Composition of chinnamanur Dr.A.Vijay karthikeyan as Guru Samarpanam
Вставка
- Опубліковано 28 чер 2024
- 🙏குரு பாதம் துணை🙏
எங்களது மகாகுரு தருமபுரத்தார் அவர்களைப் பணியும் முகமாக குரு திருவருளால் அடியேன் சிற்றறிவில் தோன்றிய எளிய குரு துதிக் கீர்த்தனம்.
குருநாதரவர்களின் அவதார மற்றும் முக்தி தினத்தில் (இரண்டும் ஒரே நாள் என்பது சிறப்பு 30.06.1933 - 30.06.1995) அவர்களின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்🙏
தருமபுரம் அவதார குருநாதா....
ராகம் : ரஞ்சனி
தாளம் : கண்டசாபு
பல்லவி
தருமபுரம் அவதார குருநாதா.... நின்
திருவடி சரணம் அபிராமி சுந்தர சாரத குமார கோவிந்த // (த)
அனுபல்லவி
விரிதோகை மயில் மீது அமர்ந்தருள் இறைவன் மனம் மகிழ இசைவண்ண மாலைதனைத் தந்தாயே // (சிட்டைசுரம்)
சரணம்
திரு உள்ளம் இரங்கியே நாகசுர இசைதனை பரிவோடு போதித்த
ஞான குருவே //
அனுசரணம்
க்ரஹபேத நந்தினியும் லயபேத சிந்தனையும் குருதாசன் அறிந்திடவே பரிந்தருள் புரிவாயே // (சிட்டைசுரம்)
கீர்த்தனை ஆக்கம் : அடியேன் சின்னமனூர் அ.விஜய் கார்த்திகேயன்
இப்பாடலுக்கும் ஸ்வரஸ்தானங்கள் பதிவிட்டால் மிகவும் கோடிநமஸ்காரத்துடன்இருக்கும்❤🎉🎉❤
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் அண்ணா பஜகோவிந்தம் சுரம் போடுங்க அண்ணா. ரொம்ப பிடிக்கும் அண்ணா