வாராஹியை வியாபாரம் ஆக்காதீர்கள் - சமீபமாக மாற்றப்படும் வழிபாட்டு முறைகள்| Varahi is not for business
Вставка
- Опубліковано 12 вер 2024
- 45 ஆவது திருவிளையாடல் | 45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் | 45TH THIRUVILAIYADAL
• 45 ஆவது திருவிளையாடல் ...
எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
• எதிரிகளை துவம்சம் செய்...
நம் குறைகளுக்கு செவி மடுக்கும் தாய் வாராஹி வழிபாடு | வீட்டில் படம்/சிலை வைத்து வழிபடலாமா?
• நம் குறைகளுக்கு செவி ம...
குறிப்பு: இந்தப் பதிவு யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. வாராஹியை வைத்து வியாபாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.
- ஆத்ம ஞான மையம்
நவராத்திரி காலங்களில் அம்பாளுக்கு மீனாட்சி, காமாட்சி, காளி என அலங்காரம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழிபாடு.
நவராத்திரி அல்லாமல் மற்ற நாள்களிலும் செய்கிறார்கள்
@@AthmaGnanaMaiyam நவராத்திரி இல்லாத காலங்களிலும் இந்த மாதிரி நடக்கிறது
Amma arumaiyan vilakkam thanks@@jeyaLakshmi-b2r
உத்திரகோச மங்கை ஆதி வாராஹி பற்றி கூறுங்கள் அம்மா... சுயம்பு வாராஹி என்று கூறுகிறார்கள்
Amma vanakkam. Enakku kadan athikam ullathu uthvi seithu eamanthi vettarkkal kedai tharukendran enru solkendrkkal enna manthiram solla ma pl😢😢😢
நமக்கு எதுக்கு வம்பு.... என்று இல்லாமல்.. தைரியமாகவும், நியாயமாகவும் உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்... தெளிவான, அழுத்தமான, நிதானமான, சொல்ல வேண்டியதை இலை மறை காயாக இல்லாமல்... முகத்திற்கு நேரே சொன்ன விதம் அருமை...
இதே மாதிரி தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் பௌர்ணமி க்கு சென்று தங்கி வழிபாட்டால் நல்லது என்று கூறி தற்பொழுது மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளூர் மக்களும் அங்க வரும் பக்தர்களும் மிகவும் கஷ்ட படுறாங்க. அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்க அம்மா. 🙏🏻
சரியான நேரத்தில் சரியான பதிவு. நிறைய youtube channels கடவுளை வியாபாரம் ஆக்கிட்டாங்க
இந்த நூற்றாண்டில் எங்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு அந்த இறைவன் துணை இருக்க வேண்டும் எப்போதும் ✨
அற்புதம் அம்மா சரியான பதிவு அப்படியே நம்ம சொந்த கடவுள் கந்தசுவாமி திருச்செந்தூர் லா நடக்கும் பொவுர்ணமி கூத்து அதையும் அடுத்த பதிவாக தாருங்கள் அம்மா கடற்கரை யா நாசம் செய்கிறார்கள் கோவிலை அசுத்த படுத்தி 5 to 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகனை பார்ப்பது 1 நிமிடம் தான் கொஞ்சம் நீங்க எடுத்து பேசுங்க அம்மா ஓர் முருக அடிமை திருச்செந்தூர் நல விரும்பியின் ஓர் தாழ்வான வேண்டுகோள்🙏🙏🙏🙏
என் மனதில் தோன்றியதும் இதுதான். வாராஹி அம்மாவை இப்படி விளம்பரம் செய்கிறார்களே என்று மனதில் மிகவும் வருத்தப்பட்டேன்.மிகவும் அருமையான பதிவு அம்மா. வாராஹி தாயே சரணம்
அம்மம்மா..... உங்கள் முகத்திலும் வார்த்தையின் அழுத்திலும் அவ்வளவு கோபம் இன்றுதான் கண்டேன். இந்த பதிவு தொடங்கியதுமே என் உள்ளுணர்வு சொன்னது நீங்கள் கடுமையான கோவத்தில் இருக்கின்றீர்கள் என்று. உங்களின் இந்த பணி மிகவும் போற்றுதலுக்குரியது..
அம்மா நானும் தெரியாமல் இத்தனை 1வருஷமாக பஞ்சமி அன்று திருப்பரங்குன்றத்தில் விளக்கு போட்டு வழிபட்டு வந்தேன்..இன்றில் இருந்து திருத்திக்கொள்கிறேன்..அம்மா இந்த விஷயத்தை தெளிவு படுத்தியதிற்கு நன்றி அம்மா
என்ன மாயமோ தெரியல அம்மா... நீங்கள் பேசுவதை ஸ்கிப் செய்து பார்க்கவே தோன்றவில்லை.... 😊😊 ரொம்ப நன்றி அம்மா😊😊
அம்மா இக்காலத்தில் மிகவும் தேவையான பதிவு
நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே.
என்பதை நினைவில் கொண்டால் நலம்.
இந்த பதிவு மனதிற்கு ஆறுதல் தருகிறது அம்மா 🙏🏻🙏🏻 நானும் இதுபோன்ற அலங்காரங்களை கண்டு வேதனை அடைந்தேன் ஆனால் என்போன்ற சாதாரண மக்கள் கூறினால் அவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இப்போது உங்களுடைய வார்த்தைகள் என் நெஞ்சில் ஆறுதலாக உள்ளது மக்கள் நம்முடைய தெய்வ வரலாற்றை மாற்றி அமைத்து அதிலும் குறிப்பாக சுயநலம் கலந்த பக்தியை மட்டுமே இறைவன் மீது வைக்கிறார்கள் உங்கள் போன்ற ஆன்மீகவாதிகள் தயவுசெய்து நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அதைவிட முக்கியம் ஆன்மீகத்தை காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி அம்மா. சரியான சாட்டையாடி. இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லா னும் கெடும். தவறு செய்யும் போது மக்களை சரியான பாதைக்கு வழி காட்டி உள்ளீர்கள். தொடரட்டும் தங்களின் ஆன்மிக அறப் பணி.
என் மனதில் பல நாள் இருந்த சங்கடத்திற்கு இன்று பதில் அளித்திருக்கிறீர்கள் .. நிறைய பேர் இன்று வாராகி அம்மனை வியாபார நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர் 😢
அம்மா முதல் முதலில் வாராகி பற்றி பேச ஆரம்பித்தது நீங்கள்தான் விநாயகரை முழுமுதல் தெய்வமாக வணங்காதீர்கள் வராகியை வணங்குங்கள் என்று கூறியது நீங்கள்தான். ராஜராஜசோழன் அவரது கோவில்லையே விநாயகருக்கு பதிலாக வாராகி தான் வைத்திருக்கிறார் முதலில் வழங்கி இருக்கிறார் அப்படியெல்லாம் நீங்கள் தான் கூறினீர்கள் நீங்கள் பேசுவதற்கு முன்பு முன்பு இங்கொன்று அங்கொன்றுமாக பேசப்பட்ட வாராகி அப்படியே மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு இன்று எல்லோர் வீட்டிலும் குடியேறி இருக்கிறார் இன்று நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை எல்லாம் இறைவனுக்கு சமர்ப்பணம் இறைவன் தங்களுக்கும் மக்களுக்கும் நிதர்சனத்தை புரிய வைப்பார் நன்றி
அவங்க வாராகியை கும்பிட வேண்டுடாம்னு சொல்லவில்லை
💜
அம்மா இதுபோல் என்அப்பன் முருகனை வைத்து வியாபாரமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா.
நீங்கள் செய்த பதிவுகளிலேயே மிக அருமையான பதிவு அம்மா... பக்தியை வியாபாரமாக மாற்றிமைத்தவர்களுக்கும் தக்க பதிவு அளித்தீர்கள் அம்மா
அம்மா நான் ஒரு அகல் விளக்கில் தீபம் போட்டு வராகி அன்னையை வணங்குகிறேன். எனக்கு மன வேதனை காலத்தில் அன்னை நல்வழி காட்டினாள். இது அனுபவமான உண்மை 🙏🙏ஸ்ரீ வராகி அன்னையே போற்றி போற்றி 🌹🌹🌹பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா ஆத்ம வணக்கம் என் குமுறல் தெளிவாக சொல்லிவிட்டீர் ,,,, எத்தனை வருடம் மக்களிடம் போறாடுகிறேன்,,,,,,,,புரிந்து கொள்ள மாட்டார்கள்.........பெரிய வருத்தம் எனக்கு ....😢
Vanakkam guruji
என் மனசுல இருந்த ஆதங்கத்த குறைச்சிட்டீங்க அம்மா. ..மிக்க நன்றி 🙏
தற்போது முருகப்பெருமானை வியாபாரம் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் அதை பற்றி கொஞ்சம் பேசவும்.
Correct... Thiruvannamalai ah trend aakunaanga aprm karungali malai trend aachi aprm varahi Amman trend aakunaanga ipo muruganukku vanthurkkaanga...
@@twinskitchen7200 அப்புறம் youtube சேனல் சப்ஸ்கிரைப் பண்ணா வேல் கொடுக்குறேன்னு சொல்றாங்க. இவங்க பண்ண புரலியால எல்லாம் முருகர் கோயிலையும் கூட்டம் அலைமோதுகிறது நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை.
வணக்கம் அம்மா, நான் புதுச்சேரியை சேர்ந்தவன். கடந்த ஆண்டு திருப்பறங்குன்றம் சென்ற போது தாங்கள் குறிப்பிட்ட சிற்ப்பத்தை வாராஹி என்றே நினைத்து வணங்கிணேன் காரணம் அந்த சிற்பத்தை அவ்வாறு அலங்காரம் செய்திருத்தனர். ஆனால் நேற்று காலை சென்ற போது இந்த தகவல் பலகையை பார்த்து இச்சிற்பத்தில் இருப்பது எம்பெருமான் என்பதை அறிந்தேன். இந்த மாற்றத்திற்கான விளக்கத்தை தங்கள் வாயிலாக மறுநாளே அறிந்ததை எண்ணி மகிழ்கின்றனர். நன்றி அம்மா..🙏
முதல் முறையாக உங்கள் பேச்சில் கோபம் தெரிகிறது அக்கா. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
திருப்பரங்குன்றம், விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோவிலில் நான் பார்த்து மனவருத்தம் அடைந்துள்ளேன்..ஆனால் சொன்னால் ஏற்றுக்கொள்பவர்கள் இல்லை..
தங்கள் பதிவிற்கு நன்றி..
நாங்கள் சொல்வதை உங்கள் பதிவை முன்னிறுத்தி சொல்ல முடியும்🙏🕉🙏
அம்மா நீங்கள் தெய்வ அருள் நிறைந்த பிறவி .... உலகை நல்வழியில் வழிநடத்தி செல்ல உங்கள் பிறவி அமைந்துள்ளது அம்மா.. உங்க பெற்றோர் இறைவனிடம் எந்த அளவுக்கு மனம் உருகி வேண்டியிருந்தால் உங்களை மாதிரி அருள் நிறைந்த குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்கள்.. இறைவன் மிகப் பெரியவன்.. அவர் கருணை அதனினும் பெரியது... நாங்களும் உங்கள் பெற்றோர் போல அருள் நிறைந்த இறைத்தன்மை நிறைந்த குழந்தை வேண்டும் என்று எம் முருகப்பெருமானிடம் வேண்டியிருக்கிறோம் அம்மா.. என் குழந்தை திருப்புகழ் பாட அதை ஆத்மார்த்தமாக கேட்டு இறைவனிடம் உருக வேண்டும் என்று அளவில்லாத ஆசை அம்மா... இந்த பதிவு நீங்கள் பார்த்தால் முருகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தாயே🙏
பலரும் அறியாத சிவபெருமானின் தோற்றம் திருப்பரங்குன்றம் திருவாட்சி மண்டபத்தில் இருக்கும் காட்சி மிக்க நன்றி குரு அவர்களே..
இந்த மாதிரி நிறைய இடங்கள்ல பார்க்கும்போதும் மனசுக்கு ரொம்ப நெருடலா இருக்கும் அம்மா இப்ப நீங்க சொன்ன பிறகு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு அம்மா🥰
அருமையான விளக்கம் Madam, இன்னும் எல்லோர்க்கும் reach ஆகுற மாதிரி எல்லா Social media (TV, Radio ) லயும் பேசுங்க. அறியாமை அகல வேண்டும். மிக நல்ல பதிவு. நன்றி Madam
அம்மா, ஒரு ஆசை. உங்களது சிறுவயது சொற்பொழிவு வீடியோ இருந்தால் பதிவேற்றம் செய்யுங்கள். ஆவலாக உள்ளோம்.
அம்மா தக்க நேரத்தில் சரியான பதிவு .
வெகு நாளாக எனக்கு தவறு என்று தெரிந்தத விசயம். மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி .🙏🙏
அம்மா இத விட அழகா சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு இது புரிய போவது இல்லை. ஆனா மக்களுக்கு புரியும். நன்றி அம்மா
என் மனசுல உள்ள அதாங்கத்தை எல்லாம் நீங்க கொட்டிடிங்க அம்மா..தெளிவையும் ஏற்படுத்தி விடிற்கள் என் மனசார சொல்லுறன் நீங்க நல்லா இருக்கணும்🥲
இந்து மக்களை உங்களைப் போல வழி நடத்துபவர்கள் கண்டிப்பாக வேண்டும்.... இதேபோல் உங்கள் சேவை தொடர்ந்து எங்களுக்கு தேவை
நன்றி அம்மா நானும் இதுவரை அந்த சிலையை வராகி அம்மன் என்று தான் வழிபட்டு வந்தேன்.சிலையின் விளக்கத்தை கூறியத்திற்க்கு நன்றி. இனிமேல் அங்கு விளக்கு ஏற்ற மாட்டேன். சிவனை வணக்கி மட்டும் வருகிறேன்.
நல்லது
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையையும் உண்மை இதை யார் சொல்வது என்று நினைத்தேன் நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோஷம் அம்மா
உங்களோட ஒரு பதிவு ❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா போனால் திரும்பி வராதது மானம் அந்த தன்மானத்தால் ஒருவர் தகர்க்கபடும் போது.... அந்த தன்மானத்தை முன்னிருத்த வாராஹி அருள் புரிவார் ❤️🙏🏻🙏🏻🙏🏻என்று சொன்னிங்க ❤🥰🥰
அருமை அம்மா. தெரியாதவற்றை திருத்த வேண்டியது தெரிந்தவர்களின் கடமை
அருமை❤
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா புரிந்து கொண்டு அனைத்து மக்களும் மாறினார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ❤❤❤
நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் அம்மா என் வாராகி அம்மாவை வியாபார நோக்கத்தோடு தான் இப்போது நிறைய பேர் வணங்குகிறார்கள் அதுவே என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது இந்தப் பதிவின் மூலமாகவாவது இந்த சில பேர் திருந்தட்டும் அம்மா மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு அக்கா, நீங்கள் சொல்லும்போது சொன்னீரகள் "எனக்கு முன்னாடியும், எனக்கு அப்பறமும் நிறைய பேர் வாராஹி பற்றி பேசிஇருக்கிறார்கள் "என்று,உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அக்கா, ஆனால் புஷ்பவனம் அனிதா குப்புசாமி அவர்கள் எப்போது வராஹி பற்றி கூறும்போதும் அவர்கள் தான் முதன் முதலில் வராஹி பற்றி சமூக வலைதளத்தில் பேசியதாக சொல்லிகிறார், அவரை பார்த்து தான் மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று அடிக்கடி சொல்லுகிறார், கர்வதின் உச்சக்கட்டம் அனிதா குப்புசாமி. அனிதா குப்புசாமி எந்த பதிவு போட்டாலும் அதில் கூடவே "நான் தான் எந்த வழிபாட்டை முதன் முதலில் கூறினேன் பின் மற்றவர்கள் அவரை பார்த்து பேச ஆரம்பிச்சிட்டாங்க என்று கூறுவது வழக்கம்
வாராஹி வைத்து வியாபாரம் தான் நடக்கு கண் முன்னே பார்க்கிறேன் யாராவது எதையாவது சொல்லி அதை நம்பி இப்படியா கூட்டம் கூட்டமாக . நான் வீட்டில் போட்டோ வைத்து மனதில் நினைத்து கும்பிடுகிறேன்
நன்றி அம்மா வாராஹியை வியாபாரம் ஆக்கிட்டாங்க அம்மா.இந்த மக்களை திருத்த முடியாது.
இனி அடுத்த தலைமுறையாவது, முறையான தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்..அருமையான விழிப்புணர்வு பதிவு
வடிவேலும் வண்ண மயிலும் துணை என நினை மனமே ...காலை வணக்கம் 🙏🙏🦚🦚அம்மா
அம்மா தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி நீங்கள் அழகாக வாராஹியை பற்றி சொல்லும் போது மெய் சிலிர்க்கிறது அம்மா💕 உண்மையை தெரிந்து கொண்டேன் நீங்க நல்லாருக்கணும்அம்மா🔱⚜️🙏🏻
Intha pathiva parthavqthu Ellorum thirunthattum.Ella oorlayum ipdi than pannuthuga you tube a parthu.Amma kodukira pathiva parthu Samy kumbitale evalo palan undu.Nalla nalla visayqngalum niraya namaku theriyum.ella kadavulayum parkum pothu apdri oru pakthi varum.Intha pathiva koduthathuku romba romba nandri Amma 🙏🙏🙏🙏
இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பதிவு அம்மா உங்கள் முகத்தில் ஒரு வேதனை கோவம் தெரிகிறது அம்மா முருகனை வைத்து நெறைய பேரு பேசுறாங்க ஒவ்வொருவரும் ஒரு விதமாக இதை பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா எல்லாமே தலைகீழாக இருப்பது போல இருக்கு அம்மா 🙏🙏🙏
தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க
நான் மதுரை மேடம். இது வரை வாராஹி என்று தான் வழிபாடு செய்யபடுகிறது. உண்மை உரைத்த தற்கு நன்றி
அம்மா நான் தங்கள் மாணவி.கவலை படாதீர்கள் மக்கள் இந்த பதிவை பார்த்தவுடன் திருத்திக்கொள்வார்கள்.தைரியமாக பதிவு கொடுத்து புரிய வைத்ததற்கு நன்றிகள் அம்மா
இனியாவது வாராஹி அம்மனுக்கு பால் ஊட்ரத நிறுத்தூங்க
அம்மா அப்படியே ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாராகி கோவில்களின் இடங்களை தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் யாரும் குழப்பம் இல்லாமல் இருக்கலாம்
மிக அருமையாக சொல்லி விளக்கமளித்துள்ளார். வாராஹி அம்மனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர் ஒருவரை எனக்குத் தெரியும்.... மக்கள் இதையாவது உணர வேண்டும்
உங்களுடைய இந்த பக்குவமான பேச்சுதான் சகோதரி உங்களுடைய காணொளிகளை பார்க்க செய்கிறது என்னை ❤மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
அருமையான பொறுப்பான அக்கறையுள்ள பதிலாக கொடுத்த சகோதரிக்கு நன்றிகள் கோடி.
இந்த சகோதரியை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
கோபத்தையும் கண்ணியமாக வெளிப்படுத்திய விதம் அபாரம்.
திருந்துங்கப்பா.
நீண்ட காலமாக நான் உங்களிடம் பகிர நினைத்த பதிவு நன்றி. ஆடியேன் மனம் சாந்தி அடைந்தது
பொது நோக்கி ற்காகவும்... நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டிய குருவிற்கு அநேக கோடி நன்றி கள்
ரொம்ப தெளிவான பதிவு அம்மா வாராஹி அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கணும் அம்மா சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள்
நன்றி சகோதரி, வெகு நாட்களாக மனதில் புழங்கிய ஒன்று.
வாராஹி அன்னைக்கு திருமண பைரவருடன் செய்தார்கள். அம்மா வாராஹி நீ தான் இதற்கு முடிவு கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். ஆறுதலாய் தங்களின் பதிவு.
அம்மா மிக்க நன்றி இந்த தகவலை அறிவித்ததற்கு ஏனென்றால் நாங்களும் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான் ஒவ்வொரு முறையும் பஞ்சமி என்று போய் விளக்கு போடுவது அரளி மாலை போடுவது என அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறோம் இனிமேல் இதை நாங்கள் செய்ய மாட்டோம் அம்மா மிக்க நன்றி இப்படி ஒரு தகவலை அளித்ததற்கு... உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் அம்மா... நான் அனைவரிடமும் இந்தப் பதிவை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்..
மக்கள் நல்வழிப்படுத்தும் அம்மாவிற்கு எனது மனமார்ந்த நன்றி🙏
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏இந்த பதிவு இந்த காலகட்டத்திற்கு ஏற்றது தான் தோழி, இதை பார்த்த எல்லாம் திருந்தினால் சரி தான், சபரி மலைக்கு பெண்கள் செல்வோம் என்று சென்றாதால் தான் கேரளா மாநிலத்தில் வருடத்திற்கு ஒரு அழிவு வருகிறதோ என்று தோணுது, நம் முன்னோர்கள் எதை எப்படி கடைபிடித் தா ர்காளோ அதை அப்படியே செய்வது தான் சிறப்பு என்பது என் கருத்து, மிக்க நன்றி தோழியே 🙏❤
சரியான சமயத்தில் அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க அந்த இறைவன் துணை இருந்து காக்க வேண்டும்
இந்த பதிவு நிறைய பேருக்கு சென்று அடைய வேண்டும்
நீங்கள் சொன்னது உண்மை திருப்பரங்குன்றத்தில் வராஹி சிலை குழந்தைக்கு பால் கொடுப்பது போல் தூணில் அமைந்துள்ளது என்று ஒருவர் youtupe சொன்னதை கேட்டு நானும் இத்தனை நாள் வழிபாட்டின் உங்கள் vdo பார்த்த பின்புதான் தெரிந்தது அது சிவன் சிலை என்று மிக்க நன்றி அம்மா 😢
அருமையான மற்றும் தேவையான பதிவு அம்மா.. பக்தியை வியா பாரமாகவும் மூடநம்பிக்கையை வளர்க்கும் சிலரும் இதை பார்த்து மாற வேண்டும்... நன்றி அம்மா.,
இப்படி நடப்பதால் தான் உண்மையாக பக்தி செய்பவர்களையும் கேலி செய்கிறார்கள்...
நான் எந்த video பார்த்தாலும் உங்கள் பதிவை மட்டும் தான் follow பண்ணுவேன்... நீங்கள் ஒருவர் தான் உண்மையான ஆன்மீகத்தை பற்றி பேசுபவர்... நன்றி அம்மா
சூப்பர் அம்மா.. வாராகி கோவில் எங்க ஊர் வேதாரணி யாத்தில் உள்ளது மிகவும் பழமையனது 1500வருடம் சொல்றாங்க பக்கத்தில் உள்ளவங்க வந்து வழிபடலாம் பஞ்சமி திதி சிறப்பு அபிழேகம் நடைபெரும்...
அம்மா நீங்க போட்ட பதிவு முற்றிலும் உண்மை நானும் இப்படி தவறாக வழிபட்ட வருடம் எடுத்துக் கூறினேன் ஆனால் கடைசியில் என் அசிங்கப்படுத்தி அவர்கள் வீடியோ போட்டதுதான் மிச்சம் நான் அதிலிருந்து அமைதியாகி விட்டேன்😅😅
அருமையான பதிவு நன்றி அம்மா இப்போது கையில் ஆயுதம் எடுத்தவர் எல்லாம் படைத் தளபதி ஆன்மீகத்தை வியாபாரம் செய்கின்றனர் நன்றி அம்மா ❤❤❤❤❤❤
நாங்கள் எங்கள் வீட்டில் வாராகி அம்மன் சிலை வைத்து வாங்குகிறோம், அம்மா,எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள், உங்கள் மனமார்ந்த ஆசிர்வாதத்திற்க்கு காத்திருக்கிறோம்🙏🙏🙏
Super amma neega sonegala yalarum varahi ya modern vibe la vachu romba panuraganama Sona Namala yatavatu soluraga thanks amma
மக்களை நல்வழிப்படுத்தும் அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் .
எனக்குள் இருந்த பல நாள் எண்ண சிந்தனை...தாயே வெளிப்படையாய் தைரியமாய் சொல்லிவிட்டீர்கள்!
சாய் பாபாவுக்கும் இந்த மாதிரி தெளிவு சிந்தனை தாருங்கள் அம்மா !
நமசிவாய அம்மா நான் திருநங்கை கொற்றவை
இதே போல் நீங்கள் மற்றொன்றையும் குறிபிட்டு பேசி ஒரு பதிவு போட்டால் பலரும் நன்மை பெறுவர்
தற்காலிக தீர்வு வேண்டி சில பரிகாரங்கள் எனவும் இல்லை யூடியூப் வாயிலாகவும் கூட இன்று பலர் சிலபல புதிய வழிபாடுகளை தொடங்குகிறார்கள் அதில் தவறு ஏதுமில்லை என்றாலும் வேறொரு புதிய பரிகாரமோ,வழிபாடோ,சிறப்பு பூசை முறையோ சட்டென்று பலனை கொடுக்கும் என யாராவது சொல்ல கேட்டு தொடங்கியதை விட்டுவிட்டு புதியதின் பின்னால் ஓடுகிறார்கள் இது மனித இயல்பு தான் புரிகிறது
ஆனால் இதில் பாதிக்கபட்டது அந்த பழைய கடவுள் உதாரணமாக வாராஹி அம்மனை வழிபாடு செய்து வந்த சிலர் இன்று வேல் மாறல் வழிபாட்டிற்குள் நுழைந்தனர் இதில் பாவம் இல்லை ஆனால் அவர்கள் வீட்டில் கொலுவிருந்த பூசை ஏற்ற அந்த தெய்வ சொரூபம் கிணற்றிலும்,ஆற்றிலும்,கோயில்களிலும் சேர்க்கபட்டதை கண்டு துயர் அடைந்தேன்
நாளை வேலுக்கும் இந்த கதி வரலாம்
அம்மா நம் சமயம் அற்புதமானது இயற்கையோடு ஒன்றியது ஆகையால் தொழ நினைக்கும் தெய்வமெல்லாம் சிலைகளாக,படங்களாக,சேகரிக்காமல் ஜோதியாக,நீராக வழிபடலாம் என அவ்வபொழுது வலியுறுத்துங்கள் தாயே!!!
சிவாயநம
பெருமதிப்பிற்குரிய அன்னைக்கு இந்த அடியனின் பணிவான வணக்கம் முற்றிலும் உண்மை ஒரு வருட காலமாக வேலை இன்றி படித்து முடித்துவிட்டு அவதிப்பட்டு கொண்டிருந்தேன் நான் வாராகிய வழிபட ஆரம்பித்தது அன்னைக்கு கூறிய அதே வழியில் தான் ஒரு அகல் விளக்கில் தான் அன்னையை நான் கண்டேன் ஒரு அகல் விளக்கு ஏற்றி அவளை வழிபட்டு வந்தேன் விளக்கில் தான் எனக்கு காட்சி தந்தாள் அவள் பேசும் தெய்வம் அண்னை கூறுவது முற்றிலுமாக உண்மை அதற்கு நானே சாட்சி🙏🙏🙏🙏🙏
அம்மா நிங்க சொல்வது உண்மை ஆனால் ஒரு சிலருக்கு அது புரியவில்லை ❤❤❤❤
Super ma நீங்கள் சொல்லி இருக்கிறார் மா இனி எல்லோரும் சரி யான வழி மில் அன்னை வாராகி வணங்குவார்கள் வருத்தப்பட வேண்டாம் மா
இவ்ளோ அருமையா பொறுமையா
தெள்ள தெளிவா மக்களுக்கு
விளக்க அளித்திங்க மிக்க
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
from malaysia
மிகவும் அருமை. மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு. நன்றி.
மிக்க நன்றி அம்மா 🙏 for being there for தமிழ் தெய்வங்கள், தமிழ் & தமிழ் பாரம்பரியம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து நடந்தகொள்ள வேண்டும்.
எங்கள் ஊரிலும் இதே வேளை தான் நடக்கிறது மாரியம்மன் கோவிலில் மகாலட்சுமி வாராஹி போன்ற அலங்காரம் நடக்கிறது
சிவனின் மனைவி சக்தி . சக்தியின் அம்சமான மாரியம்மனுக்கு மகாலக்ஷ்மி அலங்காரம்
என் மனதிலும் இதே ஆதங்கம் இருக்கிறது அம்மா
அற்புதமான விளக்கம் அம்மா 🙏🙏🙏
இதற்காக தான் எம்பெருமான் அன்றே கண்ணப்ப நாயனாரின் பூஜையே சிறந்தது என்று திரு விளையாடல் நிகழ்த்திருக்கார்.எது செய்தாலும் ஊன் கலந்த அன்போடு செய்யுங்கள் மக்களே.இங்கே எல்லாமே காசு தான். எதை செய்தால் பித்தம் தெளியும்னு மக்கள் அல்லாடுறாங்க. அவர்களை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு ஈஸ்வரா🙏
இந்த பதிவு அன்னை மீனாட்சியின் பதிவு. உடம்பு சிலிர்த்தது. இந்த பதிவிற்கு ந தலை பணிகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தூணில் இருக்கிற சுவாமியை எல்லாருமே வராகி அம்மன் நினைச்சுட்டு தான் பூஜை செய்வாங்க எனக்கு சொல்ல வருத்தமா இருந்துச்சு நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா
ஒரே ஒரு தீபம்,ஒரே ஒரு ஜோதி,ஒரே ஒரு கடவுள் தான்,மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை எப்போது இந்த மாக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
சிவ சிவ. மிகவும். அருமையான பதிவு. கேட்க. கேட்க மெய் சிலிக்கிறது மக்கள் மாறவேண்டும் அம்மா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்
அம்மா திடீரென வாராஹியை பேசும் பொருளாக்கி வியாபாரமாகி விட்டவர்களை அந்த அம்மாவே பார்த்துக் கொள்வாள். கவலை படாதீர்கள். ஓம் சரவண பவ .
உண்மை
நல்லதொரு தெளிவு கொடுக்கும் காணொளி.,.
நீண்ட நாள் குமுறல் இன்று தீர்ந்தது.
நன்றி அம்மா
நல்ல பதிவு...பக்தி மட்டும் தான் பணத்தாள் மாறாமல் இருந்தது ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது 😢...
மிக அருமை அம்மா....சரியான பதில் கொடுத்து இருக்கீங்க....வியாபார நோக்கத்தில் செய்பவர்களை காணும்போது கோபம் வருகிறது.விரைவில் இது போன்ற செயல் மாறும் என்று நம்புகிறேன். இறைவன் காட்சியாகவும் சாட்சியாகவும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
தவறும் வழியில் செல்லேருந்த மக்களை தடுத்து சரியான முறையில் ஆன்மீக பாதையில் அழைத்து செல்லும் பதிவிற்கு நன்றி அம்மா
அம்மா அப்படியே திருச்சந்தூர் பைவுர்னமி அன்று நடக்கும்கூத்தூ ஒரு பதிவு போடுங்கள் மக்கள் திருந்தட்டும்7
அருமையான பதிவு சகோதரி அவர்களே...இந்த தவறை தவறுஎன்றே தெரியாமல் நானும் திருப்பரங்குன்றம் செல்லும் போதெல்லமாம் செய்தேன். முதல் மன்னிப்பை தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கோயிலுக்கு செல்லும் போது சிவபெருமானிடமும் வாரஹிஅம்மனிடமும் பிராத்தனையுடன் கூடிய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி.
நீங்கள் செல்லும் இந்த பதிவு என் கண்களில் கண்ணீர் வருகிறது. நன்றி அம்மா.
திருப்பரங்குன்றம் கோவில்ல வாராஹின்னு நினைத்து சிவபெருமான வழிபட்டுட்டு இருக்காங்க.(திருவிளையாடல் புராணம் பன்றிக்கு பால் கொடுத்த படலம் 63 )
உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றி பல கோடி
நல்ல தலையில கொட்டி சொன்னீங்க.... இந்த கொடுமையெல்லாம் சீக்கிரமா மாறணும் அம்மா .
முருகர் வச்சு இப்போ நெறைய பிஸினஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அதையும் knjam சொல்லுங்க mam....
Vanakam Amma
I am in Bangalore. Many times I have this taught mam. Temple and poojai will become very artificial and luxury here no bakthi bava . not all the temple. Famous temples in Karnataka are following their own agama neethi and keep the divinity.
வாழை நார் திரிக்கு உங்களின் விளக்கம் மற்றும் வாராஹி அம்மனை விளக்கின் மூலம் வழிபடுவது ஏழைகளும் எளிமையாக எப்படி விஷேச நாட்களில் கடவுளை வழிபடுவது
அன்னதானம்
எந்த பொருட்களையும் சந்தை படுத்தாதது இவையெல்லாம்
உங்களின் தனி சிறப்புக்கள் அம்மா ❤
விநாயகர cricket விளையாட வச்ச வியாபாரம் வராஹி வரை வந்தாச்சு