ஐயப்பன்தாங்கலில் திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்
Вставка
- Опубліковано 21 жов 2024
- தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஐயப்பன்தாங்கலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கிய
அதிமுகவினர்
சென்னை, போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகில் சென்னை புறநகர் மாவட்டம், குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயம், கொலை, போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை புறநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் ஏ.என்.இ.பூபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.கந்தன், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.ஏசுபாதம் ஆகியோர் கலந்து கொண்டு கள்ளச்சாராயம், கொலை, போதை பொருட்களால் தமிழகம் சீரழிகின்றது.
தமிழகத்தில்
போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்களை கட்டுப்படுத்த அதிமுக நடத்தும் அறப்போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு, போதை இல்லாத தமிழகம் உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என
துண்டு பிரசுரங்கள் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இதில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி மாலதிஏசுபாதம், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிர்அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போதை இல்லா தமிழகம் வேண்டும் 🙏