மாயூரநாதர் கோவிலுக்கு இத்தனை ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லையா? |
Вставка
- Опубліковано 20 вер 2024
- மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். இந்த மாயூரநாதர் அபயாம்பிகை கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. மாயூரநாதர் அபயாம்பிகை கோயிலில் 4 பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது.கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் 9 நிலைகளையும், உட்கோபுரம் 3 நிலைகளையும் கொண்டுள்ளது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறம் திருக்குளம், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது. இந்த மாயூரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2005ம் ஆண்டுக்குப் பின் 18 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
#Mayiladuthurai #MayavaramTemple