ஐயனே பொன் சுந்தரலிங்கனாரே.. உங்களைப் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.. இன்னும் பல தேவார திருவாசக திருமுறைகளை பாடி இந்த தமிழுக்கு.. சைவத்துக்கு.. பிறவி பணி செய்யுங்கள்
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே 🙏🙏🙏
இசை தமிழால் தேன் அமுதம் பருகி எனக்குள்ளே நீயும் மாகி உனக்குள் நானும் மாகி காலத்தின் சுழற்சி குள்ளே நீயே அரசன் வியக்கும் அற்புத ஈசனை பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி ஓம்
கொண்டாடப்படவேண்டிய ஈழத்து இசை மேதை. கல்லையும் உருக்கும் குரலில், திருவாசகத்தின் பொருள் விளங்கப்பாடுகையில் மெய் சிலிர்க்கிறது. அவர் வாழுங்காலத்தில் அவர் புகழை பன்னாடும் சென்றடைய இவ் இசை இழையை பகிர்ந்திடுவீர். “என் இனமே என் சனமே அவரை உனக்குத் தெரிகிறதா?…
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.... எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நாம்...இப்பாடலை கேட்க...என்ன தவம் செய்தேனோ... உன்னை ஒரு நொடி கூட மறவாமல் இருக்க வரம் கொடு இறைவா....நம சிவய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
ஐயா . வணங்குகிறோம் நால்வர் நற்றமிழ் மன்றம் காஞ்சிபுரம் ஊரும் உயிரும் உருகுதே! காஞ்சிக்கு எப்போ வருவீர்கள்? தொடர்புக்கு செல்: 9789251194 காஞ்சிபுரம் உங்கள் செல் அனுப்ப வேண்டுகிறேன் நெகிழும் தமிழன் சிவ வெற்றிச்செல்வன் கு.இராமலிங்கம் செயலர்-நால்வர் நற்றமிழ் மன்றம் . காஞ்சிபுரம் திருச்சிற்றம்பலம் திருத்தம்: ஊனும் உயிரும் உருகுதே உங்கள் செல் நெம்பர் அனுப்ப வேண்டும்
திருவாசகம் என்னும் தேன், என்று சொல்லுவார்கள், உண்மைதான். ஆனால் உங்களுடைய இனிமையான குரலைக் கெட்டு என் இதயம் மிகவும் உருகுவதை உணர்ந்தேன். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாத்தவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏🙏
சிவ! சிவ! நால்வரின் குரலை கேட்டதில்லை தங்கள் இனிய குரல் மூலம் அவர்களின் குரலை கேட்பது போல் உள்ளது ஐயா! பெரும் பாக்கியம் ஐயா தங்கள் குரலை கேட்பது! சிவ! சிவ!
நான் தினமும் கேட்கின்றேன். இப்பாடல் கேட்கும் போது நம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் பெருமானை தரிசித்த உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. நன்றி ஐயா. சிவ சிவ. 🙏🙏🙏
ஈழத்தின் புகழ்பூத்த சங்கீத கலா வித்தகரும் இன்னிசை வேந்தனுமாகிய பொன் சுந்தரலிங்கம் ஐயா. ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற தமிழீழ விடுதலை கானங்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய “என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா?” பாடல் பல இளைஞர்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்ததெனில் மிகையாகாது! ஐயா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் இசைத்துறைக்கு தொண்டாற்றவேண்டும்.
No words to express anandham to hear this. Thiru Pon Sundarlingam deserve s all Hearing with closed eyes would heal all illnesses and GOD with you We lost pure Tamil like Thiruvasaham to hear in our Siva temples and Azhvar Divapravandam in Vishnu temples in Tamilnadu more than sixty years It is shame that we do not have good tamil teachers and scholars We have been losing greatness of Tamil language
Ayya vanakkam many many crore times because of your talency in singing sivapuranam by Ragam mohanam is very very nicely arraiving the Lord Siva's foot Raga alabanai and pirgas are taking me to a wonderful new Loga Thank GOD For giving such a voice with LAYAM Vanakkam By T Kanthimathinathan Pharmacist (vellore) at Palayamkottai Tirunelveli Daily I am hearig This twice
Melting ,devotional,musical,sweet sweet rendering in calming voice .There cannot be any other song far reaching than this soul filling devotion.God is also listening this devotional song singer and so where his blessings are there .Omni present .Omni potent.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக! நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும். வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே. நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்? வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே. கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம். சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே. கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன் ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே. நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை. யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே . இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya
அய்யா, நெக்குருகி நிற்கின்றேன். இறையருள் தங்கள் மீது பூரணமாய் பொங்கிப் பொலிவதை நன்கு உணர்கின்றேன். பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து இத்திருப்பணியை செய்து அருளுங்கள் .
Iyya keep singing on lord shiva and spread the value of thiruvasagam to this world with your mesmerising voice and devotion. May god bless you with long life and good health .. Your voice is of course gods creation obviously proving His greatness 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ohm Namashivaya !! What a golden voice and on hearing this I really feel like that I am standing in front of Lord Shiva at UttarakosaMangai Such a beautiful rendition Om NamaShivaya Srilanka is blessed to have such a devotee of Lord Shiva and Entire Tamil Bakthi world is proud of your Golden voice and your rendition is touching our hearts and sould Ohm Namashivaya Ohm Namashivaya
வணக்கம் 🙏, you are absolutely right. To tell you frankly i also felt the same. Closing my eyes, i could feel HIS presence. With such a mesmerizing voice, you are transported to another dimension where you can feel Siva perumaan everywhere. Coincidentally my guru happens to be a SriLankan born person, being in Mauritius since his childhood, he is now 86. Through him i have learnt about saivam, saiva samayam. I perform all my poosais (prayers) in tamil molhi. I made him listen to this recording and immediately he told me that this person is from Sri Lanka. நன்றி, வணக்கம். 🙏🙏🙏🙏🙏
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே, கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தன் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே”
திருவாசகமே தேன் கலந்த தமிழ் தான். ஓம் நமசிவாய வாழ்க.
பெருமானின் பாடலைப் பாடுவதற்காகவே படைக்கப்பட்ட தேன் குழைத்த குரல் கொண்டவர்.வாழ்க .வாழ்க.
ஐயா உங்கள் பாதம்
பனிந்துவணங்குறேன்
இறைவன் உங்களை
நேரடியாகபடைத்தானோ
இதயத்தை வருடும்
குரல்.வாழ்த்துக்கள்
ஐயனே பொன் சுந்தரலிங்கனாரே.. உங்களைப் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.. இன்னும் பல தேவார திருவாசக திருமுறைகளை பாடி இந்த தமிழுக்கு.. சைவத்துக்கு.. பிறவி பணி செய்யுங்கள்
❤
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத குரல். சிவனே போற்றி
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே
🙏🙏🙏
இசை தமிழால் தேன் அமுதம் பருகி
எனக்குள்ளே நீயும் மாகி
உனக்குள் நானும் மாகி
காலத்தின் சுழற்சி குள்ளே நீயே அரசன்
வியக்கும் அற்புத ஈசனை
பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி
ஓம்
😅😮😢😂
😮😢
😂😢
😅😮😢
ஆஹா! ஆஹா! அற்புதம் . தெய்வீக குரலில் விழிநீர் மல்கி மெய்புளகம் அரும்புகிறது.🙏🙏🙏🙏👏👏👏👏👏🪔🪔🪔🎼
கொண்டாடப்படவேண்டிய ஈழத்து இசை மேதை. கல்லையும் உருக்கும் குரலில், திருவாசகத்தின் பொருள் விளங்கப்பாடுகையில் மெய் சிலிர்க்கிறது. அவர் வாழுங்காலத்தில் அவர் புகழை பன்னாடும் சென்றடைய இவ் இசை இழையை பகிர்ந்திடுவீர். “என் இனமே என் சனமே அவரை உனக்குத் தெரிகிறதா?…
Very true … no oduvars are much left in tamilnadu 😭
உண்மை தான் தெரிகிறது அய்யா.
ஆயிரம் முறை சொன்னாலும், அவனருள் இன்றி எவருக்கும் புரியாது.
மாயை மறைக்கிறது, அங்கு மதியும் கலங்கி நிற்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏
@@SIVAKUMAR-FARMS007 ஓ௨
உண்மை தான்
🙏🙏🙏🙏
சிவாய நம ஓம்அருமையான பாடல்...தெய்வீகம்
ஐயா , உங்களுடைய தெய்வீக குரலுக்கு தலை
வணங்கி நிற்கின்றேன்
ஈழமக்கள் சார்பாக பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
பாடல் பாடும் விதம் கண்ணீர் வருவது நிச்சயம். கண் மூடி பாடல்கள் கேட்பின் சிவனை யே நேரில் காணலாம்
திங்கட்கிழமை சிவராத்திரி. தாங்கள் மனமுருகி திருவாசகத்தை தெய்வமனம் கமழ பாடினீர்கள். நன்றி 🙏🙏🙏. அந்த பரமேஸ்வரன் எல்லோரையும் காக்கட்டும்🙏
0:02
உள்ளத்தை ஐயன்சிவனிடம் ஐக்கிய மாக்கும்தேன்குரல் சிவமே போற்றி
நான் ஒவ்வொரு இரவும், இந்த இனிய குரலை, இசை ஒலியை ,
கேட்ட பின்பே உறங்கச் செல்கின்றேன்! இனிய குரல் மயக்கும் இசை! !
தேன்தமிழ் திருவாசகம் திக்கெட்டும் ஒலிக்க தங்கள் தெவிட்டாத குரல் நோயின்றி வாழவேண்டும் பன்நெடுங்காலம் ஐய்யா❤❤
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.... எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நாம்...இப்பாடலை கேட்க...என்ன தவம் செய்தேனோ... உன்னை ஒரு நொடி கூட மறவாமல் இருக்க வரம் கொடு இறைவா....நம சிவய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகள் இறைவன் அருள் புரிவார்.
😨😰😤😣😩
இறைவா என்ன அருமை என்னுள்ளே இறங்கி இதயத்தை இன்பமயமாக்கி விட்டாய். திருவாசகம் தெய்வவாசகம் .
Unmai
தெவிட்டாத தெள்ளமுது, கேட்கும் போது உள்ளம் உருகுகிறது , ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏
🙏🌹திருவாசகம்🙏🌹 எத்தனை முறை 🙏🌹கேட்டாலும் ஐயாவின்🙏🌹 குரல்🙏🌹🙏 சலிக்காது🙏🌹
இனிமை.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
ஐயாவின் குரலில் ஐயனை கானுகின்றேன் 🙏
🙏🙏🙏
சிவன் பாட்டு நன்றாக இருக்கிறது சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
இறைவனே! உன் மெய்யன்பர் முந்திவந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.
கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே.
கடையேனைப் பெருங்கருணையால், வலிய வந்தடைந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடி யேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
/s பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
/s கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
/s புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.
அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
/s மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
/s பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
/s அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்
வான்கெட்டு மாருதம்
மாய்ந்தழல் நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச்
சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட்
டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
ஆகாயம் முதலாகிய பஞ்சபூதங்களும் அழிந்த காலத்தும் தான் அழியாதிருப்பவனாகிய சிவபெருமானைக் குறித்து, உடல், உயிர், உணர்வு என்பவை அழிந்து நான் என்பதும் அழிந்த விதத்தைப் பாடி தெள்ளேணம் கொட்டுவோம்.
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
தலைவனே! பழைய அடியார்கள் சிரிப்பார்கள்; மகிழ்வார்கள்; இன்புறுவார்கள்; கூடிக்கூடி உனது திருநாமத்தைக் கூறுவார்கள்; சிலர் கேட்பார்கள்; அதனைப் பாராட்டுவார்கள்; தனித்தனியே இருந்து உனது திருப்பெயரை மனத்திலே ஊன்று வார்கள்; பொற்சபையின் கண்ணே நடிக்கின்ற இறைவா என்று துதிப் பார்கள். அவர்கள் எதிரிலே நாய் போன்றவனாகிய யான் இகழ்ச்சி யுடையவனாய் இருப்பேனோ? இனியேனும் அருள் புரிவாயாக.
தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே.
எனது சித்தத்தையே, திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எம் தலைவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! எம் தந்தையே! ஈசனே! எனது உடலை இடமாகக் கொண்டவனே! சங்கரனே! எனக்கு நீ கொடுத்தது உன்னை; அதற்கு ஈடாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய்; யான் முடிவு இல்லாத பேரின்பத்தை அடைந்தேன். ஆயினும் நீ என்பால் பெற்றது என்ன? ஒன்றும் இல்லை. இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவரில் திறமையுடையவர் யார்? இவ்வுதவிக்கு நான் ஒரு கைம்மாறும் செய்ய முடியாதவனாயினேன்.
ஐயா
. வணங்குகிறோம்
நால்வர் நற்றமிழ் மன்றம் காஞ்சிபுரம்
ஊரும் உயிரும் உருகுதே!
காஞ்சிக்கு எப்போ வருவீர்கள்?
தொடர்புக்கு
செல்: 9789251194 காஞ்சிபுரம்
உங்கள் செல் அனுப்ப வேண்டுகிறேன்
நெகிழும் தமிழன்
சிவ வெற்றிச்செல்வன்
கு.இராமலிங்கம்
செயலர்-நால்வர் நற்றமிழ் மன்றம்
. காஞ்சிபுரம்
திருச்சிற்றம்பலம்
திருத்தம்:
ஊனும் உயிரும் உருகுதே
உங்கள் செல் நெம்பர் அனுப்ப
வேண்டும்
அருமையான பாடல்
குரல் வளம் அருமை.எல்லாம் சிவமயம். முக்கனிகளின்சாறுபருகியசுவை.அய்யா வின்பாடல்கள்ஆடல்வல்லான்அருளோடுபாடியமைசிறப்பு.அருமைஅருமைஅருமை
🤟🤞✌🤙👈🖖
திருவாசகம் என்னும் தேன், என்று சொல்லுவார்கள், உண்மைதான். ஆனால் உங்களுடைய இனிமையான குரலைக் கெட்டு என் இதயம் மிகவும் உருகுவதை உணர்ந்தேன். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாத்தவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏🙏
சிவ! சிவ!
நால்வரின் குரலை கேட்டதில்லை தங்கள் இனிய குரல் மூலம் அவர்களின் குரலை கேட்பது போல் உள்ளது ஐயா!
பெரும் பாக்கியம் ஐயா தங்கள் குரலை கேட்பது!
சிவ! சிவ!
உங்கள் பாடல்களை கேட்கும் போது கண்ணீர் பெருகி வருகிறது.
உள்ளம் உருக பாடும் ஐயா! தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். ஐயா! பாராட்டி வாழ்த்துகிறேன்.
அருமை ஈழத்தின் சைவ ஒலி. அருமை . இறையொன்றிய இன்னிசை. வாழிய பல்லாண்டு.
சிவனே சிவனே.
என்னவொரு மனமுருகி தேனில் கு ழைத்த கணீர் குரலில் மோகன ராகத்தில் திருவாசகத்தை நமக்கு பகிர்கிறார்! 🙏🙏🙏
அருமையான குரல்!மணிவாசகரின் தமிழ், ஈசனை அவர் மனமுருகி பாடியது நெஞ்சம் நெகிழ வைக்கிறது!
யானேபொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே சிவமே போற்றி போற்றி. உள்ளத்தை உருக்கும் பாடல் தேன் குரல்
I am Really Blessed to hear this Soulful Voice .
Om Namashivaya
Shivane Pottrie.
நான் தினமும் கேட்கின்றேன். இப்பாடல் கேட்கும் போது நம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் பெருமானை தரிசித்த உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. நன்றி ஐயா. சிவ சிவ. 🙏🙏🙏
அய்யா வணக்கம் 🙏 அருமையான குரல் உள்ளம் உருக வைக்கும் குரல் சிவபெருமான் கொடுத்த வரம்.
என் உள்ளம் உயிர் உடல் எல்லாம். திருவாசத்திள் உள்ளது
@@balasubramaniyan78 ஓ ஷங்கர் தஞஹழஷக்ஷ
உங்கள் இந்த குரல் அப்படியே இயற்கை யோடு ஒன்றி உள்ளது..
சிவாயநம
ஐயா உங்கள் தெய்வீக குரல் நெஞ்சை உருக்கிறது.
வாழ்க பல்லாண்டுகள்
ஈழத்தின் புகழ்பூத்த சங்கீத கலா வித்தகரும் இன்னிசை வேந்தனுமாகிய பொன் சுந்தரலிங்கம் ஐயா. ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற தமிழீழ விடுதலை கானங்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய “என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா?” பாடல் பல இளைஞர்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்ததெனில் மிகையாகாது! ஐயா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் இசைத்துறைக்கு தொண்டாற்றவேண்டும்.
ஓம் நமசிவய. அருமையான குரல் அழகான திருவாசகம். அருமையிலும் அருமை ♥️♥️♥️
மிகவும் அறுமை.. தேனைவிட இனிமையானது திருவாசகம் , அதை உங்கள் குரலில் கேட்பது மிகவும் அறுமை....நன்றி ஐயா.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
நீங்கள்பாடிய பாடலை
திருபொருந்துறையுரில்
அமர்ந்து கோட்டால் அருமை
உம் குரலுக்கு யாம் அடிமையப்பா
மனத்தை உருகல் செய்யும் பக்திக் குரல்.
சிவன் அருள் பெற்று வாழ்க.
நன்றி ஐயா.
ஈசனை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம்
No words to express anandham to hear this. Thiru Pon Sundarlingam deserve s all Hearing with closed eyes would heal all illnesses and GOD with you We lost pure Tamil like Thiruvasaham to hear in our Siva temples and Azhvar Divapravandam in Vishnu temples in Tamilnadu more than sixty years It is shame that we do not have good tamil teachers and scholars We have been losing greatness of Tamil language
One will shed tears upon your voice & ability to bring Lord Shiva into our soul. Ooh God what a Divinity. Om Nama Shivaya 🙏
Eternal voice really heart touching and soul melting song
ஈழத்து இசை மேதை 🙏
ஓம் நமசிவாய சிவசிவ சங்கரா ஹர ஹர மகாதேவா
Ayya vanakkam many many crore times because of your talency in singing sivapuranam by Ragam mohanam is very very nicely arraiving the Lord Siva's foot Raga alabanai and pirgas are taking me to a wonderful new Loga Thank GOD For giving such a voice with LAYAM Vanakkam By T Kanthimathinathan Pharmacist (vellore) at Palayamkottai Tirunelveli Daily I am hearig This twice
Melting ,devotional,musical,sweet sweet rendering in calming voice .There cannot be any other song far reaching than this soul filling devotion.God is also listening this devotional song singer and so where his blessings are there .Omni present .Omni potent.
என்உள்ளம்உருகுதய்யா.நன்றிஐயா
Voice of God.... Love and graceful and mercy....
சிறப்பான மணிவாசகம். போற்றி ஓம் நமச்சிவாய. 💐💐💐🙏🙏🙏
சி. அப்பா உங்கள் தெய்வீக குரலுக்கு நான் அடிமை
ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் அமுதம்.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே
எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே
நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய
வெள்ளத்தே.
நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே.
கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.
சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன்
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.
நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை.
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே .
இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.
Thankyou
அருமையான பதிவு 🙏🙏🙏 தென்னாட்டு சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
🙏thank you so much
Thanks
பெருமானே எங்கள் ஊனை உடலை இதயத்தை உருக்குகின்றீர் ஐயனே,என்னே புண்ணியம் செய்தோம் இந்த இனிய குரலில் பெருமானை மனதில் புகுவிக்கும் வித்தையை அறிகிலேனே.
பல்லாண்டு பல்லாண்டு இத்தொடர் இசை பல்லோரை இடையறாது சென்றடைய பெருமானை இறைஞ்சுகின்றோம்.
அன்பரசன்,பெங்களூர்
இளம் கலைஞர் மன்றம் நல்லூர் ஐயா உங்களுக்கு நினைவிருக்கிறதா
உங்கள் பெருமை
போற்றும்
எளியவன்
திருவாசகம் எனும தேன்.என் பிறவி நெகிழ்கிறதே உள்ளு தொறும் உன்னை நமசிவாயவே.
Simply blend us into bhakthi field thanks for sharing
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya
அய்யா, நெக்குருகி நிற்கின்றேன். இறையருள் தங்கள் மீது பூரணமாய் பொங்கிப் பொலிவதை நன்கு உணர்கின்றேன். பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து இத்திருப்பணியை செய்து அருளுங்கள் .
Nice voice
Om Namah Shivaya Vaazhga...♥️💐🙏
திருவாசகத்துக்குருகாதார் யாருமில்லை என்பார்கள். எத்தனையோமுறை திருவாசகம்
பலகுரலில் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இக்குரல்தான் என்னை உருக்கி கண்ணீராக கொட்டவைத்தது
மிகவும் அருமையாக உள்ளது
யாழைப் பழித்த குரல் இறைவன் அளித்த வரம் !
Iyya keep singing on lord shiva and spread the value of thiruvasagam to this world with your mesmerising voice and devotion. May god bless you with long life and good health .. Your voice is of course gods creation obviously proving His greatness 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ohm Namashivaya !! What a golden voice and on hearing this I really feel like that I am standing in front of Lord Shiva at UttarakosaMangai Such a beautiful rendition Om NamaShivaya Srilanka is blessed to have such a devotee of Lord Shiva and Entire Tamil Bakthi world is proud of your Golden voice and your rendition is touching our hearts and sould Ohm Namashivaya Ohm Namashivaya
Very excellent .
Your rendition is divine,excellent and heart touching.
வணக்கம் 🙏, you are absolutely right. To tell you frankly i also felt the same. Closing my eyes, i could feel HIS presence. With such a mesmerizing voice, you are transported to another dimension where you can feel Siva perumaan everywhere. Coincidentally my guru happens to be a SriLankan born person, being in Mauritius since his childhood, he is now 86. Through him i have learnt about saivam, saiva samayam. I perform all my poosais (prayers) in tamil molhi. I made him listen to this recording and immediately he told me that this person is from Sri Lanka. நன்றி, வணக்கம். 🙏🙏🙏🙏🙏
சிவாய நம
உள்ளம் உருகுதையா உமது தெய்வீக குறள் கேட்டு.
திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி
Superb devotional lyric and extraordinary voice verithanam veralevel
அய்யா நமஸ்காரம். உங்கள் குரலில் கேட்க வேண்டிய பதிகம்.
Very devotional heart felt song
திருச்சிற்றம்பலம்🙏
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே,
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தன் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே”
ஈழத்து மாணிக்கவாசகர் வாழ்க வளமுடன் 😊
குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையான பதிவு கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. நன்றி.
❤❤❤காந்த குரலோன் அடிபணிவோம்
பக்தியை வரவைக்கும்.குரல்.இலங்கையில் நேரில் வானொலியில் கேட்டு.எவளவு காலம்
Devine voice.this Maya world.thiruvasakam ennum then.siva siva
சிவாயநம
Shivam devotional extraordinary and superb veralevel
கேட்கின்றபோது கண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகின்றது.
மெய்சிலிக்குது ஜய்யா உங்கங் குறள்
குறள் அல்ல குரல்
Very pleasant devotional song.
Thiruvaasagathai thangalin kuralil kaetpathu oru periya devaamirthamnga Ayya. Vanankuhiren. Ohm Namashivaya.
இனிய குரல்
ஆஹா அருமை அருமை
ஓம் நம சிவ ய 🙏🙏🙏🙏
Thiruchitrambalam
Om namashivaya
மனதை விட்டு அகலாத தேன் குரலில்
சிவ சிவ🙏🏻🙏🏻🙏🏻
இறைவனின் கொடை.சிவ சிவ.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
Arumai Ayya. Sivaya nama
OMM NAMASHIVAAYAM 🧚♂️🎼🎶🦚🐂🎱🎱🎱
விசுத்தி திறந்த தெய்வீகம்
அருமை அய்யா.