முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming
Вставка
- Опубліковано 13 вер 2024
- முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming in Jaffna.
2000 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழர் வாழ்வியலோடு பின்னி பிணைந்திருந்த ஒரு மரம் தான் இந்த முள்முருக்கு. எனினும் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒருவகை நோய் காரணமாக எம்மிடமிருந்து அப்பாற்பட்ட ஓரு மரமாக மாறிவிட்டது. இதற்கு பலராலும் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கோப்பாய் வீதி உரும்பிராயில் ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணாவின் முயற்சியில் ஒரு முள்முருங்கை தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு மிக அழகிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் இது ஒரு பாராட்டுக்குரிய விடயம்.
நீங்களும் உங்கள் திருமண நிகழ்வுகளுக்கு தேவைப்படுகின்ற கன்னிக்கால் தடியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகொள்ள விரும்பினால் :
ஜெயக்குமார் அண்ணா
கோப்பாய் வீதி, உரும்பிராய். (பாரதி)
தொ.பே இல - 077 727 9794
#jaffnaboys #jaffna #யாழ்ப்பாணம் #முள்முருங்கை #முள்முருங்கு #தமிழன்மறந்தகதை #முள்முருக்கு #mulmurukku #mulmurungu #mulmurungai #urumpirai
தமிழ்நாட்டில் இதை கல்யாண முருங்கை என்று சொல்லுவோம்.
முள்ளு முருங்கை என்றும் எங்கள் வீட்டில் சொல்லுவோம்...
அருமை 👍 எனது இளமை காலங்களில் எமது வாழ்வியலில் ஒரு அங்கமாக காணப்பட்ட ஒரு மரம் ❤
பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி்.. வாழ்த்துக்கள் 😊
மிக்க நன்றி 😍
நல்ல பதிவு சகோதரன்
நான் கவலைப்பட்டேன். இந்த முள் முருங்கை மரம் அழிந்து போனது
எனது கால் இல்லாமல் நடந்தது மாதிரி.
இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறது.
தமிழ் இனத்தின் அடையாளம் முள் முருக்கு. எல்லா இடங்களிலும் இருந்தது. ஆனால் மயிர் கொட்டிகள் இந்த முருக்கமிலை மரத்தில் உருவாகி இருந்தது.
அப்போது அந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் விவசாயிகள் மனித இனத்தின் முதுகெலும்பானவர்கள்.
எல்லோரும் பயன் பெற வேண்டும்.
உண்மையான கருத்து 🙏
மிக்க நன்றி 😍
🙏🙏🙏
பொதுவாக இவ்வாறன பதிவுகள் தமிழகத்தில் இருந்தே கிடைக்கும் - நான் இதுவரைக்கும் முள் முருங்கை (கல்யாண முருங்கை) தோட்டமாகச் செய்வதைத் கண்டதில்லை - எமது திருமணங்களிலும் இது பிரதான பங்கு வகிக்கும் - மற்றும் ஆடு மாடு கோழி வாத்து முயல் போன்றவை விரும்பி உண்ணும் - யாழ் மண்ணிற்கு இது மிகவும் பொருத்தமானது - பாராட்டுகள் - இதை மேலும் விரிவுபடுத்தவும் - தொலைபேசி இல அனுப்பவும்
S.சிறிதரன்
மட்டக்களப்பு
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍
தொலைபேசி இலக்கம் - 077 727 9794
நன்றிகள் நன்றிகள் காணாமல் போன ஒரு உறவை கண்டுகொண்ட மகிழ்வு நான் அளவெட்டி கிராமத்தை சேர்ந்தவன் எங்கள் வளவில் திரும்பிய வேலி யெல்லாம் முள்முருங்கை இருந்தது ஆடு மாடு இருந்த வீடு என்பதால் 89ம் ஆண்டு வெளிநாடு வந்து 24 வருடங்களின் பின் 2013 வீடுவந்து போது ஒருமரம் கூட இல்லை காரணம் நோயால் அழிக்க சொன்னதாக சொன்னார்கள் இன்று இந்த பதிவை பார்த்தது மிகிழ்வாக இருக்கிறது அடுத்த வருடம் இவரிடம் தடிவாங்கி நடவேண்டும் இந்த சேவையை செய்யும் அவருக்கும் நல்ல பதிவினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😍
மிக நல்ல பதிவு பழைய ஞாபகம் எங்களுக்கு எடுத்து காட்டியுதற்கு மிக்க நன்றி 👍👍👍
மிக்க நன்றி ❤️
மனமார்ந்த வாழ்த்துக்கள் நம்ப கனடாவிலிருந்து
மிக்க நன்றி, நான் எதிர் பார்த்த ஒன்று இது, நல்ல வரவேற்கத் தக்கது, உங்கள் முயற்சி வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள், எங்கள் வீட்டில் நிறைய மரங்கள் முன்பு இருந்தது, இடையே ஒரு காலத்தில் பூச்சித் தாக்கம் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்பட்டது என்று அறிந்தேன், ஆனாலும் சரியாகத் தெரியவில்லை
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍
எங்கள் ஊரில் ஆற்றோரங்களில் நிறைய இருக்கு இது ஆடு மாடுகளின் தீவணம் என்று இன்றுதான் எனக்கு தெரியும் ♥️
பதிவிற்கு மிக்க நன்றி சகோதரா 😍
உறவுகளுக்கு
வாழ்த்துகள் !
தமிழர்கள் என்றும் இறந்துண்டு
வாழ விரும்பமாட்டார்கள்
என்பது உண்மை !
நாம் தமிழர்
மிக்க நன்றி ❤️
மிக மிக அவசியமான பதிவு
நன்றி 😍
பலர் பல முயற்ச்சி செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
பெரிய " ற் " வரும் வார்த்தையில் ஆயுத எழுத்து வராது. முயற்சி என்பதுதான் சரியான வார்த்தை. சிறிய "ர்" வரும் இடத்தில் ஆயுத எழுத்துக்கள் வரும் .
உதாரணம் : "வார்த்தை "
JK anna நல்ல முயற்சி உங்களின் பணி தொடரட்டும்
அருமை சகோ..நாம் இழந்ததை மீண்டும் செழிக்கவேண்டும். 🇲🇾
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
Mullmurukoo is very good for goat
Goats love it
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சகோதரா ❤️
முள்முருங்கை இயற்கையின் வரப்பிரசாதம் .. காணாமல் போனது கிடைத்த சந்தோஷம்...
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
Super...good job keep going wish you all the best.May God bless your efforts
மிக்க நன்றி 😍
தமிழ் நாட்டிலும் பெரும்பாலும் அழிந்து விட்டது. மிகுந்த தேடுதலுக்கு பிறகு நான் ஒரு மரத்தை கண்டு பிடித்து வளர்த்து வருகிறேன்
முள்..முருங்கை...வைத்து
தோசை....சுடலாம்🍥🥘❤️
நீங்க...என்ன பண்ணுவீங்க
அருமையான பதிவு
மிக்க நன்றி 😍
Good job 👍
நன்றி 😍
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
மிக்க நன்றி 😍
Beautiful nanpa
வாழ்க வளர்க
மிக்க நன்றி 😍
those days we had fence in Jaffna made of Poovarasu , mulmurukku and glisriedia and they are good food for cattle and shade for the roads. now everyone is building walls sad
தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி 😍
Enga veedula irukku itha maram🌿
Woo supper
மிக்க நன்றி 😍
இந்த முள் முருங்கை இலை மருத்துவ குணம் நிறைந்த து.இந்த இலையை அரைத்து கேழ்வரகு மாவு டன் கலந்து ரொட்டி தட்டிசமைத்துசாப்பிட்டால் இருமல்.சளி.குணமாகும். நான் அதிகம் சாப்பிட்டு உள்ளேன்.
மிக்க நன்றி 😍
This grows easily in my terrace garden at Chennai….
மாட்டெரு முள்முருங்கைக்கு சிறந்த பசளை நோயும் வராது வெற்றிலைக்கு போடும் பசளை முருங்கைக்கும் சேரும். மாடு ஆட்டிற்கு நல்ல உணவு பாலும் கறக்கும்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
சிறப்பான பதிவு அண்ணா அடிக்கடி விவசாயம் சார்ந்த பதிவுகள் போடுங்க..👍👍👍
மிக்க நன்றி ❤️
Suppar bro நல்ல. விடயம்
நன்றி 😍
Very useful veido and important topic what we lost has now found. In my childhood I know and seen this tree/plant in our garden where we lived in Colombo-15 my father planted it along with barbed wire has fence my grandma use to pluck tender leaves and mix with other green leaves and make keerai sundell I have eaten this the other importance I never knew thanks for uploading such beautiful topic and thanks for the brother who doing this cultivation, I too like to have a stem of this plant god bless you. 🙌
தங்கள் அனுபவ பகிர்விற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 😍
Congratulations 🎉 ❤🇨🇦
நன்றி 😍
வணக்கம் தம்பி முள்முருங்கையை பயிர்களின் பாதுகாப்பிற்கு வேலியாக நடலாம் குழையை ஒடித்து பசுமாட்டிற்கு போட்டால் அது பால்நிறைய தரும் மற்றும் குருத்து இலையை பறித்து மதிய உணவோடு சேர்த்து உண்பதற்கு வறைசெய்யலாம் உங்கள் முயற்சிக்கு நன்றி
வணக்கம் சகோதரா 🙏
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி😍
காக்கா பூ , கல்யாண முருங்கை என்று தமிழக த்தில் சொல்லுவோம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.கிட்டத்தட்ட அழிந்து விட்டது.
இங்கும் அழிவு நிலையில் உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரா ❤️
@@JaffnaBoysOfficial பூவரசன், வாத நாராயணன் எனப்படும் வாத சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும் வாத நிவாரணன், தேக்கு மரத்திற்கினையான சவுண்டல் எல்லாம் பார்ப்பதற் கறிதானவை ஆகிவிட்டன.
தமிழகத்தில் விதைகள் தாராளமாக கிடைக்கின்றது...௭ங்களுடைய தோட்டத்திலும் உள்ளது...
தமிழகத்தில் அதுவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இச்செடிக்கு பெயரே கல்யாண முருங்கை என்றுதான் கூறுவார்கள்
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
Very useful video. Is it possible to get a stem to start at home in the balcony garden?
Please contact him👍Mobile no - 0777279794
பச்சை அரிசியுடன் இந்த இலையை அரைத்து அடை போன்று சுட்டு சாப்பிட்டால் மிக அற்புதமாக இருக்கும். இந்த ரொட்டி எவ்வளவு நாட்பட்ட சளியை அகற்றும் வல்லமை வாய்ந்தது.... சளியை அகற்ற மிகச்சிறந்த மருந்து இது. இப்போதும் சளிக்கு நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன்
பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி ❤️
enathu siruvayathil naan vazartha aadualukku theevanamaha ithai koduthten aanal inru kaanpathatkum arithaha ullathu
உண்மை 👍
👍👍👍👍👌👌👌
Vanakam 🦚🌦🪷🌳🦢
You also need to plant fig, palmyra, dragon fruit, wood apple, agarpathi & banyan
வணக்கம் 😍
இலங்கையிலும் தமிழ்நாடு மாதிரி உருட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙂
பெண்களுக்கு அவசியம் முள் முருங்கை
தமிழ்நாட்டில் முள் முருங்கை யுள்ளது. மருத்துவ குணம் உள்ளது. ஆடு, மாடுக்கும் தீவனமாகம் பயன்படுத்தலாம்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
பனை வேல்லம் video போடுங்க
நிச்சயமாக முயற்சிக்கின்றோம் 😍
நன்றி 🙏
இந்த கல்யாண முருங்கை மார்ச்சளியை போக்கவல்லது அதாவது அரிசி மற்றும் பருப்பு வகைகள் கலந்து அடை செய்து சாப்பிடலாம்
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
கலியாண வீட்டில் எப்படி முள் முருக்க மரம் எவ்வாறு பயன்படுத்துவார்கள் தமிழ்நாட்டிலிருந்து தனசேகர்
கன்னிக்கால் என்ற பெயரில் ஈழத்தில் இம்மரம் திருமண சடங்குகளில் வைக்கப்பட்டு பின்னர் அவர்களுடைய வீட்டில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ❤️
@@JaffnaBoysOfficial அருமை
பிதுர்கடன் செய்ய உள்ள மூலிகை என்ன ஜெய குமார் முகநூல் முகவரி
காணொயில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் 👍
நன்றி 😍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல து ஒருதடிஎன்னவிலைக்குவாங்கமுடியும் plz
காணொளி இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி 😍
@@JaffnaBoysOfficial ok
👍
குறட்டலுக்கு என்ன மருந்து இருக்கிறது
ஜெயக்குமார் அண்ணா கிருமிநாசினிகளையும், சவர்க்கார கரைசல் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றார் 👍
Tamilmessag
இதனால் ஏதாவது பலன் உண்டா?
மருத்துவ குணம் உண்டு
Panja kavya is enough for controlling insects
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
KALYANA MURUNGAI
கல்யாண வீட்டில் எப்படி பயன்படுத்துவார்கள்
திருமணத்தில் கன்னிக்கால் நடுகை என்ற ஒரு சடங்கு நடைபெறும்.
@@JaffnaBoysOfficial நன்றி சார்
பசலை என்றால் என்னங்க?
உரம் 👍
முள் முருங்கு இலை பெண்களுடைய கருப்பையை வளமாக்கும் கூர்ருள்ளது அந்த தீநீர் பாவிக்ககிற போழ்து அது சந்ததி பெருக தேவையானது முள் முருக்கு
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
Tamil Nadu all dasmark drink
Tamilan drinks dasmark shop only one tamilnadu school of college Police bus stop all dasmark shop only one tamilnadu
நனறு
In Jaffna which tree u call muruku maram
சாதரண முருங்கை உணவு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது முள் முருங்கை அல்லது முள் முருக்கு என்று சொல்லப்பட்டு வருகின்றது. ❤️
@@JaffnaBoysOfficial thanks
kalyana Virucham and muruku maram are same r different??
What is use of mul muruku
முள்முருக்கு மற்றும் கல்யாண முருக்கு இரண்டிலும் இலைகளில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. முள் முருக்கு இலை உணவோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மற்றும் கால்நடை தீவனமாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
@@JaffnaBoysOfficial thank you 🙏
என்ன கேமரா யூஸ் பன்றிங்க bro
Mobile phone bro - Samsung A71
@@JaffnaBoysOfficial green clour quality eppadi varuthu enna app use panni camera yeadukiringa mobile lq
Editing time la adjust pannuran bro
@@JaffnaBoysOfficial enna app bro athu name bro vn,kinemaster,inshot,
Inshot bro
WASTE
கல்யாண முருங்கை.