கண்ணப்ப நாயனார் வரலாறு | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech |
Вставка
- Опубліковано 20 вер 2024
- கண்ணப்ப நாயனார் வரலாறு | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech |
#ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #periyapuranam #nayanmar #பெரியபுராணம்
இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்
மேவலர் புரங்கள் செற்ற
விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர்
திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்
வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை
சூழ்ந்த பொத்தப்பி நாடு. 1
இத் திரு நாடு தன்னில்
இவர் திருப் பதியாதென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள்
வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்றுக் கோட்டு
வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த
முது பதி உடுப்பூர் ஆகும். 2
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்
செவி ஞமலி யார்த்த
வன்றிரள் விளவின் கோட்டு
வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும்
கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில்
ஐவனம் உணங்கும் எங்கும். 3
வன் புலிக் குருளையோடும்
வயக் கரி கன்றினோடும்
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து
உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூர
அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும்
எயிற்றியர் மகளிர் எங்கும். 4
வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று
ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு
கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும்
கறங்கிசை அருவி எங்கும். 5
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற்
புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும்
ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடிக்
குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும்
மதக்கை மாநிரைகள் எங்கும். 6
மைச் செறிந்தனைய மேனி வன்
தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார்
உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி
நாகன் என்பான். 7
பெற்றியால் தவமுன் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான்
வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை
மனைவியும் தத்தை என்பாள். 8
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற
தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடை
இடை மனவு கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டாள்
பீலியும் குழையும் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூர்
அரிப் பிணவு போல்வாள். 9
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு
இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும்
கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள்
முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்
கடன் நெறியில் நிற்பார். 10
வாரணச் சேவலோடும் வரிமயிற்
குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி
குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை. 11
பயில் வடுப் பொலிந்த யாக்கை
வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற
எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி
வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி
அண்ணலார் அருளினாலே. 12
கானவர் குலம் விளங்கத்
தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன்
வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல
அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என
மகப் பயந்த போது. 13
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை
விளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழி
தரு மழையே அன்றி
வரிச் சுரும்பு அலைய வானின் மலர்
மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறுந் துடியே அன்றி
அமரர் துந்துபியும் ஆர்த்த. 14
அருவரைக் குறவர் தங்கள் அகன்
குடிச் சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க
பெருங்களி கூறும் காலைக்
கருவரை காள மேகம்
ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை
எடுத்துக் கொண்டான். 15
கருங் கதிர் விரிக்கும் மேனி
காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி
இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம்
அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் சாற்றும்
தன்மையிற் பொலிந்து தோன்ற. 16
அண்ணலைக் கையில் ஏந்தற்கு
அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத்
திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணியப் பொருளாய் உள்ள
பொருவில் சீர் உருவினானைக்
கண்ணினுக்கு அணியாத் தங்கள்
கலன்பல அணிந்தார் அன்றே. 17
சிறந்த சொற்பொழிவு வணங்குகிறேன்
Thanks for watching👍
❤
❤
❤❤❤❤we arevery lucky to listen to this story thanks
Thanks for watching👍
வரையுறை கடவுட் காப்பு
மறக்குடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப்
பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு
இழைத்து இடையே கோத்த
அரை மணிக் கவடி கட்டி
அழகுற வளர்க்கும் நாளில். 18
வருமுறைப் பருவம் தோறும்
வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க
பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்கச்
செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற
ஆர்வமும் தோன்ற உய்த்தார். 19
ஆண்டு எதிர் அணைந்து செல்ல
விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன்
குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு
முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி
நலங்கிளர் மார்பில் தூங்க. 20
பாசொளி மணியோடு ஆர்த்த பன்
மணிச் சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்புக் கலன்
புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை
செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி
மறுகிடை ஆடும் நாளில். 21
தண் மலர் அலங்கல் தாதை
தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில்
புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய
மழலைத் தீஞ் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய்
குதட்டியே வளரா நின்றார். 22
பொரு புலிப் பார்வைப் பேழ்வாய்
முழை எனப் பொற்கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு
பைந்தழை கைக் கொண்டோச்ச
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும்
எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய்
முத்தம் கொள்ள மாற்றி. 23
துடிக் குறடு உருட்டி ஓடித்
தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப்
பேதையர் இழைத்த வண்டல்
அடிச் சிறு தளிரால்
சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடிச் செறு குரம்பை எங்கும்
குறு நடை குறும்பு செய்து. 24
அனையன பலவும் செய்தே ஐந்தின்
மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி
மறச் சிறு மைந்த ரோடும்
சினை மலர்க் காவுள் ஆடிச்
செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனை மருப் புழலை வேலிப்
புறச்சிறு கானிற் போகி. 25
கடு முயல் பறழினோடுங்
கான ஏனத்தின் குட்டி
கொடு வரிக் குருளை செந்நாய்
கொடுஞ் செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து
உடன் பற்றி முற்றத்து
இடு மரத் திரளில்
கட்டி வளர்ப்பன எண்ணிலாத. 26
அலர் பகல் கழிந்த அந்தி
ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு
கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப்
புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்ல
சிலை பயில் பருவம் சேர்ந்தார். 27
தந்தையும் மைந்தனாரை நோக்கித்
தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழப் புல்லிச்
சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அத் துறையில் மிக்க
முதியரை அழைத்துக் கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம்
மறவர்க்குச் சொல்லி விட்டான். 28
வேடர் தம் கோமான் நாகன்
வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன்
வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த
பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மறக்
குலத் தலைவர் எல்லாம். 29
மலை படு மணியும் பொன்னும்
தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்றுக் கோடும்
பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும்
பலங்களும் கிழங்கும் துன்றச்
சிலை பயில் வேடர் கொண்டு
திசை தொறும் நெருங்க வந்தார். 30
மல்கிய வளங்கள் எல்லாம்
நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம்
ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்
கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று
விளம்பினான் வேடர் கோமான். 31
பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார். 32
சிலையினைக் காப்புக் கட்டும் திண்
புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண்
நாகனார் பயந்த நாகர்
குலம் விளங் கரிய குன்றின்
கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம்
வாழ்த்து எடுத்து இயம்பினார்கள். 33
ஐவன அடிசில் வெவ்வேறு
அமைந்தன புற்பாற் சொன்றி
மொய் வரைத் தினை மென் சோறு
மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த
ஊன் கிழங்கு துன்றச்
செய் வரை உயர்ப்ப எங்கும்
கலந்தனர் சினவில் வேடர். 34
தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
Thanks for watching👍
அங்கு அப்பொழுதில் புவனத்து
இடர் வாங்க ஓங்கித்
துங்கப் பெரு மா மழை போன்று
துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு
விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத் தலத்தால் தடவிச்
சிறு நாண் எறிந்தார். 63
பல்வேறு வாளி புதை பார்த்து
உடன் போத ஏவி
வில் வேடர் ஆயத் துடி
மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்துத்
திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்
வாளி தெரிந்து நின்றார். 64
மானச் சிலை வேடர்
மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர்
சோதியார் முன்
தேனற்றசை தேறல் சருப்
பொரி மற்றும் உள்ள
கானப் பலி நேர்
கடவுள் பொறையாட்டி வந்தாள். 65
நின்று எங்கும் மொய்க்கும்
சிலைவேடர்கள் நீங்கப் புக்குச்
சென்று அங்கு வள்ளல் திரு
நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இந்
நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது உன்விறல் நம்மளவு
அன்று இது என்றாள். 66
அப் பெற்றியில் வாழ்த்தும்
அணங்குடை ஆட்டி தன்னைச்
செப்பற்கு அரிதாய சிறப்பு
எதிர் செய்து போக்கிக்
கைப் பற்றிய திண் சிலை
கார் மழை மேகம் என்ன
மெய்ப் பொற்புடை வேட்டையின்
மேல்கொண்டு எழுந்து போந்தார். 67
தாளில் வாழ் செருப்பர் தோல்
தழைத்த நீடு தானையார்
வாளியோடு சாபம் மேவு கையர்
வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும்
அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம்
மிக்கு மேல் எழுந்ததே. 68
வன் தொடர்ப் பிணித்த பாசம் வன்
கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின்
மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய
நாவின் வாய வாய்
ஒன்றொடு ஒன்று நேர் படாமல்
ஓடு நாய்கள் மாடெலாம். 69
போர் வலைச் சிலைத்
தொழில் புறத்திலே விளைப்ப அச்
சார் வலைத் தொடக்கு அறுக்க
ஏகும் ஐயர் தம் முனே
கார் வலைப் படுத்த குன்று
கானமா வளைக்க நீள்
வார் வலைத் திறம் சுமந்து
வந்த வெற்பர் முந்தினார். 70
நண்ணி மா மறைக் குலங்கள்
நாட என்று நீடும் அத்
தண்ணிலா அடம்பு கொன்றை
தங்கு வேணியார் தமைக்
கண்ணில் நீடு பார்வை ஒன்று
கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர்
எம் மருங்கும் ஏகினார். 71
கோடுமுன் பொலிக்கவும் குறுங்
கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும்
மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளிச்
சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு
கை வளைந்து சென்றதே. 72
நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு
காடு கூட நேர்
வருங்கருஞ் சிலைத் தடக்கை மான
வேடர் சேனை தான்
பொருந் தடந் திரைக்கடல் பரப்பு
இடைப் புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல்
களிந்தி கன்னி ஒத்ததே. 73
தென் திசைப் பொருப்புடன் செறிந்த
கானின் மான் இனம்
பன்றி வெம் மரைக் கணங்கள்
ஆதியான பல் குலம்
துன்றி நின்ற வென்றடிச்
சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம்
மருங்கும் வேடர் ஓடினார். 74
ஓடி எறிந்து வாரொழுக்கி
யோசனைப் பரப்பு எலாம்
நெடிய திண் வலைத் தொடக்கு
நீளிடைப் பிணித்து நேர்
கடி கொளப் பரந்த காடு காவல்
செய்து அமைத்த பின்
செடி தலைச் சிலைக்கை வேடர்
திண்ணனார் முன் நண்ணினார். 75
வெஞ்சிலைக்கை வீரனாரும்
வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரிப்
புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள்
அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த
கானுள் எய்தினார். 76
வெய்ய மா எழுப்ப ஏவி
வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து
கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடிக் குலங்கள்
பம்பை முன் சிலைத்து எழக்
கை விளித்து அதிர்த்து மா
எழுப்பினார்கள் கானெலாம். 77
ஏனமோடு மான் இனங்கள் எண்கு
திண் கலைக் குலம்
கான மேதி யானை வெம்
புலிக் கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா
வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து
சீறி அம்பில் நூறினார். 78
தாளறுவன் இடை துணிவன
தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன
சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட
நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல்
எழ விழுவன பல உழையே. 79
வெங்கணை படு பிடர் கிழிபட
விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை
செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது
அடல் எயிறு உற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன
புரைவன சில புலிகள். 80
உருகிய அன்பொழிவின்றி நிறைந்த
அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில்
பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும்
உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்கவன்தன்
வாயுமிழும் புனல்புனிதம். 159
இம்மலைவந் தெனையடைந்த
கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல்
விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால்
முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால்
இடுமலர்போல் எனக்கொல்வா. 160
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ
எனும் அன்பால்
நையுமனத் தினிமையினால்
நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர்
முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவந்தான்
இட்டஊன் எனக்கினிய. 161
மன்பெருமா மறைமொழிகள்
மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழித் தோத்திரங்கள்
மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினைந் தெனையல்லால்
அறிவுறா மொழிநல்ல. 162
உனக்கவன் தன் செயல் காட்ட
நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும்
பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக் கவலை ஒழிக என்று
மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடிலத் திரு முடியார்
எழுந்து அருளிப் போயினார். 163
கனவு நிலை நீங்கிய பின்
விழித்து உணர்ந்து கங்குல் இடைப்
புனை தவத்து மாமுனிவர் புலர்
அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும்
பயமும் உடன் ஆகித்
துனை புரவித் தனித் தேர்
மேல் தோன்றுவான் கதிர் தோன்ற. 164
முன்னை நாள் போல் வந்து
திருமுகலிப் புனல் மூழ்கிப்
பன் முறையும் தம்பிரான் அருள்
செய்த படி நினைந்து
மன்னு திருக் காளத்தி மலை
ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனைப் பூசித்துப்
பின்பாக ஒளித்திருந்தார். 165
கருமுகில் என்ன நின்ற கண்
படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும்
இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை
வதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத்
தனிப்பெரு வேட்டை ஆடி. 166
மாறில் ஊன் அமுதும் நல்ல
மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு
இயல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன
செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக
வந்து அணையா நின்றார். 167
இத்தனை பொழுது தாழ்த்தேன் என
விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை
முறை தீங்கு செய்ய
இத் தகு தீய புட்கள்
ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன்
அடுத்தது என்று அணையும் போதில். 168
அண்ணலார் திருக் காளத்தி
அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத்
திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய
இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்
விரைந்து ஓடி வந்தார். 169
வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி
நின்று அலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து
இடைப் பதைத்து வீழ்ந்தார். 170
விழுந்தவர் எழுந்து சென்று
துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திடக் காணார் செய்வது
அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி
யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும்
பார்த்தனர் எடுத்தார் வில்லும். 171
வாளியுந் தெரிந்து கொண்டு இம்
மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார்
உளர் கொலோ? விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள
விளைத்தவோ? அறியேன் என்று
நீளிருங் குன்றைச் சாரல்
நெடிதிடை நேடிச் சென்றார். 172
வேடரைக் காணார் தீய
விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும்
நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை
மலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு
கதறினார் கண்ணீர் வார. 173
பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவது ஒன்று அறிகிலேன் யான்
என் செய்கேன் என்று பின்னும். 174
செம் தினை இடியும் தேனும்
அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி
விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி
நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர்
ஆயினர் அளவிலார்கள். 35
அயல் வரைப் புலத்தின் வந்தார்
அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த
எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க
ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி
வரிசிலை விழவு கொள்வார். 36
பாசிலைப் படலைச் சுற்றிப் பன்
மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத் தோல் கட்டி
கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா
வருதுறைக் கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற்
சிலை மருங்கு சூழ்ந்தார். 37
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும்
துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம
எழுந்த பேர் ஒலியினோடு
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண்
விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக்
குறிச்சியை வலம் கொண்டார்கள். 38
குன்றவர் களி கொண்டாடக்
கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்
அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும்
விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை
அழகுற அமைத்த பின்னர். 39
வெங்கதிர் விசும்பின் உச்சி
மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க
மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
தங்கள் தொல் மரபின் விஞ்சைத்
தனுத் தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும் போர்ஏற்றைப்
பொருசிலை பிடிப்பித்தார்கள். 40
பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு
கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி
விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும்
அடல் சிலை ஆண்மை முற்றக்
கற்றனர் என்னை ஆளும்
கானவர்க்கு அரிய சிங்கம். 41
வண்ணவெஞ் சிலையும் மற்றப்
படைகளும் மலரக் கற்று
கண்ணகல் சாயல் பொங்கக் கலை
வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி
எய்தினார் எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல்
வளர்வதன் பொலிவு போல்வார். 42
இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடுந் தோள் நாகன்
தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர்
கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம்
எய்தி வில்லுழவின் பெரு முயற்சி மெலிவான் ஆனான். 43
அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள்
எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான்
முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத்
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது
என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள
தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார். 44
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே
முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும்
கைக் கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன்
அடி வணங்கி இம் மாற்றம் அறைகின்றார்கள். 45
இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி
இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால்
அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால
மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து
நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர். 46
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும்
திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி
வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை
அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி
நெடிது வந்து விருப்பினொடும் கடிது வந்தாள். 47
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக்
கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு
மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப்
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப்
போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள். 48
ஆங்கு அதன் கரையின் பாங்கோர்
அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மரக்
கடை தீக் கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய்
இம்மலை ஏறிக் கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று
நாணனும் தாமும் போந்தார். 99
அளி மிடை கரை சூழ் சோலை
அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை
தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்கக்
காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு
ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார். 100
கதிரவன் உச்சி நண்ணக் கடவுள்
மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்
கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு
இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு
எழும் ஒலி கொல் என்றான். 101
முன்பு செய் தவத்தின் ஈட்டம்
முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட
அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர
வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து
எழு பெரு வேட்கை யோடும். 102
நாணனும் அன்பும் முன்பு நளிர்
வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும்
பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார
அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர்
படச் செல்லும் போதில். 103
திங்கள் சேர் சடையார் தம்மைச்
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த
அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு
விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்
அன்பு உருவம் ஆனார். 104
மாகமார் திருக் காளத்தி மலை
எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரைக் கண்டார் எழுந்த
பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல
மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடிச் சென்றார்
தழுவினார் மோந்து நின்றார். 105
நெடிது போது உயிர்த்து நின்று
நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க
மலர்க் கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே
அகப்பட்டார் அச்சோ என்று
படி இலாப் பரிவு தான்
ஓர் படிவமாம் பரிசு தோன்ற. 106
வெம் மறக் குலத்து வந்த
வேட்டுவச் சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை
அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார்
ஒருவரும் இன்றிக் கெட்டேன்
இம் மலைத் தனியே நீர் இங்கு
இருப்பதே என்று நைந்தார். 107
கைச்சிலை விழுந்தது ஓரார்
காளையார் மீள இந்தப்
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு
நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ
என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான்
இது அறிந்தேன் என்பான். 108
வன்றிறல் உந்தை யோடு மா
வேட்டை ஆடிப் பண்டிக்
குன்று இடை வந்தோம் ஆகக்
குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி
முன் பறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன்
செய்தது ஆகும் என்றான். 109
உண்ணிறைந்து எழுந்த தேனும்
ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக் காளத்தி
நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது
கடைப் பிடித்துக் கொண்டு அவ்
அண்ணலைப் பிரிய மாட்டாத
அளவில் ஆதரவு நீட. 110
Thenaludaya sivane potri Ennattavarugum Enraiva potri 🙏💚💚🙏
Thanks for watching👍
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
Thanks for watching👍
நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர்
நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று
கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளை வளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள். 49
கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன்
எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக்
காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து
வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி
உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான். 50
மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச்
சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல
ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
சிலையோன் நின் அளவில் அன்றி
மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவனத் தெய்வங்கள் மகிழ ஊட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள். 51
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற
பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்
மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி
மணிநீல மலைஒன்று வந்தது என்னக்
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து
காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்
செய்வரை போல் புயம் இரண்டும் செறியப்
புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான். 52
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி
நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்புபோல
என்னுடைய முயற்சியினால் வேட்டை
ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குலக் காவல்
பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய்
என்றுடை தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே. 53
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு
கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சாய்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு
மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை
தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத்
திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான். 54
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை
நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட
திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு
வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும்
எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான். 55
செங்கண் வயக் கோளரியேறு அன்ன
திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி
நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடு
மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின்
வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப்
பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம்
கொள்ளப் புனை தொழில் கை வினைஞருடன் பொலிந்து புக்கார். 56
நெறி கொண்ட குஞ்சிச் சுருள்
துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை
மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லைப்
பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர்
கொளப் பின்பு செய்து. 57
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி
மின்னில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக. 58
கண்டத்திடை வெண் கவடிக்
கதிர் மாலை சேரக்
கொண்டக் கொடு பன் மணி
கோத்திடை ஏனக் கோடு
துண்டப் பிறை போல்வன
தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க. 59
மார்பில் சிறு தந்த
மணித்திரள் மாலைத் தாழத்
தாரிற் பொலி தோள்
வலயங்கள் தழைத்து மின்னச்
சேர்விற் பொலி கங்கண
மீது திகழ்ந்த முன் கைக்
கார்விற் செறி நாண் எறி
கைச் செறி கட்டி கட்டி. 60
அரையில் சரணத்து உரி
ஆடையின் மீது பௌவத்
திரையில் படு வெள்ளலகு
ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோள்
சுரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி
போக்கி அமைத்து வீக்கி. 61
வீரக் கழல் காலின்
விளங்க அணிந்து பாதம்
சேரத் தொடு நீடு
செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெரு வில் வலம்
கொண்டு பணிந்து திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து
ஏற்றி வியந்து தாங்கி. 62
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில்
தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சிப்
பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்துப் படைத்த
இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது
செய்து அருளும் என்றார். 125
அன்ன இம் மொழிகள் சொல்லி
அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு
இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு
பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப்
பகலவன் மலையில் தாழ்ந்தான். 126
அவ்வழி அந்தி மாலை
அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி
மெய்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக்
கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு
நின்று அகலா நின்றார். 127
சார்வரும் தவங்கள் செய்து
முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும்
காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா
அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார்
நீள் இருள் நீங்க நின்றார். 128
கழை சொரி தரளக் குன்றில்
கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய
மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
தழை கதிர்ப் பரிதியோடும்
சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பைக்
கும்பிடச் சென்றால் ஒக்கும். 129
விரவு பன்மணிகள் கான்ற
விரிகதிர்ப் படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல
மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சிப்
போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று
உளது எங்கும் எங்கும். 130
செந்தழல் ஒளியில் பொங்கும்
தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த
மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார்
அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில்
இரவு ஒன்று இல்லை. 131
வரும் கறைப் பொழுது நீங்கி
மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ்
சிலம்பு ஓசை கேட்டுக்
கருங்கடல் என்ன நின்ற
கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது
கொண்டு அணைய வேண்டி. 132
ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை
புனமான் மற்றும்
வேறு வேறு இனங்கள் வேட்டை
வினைத் தொழில் விரகினாலே
ஊறுசெய் காலம் சிந்தித்து
உருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையும் கொண்டு
வள்ளலைத் தொழுது போந்தார். 133
மொய் காட்டும் இருள் வாங்கி
முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய
வில்லியார் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட
கரும் திரை எடுத்துக்
கை காட்டும் வான் போலக்
கதிர் காட்டி எழும் போதில். 134
எய்திய சீர் ஆகமத்தில்
இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
கொய்த மலரும் புனலும்
முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை
மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய
முனிவர் சிவ கோசரியார். 135
வந்து திருமலையின் கண்
வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்
கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு
அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார்
செய்தார் என்று அழிவார். 136
மேவநேர் வர அஞ்சா
வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே
திருமுன்பே இது செய்து
போவதே இவ் வண்ணம்
புகுத நீர் திரு உள்ளம்
ஆவதே எனப் பதறி
அழுது விழுந்து அலமந்தார். 137
பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின்
பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ்
இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும்
திரு அலகால் மாற்றிய பின்
விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல்
மூழ்கி விரைந்து அணைந்தார். 138
பழுது புகுந்தது அது தீரப்
பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு
தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே
முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து
முதல்வனார் கழல் பணிந்தார். 139
பணிந்து எழுந்து தனி முதலாம்
பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துதி
செய்து சுடர்த் திங்கள்
அணிந்த சடை முடிக் கற்றை
அங்கணரை விடை கொண்டு
தணிந்த மனத் திருமுனிவர்
தபோ வனத்தினிடைச் சார்ந்தார். 140
😮
பின் மறவர்கள் விடு பகழிகள்
பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட
முடுகிய விசையுடன் அக்
கொன் முனை அடு சரம் இனம்
எதிர் குறுகிய முகம் உருவத்
தன் எதிர் எதிர் பொருவன
நிகர் தலையன பல கலைகள். 81
கரு வரை ஒரு தனுவொடு விசை
கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர்
கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின
அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன
என மிடையும் அவ்வனமே. 82
நீளிடை விசை மிசை குதிகொள நெடு
முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு
சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற
வருமென விழும் உழையைக்
கோளொடு பயில் பணி தொடர்
நிலை கொளவுள எதிர் பலவே. 83
கடல் விரி புனல் கொள
விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய
பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற
வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகளொடு
விழுவன வன மேதி. 84
பல துறைகளின் வெருவரலொடு பயில்
வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு
சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை
நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த
பொறிகளின் அளவுளவே. 85
துடியடியன மடி செவியன
துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள்
மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன
அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு
கொலை புரி சிலை மறவோர். 86
இவ்வகை வரு கொலை மறவினை
எதிர் நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுற இடை
கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு
பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர்
முடுகிய கடு விசையில். 87
போமது தனை அடுதிறலொடு
பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி
வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர்
தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள்
இருவர்கள் அடி பிரியார். 88
நாடிய கழல் வயவர்கள் அவர்
நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும்
மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு
கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு
நீழலின் விரை கேழல். 89
குன்றியை நிகர் முன் செற எரி
கொடு விழி இடி குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு
படர் நெறி நெடிதோடித்
துன்றியது ஒரு குன்று அடி
வரை சுலவிய நெறி சூழல்
சென்று அதனிடை நின்றது
வலிதெருமரமர நிரையில். 90
அத் தரு வளர் சுழல் இடை
அடை அதன் நிலை அறிபவர் முன்
கைத் தெரி கணையினில் அடுவது
கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை
முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி
குல மறவர்கள் தலைவர். 91
வேடர் தங்கரிய செங்கண்
வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த
வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று
காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ
என்று அவர் அடியில் தாழ்ந்தார். 92
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார்
வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி யாமும்
தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டைக் காடு
குறுகுவோம் மெல்ல என்றார். 93
என்று அவர் கூற நோக்கித்
திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது
என்று உரை செய்ய நாணன்
நின்ற இப் பெரிய தேக்கின்
அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த
பொன் முகலி என்றான். 94
பொங்கிய சின வில் வேடன்
சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு
போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார்
காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும்
திருமலைச் சாரல் சோலை. 95
நாணனே தோன்றும் குன்றில்
நண்ணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை
மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்
கும்பிடலாம் என்றான். 96
ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை
தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும்
ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர்
விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே
போகென்றார் திண்ணனார் தாம். 97
உரை செய்து விரைந்து செல்ல
அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும்
கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும்
வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த
திரு முகலியினைச் சார்ந்தார். 98
இவ் வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனி இப்பால்
மைவண்ணக் கருங் குஞ்சி
வன வேடர் பெருமானார்
கைவண்ணச் சிலை வளைத்துக் கான்
வேட்டை தனி ஆடிச்
செய்வண்ணத் திறம் மொழிவேன்
தீவினையின் திறம் ஒழிவேன். 141
திரு மலையின் புறம் போன
திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடைச் சரிவில் பெரும்
பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான்
இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழிச் சென்று ஏறு துறை
ஒளி நின்று கொன்று அருளி. 142
பயில் விளியால் கலை அழைத்துப்
பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி
அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை யெய்து
தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிரத்
தனி வேட்டை வினை முடித்தார். 143
பட்ட வன விலங்கு எல்லாம்
படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக் கடை கோல்
இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும்
மிக முறித்துத் தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு
புடை பட அமைத்தார். 144
இந்தனத்தை முறித்து அடுக்கி
எரி கடையும் அரணியினில்
வெம் தழலைப் பிறப்பித்து
மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால்
குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும்
தழலில் வக்குன வக்குவித்து. 145
வாய் அம்பால் அழிப்பதுவும்
வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம்
அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்துக்
கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்கச்
சுவை காணல் உறுகின்றார். 146
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும்
உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண்
வைத்தது எனக் காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு
தாம் சோதித்து அமைப்பதற்குத்
திண்ணனார் திருவாயில் அமைத்தார்
ஊன் திரு அமுது. 147
நல்ல பதமுற வெந்து நாவின்
கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்துத் தேன்
பிழிந்து கலந்து அது கொண்டு
வல் விரைந்து திருப் பள்ளித்
தாமமும் தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன்
கொண்டு வந்து அணைந்தார். 148
வந்து திருக் காளத்தி
மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார்
தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு
போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய
பூசனையின் செயல் முடிப்பார். 149
ஊனமுது கல்லை உடன் வைத்து
இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள்
மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது
அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து
இதுதித்திக்கும் என மொழிந்தார். 150
இப் பரிசு திரு அமுது
செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து
அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும்
அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார்
பகல் வேட்டை ஆடுவார். 151
மாமுனிவர் நாள் தோறும் வந்து
அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்குச் சால
மிகத் தளர்வு எய்தித்
தீமை என அது நீக்கிச்
செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து
அந் நெறியில் ஒழுகுவரால். 152
நாணனொடு காடனும் போய்
நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி
அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால்
வந்து எல்லாம் பேதித்துக்
காணு நெறி தங்கள் குறி
வாராமல் கை விட்டார். 153
முன்பு திருக் காளத்தி
முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன்
ஆனால் போல் யாக்கைத்
தன் பரிசும் வினை இரண்டும்
சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பாய்த் திரிவார்
அவர் கருத்தின் அளவினரோ?. 154
அந்நிலையில் அன்பனார் அறிந்த
நெறி பூசிப்ப
மன்னிய ஆகமப் படியால்
மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது
செய்தார் தமைக் காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து
அருள வேண்டும் என. 155
அன்று இரவு கனவின் கண்
அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி
வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று
அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை
நாம் உரைப்பக் கேள் என்று. 156
அவனுடைய வடிவு எல்லாம்
நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை
அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம்
நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ
என்று அருள் செய்வார். 157
பொருட்பினில் வந்தவன் செய்யும்
பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை
நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால்
பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற்
சிறப்புடைத்தால். 158
இவர் தமைக் கண்டேனுக்குத்
தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய
இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமைப் பிரிய ஒண்ணாது
என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு
எய்தவும் வேண்டும் என்று. 111
போதுவர் மீண்டு செல்வர்
புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று
அகல் புனிற்று ஆப் போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல
மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டு
இங்கு வருவேன் என்பார். 112
ஆர்தமராக நீர் இங்கு
இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு
நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வாரப்
போய் வரத் துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக் கொண்டு
மலர்க் கையால் தொழுது போந்தார். 113
முன்பு நின்று அரிதில் நீங்கி
மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னைப்
பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும்
அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறிப்
புது மலர்க் காவில் புக்கார். 114
காடனும் எதிரே சென்று தொழுது
தீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள்
குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து
நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ
என்றலும் நின்ற நாணன். 115
அங்கிவர் மலையில் தேவர் தம்மைக்
கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு
என்ன நீங்கான்
இங்கும் அத் தேவர் தின்ன
இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்
நம்குலத் தலைமை விட்டான்
நலப்பட்டான் தேவர்க்கு என்றான். 116
என் செய்தாய் திண்ணா நீ தான்
என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ
என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை
எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு
அம்பினால் ஈர்ந்து கொண்டு. 117
கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும்
தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான்
வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகு
இலை இணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன்
மிசை இடுவார் ஆனார். 118
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல்
மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி
அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும்
பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றைத்
தசை புறத்து எறியா நின்றான். 119
தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன்
மற்று இதனைத் தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம்
தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க
வேண்டும் அவ் வேட்டைக் கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும்
என்று எண்ணிப் போனார். 120
கானவர் போனது ஓரார்
கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்துக் கொண்டு
மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய
வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளித் தாமங்
குஞ்சி மேல் துதையக் கொண்டார். 121
தனு ஒரு கையில் வெய்ய
சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனித மெல் இறைச்சி நல்ல
போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர்
என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர்
வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம். 122
இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச்
சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலைக் கண்டு
முடிமிசை மலரைக் காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி
வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போல
விமலனார் முடிமேல் விட்டார். 123
தலை மிசைச் சுமந்த பள்ளித்
தாமத்தைத் தடங் காளத்தி
மலை மிசைத் தம்பிரானார் முடி
மிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத்
திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசைப் படைத்த ஊனின்
திரு அமுது எதிரே வைத்து. 124
ஓம் நமசிவாய🙏🙏
Thanks for watching👍
என் செய்தால் தீருமோதான்?
எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய்
கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும்
மெய் மருந்து தேடிப்
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு
வருவன் நான் என்று போனார். 175
நினைத்தனர் வேறு வேறு
நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என
வெருக் கொண்டு எய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு
பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம்
மருந்துகள் பிழிந்து வார்த்தார். 176
மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக் காளத்திக்
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை
படாது இழியக் கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச்
செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு
ஊன் எனும் உரைமுன் கண்டார். 177
இதற்கினி என்கண் அம்பால் இடந்து
அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்
நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து
முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர்
தம் கண்ணில் அப்ப. 178
நின்ற செங்குருதி கண்டார்
நிலத்தின் நின்றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி
என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்
மத்தர் போல மிக்கார். 179
வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார். 180
கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக்
கண் குருதி பொங்கி
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து
கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து
அப்பி ஒழிப்பேன் என்று. 181
கண்ணுதல் கண்ணில் தம் கண்
இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவார் தம்பிரான் தன் திருக்
கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு
தனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத்
தரித்திலர் தேவ தேவர். 182
செங்கண் வெள்விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக் காளத்தி
அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத்
தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக்
கண்ணப்ப நிற்க என்றே. 183
கானவர் பெருமானார் தங்கண்
இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று
முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார்
நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி
பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப. 184
பேறினி இதன் மேல் உண்டோ ?
பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம்
கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக்
கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு
பேர் அருள் புரிந்தார். 185
மங்குல் வாழ் திருக் காளத்தி
மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்
தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார்
வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத்
தொண்டு புகலல் உற்றேன். 186
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 sivaya namaka ayya
Thanks for watching👍
❤
Thanks for watching👍
திருமாலின் 10 அவதாரங்கள் அதற்கான காரணங்கள் பற்றி கூறுங்கள் ஐயா
Thanks for watching👍