Unnai maranthiduveno song| Thiruarutpa| vallalar

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2020
  • Lyrics : Thiruarutpa
    Singer: Malaiyur sadhasivam
    உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
    உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
    என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
    என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
    அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
    அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
    இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
    இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே
    நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
    நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
    வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
    மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
    ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
    உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
    பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
    பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே

КОМЕНТАРІ • 2