Valli kalyanam - Sri Krishna Chaitanya Bhajana Mandali Salem on 1/12/2019
Вставка
- Опубліковано 29 вер 2024
- ............"வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே .. பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் .. பூமருவு
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து .. மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே .. ......."
- கந்தர் கலி வெண்பா
01/12/2019 அன்று , சேலம் ஸ்ரீ ஸ்ருங்கேரி சங்கர மடம் ஸ்ரீபாரதி தீர்த்த கல்யாண மண்டபத்தில், சேலம் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய பஜனா மண்டலியின் பொன்விழா ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவ வைபவத்தில் , 'வள்ளி திருமணம்' ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு .......சேலத்தின் திருப்புகழ் பொக்கிஷங்களான திரு ரத்தினம் மாமா , திரு மணி அண்ணா, திரு சீனு அண்ணா, திரு ராமகிருஷ்ண பாகவதர், சேலத்தின் நாட்டியக் கலைச்செல்வி திருமதி அபர்ணா ரமேஷ் மற்றும் பல சேலம் பாகவதமணிகளின் பங்களிப்பில் வள்ளி திருமண காட்சிகள் ....பாட்டும், பாவமுமாக........முருகன்.........வேலனாக , வேடனாக, விருத்தனாக, வேங்கையாக வள்ளியை ஆட்கொள்வது ....... ஒரு அற்புத அனுபவமாக நம் கண் முன் விரிந்தன......