நா.முத்துக்குமார் - ஒருநாளும் கரும்பை சுவைத்ததில்லை! | பவா. செல்லதுரை | Part - 2 | Na. Muthukumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி பவா. செல்லதுரை பேச்சு
    நா.முத்துக்குமார் - கரும்பை ஒருநாளும் சுவைத்ததில்லை! | பவா. செல்லதுரை | Bava Chelladurai | Part - 2 | Na. Muthukumar
    #NaMuthukumar
    #BavaChelladurai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

КОМЕНТАРІ • 305

  • @sasikumar-ym6vn
    @sasikumar-ym6vn 2 роки тому +32

    9-ஆம் வகுப்பிலே உள்ள நா.முத்துக்குமாரின் பாடப்பகுதியை மாணவர்களுக்கு நான் நடத்துகின்ற போதெல்லாம் என் கண்கள் கண்ணீரால் நீராடிடும். நன்றி பவா அண்ணா..... மா.சசிகுமார் (தமிழாசிரியர்)

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 4 роки тому +88

    ஆண்களுக்கு அழுவது அழகில்லை என்பார்கள் , ஆனால் அந்த மரபையும் மீறி கண் பனிக்கிறேன்..

  • @udayakumardpm
    @udayakumardpm 4 роки тому +43

    எனக்கும் நா.முத்துக்குமார் எப்போதும் எனக்கு இன்னொரு கண்ணதாசன் போல உணர்கிறேன் ....

    • @udayakumardpm
      @udayakumardpm 4 роки тому +1

      எனக்கும் அவருக்கும் இடையே ஒரு பொருத்தம் இருக்கிறது... இரண்டு பேரும் 1975 born babys....🤩

    • @RajKumar-io8qz
      @RajKumar-io8qz 2 роки тому

      என்னையும் அரியாமல் கண்ணீர் வருகிறது

  • @santhkumar9415
    @santhkumar9415 4 роки тому +62

    தமிழ் உள்ளவரை நா.முத்துகுமார் தமிழர்களால் நினைக்கப்படுவார்....

  • @WingsStudio
    @WingsStudio 4 роки тому +36

    புகழ் வெளிச்சம் படுகிற போதெல்லாம் சட்டையை உதறி அணிந்து கொள்வான் ... நிகரற்ற உவமை - நா .முத்துக்குமார்

  • @vjeeva123
    @vjeeva123 4 роки тому +35

    என் தாயின் மரணந்திற்க்குப்பின் என்னை மிகவும் பாதித்த மரணம் நா. முத்துக்குமார் என்ற என் உடன் பிறவா சகோதரர் மரணம் . மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே சொந்தம்...அந்தக் கவிஞனுக்கு என்கண்களில் பெருகும் கண்ணீரை சமர்பிக்கிறேன்...நன்றி பவாஅண்ணா

  • @mohamedrahman7925
    @mohamedrahman7925 4 роки тому +69

    முதல் முறை வாழ பிடிக்குதே
    - நா.முத்து குமார்

  • @alfredgnanarokiam444
    @alfredgnanarokiam444 4 роки тому +32

    பவா சார், நீங்கள் பெரும் சிரத்தை எடுத்து இந்த கவிஞனின் மரணத்தை, அவரின் நினைவுகளை கவிதை நயத்துடன் கடத்தி சென்றுள்ளீர்கள். இருப்பினும் இந்த கவிஞனின் மரணம் பல உளவியல் கேள்விகளுக்கு வித்திடுகிறது. ஒரு முறை நீங்களே ஒரு பதிவில் ஓர் எழுத்தாளனோ, கவிஞனோ, அல்லது கலைஞனோ எவ்வித விதிகளுக்குள்ளும் அடைபட மாட்டான் என்று கூறியதாக எனக்கு ஞாபகம். ஓர் எழுத்தாளனுக்கு மரபு, அறம், ஒழுக்கம், சமூக கோட்பாடு போன்றவை மயிருக்கு சமானம் என்றும் நீங்கள் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
    ஜெயகாந்தன், சந்திரபாபு, பாலகுமாரன் மற்றும் வேறு பலரின் படைப்புகளை விமர்சிக்கும் பொழுது அவர்களிடம் காணப்பட்ட தனிமனித ஒழுங்கீனத்தை நீங்கள் எப்பொழுதுமே விமர்சிப்பது கிடையாது. அவர்கள் படைப்பின் மேன்மைக்கு இதுவும் ஓரு காரணம் என்பது போல் தான் தங்களின் விமர்சனம் இருக்கும். இந்த படைப்பாளர்களில் பெரும்பாலோர் மதுவுக்கு அடிமைகளாகவும், பெண் பித்தர்களாகவும் இருந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் நோய்வாய்ப்பட்டும் அவதிக்குள்ளாகியும் மரணம் எய்துகின்றனர். இது பிரச்னையில்லை. அது அவர்களின் தனி வாழ்க்கையாகும். ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு பல ஆயிரம் மக்களை சென்றடைகிறது. அந்த பல்லாயிரம் மக்களில் சிறார்களும் இளைஞர்களும் அடக்கம். இப்படி விதிகளுக்கு கட்டுப்படாத படைப்பாளிகள் எவ்வாறான முன்னுதாரணத்தை இந்த பரம்பரைக்கு விட்டுச் செல்கின்றனர்? இன்று தமிழ் நாட்டில் குடிப்பழக்கம் தமிழ் சமூகத்தையே சீரழித்து வருகிறது. இந்த படைப்பாளிகளே மது அருந்தும் பொழுது அப்பழக்கம் ஏதோ சகஜமானது போல் பிறருக்கும் தோன்றுவது இயல்பு தானே? ஒரு படைப்பாளன் சிறந்த முன்னுதாரணமாக இருப்பது சிறப்பு. மு. வ. வின் அகல் விளக்கு என்ற நாவலின் இறுதியில் அவர் இவ்வாறு எழுதி இருப்பார். சமூக வாழ்வில் அனைவரும் ஒரு சில சமூக விதிமுறைகளுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் எளறு கூறியிருப்பார். அப்படி கட்டுப் படாவிடில் சமூகங்கள் சிதறுண்டு போகும். இன்று அதைதான் தமிழ் நாட்டில் நாம் காண நேருகிறது. நீங்கள் என் கருத்தை படிக்க நேர்ந்தால் தயை கூர்ந்து எதிர்மறை ஆற்றுங்கள். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி

    • @kamalanathanshanmugam7814
      @kamalanathanshanmugam7814 3 роки тому

      What's you said is absolutely true

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Рік тому

      வணக்கம் ஆல்பர்ட்! மிக அழகாக படைப்புகளை ரசித்து அதை விட ஆழமாக படைப்பாளிகளின் மரணத்தையும் ஆராய்ந்து தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். மனிதன் என்பவன் ஏதோ ஒன்றில் பலவீனமானவன் தான். இதில் கடவுள் பக்தியும் அடக்கம். ஆனால் கலை என்கிற ஒன்று வெளியில் இருந்து உற்சாகம் தரும், உத்வேகம் தரும் ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டு தான் படைப்பாக வெளி வருகிறதே என்ன செய்ய? ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இது உலகம் முழுக்கவே காணப்படும் இயல்பான ஒன்று.

  • @muhammadfarid827
    @muhammadfarid827 4 роки тому +93

    என் 3 வயது மகனுடன் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் , என் மீதே உறங்கிவிட்டான் , அந்த மாமனிதனின் தன் மகனுக்கு தந்த அன்பை எந்த வகையில் நான் என் மகனுக்கு தருவது என்று யோசிக்கின்றேன் நான் போகும் முன்னே😔🌹

    • @bhuvaneshwaran7878
      @bhuvaneshwaran7878 4 роки тому +1

    • @tysonabrahamtysonabraham4350
      @tysonabrahamtysonabraham4350 2 роки тому +1

      Super bro

    • @rajeshmaharajan6595
      @rajeshmaharajan6595 2 роки тому

      இரக்கும் வரை இருப்பதை பற்றி சிந்தியுங்கள் நண்பா......

    • @kannapiran2118
      @kannapiran2118 2 роки тому

      0⁰0⁰0⁰p0000⁰0p00000000000

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Рік тому +1

      இந்த இளைய வயதில் இப்படிப்பட்ட முரண்பாடான சிந்தனை ஏன் தம்பி? இன்னொருவர் வாழ்வின் உயர்வையும், வீழ்ச்சியையும் பாடமாக எடுத்துக்கொள்ளலாமே அன்றி, தன் வாழ்க்கையோடு ஒரு நாளும் பொறுத்தி பார்க்க வேண்டாம்! உங்களுக்கென்று உள்ள தனித்துவம் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது.

  • @francismoto
    @francismoto 4 роки тому +36

    தலைக்கனம் இல்லா கலைஞன். எளிமையான மனிதன். உறவுகள் நிறைந்த வாழ்க்கை. கொடுத்து உதவிய மனம். நா. முத்துகுமார் அவர்களின் சினிமா உலகை தவிர்த்து இயல்பு வாழ்கையை பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா. மரணம் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 роки тому +57

    நா. முத்துக்குமார் அவர்களின் உயிர் இன்றும் அவரது பாடல்களில் உள்ளது 💟✍️

  • @karthiktamizhar502
    @karthiktamizhar502 2 роки тому +6

    ஏற்கனவே கேட்டவை தான் இந்த நிலவொளியில் சாராயம் குடிச்சிட்டு ஒரு பாலையில் இத கேட்கும் போது எனக்கு மட்டும் மழை பொழியுது..❤️

  • @shkram
    @shkram 4 роки тому +8

    நா.முத்துக்குமார் இறப்பு என்னை அறியாமல் ஒரு வாரம் அழ வைத்தது...இதைப்போலவே.. பதிவிற்கு நன்றி

  • @balakrishnannarayanan103
    @balakrishnannarayanan103 4 роки тому +19

    திரு.பவா நீங்கள் பலருடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களையும் பார்த்துள்ளேன்.நீங்கள் எல்லா மனிதர்களின் நிறைவான குணங்களையும் சிறந்த பண்புகளையும் மட்டுமே சிலாகித்து பகிர்ந்து கொள்வது என்னை வெகுவாக கவர்ந்தது.

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 4 роки тому +43

    நரை கூடி ‌கிழப்பருவம் எய்திச் சாக அவரொன்றும் வேடிக்கை மனிதன் அல்லவே.

  • @1980leodte
    @1980leodte 4 роки тому +24

    தமிழுக்கும் தமிழ் வசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எவ்வளவோ படைத்திருக்க வேண்டிய அருமையான கிடைக்கப்பெறாத படைப்பாளி, ஆசை காட்டி மோசம் செய்து விட்டார் கடவுள்..

  • @saravan1205
    @saravan1205 4 роки тому +17

    எல்லாபிள்ளைகளும் முத்துக்குமாருக்கு கடவுள்கள் தான் கண்ணீர் தழும்ப தழும்ப காதில் ஒலித்தது

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 4 роки тому +37

    இந்த நேரம் அதிகாலை 1:45 மணி, அபு தாபியில் இருந்து இந்த மாபெரும் கலைஞனை அய்யா உம் வழியாக உள்வாங்கி என் கண்கள் குளமாகிறது😢😢😢🙏❤️

  • @leninabraham6032
    @leninabraham6032 4 роки тому +20

    எங்களுடைய வேண்டுதளுக்கு இனங்க நீர் துயரப்பட்ட போதிலும் நா.முத்துக்குமாரை பற்றி உரைத்ததற்காக மிக்க நன்றி பவா ஐயா.வாழ்க பல்லாண்டு.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому +2

    நா. முத்துகுமாரின் அனிலாடும் முற்றில்
    ஆனந்த விகடன் தொடருக்கு நான் அவ்வளவு ரசிகன்..
    இவ்வளவு நெருக்கம் உரிமை இருந்த வரை ஏன் குடியிலே விட்டு விட்டீர்கள் அவர் கோவபட்டாலும்
    ஏதேனும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து இருக்கலாம்

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +16

    தமிழ் உயிரோடு இருக்கும் வர உங்கள் பேர் இருக்கும் 🌹🌹🌹அப்படி இல்லை என்றால் உங்களை போன்றோர்களால் என் தமிழ் வாழும்
    👏👏👏👏 நன்றி ப வா

  • @vijayag2012
    @vijayag2012 4 роки тому +21

    அண்ணன் நா.முத்துக்குமார் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்ற அந்த நாள் கொடுமையானது...

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +9

    முத்துக்குமாாின் நிறைய விஷயங்களை பவா மூலம் தொிந்து கொண்டது சந்தோசம்.....மிஸ்யூ முத்துக்குமாா் தம்பி....எங்கிருந்தாலும் உன் ஆன்மா சந்தோசமா இருக்கனும்...இவ்வளவு நல்லமனமும் மனிதனுக்கு இருக்கக்கூடாது......ஆனாலும் ஆன்டவனால் மிகவும் நேசித்தக்குழந்தை முத்துக்குமாா்...❤❤❤⚘

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 4 роки тому +42

    முத்துக் குமாரை எண்ணி அழ வைத்து விட்டீர்களே பவா

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 4 роки тому +9

    Bava Sir, while hearing about Muthukumar, started crying. Big fan of him 😔

  • @premamani5408
    @premamani5408 3 роки тому +3

    கண்ணீர் வழிய தான் இதை கேட்க முடிந்தது..திரும்பி வந்து விட மாட்டார்களா என மிக சில உறவுகளை நினைக்கும் போது தோன்றும். அந்த உறவுகள் போல மனதில் வலி தோன்றும் உறவாய் எனக்கு எப்போதும் முத்துக்குமார் இழப்பு தோன்றும்..மனம் கனத்து போயிற்று பவா sir ..கடவுள் மேல் தான் கோபம் வருகிறது😢

  • @meenasankar7767
    @meenasankar7767 3 роки тому +4

    முத்துக்குமார் கவிதை பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் இறந்த நாள் என்னால் மறக்க முடியாது ஒரு நல்ல கவிஞனை இழந்து விட்டது 😭😭😭❤️

  • @Mano_Aj
    @Mano_Aj 2 роки тому +5

    கண் கலங்க வைத்த ஒரு நல்ல மனிதனின் பதிவு🥺😓

  • @rajapandianc5611
    @rajapandianc5611 4 роки тому +9

    Keats, Shelly, Bharathi, Pudhumaipithan, Pattukkottai, Muthukumar, ... the greatests who died young but live longer life.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 роки тому +2

    பவா உங்களுக்கும் முத்துக்குமார் அவர்களுக்குமான அனுபவங்களினால் எத்தனை முறை அழுதேன்னு எனக்கே தெரியலை பவா. அவர் ஒரு வெள்ளி நட்சத்திரம் பவா. 🙏🏻 ❤️ 😘

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 роки тому +22

    எல்லாம் சரி பவா.ஆனால் இத்தனை அன்பும் , கரிசனமும் கொண்டவர்கள் அவர் உடல் நலனைப் பேண ஏன் மெனக்கடவில்லை?நானாயிருந்தால் செவிட்டில் அறைந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி இருப்பேன்.ஆம்.கட்டாயம் செய்திருப்பேன் பவா.அநியாயமாக ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம்.

    • @licbalu8233
      @licbalu8233 4 роки тому

      Yes

    • @arularul8768
      @arularul8768 3 роки тому

      எனக்கும் இதே கேள்வி தான்

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому

      Kudikkum anaivarum irappathillai.endra nenaippu thaan. Inge yaar kudikaarargal illIai cinimaaavile

  • @marimuthur.k587
    @marimuthur.k587 4 роки тому +1

    மெய் சிலிர்க்கிறேன்.....
    நா.முத்துக்குமாரின் இயல்பான வாழ்வியல் எதார்த்தங்களை...
    நேசிக்கிறேன் அவரின் பண்புகளை...
    பெருமிதப்படுகிறேன் அவரை போன்றே நானும் ஒரு தகப்பனாக...

  • @prasathneelakrishnan6880
    @prasathneelakrishnan6880 4 роки тому +5

    வளையாமல் நதிகள் இல்லை
    வலிக்காமல் வாழ்க்கை இல்லை
    வருங்காலம் காயம் ஆற்றும்...
    மீண்டும் ஒருமுறை நா.முத்துகுமார் அவர்களை எண்ணி அழ வைத்து விட்டீர்களே பவா!!

  • @mohanem2606
    @mohanem2606 Рік тому +1

    முத்துக்குமாரின் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தை நடத்தும் போதெல்லாம் சில நிமிடங்கள் மவுனமாகவும், பல நிமிடங்கள் கண்ணீருடனும் கரைந்து போவதை மாணவர்கள் வியப்பாக பார்ப்பார்கள்..ஏன் என்று கேட்பார்கள் விடை தெரியாமல் வரிகளின் வலியை அசைப்போடுவேன்..

  • @singaivendan369
    @singaivendan369 4 роки тому +2

    பவா...உங்கள் கதை கேட்டு எத்தனையோ முறை அழுத எனக்கு ஏனோ இன்று இப்போது என் கண்கள் வறண்டு பனிக்க மறுக்கின்றது. கல்லாகி போனது என் மனம். நல்லவர்களை ஏனோ இந்த இயற்கையும் அந்த கடவுளும் அதிகநாட்கள் இங்கே விட்டுவைப்பதில்லை.

  • @vaseemld1300
    @vaseemld1300 2 роки тому +1

    முதல் முதலாக ஒருவரின் வரலாறை தேடுகிறேன்....

  • @dhanalakshmik9091
    @dhanalakshmik9091 4 роки тому +5

    'அன்பின் வன்முறை' அழகியல் தமிழ்...நன்றி, நன்றி, மிக்க நன்றி.

  • @rajarajant1198
    @rajarajant1198 4 роки тому +12

    வரிகளால் வாழ்கிறார் மனதில்😢

  • @kavineshbgm1256
    @kavineshbgm1256 Рік тому +3

    இன்றும் என்றும் அவர்களின் வரிகளை வாசிக்காத நாளில்லை🥰

  • @dspd3254
    @dspd3254 4 роки тому +47

    காற்றில் பறந்து
    பறவை மறைந்த பிறகும்
    கிளை தொடங்கிய
    நடனம் முடியவில்லை.❤❤❤

    • @soundarajansuppiah7555
      @soundarajansuppiah7555 Рік тому

      சமிபத்தில் பறவை பறந்த பின்னும் கிளை நடன மிடுகிறதே என்று. ஒரு கவிஞர் முக நூலில் எழுதியிருந்தார். அது நீங்களா. அல்லது இது அவரது கவிதையா. அழகு

  • @universea6261
    @universea6261 4 роки тому +15

    காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது - நா முத்துக்குமார்

    • @karunakaranrajamani6884
      @karunakaranrajamani6884 4 роки тому

      ❤️🥰

    • @saravanank8456
      @saravanank8456 2 роки тому

      இந்த வரிகள் என்னை என்னவோ செய்தது என் இளமை காலத்தில்....வாழ்க நா.முத்துகுமார்..அவரின் பிரிவு எல்லோரையும் அழ வைத்தது..!வைரமுத்து அய்யா கனத்த இதயத்தோடு பேசும்போது தான் அதிகமாக அழுகை வந்தது..!மறக்க முடியாத நாள்...!

  • @nilavzvlog
    @nilavzvlog 4 роки тому +2

    எங்களுக்கே அவருடைய இழப்பை தாங்க முடியாத நிலையில் நிச்சயமாக உங்களுக்கு பேரிழப்பு தான். அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா

  • @vanijayam8258
    @vanijayam8258 4 роки тому +4

    உங்கள் இரங்கல் கட்டுரை வாசித்து அழுதிருக்கிறேன். இன்றும் இப்பதிவை பார்த்து மீண்டும் கண்ணீர்...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Рік тому

    🎉🎉பவா அய்யா நன்றி

  • @vickygopal2170
    @vickygopal2170 Рік тому +1

    கவியரசர் 53 ் பட்டுக்கோட்டை 29 ் பாரதியார் 39 முத்துக்குமார் 41 ் இவர்களனைவரையும் வாலியைப்போல வாழவைத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்துருக்கும் ்

  • @kandasamidhasan5695
    @kandasamidhasan5695 4 роки тому +5

    பவா கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள். நா மு கு மறையவில்லை, நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார்.
    தொகுத்து வழங்கியதற்கு நன்கு பவா.

  • @nedunchezhiyankaliyamoorth6908
    @nedunchezhiyankaliyamoorth6908 4 роки тому +6

    அற்புதம்... நீ ஒரு யாழ் நூலகம் பவா

  • @YazhthamizhCreations
    @YazhthamizhCreations 4 роки тому +2

    இந்த காணொளியை பார்க்கும் போது , அதுவும் அண்ணனின் இறப்பை பற்றி பேசும் தருணம் என் கண்களின் என்னை அறியாமலேயே கண்ணீர் துளி!அவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவரின் எழுத்துகள் மூலம் நான் அவரையும் ,அவர் என்னையும் நெருங்கி கொண்டே இருந்தோம். என் உயிர் பிரியும் தருணம் வரை நான் நினைவில்கொள்ளும் ஒரே கவிஞன் என்அண்ணன் நா. முத்துக்குமார்.

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +1

    முத்துகுமார் பற்றி அறிந்து கொண்டேன். இப்படி ஒரு அன்பு பவாவிடம் வைத்திருந்ததை

  • @superstar7993
    @superstar7993 Рік тому +2

    கேட்கும் போது கண்ணீர் வருகிறது 😭😭😭மிஸ் யூ அண்ணா

  • @carthicbalu
    @carthicbalu 4 роки тому +3

    நான் நேசித்த கவிஞர் நா. முத்துகுமாரை பற்றிய எந்த விடியோவையும் கேட்க தவறியத்தில்லை... வரிகளால் மட்டும் எனக்கு அறிமுகமானவர் அதை தாண்டி முத்துகுமார் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது இல்லாத போது தான் அவரை அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டியது அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள இன்றளவும் மனம் ஒப்புகொண்டதே இல்லை...
    எத்தனை வரிகள் காத்துகிடந்து இருக்கும் கவிதையாக இவன் வடிப்பான் என்று....
    நன்றி பவா உங்கள் குரலில் முத்துகுமாரின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு ...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +6

    வேதனையாக இருக்கிறது

  • @புதியதமிழன்
    @புதியதமிழன் 4 роки тому +4

    வாழும் சிகரம் முத்துக்குமார்
    கண்ணீர் வர வைத்த நினைவுகள்....

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 2 роки тому +1

    என்னை மிகவும் பாதித்த மரணம் திரு. ந. முத்துக்குமார் அவர்களின் மரணம்.

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Рік тому

    பாவாவின யதார்த்த மான பேச்சு தமிழ் உரிமையுடன் பேசியது அருமை....

  • @agoramdreamworkshop
    @agoramdreamworkshop 4 роки тому +4

    காற்றை நம்பி பறவைகளில்லை
    ஆனால் - உன்
    கவிதையை நம்பி நாங்களிருந்தோமே நா.மு அண்ணா
    உயிர் பிரிந்து சென்றவன்
    உடன் - எங்கள்
    உயிர் பறித்தும் சென்றிருக்கலாம்...
    - D.K.RED

    • @gunasekaranvelusamy2515
      @gunasekaranvelusamy2515 4 роки тому

      ஓரு மனிதனின் நிறையும் குறையும்
      நீங்கள் சொல்ல சொல்ல
      வாழ்வின் மேன்யஉம

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +7

    மிக அற்புதம் பவா நன்றி

  • @ThePremanand711
    @ThePremanand711 4 роки тому +7

    Bava sir your voice is like or more so IS the Heart Beat.
    I can't survive even half a day without hearing your voice.
    Even if it's for 10 minutes.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 роки тому +8

    Enjoyed, Bava sir's speech as usual.
    But, couldn't control the pain of my respected POET, Muthukumar avgl.. death note.

  • @nawzar1
    @nawzar1 3 роки тому

    பேரன்புமிக்க அந்த அற்புத கவிஞனின் வாழ்க்கை ஒரு அழகிய கவிதை.. இல்லையில்லை ஒரு அறுசுவை நிரம்பிய புத்தகம்.
    அவனுடைய நற்பண்புகளும் வாரிவழங்கும் கொடையுள்ளமும் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவை.
    நல்ல மனிதர்களை இறைவன் இவ்வுலகில் நீண்ட நீண்ட நாட்கள் வைப்பதில்லை அவர்களை தன்னிடம் அழைத்துக் கொள்வான்.
    என் ப்ரிய கவிஞன் முத்துகுமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
    " கடன்பட்டாவது தேவையுள்ளவர்களுக்கு உதவு அதில் நீ மிகவும் திருப்தியடைவாய்" என்பது தான்.
    பவா.. உங்கள் உள்ளத்திலிருந்து ஓர் ஊற்றாய் அவர் பற்றிய நினைவுகள் வெளிப்படும்போது அறிமுகமில்லாத எங்கோ வாழ்ந்த ஒரு மனிதனுக்காய் நிறையவே நான் அழுதுவிட்டேன்.
    இலங்கையிலிருந்து
    நவ்சர்.

  • @Velinadupaithiyakaran8565
    @Velinadupaithiyakaran8565 4 роки тому +10

    😭😭😭 கண்ணில் சிறு கண்ணீர் நிறைவு பெறுகிறது உங்களது உரை பாவ😭😭

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Рік тому

    நா. முத்து குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 роки тому +15

    பவா 🙏 அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான் 🇮🇳

  • @karthikbalaji4882
    @karthikbalaji4882 4 роки тому +2

    I miss you great fan of Na.muthukumar sir
    Nalla manithargal nida nal valivathilai athu yano theriyavellai
    RIP sir

  • @Kattimedu
    @Kattimedu 4 роки тому +4

    முத்துகுமார்.. கவிதையில் என்றும் வாழ்வார்

  • @sivakumar-bs5ws
    @sivakumar-bs5ws 4 роки тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்களில் கண்ணீர் தவிர

  • @tamilselvanmanavalan7500
    @tamilselvanmanavalan7500 4 роки тому +2

    எளிமையான தமிழ் பாடல் வரிகள் முத்துக்குமார் பாடல்

  • @prabakaranc4546
    @prabakaranc4546 4 роки тому +4

    கேட்கும் பாடல்களில் பொருள் தேட வைக்கும் பாடல் ஆசிரியர் ஆக முத்துகுமார் இருந்திருக்கிறார்.....
    அவர் ஒரு சகாப்தம் பவா.....

  • @abdullahabdu9228
    @abdullahabdu9228 4 роки тому +2

    Mr.pava selladurai sir, Tamil vanakkam. Na.muthukumar Patri nirayavishayangal therindhu konden . Tamil meedhu arvam irunthaldhan valkayil sadhikka mudiyum.thank you

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 роки тому +2

    அறிய எதார்த்த மனிதர் முத்துக்குமார்.
    பேரன்புகள் பவா. 😍 😘

  • @teammavis5258
    @teammavis5258 4 роки тому +6

    Bava chelladurai sir just 3mints 44 secs
    I watched this video
    But it took me 1 hour to complete this 3 minutes 44secs
    I can't pass every words

  • @anithakm7518
    @anithakm7518 2 роки тому +4

    உங்கள் வாயில் வழிதோடுவது வார்த்தைகள் இல்லை... எங்களின் கண்ணீர் 😭😭
    இந்த காலத்து கண்ணதாசன் எங்கள் முத்துக்குமார் அண்ணன் 👏👏👏

  • @ahsanmim3432
    @ahsanmim3432 3 роки тому +3

    அழுதுகொண்டே என் அன்புக் கவிஞனின் நினைவுகளை கேட்க வைத்ததற்கு நன்றிகள் கோடி

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 роки тому +1

    முத்துக்குமாரை மிக அருகில் கொண்டுவந்து விட்டீர்கள். நன்றி ஐயா.

  • @RANJITHKUMAR-zr6gz
    @RANJITHKUMAR-zr6gz 4 роки тому +4

    நா.முத்துக்குமார்❤️❤️❤️❤️❤️❤️

  • @manojkrishna4738
    @manojkrishna4738 4 роки тому +3

    I cried sir...no one fulfil the place of Na Muthukumar anna

  • @yogiraam
    @yogiraam 4 роки тому

    மீண்டும் ஒரு முறை இதை காண்போரை எல்லாம்
    நா. முத்துகுமார் என்னும் கவிஞனை நினைவு கூற
    ஒரு வாய்ப்பளித்த அன்பு பவாவிற்கு நன்றிகளும் வணக்கங்களும் !
    காலன் தவறாய் கொண்டு சென்ற
    கவிக்கலன் எங்கள் நா. முத்துகுமார் - ஆனால்
    காலத்தால் அழிக்கமுடியாத
    கவிகளும்,கட்டுரைகளும், பாடல்களும்,
    கதைகளும் நமக்கு அவன் விட்டு சென்ற
    பொக்கிசங்கள். தமிழ் உள்ள வரை
    தரணி அவன் புகழ் பாடும்.

  • @keepgoing6430
    @keepgoing6430 4 роки тому +1

    I was inspired by.. Vaa vaa nilavai pidithi... Vaa vaa kethallam.. Anbale padikathu... Then I started following his songs... So sad..this made... No words...

  • @rajeshhonestraj4683
    @rajeshhonestraj4683 4 роки тому +2

    உஙகள் அனுபவங்களை கேட்கும் போதெல்லாம் உஙகளைப் போல் வாழவேண்டும் என்ற ஆசையும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கிறது அண்ணா...

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому +6

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘..........

  • @thittanichidambaram9271
    @thittanichidambaram9271 3 роки тому +1

    அவர் மறைவு என் கண்கள் கலங்கின

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 роки тому +2

    பாரதியே போலவே நா. முத்துக்குமார்
    இருவரும் நல்ல கவிஞர்கள்
    இருந்தாலும் அவர்களின் கவிதைகள் தமிழ் இருக்கும் வரை வாழும் என்பதே உண்மை!!!!!

  • @prabakaranprabhu9171
    @prabakaranprabhu9171 4 роки тому +3

    என்றும் உங்கள் நினைவுகளுடன்... My big lyricist it's still now ....

  • @Rajaram-kg5dv
    @Rajaram-kg5dv 3 роки тому +1

    😭நீங்கா நினைவாய் இந்த பதிவு உள்ளது பவா சார்

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +2

    Magal ulla thagapanuku theyriyum mutham kamathai sarnthethu ellai.... anandtha yazhai meetukigiral..... I love this song!!

  • @elengovanj
    @elengovanj 4 роки тому

    பல தன்னிகரில்லா மனிதர்களோடும் யோகிகளோடும் பழகும் வாழ்வை இந்த ஒரு பிறவியிலேயே பாக்கியமாக பெற்ற தாங்கள் தமிழக்கும் தமிழினத்திற்க்கும் சாகா வரமாவீர் நன்றி வணக்கம்.

  • @rameshp2862
    @rameshp2862 4 роки тому +2

    Except some tears I Don't have words Bava.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 роки тому +1

    நன்றிகள் பவா 🙏🏻

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 4 роки тому +1

    Sir
    Na Mu Vin maruppakam negilchiya ullathu .
    Bava message touches my heart.
    Thank you.
    A Durai raj triuchy

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 4 роки тому +10

    நீண்ட தமிழ் பயணத்தை நிலைகொலைய செய்த காலத்தை கண்ணீரால் கரைப்பதை தவிர வேறு என்ன செய்துவிட முடியும்? என் போன்ற எளிய மனிதர்களால்

  • @veluswamyaravintraj1226
    @veluswamyaravintraj1226 4 роки тому +1

    நா.முத்துக்குமார் எப்போதும் எனக்கு இன்னொரு கண்ணதாசன் ... எமக்கும்

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Рік тому

    🎉❤❤❤❤அருமையான பதிவு.. எனது கண்கள் குளமாகியது....

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +3

    Muthukumar a gentle man! Clever mens life short like Barathy ! Now only I know about him through Bava!

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому

      Swami vivekanand also

  • @arumugammurugesan6146
    @arumugammurugesan6146 4 роки тому +2

    இப்படி மனசு வலிக்கிறமாதிரி எல்லாம் தயவுசெய்து எழுத வேண்டாம்....நன்று.

  • @balamuruganr6886
    @balamuruganr6886 3 роки тому +5

    என் மனதுக்கு மிக நெருக்கமான கவிஞர் ..அவர் இறந்த போது என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை..வரிகளில் இன்றும் என்றும் வாழ்வார் ..

  • @NithyaKumar83
    @NithyaKumar83 4 роки тому +4

    வலி... மகன் மீது கொண்ட பாசத்தை என் சொல்வது...? கண்ணீர் வருகிறது.

  • @கார்த்திக்கந்தையா

    அன்பின் வன்முறை..❤️

  • @vinodhkumar4823
    @vinodhkumar4823 4 роки тому +4

    நினைத்து நினைத்து பார்த்தேன்....
    கண்ணீருடன்

  • @preethilenin3677
    @preethilenin3677 4 роки тому +2

    Became speechless....Muthukumar sir...such a person... couldn't imagine how he did not care his health.....praying that his family is taken care of....Sir, ur speech is a real tribute to a wonderful poet...I m eager to see sailaja mam...

    • @ramachandranam2138
      @ramachandranam2138 Рік тому

      I pray God to see ur whole family. Whenever I hear all stories i use to watch with full of tears because I got experienced almost all bad events , sufferings in my family. But my father and mother are true friends to each and everyone. I hope I my father mother is alive in form of u and mother sailja.once again I pray God to see u all soon.

  • @rameshkumarcrk3351
    @rameshkumarcrk3351 4 роки тому +4

    மனசு வலிகிறது பவா