tpm tamil song 494 Aayiram naavugal poadhumo puviyil | Samuel sam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • சரணங்கள்‌
    1. ஆயிரம்‌ நாவுகள்‌ போதுமோ புவியில்‌
    ஆத்தும நேசரே போற்றிட உம்மையே
    முடிவேயில்லா உம்‌ ஆண்டுகள்‌ போலவே
    இணையில்லா கிருபை நிலைத்திடுமென்னிலே
    பல்லவி
    “கைவிடேன்‌ உன்னை நான்‌” என்றுரைத்தவரே
    கைத்தலம்‌ வரைந்தீரன்றோ
    அசைந்திடா சீயோன்‌ பர்வதம்‌ போலவே
    இசைந்தும்மில்‌ நிலைத்திருப்பேன்‌
    2. பாருருவாகுமுன்‌ பார்த்தீரே பரனே
    பாரினில்‌ நீரல்லால்‌ வேறாருமில்லையே
    பரிசுத்த அழைப்பால்‌ அழைத்தீரே என்னையும்‌
    பரிசுத்தருடன்‌ நற்சுதந்திரம்‌ பெறவே -- கைவிடேன்‌
    3. பகர்ந்தீரென்‌ உள்ளத்தில்‌ உன்னத பெலனை
    தகர்த்திட தீயோனின்‌ வல்லமை யாவுமே
    அகந்தனில்‌ பொழிந்தீர்‌ அளவில்லா அன்பினை
    இகந்தனில்‌ தொடர உம்‌ திருவடிகள்‌ - கைவிடேன்‌
    4. நிந்தையாம்‌ ஆழியும்‌ அமிழ்த்திய வேளையே
    சோதனையாம்‌ தீயில்‌ வெந்தழிந்துப்‌ போகா
    பாய்ந்துந்தன்‌ சிறகின்‌ மீதினில்‌ தாங்கியே
    பட்சமாய்‌ என்னை உம்‌ மந்தையில்‌ காத்தீரே -- கைவிடேன்

    5. சீர்மிகு சுத்தரைச்‌ சேர்த்திட வானிலே
    சீயோனைப்‌ பணிது சீக்கிரம்‌ வருவீர்‌
    சீர்பொருந்தி உந்தன்‌ சந்நிதி நின்றிட
    ஸ்ரீயேசு ராஜனே தயை கூருமென்னிலே --- கைவிடேன்‌

КОМЕНТАРІ •