பம்மல் வடக்கு பகுதி தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா MLAஅனகை. முருகேசன் திறந்து வைத்தார்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • பம்மல் வடக்கு பகுதி தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா முன்னாள் எம்எல்ஏ அனகை.முருகேசன் திறந்து வைத்தார்
    சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் பம்மல் வடக்கு பகுதி தேமுதிக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
    பம்மல் வடக்கு பகுதி தேமுதிக செயலாளர் செயல்வீரர்.வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை.முருகேசன், கலந்துகொண்டு தேமுதிக நிறுவன தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான புரட்சிகலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபம் காண்பித்து, மலர் தூவி வணங்கினார்.
    தேமுதிக நிர்வாகிகளும் கேப்டன் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
    அதை தொடர்ந்து தேமுதிக மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன்
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, நுங்கு, நன்னாரி சர்பத், கிருனிபழரசம் குளிர்பானம், ஆகியவற்றை வழங்கினார்.
    அதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சி கொடி கம்பத்தில் மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் தேமுதிக கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் பம்மல்.ராஜ், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜ், ஜெயபிரகாஷ், பம்மல் வடக்கு பகுதி தேமுதிக அவைத்தலைவர் செல்வம், பொருளாளர் ஜெபஸ்டின், இளைஞரணி செயலாளர் ஜெகன், வட்ட செயலாளர் பாலு, நிர்வாகிகள் ரகு, ராஜி, சரவணன், பொன்பாண்டி, சம்பத், சசிகுமார், மோகன்பாபு, கணேசன், கோவிந்த், உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

КОМЕНТАРІ • 1