தைஅமாவாசை சகலபிணி தீர்க்கும் வைத்ய வீரராகவர் Thai Amavasai Thiruvallur Vaidya Veeraragavar Vrudham
Вставка
- Опубліковано 8 лют 2025
- #thaimasam #thai #thaiamavasai #amavasai #thiruvallur #vaidyaveeraragavaperumal #veeraragavan
#தை #அமாவாசை யில்
சகலபிணி தீர்க்கும் #மருத்துவக்கடவுள் #திருவள்ளூர்
#ஸ்ரீ #வைத்யவீரராகவப்பெருமாள்
மஹிமையும் இந்த பதிகம் கேட்பவரது
பிறவிப்பிணிகள், மனக்குறைகள்,
ஜென்மாந்திர பாவங்கள் அனைத்தும்
தொலையும்.
#ஶ்ரீவீரராகவவிருத்தம்
திருவ மர்ந்துறை சீரெழில் மார்பனை
அருள்ம லர்ந்தொளிர் அங்கண் அழகனைத்
திருவெவ் வுள்கிடந் தானையெம் சிந்தையில்
மருவு மாலினை வாழ்த்தி வணங்குவாம்.
பதம் பிரித்து:
திரு அமர்ந்து உறை சீர் எழில் மார்பனை,
அருள் மலர்ந்து ஒளிர் அங்கண் அழகனை,
திரு எவ்வுள் கிடந்தானை, எம் சிந்தையில்
மருவும் மாலினை வாழ்த்தி வணங்குவாம். 1
எவ்வு யிர்க்குமி ருந்துணை யேயெனச்
செவ்வ னேதொழுஞ் சிந்தை யுடையவர்
எவ்வு டற்பிணி யெய்தினு மஃதற
எவ்வு ளீசனி ணையடி காக்குமே. **
பதம் பிரித்து:
‘எவ் உயிர்க்கும் இரும் துணையே!’ எனச்
செவ்வனே தொழும் சிந்தை உடையவர்,
எவ் உடல் பிணி எய்தினும் அஃது அற
எவ்வுள் ஈசன் இணையடி காக்குமே! 2
எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்
பண்ண மர்தமிழ்ப் பாசுர மானவன்
நண்ண ரும்பதம் நல்கிடு மெவ்வுளெம்
அண்ணல் என்னவ ழிந்திடு மல்லலே.
பதம் பிரித்து:
‘எண்ண அரும் சுவையோடு அருள் ஈந்திடும்
பண் அமர் தமிழ்ப் பாசுரம் ஆனவன்;
நண்ண அரும் பதம் நல்கிடும் எவ்வுள் எம்
அண்ணல்’ என்ன அழிந்திடும் அல்லலே. 3
‘காக்க!’ என்ற கரியின் கடுந்துயர்
போக்க வந்த பொருதிற லாழியான்
நீக்க மின்றித் திருநிறை யெவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழொளிச் செல்வனே.
பதம் பிரித்து:
‘காக்க!’ என்ற கரியின் கடும் துயர்
போக்க வந்த பொரு திறல் ஆழியான்,
நீக்கம் இன்றித் திரு நிறை எவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழ் ஒளிச் செல்வனே. 4
பேரொ ராயிரத் தானெம்பி ரான்பரன்
ஏரு டைத்திரு வெவ்வுளி றையவன்
நார ணன்பட நாகணை யானருள்
வீர ராகவன் மெய்யடி யோங்களே.
பதம் பிரித்து:
பேர் ஒர் ஆயிரத்தான், எம் பிரான், பரன்,
ஏர் உடைத் திரு எவ்வுள் இறையவன்,
நாரணன், பட நாக அணையான், அருள்
வீர ராகவன் மெய் அடியோங்களே. 5
சொற்ப தங்கள் கடந்தொளிர் சோதியைப்
பொற்பொ ருப்பினைப் பொற்புறு ரூபனை
விற்பெருந் திறல் வீரனைப் பேரெவ்வுள்
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.
பதம் பிரித்து:
சொல் பதங்கள் கடந்து ஒளிர் சோதியைப்
பொன் பொருப்பினைப் பொற்பு உறு ரூபனைக்
வில் பெரும் திறல் வீரனைப் பேரெவ்வுள்
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே. 6
என்பெ லாமுள் ளுருகவெ ழுந்திடும்
அன்பி னாலகத் தாழ்ந்தருள் பாடுவார்
துன்பெ லாம்துடைக் கும்சுடர் நேமியான்
இன்பு லாவடி வெவ்வுள் இறைவனே.
பதம் பிரித்து:
என்பு எலாம் உள் உருக எழுந்திடும்
அன்பினால் அகத்து ஆழ்ந்து அருள் பாடுவார்
துன்பு எலாம் துடைக்கும் சுடர் நேமியான்
இன்பு உலாவு வடிவு எவ்வுள் இறைவனே. 7
அஞ்சி றைப்பற வையது தாங்கிடும்
கஞ்ச வார்கழல் கைதொழு வாரவர்
நெஞ்ச மேவி நிறைந்தருள் வார்த்திடும்
மஞ்ச னாரிடம் வண்புகழ் எவ்வுளே.
பதம் பிரித்து:
அம் சிறைப் பறவை அது தாங்கிடும்
கஞ்ச வார் கழல் கை தொழுவார் அவர்
நெஞ்சம் மேவி நிறைந்து அருள் வார்த்திடும்
மஞ்சனார் இடம் வண் புகழ் எவ்வுளே. 8
தடவ ரைதனைத் தாங்கிநின் றாமையாய்க்
கடல்க டைந்தக ளைப்புக்கொ லோதிரு
இடமெ னக்கொண்டெவ் வுள்கிடந் தெம்பிரான்
படவ ரவ்வணைப் பையத் துயின்றதே!
பதம் பிரித்து:
தட வரை தனைத் தாங்கி நின்று ஆமையாய்க்
கடல் கடைந்த களைப்புக் கொலோ திரு
இடம் எனக் கொண்டு எவ்வுள் கிடந்து எம்பிரான்
பட அரவு அணைப் பையத் துயின்றதே! 9
இரவு நண்பகல் எப்பொழு தும்முன்றன்
குரைக ழற்புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல்லணைப் பள்ளிகொண் டாயருள்
பரவு மென்மனப் பள்ளியெந் நாள்கொலோ!
பதம் பிரித்து:
இரவும் நண்பகல் எப்பொழுதும் உன்றன்
குரை கழல் புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல் அணைப் பள்ளிகொண்டாய்! அருள்
பரவும் என் மனப் பள்ளி எந்நாள் கொலோ! 10
உங்கள் சேவை தொடரட்டும் அம்மா🙏
🙏
ஸ்ரீ வீரராகவர் திருவடிகள் மற்றும்
ஸ்ரீ கனகவல்லி தாயார் திருவடிகளே
சரணம் சரணம் 🙏🏻🪷🙏🏻
பதிவுக்கு நன்றி
சகோதரி 😇
🙏
ஓம் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் நமஹா🙏🙏🙏🙏🙏 🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯..............................................
தைஅமாவாசையில்இந்தபாசுரம்சொல்லுங்கள் நோற்றநோன்பிலேன்நுண்ணறிவிலேன்ஆகிலும்இனிஉன்னைவிட்டொன்றும்ஆற்றற்கின்றிலேன்அரவின்அணைஅம்மானேசேற்றுத்தாமரைசெந்நெல்ஊடுமலர்சிரீவரமங்கலநகர்வீற்றிருந்தயெந்தாய்உனக்குமிகைஅல்லேன்அங்கே🙏
அம்மா உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்
🙏🙏
நல்ல பதிவு
இறைவன் அருள் உடன் நீடுவாழி
🙏🙏Namaskaram
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ❤❤❤❤❤❤❤
அருமை அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
🙏🙏
Om Namo Narayana 🙏❤️🙏
Wow wow wow thank you so much and I got dharshan today morning to you tube video
wow
🙏🌹🌹
ஓம் நமோ நாராயணா யா நமஹா
Nandrigal Kodi Sagothari ❤
🙏🙏
Today ur speech clarity more sound coming more powerful amma. God is with u ❤❤❤❤ may i praygod bless ur family more 🙏
thank you so much Namaskaram
Thankyou🎉
Welcome 😊
Om sri vira Raghava perumal Thiruvadigaley saranam kanaka valli Thayar potri potri Namaskaram Amma vazgha valamudan om Namo Narayana
🙏🙏
OmGovinthaPotri🙏🙏🙏🌺💐🌹🍓🍇🥭🍊🍎⭐🌟⭐🌜🌜🌜🌺🙏
Aum Sri maha periyava saranam 🙏
Thank you❤❤❤
Welcome!!
அதிஅற்புதமானபதிவுதாயேகோடாணகோடிநன்றிகள்தாயே ஓம்ஸ்ரீகருடாழ்வார்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீவீரராகவப்பெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி 🌿🌺🌹🌻🌸🌼🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏
,🙏🙏🙏🙏🙏🙏
Om Namo Narayana 🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏