திரு ஏழு கூற்றிருக்கை - திருப்புகழ் | Thiru Ezhu Kootrirukkai - Thiruppugazh | Nithyashree Mahadevan

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Thiru Ezhu Kootrirukkai - Thiruppugazh | Singer : Nithyasree | Rendered By : Arunagirinathar | Music : Rajkumar Bharathi | Tamil Devotional Song | Murugan Song | Amutham Music
    திரு ஏழு கூற்றிருக்கை - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | முருகன் பாடல் | அமுதம் மியூசிக்
    பாடல் வரிகள் :
    ஓருரு வாகிய தாரகப் பிரமத்து
    ஒருவகைத் தோற்றத்து இருமர பெய்தி
    ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
    முருகா மூவா தாயினை முருகா மூவா தாயினை
    இருபிறப் பாளரின் ஒருவ னாயினை
    ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
    நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
    மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை
    முருகா ஒருசிறை விடுத்தனை
    முருகா ஒருசிறை விடுத்தனை
    ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
    முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
    முருகா நீவலஞ் செய்தனை
    நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
    ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
    ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
    மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
    நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
    அறுகு சூடிக்கு இளையோ னாயினை
    ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
    முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு ஒருகுரு வாயினை
    முருகா ஒருகுரு வாகினை முருகா ஒருகுரு வாகினை
    ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
    முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
    ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என
    எழில்தரும் அழகுடன் கழுமலத் துதித்தனை
    அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
    நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு
    அன்றி லங்கிரி இருபிள வாக ஒருவேல் விடுத்தனை
    காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
    ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
    ஏரகத்து இறைவன் என இருந்தனையே
    முருகா முருகா முருகா முருகா
    அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் . இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் ,தாயார் பெயர் முத்தம்மை . இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
    தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
    அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
    அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
    முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.
    Music Download & Streaming
    Apple Music : / thiruppugazh-nithyasre...
    Amazon Music :music.amazon.i...
    Google Play Store : play.google.co...
    Spotify : open.spotify.c...
    Napster : us.napster.com...
    Wynk :wynk.in/music/...
    Jio Saavan : :www.jiosaavn.c...
    #Amuthammusic#Nithyashreemahadevan#thiruppugazh
    For More Videos: / @amuthammusicsanskrits...
    Facebook : / amuthammusicofficial
    / @sudharagunathan-theso...
    : / amuthammusic
    Pinterset : / hub

КОМЕНТАРІ • 75