புதிய இராஜ்யம்| இதுவே அனைத்திற்குமான தீர்வு, இதுவே பதில்| அவர் நமக்குள் ராஜாவாக ஆட்சி செய்கிறார்.

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • HE REIGNS AS A KING IN US
    Shalom, உங்களுக்கு சமாதானம் !
    நாம் வாழும் வாழ்க்கையை தாண்டி, பெரிதான ஒரு விடயத்திற்குள் முழுமையாக பிடிப்பட்டுள்ளோம்.
    தேவன் ஒரு நோக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். அதாவது தம்முடைய இராஜ்ஜியத்தை இந்த பூமியில் முழுமையாக கொண்டுவருவதற்காக, ஒரு விஷயத்தையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
    அதற்காக நம்மை ஓர் இடத்திற்கு நேராக கொண்டு செல்ல விரும்புகிறார். கிறிஸ்துவின் சரீரமாகவும், கிறிஸ்துவுடைய
    தேவ குமாரர்களாகவும், தேவ குமாரத்திகளாகவும் வெளிப்படுவதே நம்முடைய பிரதானமான அடையாளமாக காணப்பட வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.
    பிதாவானவர் தம் அன்பினால், பரிசுத்த ஆவியானவரை கொண்டு எங்களுக்குள்ளாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
    ரோமர் 5:5 இன் படி, “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில்
    ஊற்றப்பட்டிருக்கின்றது.” இதினிமித்தம் கிறிஸ்துவின் சாயலுக்கு நேராக நம்மை மறுரூபமாக்குகின்றார். தமது மகிமையானது கிறிஸ்துவில் பிரகாசிப்பது போல நம்முகத்தில் பிரகாசிக்கும்படி அதை செய்கின்றார்.
    மேலும் இச் செயலானது நிற்கப்போவதில்லை, வழிவிலகப் போவதுமில்லை. எங்கும் எந்தவொரு திருப்பத்தையும் எடுக்கப்போவதில்லை, முன்னோக்கியேச் செல்லும், ஏனென்றால் தேவ இராஜ்ஜியமானது: இப்பூமியின் நன்மைக்காக,
    இப்பூமியானது வாழ்வு பெற முழுவதுமாக வந்தே தீர வேண்டும். பூமியானது சுகப்பட இதை தவிர வேறு வழியே இல்லை.
    சரியான அரசியல்வாதி வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டு கலங்க வேண்டியதில்லை. ஏனென்றால் எந்தவொரு
    அரசியல்வாதியினாலும், இவ்வுலகின் சகல பிரச்சனைகளையும் சரிசெய்துவிட முடியாது. முழுமையாக வெளிப்படப்போகும் புதிய இராஜ்ஜியத்தினாலன்றி வேறொன்றினாலும் சரி செய்திட இயலாது.
    ஏற்கனவே உள்ள இவ்வுலகின்
    முறைகளானது (Systems) சிதைந்து போனதாகவுள்ளது, சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது, அத்தோடு கூட இருக்க வேண்டிய சரியான பாதையைவிட்டு, எதிர்மறையான பாதையில் பயணித்துக்கொண்டுள்ளது. சென்றடைய வேண்டிய இலக்கைவிட்டு முற்றும் முழுவதுமாக தொலைந்து போனது போல காணப்படுகின்றது. ஆகவே இவ்வுலகின் முறைமைகளை நம்பி இருப்பது முடியாத ஒரு காரியமாக இருக்கிறது.
    தேவ இராஜ்ஜியம் முழுமையாக பூமியெங்கும் வெளிப்படுவதே இதற்கான தீர்வு.
    அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்…
    “இயேசு கிறிஸ்து எங்கள் மீது ஆளுகை செய்கின்றார், அப்படியென்றால் எங்களை கீழ்ப்படுத்தி எங்கள் மீது இராஜாவாக ஆளுகை செய்கின்றார் என்பதல்ல பொருள், மாறாக எங்களுக்குள்ளிருந்து இராஜாவாக ஆளுகை செய்கின்றார். தம் அதிகாரத்தினால் அல்ல, தம்முடைய ஆவியினால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனியாக செயற்பட்டு வழி நடத்துகின்றார்.“ இதன் வெளிப்பாடாக நாமே இப்பூமியை ஆள வேண்டும் என்று விரும்புகின்றார்.
    -Amen
    நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பது மட்டும் அல்ல, இந்த உலகிற்கு நீங்கள் கிறிஸ்துவாக இருக்கின்றீர்கள்.
    #இதுவேசுவிஷேசத்தின்பெரிதானவரைப்படம்!

КОМЕНТАРІ • 5