திட்டைக்கு வந்தால் குரு பலம் நிச்சயம்|THITTAI GURU BHAGAVAN TEMPLE
Вставка
- Опубліковано 8 кві 2023
- #tamilnadutemples #temple #tamilnadu
குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம்.
#Nammveetupooja
நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான். அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு. அவரை பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான். இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி.ராஜ குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை. தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித்திட்டை. இங்கே உள்ள அற்புதமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார் ராஜகுரு.
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் வசிஷ்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் உலகநாயகி அம்மை, மங்களாம்பிகை. தஞ்சாவூர், கரந்தை, பள்ளியக்ரஹாரம் அடுத்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. பயணித்தால் திட்டை திருத்தலத்தை அடையலாம். - Розваги
மிகவும் தெளிவாக திட்டை ஈஸ்வரனை பற்றி எடுத்துரைத்து நேரில் வழி பட்ட உணர்வு கிடைத்து ஓம் நமோ சிவா ய நமஹா
@@poongothaim6724 நன்றி வாழ்க வளமுடன்
அருமை ஒம் குருவே நமஹ🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய நம ஓம்
குருவே போற்றி
அருள்மிகு உலகநாயகி மங்களநாயகி உடனுறை வஷிஷ்டேஸ்வரர் போற்றி ஓம்