Sanmarga Vendugol

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2012
  • ( 4079 )
    அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
    எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
    செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
    தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
    ( 4080 )
    ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
    பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
    புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
    எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
    இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
    நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
    நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே

КОМЕНТАРІ • 3