உனைத் தினம் | திருப்புகழ் | திருப்பரங்குன்றம் | Sooryanarayanan
Вставка
- Опубліковано 28 жов 2022
- An Official UA-cam Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #உனைத்தினம் #திருப்புகழ்
Composer:#Arunagirinathar#அருணகிரிநாதர்
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
சொல் விளக்கம்
உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும்
தொழுவதும் இல்லை.
உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து
உரைப்பதுமில்லை.
பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன்
திருவடிகளை
உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை.
ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை.
உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத
உள்ளத்தை உடைய அன்பர்
உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை.
விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன்
மலையை வலம்வருவதும் இல்லை.
உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க
விழைகிலன் ... விரும்புவதும் இல்லை.
மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன்,
கனைத்தவாறு வரும் எருமையின்
பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற,
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும்
கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள்
கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற
பாசக்கயிறு கொண்டும்,
அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம்
கொண்டும் என்னோடு போரிடும் போது,
கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும்,
ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும்
நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது
அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில்
என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி
மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக.
வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில்
அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால்
விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து
சிதறின மாமிசத்தை
கழுகுண ... கழுகுகள் உண்ணவும்,
விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும்
அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,
மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல
குயிலின் மொழி ஒத்த குரலாள்,
அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)
குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில்
உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு
சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த
புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே,
தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும்,
நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,
புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து,
பூக்களை நிறைய அர்ச்சித்து,
விணவரொடு ... தேவர்களும்
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து
விட்ட முனிவர்களும் தொழ,
மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே,
தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன்
வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத்
தெவிட்டும் அளவுக்கு
அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும்
உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும்
திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்
சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே.
unaiththi nanthozhu dhilanuna dhiyalbinai
uraiththi lanpala malarkodun adiyiNai
uRappa Nindhilan oruthava milanuna ...... dharuLmARA
uLaththu Lanbinar uRaividam aRigilan
viruppo dunsika ramumvalam varugilan
uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE
kanaiththe zhumpaga dathupidar misaivaru
kaRuththa venchina maRalithan uzhaiyinar
kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE
kalakku Runseyal ozhivaRa azhivuRu
kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL
kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE
vinaiththa lanthanil alagaigaL kudhikoLa
vizhukku daindhumey ugudhasai kazhuguNa
viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA
miguththa paNpayil kuyilmozhi azhagiya
kodichchi kungkuma mulaimuga duzhunaRai
viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE
dhinaththi namchathur maRaimuni muRaikodu
punaRcho rinthalar podhiyavi Navarodu
chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE
thenaththe nanthana enavari aLinaRai
thevitta anbodu paruguyar pozhilthigazh
thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE.
🌹🦚Kandar Sashti Festival - Day 5 🌹🦚
What an ultimate request Sri Arunagirinathar has put to Lord Muruga *GhaNathil yen bhayam ara mayil muduginil varuvaaye* in this thiruppugazh *Unai dinam thozhudilan*.
Take a deep breath before listening this thiruppugazh, sung by Sooryanarayanan, as it will have a pace like bullet train 😀
Please hear with headphones and subscribe those who are yet to subscribe to his UA-cam channel 😊🙏
எனக்கு இத்திருப்புகழை வாசிக்க படாதபாடு படுகிறேன்....😄😄இந்த பாலகன்......அப்பப்பா...முருகன் அருள்பெற்ற குழந்தை வாழ்க
Same feeling 😂
@@elangeselan4605 ஒரு வழியா மனப்பாடம் பண்ணிட்டேன்.... Sir,,,
உண்மை... எனக்கும் தான்
முருகன் அருள் பெற்ற குழந்தை
Nanum
Same here.
என்ன ஒரு தமிழ் ஞானம்
நீ ஒரு ஞானக் குழந்தை அப்பா
உன் பெற்றோர் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள்
என்ன சொல்வதன்றே தெரியவில்லை
இந்த சிறு வயதில் இப்படி ஒரு ஞானம்
Really u r blessed
தங்கம் எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.உனது பாடல்கள் தான் எனக்கு மருந்தாகிறது.நவீன திருஞானசம்பந்தரே! நீ வாழ்க வளமுடன்.
எல்லாம் இறைவன் அருள் 🙂🙂🙏.
சரஸ்வதியின் அருள் பெற்ற குழந்தை
என்ன உச்சரிப்பு !! என்ன உச்சரிப்பு !!
குழந்தை ஆன்மிக அன்பர்களை மேலும் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த
இறைவனை வேண்டுகிறன்.
மிக்க நன்றி 🙂🙏
அந்த பாலமுருகனே நேரில் வந்து பாடுவது போல் இருக்கிறது 🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
Thank you so much 🙂🙏
கடவுளின் அவதாரமப்பா நீங்க. வாழ்க வளமுடன் ❤
சுவாசகம்🙏என்னே!உன் உச்சரிப்பு- என் உச்சி அரிப்பு ஐயா🧘
சூர்ய நாராயணா மிக்கமகிழ்ச்சி! வாழ்த்துக்கள்👌👌👌🙏
அருமை..அருமை.. அற்புதம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. வாழ்க பல்லாண்டு மகனே..
சிவ சிவ....இறை யின் அணுகிரகம் இன்றி இது சாத்தியமில்லை....
பிழை யில்லா உச்சரிப்பு....மாறா சுதி....வார்த்தைகள் இல்லையப்பா உன்னை புகழ......
Dhinesh ji, மிக்க நன்றி 🙂🙏
How ?
முருகா நீ பிறந்த காலத்தில் நாயேனும் பிறந்ததே பெருமை சாமி .குழந்தையின் உருவில் முருகன்
இலங்கையிலிருந்து உங்கள் ரசிகை🙏🙏🙏
மிக்க நன்றி 😊🙏
மூச்சு விடாமல் பாடும் ரஆகம உள்ளது பிரமாதம் வாழ்க
அய்யா நீங்கள் யாருடைய மறுபிறவி என்பதை அறிய எனது மனது துடிக்கின்றது
🙏💐திருநீலகண்டம்🐘🌸🍀🥭ஆரூரா... தியாகேசா🔥🌼❤💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🐄 🌿🌸🔥🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏🌹🐓ஓம் சரவண பாவா🌹🦚🙏
அருமையான தெளிவான உச்சரிப்பு.இவர் முருகன் அருள் பெற்ற குழந்தை.பாராட்ட வார்த்தைகள் பத்தாது.
என் அப்பன் முருகனை உன் உருவில்... குரலில் கண்டு கொண்டேன்... வாழ்க வளமுடன் நலமுடன் தங்கமே
Super.அப்பா, நீங்கள் இறை அருளால் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.🙏
உண்மையில் முருகன் அருள் பெற்ற ஞானகுழந்தை இவர் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
அஹா அஹா.... அருமை அருமை முருகா சரணம் 🙏
திருப்பரங்கிரி குகனே சுவாமி ஓம் சரவணபவ சமயபுரத்தம்மா ஓம்ஸ்ரீமாத்ரே நமக ஓம்சக்தி
❤ om muruga nana swami kanta saravanabava
ஆ ஆ சின்னப்பிள்ளை சூப்பர்
சூப்பர்
வாழ்க வளமுடன் சூர்யா
நீங்க நூறு ஆண்டுகளுக்கு வளமுடன் நலமுடன் வாழவேண்டும் தம்பி
முருகா முருகா
Super kanna
அருமை அருமை 👌👌 கந்தன் அருள் பொழியட்டு ம். வாழ்க பல்லாண்டு💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐
மிக்க நன்றி 🙂🙏
குட்டி சூர்ய நாராயணன் தெய்வாம்சம் பொருந்திய குழந்தை. இந்த வயதில் மிகவும் கடினமான பாடலை அநாயாஸமாக அனுபவித்து பாடியதை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்.நல்ல தீர்க்காயுசுடன் மேன்மேலும் வளர
எங்கள் அன்பான ஆசிகள்.
தங்களின் ஆசிக்கு மிக்க நன்றி 😊😊🙏
ஓம் அகத்தீசாயநமக.
മയിൽ വാഹനൻ | വള്ളി നാഥൻ | ഉമാസുതൻ | ശിവസുതൻ | ഗണപതി സോദരൻ | ശമ്പരി സോദരൻ | പളനിവാസൻ🙏🙏🙏🙏🙏🙏
ஆச்சரியமான அற்புதம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது தங்களுக்குப் பொருத்தமான வாழ்த்தை கூற வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் நன்றி
மிக்க நன்றி சார் 🙂🙏
An amazing rendition even a person with immense tamil literature and proficiency can't sing like this in this age....very well done..keep do more....God bless you ❤ 🙏
அருமையான உச்சரிப்பு மகனே... நலமுடன் வாழ்க
அருமை முருகா சரணம்
வாழ்க வளமுடன் தங்கமே
அருமை மகனே, நன்றி
Super great my child long live Om muruga saranam
போப்பா உன்ன கண்டா எனக்கு பொறாமையாக இருக்கு
சிவ சிவ
வாழ்த்துக்கள்👌👌👌
வாழ்க. வழமுடன்
மகனே வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
ஈசனின்பிள்ளைநீ ❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா..வாழ்க வளர்க..🙏🙏🙏🙏🙏
மகனே சூர்யா, அற்புதத்தின் உச்சம் நீ, அற்புத பாடல், அழகான மழலையின் காந்த குரல், இனிமையான இராகமும் இசையும், மனதை குளிர்விகின்றது, வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 👍🥰❤️
மிக்க நன்றி அம்மா 🙂🙏
அருமை, சிறப்பு வாழ்க வளத்துடன்
தமிழ் அருமை வேகமான தெளிவான தெள்ளுதமிழ் எங்கள் சூரியாவின் திருவாய் அமுதாய் தேனாய் பொழிகிறது. "கனத்தில் என் பயம் அற
முதுகினில் வருவாயே"
என்ன கம்பீரமான குரல் வளம்
திருப்பரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே' அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟🌟🌟🌟🌟🌟
மிக்க நன்றி மதுரா ஜி 😊🙏
ஞான தமிழ் வேலன்
அமுதமொழி குமுத வாயில்
கொஞ்சும் நெஞ்சம் ஈர்க்கும்
செந்தமிழ் பாவை
காலத்தின் தேவை கேற்ப
கனிமொழி பிழிந்திட்ட
இளங்கண்ணன் செந்நாவில்
தமிழன்னை புகுந்திட்டாள்
அழகுத்தமிழ் வளர்த்திடவே
வாழ்க பல்லாண்டு!
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ஜி 🙂😊🙏
வாழ்க குழந்தாய், இன்புற்று வாழ்க
மிக்க நன்றி 🙂🙏
ஓம் சரவண பவ! பாடலும் இசையும் தெய்வீக மாக உள்ளது!
குழந்தை& இசை விற்பன்னர்கள் போற்றிப் புகழத் தகுந்தவர்கள்.
மிக்க நன்றி 🙂🙏
மிக அற்புதம் டா தம்பி உன்னுடைய பாடலை எப்பொழுதும் நான் கேட்பேன் கெட்ட கேட்க அமுதம் போல் இனிக்கும் எம்பெருமான் முருகனைப் பற்றி பாடும் பொழுது பாடுவது நீனா அல்லது அந்த முருகப்பெருமான நேரடியாக வந்து பாடுகிறானோ என்று தெரியவில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நாராயணன் அருள் பெற்று வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஶ்ரீ ராம்
மிக்க நன்றி 🙂🙏
அருமையான பாடல் நல்வாழ்த்துக்கள்.வாழ்த்த வார்த்தை இல்லை.
மிக்க நன்றி 🙂🙏
சூரிய நாராயணா.. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙂🙏
திருப்பரங்குன்றம் முருகா போற்றி🙏
Arumai kanna👍 vaazha valamudan👏👏👏👏
வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா. என் செல்வமே.
மிக்க நன்றி 😊🙏
அஇந்தப்பையன் முருருகனின் அவதாரமோ?அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை!!
அருமையாக, அழகாக நிறுத்தாமல் பாடி மனமுருக வைத்துள்ளாய் அழகாக.நிறுத்தாமல
செந்திலங்கண்டிக் கதிர்வேலா..
தென்பரங்குன்றிற் பெருமாளே.
Kanathinil payamara mailmuthugnil varuvayee 🙏🙏🙏vetrivel muruganukku aroharaa🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை. வாழ்க வளமுடன்💐
Excellent voicesuriyakutymurugasaranam
Om muruga potri
Om agathesa potri
Om arunagiri appa potri
எனது அருமை நண்பர் ஸ்ரீ நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் தயாரிப்புகள் அவரைப் போலவே மிக வும் சுவையாக உள்ளது. சூரியநாராயணா என் செல்வமே(சூரிய நாராயணனின் பெற்றோர்கள் சண்டைக்கு வரக் கூடாது) உன் குரல் வளமும் பாவனா இசையும் எங்களை மயக்குதுடா கண்ணா. நீ வாழ்க.
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏
Miracle devotional background ..god bless u all
உன் குரல் மூலம் இறைவன் தன்னை இந்த கலியுகத்தில் நிரூபித்துள்ளார் தான் ஏதேனும் ஒரு உருவில் அவனியில் கண் முன் பிறப்பேன் என்று உன்னை நாயன்மார்களில் ஒருவராக காண்கிறேன் மகனே வாழ்த்துகள் ஆயிரம் ஆயிரம் ஓம் நமசிவாய
மிக்க நன்றி 🙂🙏
ஓம் சக்தியே முருகா போற்றி ஓம் . சூர்யா தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙂🙏
Super.vetri.vel.muruganuku
Aarohara. Sarawathi katasham pariporanam.
அருமை அருமை வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
முருகன் மனமிரங்கி உங்களுக்கு பேரருள் செய்ய போகிறார்.
👏👏👏👏👏👏🌻
மிக்க நன்றி 🙂🙏
அழகு அற்புதம் குட்டி முருகா☺️☺️❤️❤️
உன் பொற்பாதம் பணிகின்றேன் ஐயா🙏
Soorya. Thangam👍🙏
ஆகா அருமை அருமை🎉❤❤❤
Super kanna vazha vazhmudan
தேவகானம்!
வாழ்க,வளர்க.
அப்பப்பா!!!அபாரம் அற்புதம் ஆனந்தம்.
மிக்க நன்றி 🙂🙏
வாழ்த்துகள்.
தங்களின் இசை /இறை பணி
தொடரவும், சிறக்கவும்..
இறைவன் அருள் மேலும் கூட்டவும்.
வாழ்க வளமுற ❤
🙏🌺🙏🌹🙏
Thank you🙂🙏
Wonderful voice
அருமை அருமை
Vetrivel muruganukku arogara
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 🙏 ஓம் சரவணபவ 🙏 முருகா போற்றி அடியேனின் வாழ்த்துக்கள் தம்பி 🙏
மிக்க நன்றி 🙂🙏
Migha azhagaga padiyullai soorya narayana. Vazhga valamudan. Velumayilum thunai.
மிக்க நன்றி 🙂🙏
விளையும் பயிர் முளையில் தெரியும். ஆசீர்வதிக்கபட்ட குழந்தை. வாழ்க வளர்க.
மிக்க நன்றி 🙂🙏
அற்புதம் சூரியநாராயண. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙂🙏
அருமை, வாழ்த்துக்கள்
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சூரிய நாராயணன் 🙏 வாழ்க வளமுடன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏
Tamil kadavul ni 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valgavalamudan surya
Kantha sasti kavasam.....ungal voice la kekka aasayaga ullathu......
வாழ்க வளத்துடன் 🙏
Ungka WhatsApp number plz
Arumai. Arputham
மிக அற்புதம் ❤🎉🎉🎉 வாழ்வில் சிறப்படைய வாழ்த்துக்கள் 🎉
மிக மிக அருமை!! வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 ஓம் சரவண பவ 🙏
Wow what a memory how fluent snd confident. God bless you dear you are a boon to our nation god bless you dear
Thank you so much 🙂🙏
வணங்குகிறேன் சூரி
தங்கமே வாழ்க வளமுடன் சிவ சிவ ❤❤🌹🌹
ஓம் முருகா🙏🏾🙏🏾🙏🏾