கொங்கு நாட்டு திருத்தலங்கள் | 01 அவிநாசி | சுந்தரர் தேவாரம் |
Вставка
- Опубліковано 20 вер 2024
- முதலையிடமிருந்து மதலையை மீட்ட பதிகம்🙏🙏
இழந்ததை மீட்டுத்தரும் பதிகம் 👆🙏🙏
எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே?
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்;
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே
பற்றுஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
வழி போவார்தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ
ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள் ஓங்கு சடையானே!
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்துஇடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே?
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை;
பொங்கு ஆடுஅரவா! புக்கொளியூர் அவிநாசியே!
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே.
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்தங்கள் உச்சியாய்!
அரைக்கு ஆடுஅரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே!
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும்
சரம்-கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்து
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே!
குரங்கு ஆடு சோலைக் கோயில்கொண்ட குழைக் காதனே!
நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனா
சோத்து! என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்!
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே!
கூத்தா! உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே!
நந்தி! உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை;
காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன் நான்;
பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!
நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே!
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்தோலை விரும்பினாய்!
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்துஇடை
உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?
நீர் ஏற ஏறும் நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியை
போர் ஏறுஅது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை
கார் ஏறு கண்டனை தொண்டன்ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே.
ஆனந்தம் மகிழ்ச்சி மகிழ்ந்தேன் இறைவனுக்கு நன்றி சிவாய நம
சிவ சிவ
அருமை ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில்👣 இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
👌God bless you with all the wealth, health and happiness.
எம்மை ஆளும் அரிய பொருளே அவிநாசி அப்பா 🙇🙇🙇
சுந்தரர் வரலாறும் பாடலும் நன்றாக இருந்தது.
திருச்சிற்றம்பலம். மிகவும் அருமை அம்மா!! காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடலை பாடி பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் அம்மா. வாழ்க வளமுடன்!!
🙏🌿🌺சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
🙏🙏🙏🙏🙏
அறிய பொருளே அவிநாசி அப்பா எங்கள் ஊர் அவிநாசி. 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி.
Siva Siva .வாழ்க வளமுடன்.
Natrunai avathu Namachivayave
Thankyou👌👌
❤🙏🙏🙏🙏🙏🙏🙏
நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
அருமை அருமை அன்பு மகளே 👏👏👌அட அட அருமையானா விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல 🙏🙏சிவனே போற்றி போற்றி 🙏
மிகவும் அருமை, தலவரலாறும், பதிக விளக்கமும் மிக சிறப்பு, நன்றி, நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏
மிக அருமை.திருத்தல குறிப்புகளும்,பதிக விளக்கங்களும்,பண்ணிசையும் மிக அழகு.நன்றி.சிவாய நம
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
Anbanakuralukku sonthamana ungalukku Shivan anaithuselvangalaiyum kandippa koduppar vazhga valamudan nooruvayathu om shiva shiva shiva om
அருமை ❤❤❤
சிவாயநம ❤🙏
Ohm Siva ohm.Vagha valamudan
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
அருமை சகோதரி வாழ்க சிவதொண்டு
மிக அருமை
மிக அருமை வாழ்த்துக்கள்
ஓம் அம்மை கருணாம்பிகை உடனாய அவிநாசி யப்பர் திருவடிகள் போற்றி போற்றி.
🙏அருமையான பதிவு வாழ்க வளமுடன் சிவாய நம🙏🙏
அற்புதம்👍👍👍
தமிழ் சைவ இசை பணி சிறக்க வாழ்த்துக்கள்
திருச்சிற்றம்பலம் 🙏
ஆமாத்தூர் பதிகம் பாடவேண்டும்
அருமை டா உமா ...
வாழ்த்துகள் ஓம் நமச்சிவாய
Super nandhini niga innu siddargal padalum padungal nandhini
Nice 🦋🦋🦋
கோவையில் உள்ள பேரூர் கொங்கு நாட்டு தலங்களில் இல்லையா?
இருக்கு ஆனால் முதன்மை பெற்ற தலமாக அவிநாசி விளங்குவதால் கொங்கு நாட்டின் அடையாள சின்னமாக அவிநாசி விளங்குகிறது 🙏🙏
உபநயனம் அந்தக் காலத்தில் சரியாக ஏழு வயது முடிந்து இரண்டு மாதமானவுடன் பண்ணுவார்கள். காரணம் மீதி கர்ப்பத்தில் இருந்த மாதத்தையும் சேர்த்து எட்டு வருடக் கணக்கு வர வேண்டும்.அப்படிப் பார்த்தால் பிள்ளையை முதலை விழுங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கும் இதே வயது தானே. அது தான் ஏழு வயது ஆனதும் பூணூல் கல்யாணம் வைத்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சிறுவனை மீட்டதோடு அல்லாது இருந்து அவனுக்கு உபநயனம் தாமே செய்து விட்டே கேரளா நோக்கிய தமது இறுதிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஞானசம்பந்தருக்கு ஐந்தாவது வயதில் உபநயனம் நடந்தது.இது காம்யோப உபநயனம் ஆகும். சம்பந்தப் பெருமான் போன்ற தெய்வீக ஞானக் குழந்தைகளுக்கு மட்டுமே இப்படிச் செய்ய முடியும். நமச்சிவாயம்.
Mam, kindly can u say each pathigam has palangal, for thirupoonthuruthy sthalam , maalinai maalura ....pathigam is thre ,wat palan does it wil gv reciting it. Need to kw
இழந்ததை மீண்டும் பெற ஓத வேண்டிய பதிகம் 👆🙏
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே......
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே.....
🙏