் என் வாரிசுதாரர் கையெழுத்து பொடவில்லை இப்போ என் வரிசுதாரர் நான் கொடுத்த கிரையை நிலத்தில் பாகம் எடுக்க முடியுமா எனக்கு தெளிவாக எடுத்து சொல்லுங்க சார்

  • @hussainbangkok
    @hussainbangkok Рік тому +2

    தந்தை உயிரோட இருக்கும் போது இரண்டு மகள்களில் ஒரு மகளுக்கு மட்டும் சொத்தை எழுதி வைத்து விட்டார்.இன்னொரு மகளுக்கு அதில் பங்கு பெறுவது எப்புடி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      அது அவரது விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு வேளை வேறு யாராவது ஒருவருக்கு அவர் தனது சொத்தை எழுதி வைத்திருந்தாலும் இதுதான் முடிவு.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 10 місяців тому

      என்ன சொல்ரிங்க.அவரின் சுய சம்பாத்தியம்ன சரி. இதுவே பூர்வீக சொத்தாக இருந்தால் அவர் விருப்பம் போல் முழுசொத்தையும் யாருக்குவேண்டுமானாலூம் கொடுத்து விட முடியுமா. 2 . 3கோடி நிலத்தை 6 வாரிசுகள் நீதிமன்றம் மூலமாக பாகபிரிவினை செய்ய கோர்ட்பீஸ் எவ்வளவு ? .பாகபிரவினை வழக்குக்கு கட்டண சீலிங் உண்டா ? .

  • @Skrajuadmk
    @Skrajuadmk 2 роки тому +1

    முதல் மனைவி இறந்தபிறகு உம் திருமணம் முதல் மனைவி 3 மகன் 2ம் மனைவி | ஆண் பூர்விகம் செந்து பங்கு சமமாக வா அல்லது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      எத்தனை திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு சமபங்கு உண்டு. அந்த குழந்தைகளின் தந்தை உயிரோடு இல்லாவிட்டால்தான் இப்படி குழந்தைகளுக்கு பங்கு கிடைக்கும்.

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 роки тому

    ஐயா,
    தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 11(f)ன்படி மூன்றாம் நபரின் தகவல் வழங்க இயலாது என்று பொது தகவல் கூறுகிறார்.
    நான் கேட்ட தகவல்.
    விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் மீது மாநகராட்சியின் நடவடிக்கை என்ன என்ற தகவலை கேட்டிருந்தேன்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 місяців тому

      அவர் தகவல் வழங்க மறுத்தது தவறு. மேல்முறையீடு செய்யுங்கள்.

  • @SenthilKumar-dk2hf
    @SenthilKumar-dk2hf 3 місяці тому

    சார் வணக்கம் என் கணவர் கூட பிறந்தவர்கள் ஐந்து பேர் என் கணவரை சேர்த்து மூன்று பெண் இரண்டு ஆண் மூன்று பேர் என் கணவர்க்கு எழுதித்தர ஒத்துக்கொண்டனர் ஒருவர்மட்டும் நிலம் வேண்டும் என்று கேட்கிறார் சரி கொடுத்து விடலாம் என்றால் அதற்கும் எழுத வர முடியாது என்கிறார் அவர் இடத்தை விட்டு விட்டு பத்திரப்பதிவு செய்யலாமா பத்திரம் செல்லுமா இதற்கு என்ன பண்ணலாம் நான்கு மாதமாக அவர்களை கூப்பிட்டால் எதற்கும் ஒத்து வரவில்லை ஐந்து பேர் இருக்கையில் இரண்டு பங்காக போட வேண்டும் என்று சொல்கின்றன ஒரு பங்கை விட்டு நாலு பங்கை பத்திரம் எழுதலாமா அதற்கு அவர்கள் கையெழுத்து போட வேண்டுமா

  • @devadass8239
    @devadass8239 2 роки тому +1

    வணக்கம் ஐயா அவர்களே என் தாய் இறந்துவிட்டார் பிறகு தந்தைக்கு இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார் தந்தை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவி க்கு இரண்டு பேர்களும் மூன்றாம் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள் சொத்தை எப்படி பாகப்பிரிவினை செய்வது எப்படி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் தந்தை சொத்து சம்பந்தமாக எந்த ஏற்பாடும் செய்து வைக்காமல் இறந்தால்தான் நீங்கள் பாகப்பிரிவினை செய்ய முடியும்.

  • @yuvaraj137
    @yuvaraj137 2 роки тому

    ஐயா, எனது தாத்தாவிற்கு 5 மகன்கள், 3 மகள்கள். அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு 5 மகன்களுக்கு பாகப்பிரிவினை கூர் சீட்டு மூலம் நிலத்தை பாகம் பிரித்து கொடுத்தார். ஆனால் அதை அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இப்பொழுது அதை முறையாக பாகப்பிரிவினை மற்றும் பட்டா வாங்க நினைக்கிறோம். ஆனால் கூர் சீட்டில் ஒருவருக்கு 26 சென்ட் நிலம் அதிகமாக எழுதி உள்ளதால் மற்ற நான்கு பேரும் அதையும் 5 ஆக பிரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர் கூர் சீட்டில் அது எனக்கு எழுதி உள்ளதால் அது எனக்கு மட்டும் சொந்தம் என்கிறார். இப்பொழுது என்ன செய்வது, கூர் சீட்டில் உள்ளது போல தான் பிரிக்க முடியுமா அல்லது முதலில் இருந்து சம பங்காக பிரிக்களாமா ? சட்டபடி சென்றால் தீர்ப்பு எப்படி வரும் ?

  • @sureshmathav9857
    @sureshmathav9857 2 роки тому +1

    குடும்ப உறுப்பினர் அல்லாத நபருடன் வாங்கிய சம பாக சொத்தை பாகம் பிரிக்காமல் தன் பாக சொத்தை மற்றொருவருக்கு கிரையம் பத்திர பதிவு துறையின் மூலம் செய்யலாமா?

  • @SanthoshKumar-io4yf
    @SanthoshKumar-io4yf Рік тому +1

    ஜயா வணக்கம், எங்கள் தந்தையின் (இறந்து விட்டார்) புறம்போக்கு நிலச்சொத்தை வாரிசுகளான நாங்கள் எப்படி பாகப்பிரிவினை செய்து கொள்வது. இந்த புறம்போக்கு நிலச்சொத்தை பதிவு அலுவலகத்தில் பாகப்பிரிவினை செய்ய முடியாது என்று கூறிகிறார்கள். எனவே தாங்கள் விளக்கம் கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      புறம்போக்கு நிலத்தை நீங்கள் தொடர்ந்து 30 வருடங்கள் அனுபவித்து வந்திருந்தால், அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் அரசிடம் முறையிட்டு அதனை முதலில் உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு பாகப்பிரிவினை செய்யலாம்

  • @mrrider1726
    @mrrider1726 2 місяці тому

    ஐயா வணக்கம், என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து உயிரோடு இருக்கும் போதே ஏனது தந்தைகு தானமாக ஏழூதி கொடுதார்.
    தற்போதும் உயிருடன் தான் உள்ளார்.
    ஏனது தந்தை விவாகரத்து வாங்கவில்லை ஆனால் 2வது திருமணம் செய்து கொண்டார்
    முதல் மனைவிக்கு 1 குழந்தை நான்
    இரண்டாவது மனைவிக்கு 1 குழந்தை உள்ளது
    ஏனது தந்தை இரண்டாவது மனைவி குழந்தைகு மட்டும் சொத்தை தானமாக ஏழூதிவிட்டார்
    எனது தந்தயைும் தாத்தாவும் உயிருடன் தான் உள்ளார்கள்
    முதல் மனைவி குழந்தை நான் சொத்தில் உரிமை வாங்க முடியுமா

  • @Jayavenkat
    @Jayavenkat Рік тому +2

    Sir, Online consultation irrukka ? Phone no please

  • @selvaraj-fp1yi
    @selvaraj-fp1yi 2 роки тому +1

    பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது பொதுவாக மூத்தவர் மெத்த நிலத்தில் அவருக்கு உண்டான செத்தை வடக்கு பகுதியில் அனுபவித்து வருகிறார் சிறியவர் தென்மேற்கு பகுதியில் அனுபவித்து வருகிறார் சொத்தின் நடுவில் பஞ்சாயத்து சாலை அமைந்துள்ளதால் 5சம பாகங்களாக பிரிக்கப்பட்டால் வடக்கு தெற்கு மட்டுமே பிரிக்க இயலும். நாங்கள் 5பேர் நீதிமன்றதீர்ப்பு எப்படி இருக்கும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      இது போன்ற நிலைகளில் நீதிமன்றம் ஒரு அலுவலரை நியமிக்கும். அவர் உங்களது சொத்துக்களை அளந்து அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பார். அதன் அடிப்படையில் பங்குகள் பிரிக்கப்படும். அதனை ஏற்றுக் கொண்டால் வழக்கு அத்துடன் முடிக்கப்படும். இல்லையென்றால் அந்த சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அந்தப்பணம் பங்கு பிரிக்கப்படும்.

  • @anbud8612
    @anbud8612 Рік тому

    1993 ல் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டது , அதை வைத்து என் பெரியப்பா மட்டும் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றிக்கொண்டார்
    இப்போது original partition deed தொலைந்து விட்டது Xerox மட்டும் தான் இருக்கிறது
    Original partition deed பெறுவது எப்படி
    எவ்வளவு நாட்கள் ஆகும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      காணவில்லை என்று நாளிதழில் விளம்பரம் செய்து மற்றும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்து அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சார்பதிவாளரிடத்தில் கொடுத்து புதிய அசல் பெறவேண்டும்.

  • @praveenela4725
    @praveenela4725 2 роки тому +1

    Hi sir Enaku konja dovut iruku enga appa ku 2 wife irukanga enoda amma first wife so suthu pirichu kodunga keta thara matranga so enna panalam… appa ipo second wife kodathan support panie pesitu irukanga

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      நீங்கள் குறிப்பிட்ட சொத்து உங்கள் அப்பா பெயரில் இருந்தால் அதை அவர் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை

  • @theresaramya7946
    @theresaramya7946 2 роки тому +3

    Sir உங்க நம்பர் கிடைக்குமா

  • @sundarammarimuthu3342
    @sundarammarimuthu3342 2 роки тому +2

    என்னுடைய பாகம் மேல் பாகம் அதற்கு பதிலாக தெருவிலுள்ள பாகத்தை எனக்கு தந்து விட்டார்கள்
    கேட்டால் அது நல்ல பாகம் அதை தர முடியாது என மறுக்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வழக்குதான் தொடுக்க வேண்டும்

  • @vigneshkannanpitchai2324
    @vigneshkannanpitchai2324 2 роки тому +2

    ஒரு உதாரணம் சொல்லுங்களேன்
    A செட்டியூல் மதிப்பு (6 சர்வே நம்பர்), ஒரு சர்வே எண் இடம் இருவருக்கும் (A&B செட்டியூள்) மதிப்பு:- 2 லட்சம்
    B செட்டியூல் மதிப்பு (4 சர்வே நம்பர்). = 2 லட்சம்
    பத்திர செலவு, பதிவு செலவு எவ்வாறு கணக்கிடுவது. ஒரு காணொளியில் சொல்லுங்கள் எல்லோருக்கும் பயன்படும். இல்லையேல் எனக்கு பதில் தாருங்களேன்.
    நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மொத்த மதிப்பு நான்கு லட்சம் வருகிறது. 4000 ரூபாய்க்கு பத்திரம் வாங்க வேண்டும்.

  • @RajaaliRajaali-em1wx
    @RajaaliRajaali-em1wx 2 місяці тому

    ஐயா எங்கள் பூர்வீக சொத்து இதில் இரண்டு நபர்கள் வாரிசுகள் உள்ளோம் அதில் பாகப்பிரிவினை செய்யும் முன்பே ஒரு நபர் இறந்து விட்டார் இப்போது நான் அதில் எனது பாகத்தை மட்டும் எப்படி

  • @ganesanc-zq2nf
    @ganesanc-zq2nf 2 місяці тому

    நான் என்னுடைய குடும்ப உறுப்பினரிடம் விடுதலை பத்திரம் வாங்குவதற்காக வெளிநாட்டில் உள்ள எனது சகோதரன் எனது அம்மாவிற்கு பவர் கொடுத்து அதை பதிவு அலுவலகத்தில பதிவு செய்யப்பட்டு விட்டது.ஒரு வருடம் ஆகி விட்டது. இப்போது மற்ற எனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் எனது பெயருக்கு பதிவு செய்வதற்கு வெளிநாட்டுல உள்ள எனது சகோதரனிடம் வேறு எந்த ஆவணமும் வாங்க வேண்டுமா பதில் கூறவும். நன்றி.

  • @jothimanicomjothimanicom896
    @jothimanicomjothimanicom896 2 роки тому +1

    ஐயா ஒரே ஆம்பள புள்ளை பொம்பள புள்ளகளுக்கு செட்டில் பன்னியாச்சு இப்போ அப்பாவோட சொத்துகளை அந்த ஆப்பள புள்ள ஒரே பத்தித்தில் அவர்பெயரில் மாற்றுவது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தானசெட்டில்மெண்ட் செய்யலாம்

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 2 роки тому

    எனது தகப்பனார் பங்கிற்கு நான் மூன்றாவது பெண் பெண் குழந்தை எனக்குத் திருமணமாகி நான் வேறு ஊரில் குடி இருக்கிறேன் என்னிடம் என் தகப்பனாரின் சொத்துக்கான விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை நான் எப்படி என் பங்கை வாங்குவது என் தகப்பனார் இப்போது உயிருடன் இல்லை எங்கள் எங்களுடைய மொத்த சொத்தையும் எனது கூடப்பிறந்த சகோதரர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் இப்பொழுது நான் எதை வைத்து என்னுடைய பங்கை வாங்குவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அவரிடமே கேளுங்கள்.

  • @prem_rmk
    @prem_rmk Рік тому

    ஐயா வணக்கம். 1975 இல் பதிவு செய்யப்பட்டுள்ள பாகபிரிவினை பத்திரத்தில் புல எண் 1249 என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1994இல் அதே இடத்திற்கு வழங்கப்பட்ட மனைவாரி தோராய பட்டாவில் புல எண் 1245/2D என குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பதிவு செய்யப்பட்ட பட்டாவில் உள்ள நபர்கள் யாரும் உயிருடன் இல்லை. அந்த இடத்தில் பெருமாள், ராமையா என அண்ணன் தம்பி இருவருக்கும் கூட்டாக நிலம் உள்ளது. இருவரின் வாரிசுகள் பெயர்கள் பட்டாவில் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உட்பரிவு செய்ய survey அலுவலகத்தை அனுகிய போது அவர்கள் புல எண் வெவ்வேறாக உள்ளது என கூறுகின்றனர். தற்பொழுது அந்த இடத்தை எவ்வாறு இருவருக்கும் தனி தனியாக உட்பிரிவு செய்வது என்று கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      பட்டாவில் ஏற்பட்டுள்ள தவறை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யுங்கள்

  • @prasadnatchiappan2733
    @prasadnatchiappan2733 2 роки тому

    ஐயா ஒரு பட்டாவில் பல சர்வே எண்கள் உள்ளன அதில் சில எண்கள் உள்ள சொத்தை மட்டும் பாகம் பிரிக்க வேண்டும், மற்ற சர்வே எண் சொத்தை அவரவர் தனித்தனியே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் அந்த பாகம் பிரிக்க வேண்டிய சொத்தை மட்டும் பாகப்பிரிவினை பத்திரம் மூலமாகவும் மற்ற சொத்தினை பாக விடுதலை பத்திரம் மூலமாகவும் தனித்தனியே பதிந்து கொள் முடியுமா, உங்கள் ஆலோசனை எதிர்பார்த்து காத்திருக்கிரேன்🙏

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 2 роки тому +1

    Sir kootu patta ulla veedu thanipatta vaga oruvar othukka matrar eppadi thani patta peruvathu?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தனிப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கும் போது வருவாய்த்துறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு அனுப்பி விசாரனை செய்வார்கள். அதற்கு அவர்கள் வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக முடிவு செய்து தனிப்பட்டா வழங்குவார்கள்.

  • @thenmozhiramanathan2934
    @thenmozhiramanathan2934 Рік тому

    அய்யா அவர்களுக்கு வணக்கம்
    எனது சந்தேகம், பாகப்பிரிவினை ஆவணத்திலே தங்களுக்குரிய பாகத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்து எழுதித்தரலாமா, விடுதலை ஆவணம் போடாமலேயே இது சட்டப்படி செல்லுமா.
    தங்களின் விளக்கத்தை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      விடுதலைப் பத்திரம் எழுத வேண்டும்.