Arutperum Jothi Agaval (19/22)

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
    பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
    பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
    பண்டமுங் காட்டிய பராபர மணியே
    நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
    அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
    விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
    கண்பெற நடத்துங் ககனமா மணியே
    பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
    சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
    அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
    கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
    சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
    விராவியுள் விளங்கும் வித்தக மணியே
    மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
    தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
    தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
    வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
    நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
    சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
    வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
    நான்பெற வளித்த நாதமந் திரமே
    கற்பம் பலபல கழியினு மழியாப்
    பொற்புற வளித்த புனிதமந் திரமே
    அகரமு முகரமு மழியாச் சிகரமும்
    வகரமு மாகிய வாய்மைமந் திரமே
    ஐந்தென வெட்டென வாறென நான்கென
    முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
    வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
    ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
    உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
    மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
    சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
    தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
    இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
    சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
    மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
    கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
    நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
    உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
    என்றே யென்னினு மிளமையோ டிருக்க
    நன்றே தருமொரு ஞானமா மருந்தே
    மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
    நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
    சிற்சபை நடுவே திருநடம் புரியும்
    அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
    இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
    தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
    மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
    ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்

КОМЕНТАРІ • 2

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  13 років тому +1

    காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
    ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
    கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்
    செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
    உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
    வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
    புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
    வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
    மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
    இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
    எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையாதடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
    தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

  • @vinodrecreatorvideos
    @vinodrecreatorvideos  13 років тому +1

    எண்ணிய தோறு மியற்றுக வென்றனை
    யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
    நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
    போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
    எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
    பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே
    விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
    புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
    நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
    பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
    எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
    முழுவகை காட்டி முயங்கிய பொன்னே