Arutperum Jothi Agaval (22/22)

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2011
  • அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
    இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
    துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
    லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
    மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
    இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
    இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
    நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
    கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
    உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
    தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
    ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
    ஆகம முடிமே லருளொளி விளங்கிட
    வேகம தறவே விளங்கொளி விளக்கே
    ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
    காரியம் விளக்குமோர் காரண விளக்கே
    தண்ணிய வமுதே தந்தென துளத்தே
    புண்ணியம் பலித்த பூரண மதியே
    உய்தர வமுத முதவியென் னுளத்தே
    செய்தவம் பலித்த திருவளர் மதியே
    பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
    நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
    பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
    மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
    உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
    வயங்கிய கருணை மழைபொழி மழையே
    என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
    மன்னிய கருணை மழைபொழி மழையே
    உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
    வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
    நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
    மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
    தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
    வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
    வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
    செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
    திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
    வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
    அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ
    உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
    முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
    என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
    ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
    ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
    உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
    வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
    நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
    வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
    வேதமு மாகம விரிவும் பரம்பர
    நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

КОМЕНТАРІ • 8

  • @thiru1501
    @thiru1501 3 роки тому +1

    appa.arul arul arul jothi saranam🙏🙏🙏

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  12 років тому +3

    வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
    ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
    என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
    அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
    உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
    அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
    சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
    துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
    சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
    அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
    இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
    ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
    சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  12 років тому +2

    போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
    உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
    விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
    சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
    உத்தம னாகுக வோங்குக வென்றனை
    போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  12 років тому +2

    அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
    அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
    வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
    அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
    உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
    இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
    போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
    மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
    யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
    போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
    சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
    சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  12 років тому +2

    எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
    நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
    வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
    நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
    இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு
    பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
    வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
    பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
    சமரச சத்தியச் சபையி னடம்புரி
    சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
    சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
    அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
    மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
    அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

  • @saraladevi4050
    @saraladevi4050 5 років тому +3

    👍

  • @user-ft6yn2gt4e
    @user-ft6yn2gt4e 7 років тому +3

    அருமையான பாடல்

  • @priyasagithevaraj4177
    @priyasagithevaraj4177 7 років тому +3

    aathma suththam nammul kaanum paadal