#மீளாஅடிமை
Вставка
- Опубліковано 10 бер 2023
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு!
7 -ஆம் திருமுறை
திருவாரூர் பதிகம் 7.095.
அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி 🙏🏾
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[ 1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!
[ 2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!
[ 3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!
[ 4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!
[ 5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[ 6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!
[ 7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[ 8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[ 9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!
[ 10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!
[ 11]
#அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
சாய் கண்ணா நால்வர் பதிகங்களைப் பாடும் உன் நாக்கு என்ன புண்ணியம் செய்த டோ உன் பாடலை கேட்டு நான் மெய்சிலிர்த்து போகிறேன் கண்ணா நீ உருகிப் பாடும் போது அந்த ஈசனே இறங்கி வந்து உனக்கு அருள் புரிவார் இன்னும் நிறைய நீ பாட வேண்டும் நீ எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் சிவாய நம
உள்ளத்தையும் உயிரையும் உருக்கும் குரல். சிவலோக திருமடத்திற்கு கோடான கோடி நன்றிகள். ஓம் நமசிவாய.
இதை போன்ற பதிகங்கள் தெய்வீக ராகத்துடன் பாடுவது மனதை இறைவனிடம் அழைத்துச் செல்லும் . வாழ்க நீடூழி.வாழ்க தங்கள் இறைத்தொண்டு.
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இனிமை இனிமை
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
மனதையும் உயிரையும் ஒருங்கிணைத்து ஈசனடி கொண்டு சேர்க்கும் அற்புதமான ராகம் அற்புதமான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சுந்தரரின் மீளா அடிமை முழு தேவார பதிகத்தை அற்புதமாகவும் இனிமையாகவும் இளைய தலைமுறையினர் எளிதாக பாடக் கூடிய வகையிலும் இசையமைத்து அளித்த சிவத்திரு சோலார் சாய் ஐயா அவர்களுக்கும் அவரது இசை குழுவினருக்கும் மிக்க நன்றி. வணக்கம் . திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
ஐயா வணக்கம். நன்றி 🙏🙏🙏 தமிழ் உச்சரிப்பில் அருமை. இன்னும் நிறைய பதிகங்கள் பாடுங்கள் . ஐயன் ஈசன் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் 🙏🙏🙏🙏 ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர 🙏💥💥
மிக நீண்ட நாள் கணவு சிவலோகம் திருமடத்திற்கு விண்ணப்பம் செய்து இரண்டு வருடத்திற்கு மேலாக காத்திருந்து தற்பொழுது எல்லாம் வல்ல ஆரூர் பெருமான் திருவருளால் அடியேன் கணவு நிறைவுபெற்றது.
மிக தெளிவாக பாடிய அனைத்து அடியார்களின் திருவடிபணிகிறேன் பெருமானே.
😍ஆரூர் அமர்ந்த அரசே போற்றி😍
👣தியாகராஜா பெருமானே போற்றி போற்றி👣
🙏வண்தொண்டன் நாமம் வாழ்க🙏
தங்கள் பாடல் அணைத்தும் மிக அருமை தங்கள் தொண்டு மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
Sunthara.poty.omnamasivayanamakaya
சிவாய நம ஐயா🙏 இந்த பதிகத்தை கேட்கும்பொழுது ஆரூர் தியாகேசப்பெருமானை திருவாரூரில் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏 அனைத்தும் அருமை ஐயா, திருச்சிற்றம்பலம்
💓
Indha Pantai miga arumaiyaga padi ullergal. Ithu valadu kan paarvaikana paadal. Ithu pol neengal alandal ena thodangum paatayy paataiyym
சிவாயநம 🙏🙏🙏
இசையும் மந்திர வார்த்தைகளும் இணை குரல் எல்லாம் சரியாக பொருந்தி பொக்கிஷமாக மாறிவிட்டது திருஆரூர் அரசே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சோலார் சாய் ஐயா அவர்களுக்கு வணக்கம் முதன்முதலில் திரைப்படத்துக்காக நான் எழுதிய பாடலை நீங்கள்தான் பாடி உள்ளீர்கள் அருமையான பக்தி பாடகர் சிவனடியார் என்னுடைய முதல் பாடலை பாடியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ஏனென்றால் நான் எங்கு போய் எனது பாடலை பாடியவர் சோலார் சாய் என்று சொன்னால் அவர்கள் சொல்லும் பதில் அப்படியா அவர் எப்போதுமே அருமையாக பாடுவார் நல்ல மனிதன் நிறைய பக்தி பாடல்கள் பாடுவார் திறமையான மனிதன் அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பழகுகின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கும் உங்கள் மீது அன்பு கலந்த மரியாதை உண்டு நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று மனம் நிறைந்து இறைவனை வேண்டுகிறேன்🙏🙌😊
தினமும் கேட்டுக் கொண்டு இருங்கள் கண் சம்பந்தமான பிரச்சினை தீரும் உண்மை தான் சிவா
2:28
ஜயா காந்த குரலோன்
அருமையான கம்போசிங், இசை யமைப்பு
What a Voice very divine 🙏🙏🙏😊
நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவருள் குருவின் கருணை என்றும் இனிய பதிகம் உண்மை யான வரிகள்
சிவாயநம அம்மா 🙏🏾
எல்லாம் தங்களின் மேலான அன்பினால் விளைந்ததே!
ஓம் நமசிவய சிவயநம
ஓம்நமசிவாயபோற்றி🙏🙏🙏🙏
🙏🌷🌿ஆரூரா 🌷ஐயாறா 🌸🙏🌹
On.namasivaya.siva.siva.
🙏🙏🙏🙏🙏🙏🙏
நமசிவாய வாழ்க
அண்ணா வெகு அருமையாக உள்ளது 🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாள் பாடும் ஐயா வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நேரில் பாடியது போல் இருந்தது
ஓம் நமசிவாய
இந்த ராகம் இப்பதிகானதல்ல.
🙏🙏🙏🙏🙏
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏
Arumai ayya miga arumai shivaya nama
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
சிவாய நம 🙏❤❤❤❤❤திருச்சிற்றமபலம் 🙏🙏🙏🙏🙏அருமையான குரல்வளம் எங்களை ஈசனுடைய அருள் ஆசி பெறச்செய்யும் தங்கள் பேறாற்றல் ❤தாங்கள் வாழ்க!!வளர்க!!இவ்வையகம் உள்ள மட்டும் மேன்மையையும் மேன்மையுடன் 🎉🎉🎉🎉❤
❤ Sairam
our shivaperuman listening thirupaadu happily , paaadi aadukintrar , iyyavin unique amirtham to ears, gift from lord shiva, bless you to continue this shivathndu forever nandri iyya thiruchitrambalam
தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் இனிமையான குரலில் இப்பாடலை வழங்கிய திரு சோலார் சாய் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம் 🙏
🙏🏻🙇🏻♂️
siva siva siva thiruchitrambalam
Superb. Very Very Melodious..Much enchanting. 🙏🙏🙏🙏🙏
ஒம் நமச்சிவாய நம🙏
Om Namashivaya Arur Perumane 🙏🍀🌿🙏
நமச்சிவாய🌿🙏
Madhyamaavathi
Melodious voice. All time pleasing.
சிவாயநம
ஓம் நமசிவாய நமக
வணக்கம் சோலார்சாய் சார் .நீங்க பாடுவது புரிந்து கொள்ள பண்,ராகம் தெரியாதவர்களுக்கு எளிதாக புரிகின்றது .நன்றி சார்.🙏🙏🙏💥💥💥🌿🌹🌿🌿🌷🌿உஷா கோவில்பட்டி.
Om namah shivay namaha
❤
❤ஆரூர் அமர்ந்த அரசே,போற்றீ,,,
இந்த பாடல் கு நான் அடிமை
ஓம் நமச்சிவாய
Enaku retina eye problem genetic disorder iruku na morning to evening sun lite la romba kasttama iruku eye sariyatheriyala enna pandrathuhu theriyala enaku nalla Kan paarvai veenum
🙌🙌
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆலந்தான் உஙந்து மற்றும் மீளா அடிமை பதிகம் கண்களுக்கு உரிய பதிகம் எணில் கழுத்து முதுகு மூட்டு சம்பந்தப்பட்ட பதிகங்களை தயைகூர்ந்து பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன் 🙏
Nantri
அருமை ஐயா
atumyi iyya
ஆஹா....அருமை ...
Ida kann paatu padiyuleergala
😅
αตตα թօԵɾí👣🌺sմթҽɾ ตα🌷ղαղժɾí íɾαѵα
என்றும் முட்டா
பாடும் அடியாராக
"சோலார் சாய்"
அமைந்திட
ஆரூரானை வேண்டி நிற்கின்றேன்
அன்புடன் அருளரசு
Pandichery gnanasambanda gurukkal ragam. Copy solar sai avargalee?
பதிகங்கள் நன்றாக பாடுகிறார் ஆனால் ஒவ்வுறு
பதிகத்திக்கும் வெவ் வேறு
பண் உள்ளது
நமசிவாய வாழ்க
🙏🙏🙏