மனதை உருக்கும் பாடல் | பித்தா | வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam | vadhavoradigal | solar sai
Вставка
- Опубліковано 20 вер 2020
- பித்தா என் பிஞ்ஞகனே... வாதவூரடிகள் ஐயா அவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தவமிருந்து இயற்றிய சிவலோகப்பாமாலை. இசை அன்பகம் பிரவீஷ் ஆனந்த், பாடியவர் சொற்றமிழ்ச்செல்வர் சோலார் சாயி அவர்கள்.
தனிமையில் கேட்டால் தன்னிலை உணர்த்தும் வாதவூரடிகளின் ஆழமான வரிகளும் அன்பகத்தின் தெய்வீகமான இசையில் சொற்றமிழ்ச்செல்வரின் உருக்கமான குரலில் அமைந்த ஓர் உன்னத படைப்பு...
Subscribe- / சிவலோகம்சிவமயம் "
"சோறு " நித்திய அன்னதான சேவை SORU - Daily food service (Annadhaanam)
click: • #சோறு நித்திய அன்னதான ...
To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank : 50200041181745
Branch cmbt , chinmaya nagar
IFSC code: HDFC0001072
#அன்பே சிவம்
#அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிப்பிணி அறுத்திட வாராய்
முத்தா என் மழுமுதலே
முக்திகணி அளித்திட வாராய்
சித்தா என் சிதம்பரனே
சித்தத்துள் இறங்கிட வாராய்
அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
===
எத்தனை கருக்குழியில் விழுந்து
எத்தனை முலைமேடு கடந்து;
எத்தனை கருக்குழியில் விழுந்து
எத்தனை முலைமேடு கடந்து
எத்தனை மலமாயையில் உழன்று
எத்தனை பிறவி எத்தனை பிறவி ஐயா
ஐயா ஐயா ஐயா ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
===
தாயின் பாசத்தில் வளர்ந்து
தந்தையின் நேசத்தில் சிறந்து
தொடர்ந்த உறவுகளில் கலந்து...
தொடர்ந்த உறவுகளில் கலந்து
அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா
அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
என் அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
===
காணும் கன்னியரை கவர்ந்து
கவரும் காதலரை புணர்ந்து
காணும் கன்னியரை கவர்ந்து
கவரும் காதலரை புணர்ந்து
மோகத் தீயினிலே மகிழ்ந்து
மோகத் தீயினிலே மகிழ்ந்து
மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா
மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா
ஐயா ஐயா ஐயா ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
என் அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
===
நில்லா பொருளையே நினைந்து
இல்லா இடம்தேடி அலைந்து
நில்லா பொருளையே நினைந்து
இல்லா இடம்தேடி அலைந்து
பொல்லா தீவினையை சுமந்து
செல்லா பொருளாய் சிதறிப் போனேன் ஐயா
ஐயா ஐயா ஐயா ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
பழகும் மானிடரை புகழ்ந்து
பழகிய பின்னே இகழ்ந்து
பழகும் மானிடரை புகழ்ந்து
பழகிய பின்னே இகழ்ந்து
ஆணவப் பேயாக திரிந்து
ஆணவப் பேயாக திரிந்து
அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா
அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா
ஐயா ஐயா ஐயா ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
===
உடலை மெய்யென்று நினைந்து
சுடலை வருமென்று மறந்து
உடலை மெய்யென்று நினைந்து
சுடலை வருமென்று மறந்து
ஐம்புல வேட்கையிலே விரைந்து
ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா
ஐம்புல வேட்கையிலே விரைந்து
ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா
ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஐயா ஐயா
==
பித்தா என் பிஞ்ஞகனே
பிறவிபினி அறுத்திட வாராய்
அத்தா என் ஆருயிரே
அம்பலத்தில் ஆடிட வாராய்
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
===
அ..... சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ சம்போ சம்போ
வேகும்பிணம் நடுவே கிடந்து
மாய வாழ்க்கையினை துறந்து
வேகும்பிணம் நடுவே கிடந்து
மாய வாழ்க்கையினை துறந்து
யாவும் நீயென்று உணர்ந்து
யாவும் நீயென்று உணர்ந்து
ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா
ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ... ஐயா ஐயா
ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
==
கங்கை அணிந்த கங்கா தரனே
செங்கை அபயம் காட்டிட வாராய்
மங்கை உடனே மான்மழு ஏந்தி
மண்மேல் என்னை ஆண்டிட வாராய்
மங்கை உடனே மான்மழு ஏந்தி
மண்மேல் என்னை ஆண்டிட வாராய்
நஞ்சை உண்ட நீலகண்டனே
அஞ்சேல் என்று அருளிட வாராய்
நச்சுப் பாம்பனி புயங்க நீஎன்
அச்சம் நீங்க நயந்து வாராய்
நாத மயமான வேதியனே என்
வேதனை அகல விரைந்து வாராய்
ஜோதி வடிவான சங்கரனே உன்
சேவடி என்மேல் சூட்டிட வாராய்
ஜோதி வடிவான சங்கரனே உன்
சேவடி என்மேல் சூட்டிட வாராய்
ஜோதி வடிவான சங்கரனே உன்
சேவடி என்மேல் சூட்டிட வாராய்
உன்
சேவடி என்மேல் சூட்டிட வாராய்!
சம்போ சிவ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சிவ சிவ சம்போ
சிவ சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சிவ சம்போ சிவ சம்போ!
Thanks lyrics theditu irundhen kidaithu vittadhu.... Thanks
@@sundharimohandoss2027 Thank you 🙏. Naanum thedinaen kidaikkavillai adhanaal paadal kaetu varigalai ezhuthinaen. Ellarum payan peravum. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🙏
நன்றி
P.p
Thanks bro lyrics
இந்தப் பிறவியில் என்ன புண்ணியம் பண்ணினு தெரியல இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு இந்த உயிர் உடலை விட்டுப் போனாலும் இந்த உயிர் இறைவன் என்று மறவேன் ஓம் நமச்சிவாய இந்தப் பாடலைக் கேட்பவர்கள் தன்னை யார் என்று அறிந்து வாழ்வார்கள் தென்னாட்டு இறைவா போற்றி என்னை ஆளும் ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய எந்த தாரக மந்திரமே போற்றி போற்றி.
Omnamas8iwàvyadiwa 8:22 8:24
உன்னை விட்டால் எனக்கு வழிகாட்ட யாருமில்லை இறைவா.. மனிதர்களிடம் தோற்று வெறுத்துவிட்டது.. கொள்கை எதுவுமின்றி பந்தபாசத்து பின் சென்ற பலனை அனுபவித்துவிட்டேன்.. இதிலிருந்து மீண்டு கடமையை சரியாக செய்து உன்னை சரணடைய வழிகாட்டு இறைவா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் தான் இறைவா
சொல்ல வார்த்தைகள் தெரியாமல் வேதனை விரக்தியில் இருந்தேன் சரியாக கூறினீர்கள்
Me too
அன்பே சிவம்
உண்மை இதுவே சரணம் சரணம் சிவ சிவ
இரவு நேரம் இந்தப்பாடலை கேட்டு யாரும் அழுததுண்டா. ஏனென்றால் நான் அழுததுண்டு. எதற்கு அழுகிறேன் என்றே தெரியாமல் மெய்மறந்து இருந்தேன். இந்த பாடலின் வரிகளைக்கேட்டு இதுநாள்வரை உன்னை மறந்துவிட்டேனே எம்பெருமானே ! என்ற விரக்தியில் தானாக கண்ணீர் வந்தது.
நம சிவாய வாழ்க! 🙏
நாதன் தாள் வாழ்க!🙏
நானும் விக்கி விக்கி அழுதேன்
சிவ சித்தம் இது மாதிரி ஒரு பாடலை கேட்க எனக்கு வாய்பு கெடுத்த என் அப்பன் ஈசன் அருள் செய்க
Om navashivya
Super subash
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏🙏🥺🙏🙏
ஓம் நமசிவாய போற்றி ❤️🙏🙏
சிவன் அருளால் இன்றுதான் இந்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்றேன்.
இந்த பிறவியில் என்ன தவம் செய்தேனே இப்பாடலை கேட்டு மனமகிழ்ந்து என்னை அறியாமலே கண்ணில் தாரை தாரையான வரப்பெற்றேன்.ஓம் நமசிவாயம்
Inda pattu inda kural ketka ketka Shivaperumam kanmaniel NikkarathuOM Namashivaya🙏🙏🙏🌹🌺
ஆம், தவம் மட்டுமல்ல புண்ணியமும் செய்து
இருக்கின்றோம், ஏன் என்றால் தமிழில் பேசவும் படிக்கவும் தெறிந்துகின்டொறமே
அதற்கே நன்றி இறைவ
வெகும் பிணம் நடுவே கிடந்து மாயவாழ்க்கைஇனை துரந்து யாவும் நீ என்று உணர்ந்து யாவும் உன் திருவடி சேர்ந்திட வேண்டும் ஜயா ஜயா என் சிவனே
Om nama shivaya ❤
மனம் உருகுது அப்பா... என்ன ஒரு அருமையான குரல்... கேட்கும்போதே ஒரு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது. ஈசனை நம்பினோர் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.. ஈசனே இனி பிறவாநிலை கொடு... அப்படி பிறந்தால் உன்னை மறவா நிலை கொடு தகப்பனே....
Correct comment 👌🕎🕉✡️🚩👍🙏
Currect
திருச்சிற்றம்பலம் 🙏🙏
சிவனை நம்பினோர் என்றும் வீழ்ந்ததில்லை.
இது என் அனுபவம்.
ஓம்நமசிவாய 🙏🥺❤️
Unmai
😍😍😍🙏
சத்தியம்!!
Unmai
Apdia....nan innum kashta pattutey thaan iruken
இந்த பா டல் ஐ முழுவதும் கேட்டவர்கள் முக்தி பெற முடியும்
அப்பா ஏ எனக்கு இவ்லோ மண வருத்தம் எனக்கும் உன் பாதத்தில் ஒரு இடம் கொடு
இந்த பாடலை கேட்கும் போது உலகமே மறந்து போகுது
சொல்ல வார்த்தைகள் இல்லை
😭😭😭சர்வம் சிவ மயம்
Yes
Mm
@Kavitha Packri மனது தெளியவே தெளியாது அது கலங்கிய குட்டை தான்
Yes
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
என்னோட குழந்தைக்கு பிடித்த பாடல் மூணு வருஷம் ஆகுது குழந்தைக்கு இந்த பாடலை நல்லா படுவான்... ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
ஈசன் ஆசீர்வாதம் உங்க குழந்தைக்கு இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻 சிவ சம்போ மகாதேவா 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍இறையருள் பெற்றவர் இப்பாடலை கேட்பார்....
அய்யனே என்பிறவியின் நோக்கம் தான் என்ன காலத்திற்க்கும் நோயில்தான் என்வாழ்வா சிவனே
"ஆண்டவா, ஆண்டவா, ,,.,,,
இப்ப நடந்துக்கொண்டிருக்கின்ற கோலத்தையும், காலத்தையும், நினைத்து அழுதுகொண்டிருக்கிறேன் அப்பனே.
ஆண்டவா மக்களுக்கு "நல்ல புத்தியை கொடுப்பா"
"உலகநாடுகள் அனைத்தும் அன்புமயம்ஆக்குங்கள் ஆண்டவனே"
வாழ்க வையகம்,,,,
வாழ்க வையகம்,,,,
வாழ்க வையகம்,,,,
வாழ்க நலமுடன்,,,,,,!!!!!
இப்பாடலை இயற்றியவர் பாதங்களை தலை வணங்குவது தவிர வேறு வார்த்தைகள் இல்லை இப்பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் தானாகவே வெளிப்பட்டது
அஅவனரருளாளே அவன் தாள் வணங்கும் பேறுபெற்றேன்
இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamasivayanamaga.agnipuratchi.press.media.reporter.agnisubash
After 3years of marriage life and with treatment. today I got pregnancy test positive..please pray for me..Om namashivaya.
God bless you
கண்கள் 2 யும் மூடி இந்த பாடல் கேட்டால்.. பிறவி பயன் அடையலாம்.. ஓம் நமசிவாய 🙏🙏
கண்கள் ஆனந்த நீரில் நீராடிவிட்டது.
என்னவா
என் அப்பனே
எப்பிறவி புண்ணியமோ
இந்த ராஜ கீதம்
என் செவி துவாரங்களில் பாய்வது.
ஆனந்தம் பேரானந்தம்
சிவாய நம
திருசிற்றம்பலம்
🙏🙏🙏
சிவாய நம அன்பே தெய்வம்
அவன் அருளாள் அவன் தாள்
வணங்கி வாழ்த்தி வணங்கும்
Siva Arjunan.Vijayalakshmi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaya nama
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
இரண்டு வருடத்திற்கு முன்பு முதல் முதலாக இந்த பாடலை கேட்டு அழுதேன் அழுதேன் அழுதேன் ஒவ்வொரு வரியும் உயிர் வரை சென்று துளைத்து ஆனந்த கண்ணீர் அன்பு கண்ணீர் அப்பன் திருவடியை கட்டி பிடித்து உயிர் போகும் வரை அழ தோன்றியது மெய் சிலிர்த்து மெய் சிலிர்த்து கண்ணீர் பெருகுகிறது பாடலை கேட்டு முடித்தவுடன் எதையோ சாதித்து விட்டது போல் ஓர் உணர்வு தினமும் கேட்கிறேன் ஆனந்தமாக இருக்கிறது அருமையான பாடல் அருமையான வரிகள். அருமையான பாடகர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பனே நமசிவாய நீ கொடுத்த உயிர் பிச்சையயால் இன்றும் நான் உயிர் வாழ்கிறேன். .அருமையான வரிகள்.நெஞ்சை உருக்கும் குரல்வளம்.
நான் நானல்ல நீ தான் என்பதை உணர்ந்து காமம் ஆணவன் மாயை யை அழித்து இந்த சிற்றின்பத்தை மறந்து பேரின்பம் ஆன உன்னை வந்து அடைவது எப்போது என் சிவமே🙏🙏😭😭..பிறவி பிணியை அழித்து முக்தி வேண்டும் ஈசனே 🙏
இது வரை பலமுறை கேட்டுவிட்டேன் ஆனால் இதை கேட்ட எனக்கு உறக்கமே வரும் என்னப்பன் எனக்கு கொடுத்த ஓம் நமசிவாய
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏
Mind-blowing
Kadipa ஓம் நம சிவாய
இறைவன் ஒருவரே அவர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் சிவா என்றும் அல்லா என்றும் கர்த்தரே என்றும் இன்னும் பல பெயர்களில் உள்ளம் கனிய கனிய எப்பெயர் சொல்லி அழைத்தாலும் இறைவனை உணர முடியும் 🙏🌹🙏🌹
🎉🎉😂😂😂😂😂😂😂🎉@@poorneaswariyuvaraj5866
அடியேன்அடிக்கடிகேட்கும்பாடல்.சிவாயநம.பிறந்தநாம்அனைவரும்இந்தபாடல்கேட்கவேண்டும்
அப்பா உன் திருவடி நாடிக்கிறன் என்னை ஏற்று கொள் அய்யனே 📿📿📿🙏🙏🙏🙏🙏
காணும் கன்னியரை கவர்ந்து.. கவரும் காதலரை புணர்ந்து...மோகத்தீயினிலே மகிழ்ந்து ....மீளா
துயரில் மூழ்கிப் போனேன் ஐயா.........!💖
18 சித்தர்களின் வாழ்வியலை பாடமாக வைத்தால் அந்த தேசமே உலகின் முதன்மை தேசமாக..அனைத்து கலைகளிலும் முதன்மையாக விளங்கும்... வாழ்க பாரதம்
என் மனமும் சேர்ந்து பாடுவது போல் உணர்வு கண்களில் கண்ணீரோடு 🙏🙏🙏 எல்லாம் அவரே ஓம் நமசிவாய 🙏🙏🙏
இந்த ெஜன்மத்திலேயே அனைத்துகஷ்டங்களை இந்த 30 வயதிலேயே அனுபவித்துவிட்டேன ஐய்யா இனி ஒரு ஜென்மம் வேண்டாம் அய்யனே உன்கிருவடியே பேரதும்
உண்மையி என் மனதை உருக்கியது இப்பாடல்.
பரமேஸ்வர் .என் நாடி துடிப்பு நின்றால் என் உடல் மன்னோ சரிந்தாலும் நான் காண வேண்டிய உன் முகம் தான் ஐயா .வாழும் விரை கண்டது இல்லை ஆனால் மாண்ட பின்பு வருவது உன் திருவடிக்கு தான் ஐயா.
ஹர ஹர மகாதேவா
என் ஆத்மாவை அதிகமாக தூண்டி யது பாடல் சிவன் என் அப்பனுக்கு ம் உங்களுக்கு நன்றி
நான் என்ற ஆனவந்தை அழிந்தால் இறைவனை அடைய முடியும்.திருச்சிற்றம்பலம்
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் அற்புதமான பாடல்...!என்ன தவம் செய்தீர்கள் இந்த குரலைப் பெற்று இந்த பாடலை பாடுவதற்கு...!!நாமும் பேறு பெற்றோம்..🙏🙏🙏
என்ன தவம் செய்தேன் ஐயா இப்பாடலை கேட்க , உங்கள் பாதகமலங்களில் என் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகிறேன்
😢😢😢😢
Padal lyrics want please
என் உள்ளம் தனியாக அழுது கொண்டிருக்கிறது ஏன் இறைவா எங்களை படைத்தாய்
நில்லா பொருளையே நினைந்து. இல்லா இடம் தேடி அலைந்து.. செல்லா பொருளாய் சிதறி போனேன் ஐயா....😭
எனையே மறந்தேன் ஐயா இத்தகையபாடலை கேட்க வைத்தமைக்கு மிக்கமகிழ்ச்சி பேறுபெற்றேன் ஐயா சிவன்அடிமை ஓம்நமசிவாயம்நற்பதிவுக்குநன்றி
அப்பா போதும் இந்த வாழ்க்கை உங்கள் திருவடிகளை காண விரும்புகிறேன்..
Yes
நற்கதி கொடு இறைவா
அப்பனே போதும் இவ் வாழ்கை. வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் அடங்கிய பாடல். மிக்க நன்றி
ஏட்டிலே அவனும் எழுத வைத்தான் அந்த பாட்டினை அவனே பாட வைத்தான் உலக நன்மைக்கு நமக்களித்தான் அதை உணராதவர் உணரவே கொடு நோய் கொரனாவை வர வைத்தான் மீண்டும் நம்மை காக்கவே அவதரிப்பான் …ஓம் ஓம் நமசிவாய
A
செல்ல வார்த்தைகள் வரவில்லை விழியோரம் நிறைந்த கண்ணீர் நினைவுகள் மட்டுமே..
ஓம் நமச்சிவாய நம
உன் பாதம் பற்றினே ஈசநேன உன் பாதம் ஈசநேன ஈசநேன.
🙏🙏🙏🙏🙏🙏🙏
இகபோக வாழ்க்கையில் உழன்று இல்லாதவற்றையெல்லாம் இருக்கின்றது என நினைத்து உன்னை மறந்துபோன எனக்கு இனியாவது நல்வழியில் நடந்து அய்யனே!
இந்த பாடலை க்கேட்டு மெய்மறந்து போணேன் ஐயா. ஐயா ஓம்நமசிவாய சிவ சிவ சம்பவ.
எது இருப்பினும், எது இழப்பினும் என் ஈசன் ஒருவனே துணை 🤲ஓம் நமசிவாய 🌸
இந்த பாடலை கேக்கும் பொழுது இத்தனை பிறவி பிறந்தோம் எவ்ளவு வோ கஷ்ட பட்ருக்கம் எவ்வளவோ ஆசைகள் எல்லாம் நிறைவேறினாலும் ஆசே திருலே எனக்கு இனி பிறவி வேணாண்டு தோணுது சிவன் பாதமே போதுமுண்டு தோணுத்துப்பா 🙏🙏🙏🙏எதுவும் நிரந்தரம் இல்லை
என்ன குரல் ஐயா உமக்கு என் உயிரோடு பேசுகிறது இசை அருமை ஐயா செத்தே போனனேன் ஐயா ஐயா உங்களை இப்பவே பார்க்க வேண்டும் உங்கள் தோளிள் சாய்ந்து கதறி கதறி அழ வேண்டும் போல் தோன்றுதய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவயா
சிவ சிவ சிவ மனம்உருகினேன் ஐயா😢😢😢😂@@kukanuma169
மெய் மறந்து பல முறை கேட்க வேண்டிய பாடல்... ஓம் நமசிவாய
என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வரழைத்த பாடல் ஓம் நமச்சிவாயா இந்த பாடல் எழுதி இசையமைத்தவர்களுக்கு என் நன்றி
உடுக்கை ஒலி எனக்கு ரொம்ப பிடிக்கும் இது போல் மனதை உறுக்கம் ஓங்கீ ஓங்கீ ஒலிக்கும்பாடல் எனக்கு ரொம்ப வேண்டும் என் காது இனிக்க நிறைய பாடல் கேட்க வேண்டும் ஓம் நமசிவாய
Om nama sivaya
சிவ வாக்கியர் பாடல் கேளுங்கள்.... நண்பா
Om nama sivaya
Super
கேளுங்கள்..... ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை .......
ஐயா ஈஸ்வரா உங்கள பாக்கணும் போல இருக்கு 😭என்ன கூட்டிகிட்டு போங்க ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭plz
அவர் உண்ணுடன் தான் இருக்கிறார் நண்பா
அதை உணர்ந்து செல் உண் நம்பிக்கை விண் போகாது
ஓம் நமசிவய
ஓம் நமசிவாய
Om namachivaya potri
அருமையான வரிகள் உண்மை வரிகள் கொண்டு எழுதியவர்க்கு என் மனமார்ந்த நன்றி ஈசன் அருள் என்றும் இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏
உறங்க செல்லும் போது என் அருகில் வைத்து கேட்டுக் கொண்டு கண்ணீரில் என் ஈசனை வழிபட்டு வருகிறேன்
போதுமய்யா இந்த ஒரு பிறவி
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🙏 மெய் சிலிர்த்து போனேன் நன்றி அய்யா🙏🙏
இப் பாடல் திருவாசக நூலில் எந்த பதிகத்தில் உள்ளது என பதிவடிவும்
தென்னாடுடையசிவாயநம
அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
/ //////////
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்மா விணைகளை அறுத்து பிறவாவரம் என்னும் ஜீவமுக்தி அடைந்துவிடவே (ஈசனை அடைவதே)இந்த ஆத்மா உடல் தரிக்க காரணம் ஐயா 🙏🏻🌻🙏🏻
அருமையான பாடல்... மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கும் மாய வாழ்க்கையை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கும் பாடல்... கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைத்தது.....
மிக ,அருமையான பதிவு. இதுவே வாழ்க்கையின் தத்துவ ரகசியம். எத்தனை கருக்குழியில் பிறந்து, எத்தனை எத்தனை பிறவி அய்யா,அய்யா.... இந்த பாடலை கேட்ட யாவரும் முக்தி பெறுவார்.. ஒம் நம சிவாய...
Jai sai eshwar
உயிரை உருக்கி தட்டிய பாடல். நன்றி ஐயா.🙏🙏🙏
வாழ்க்கை முழுவதும் போர்க்கள ஆயிடுச்சு சிவாய நம
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப் பிணி. அறுத்திட வாராய் ஐயா சிவாய நம திரு வடி வணங்குகிறேன்
நமச்சிவாய வாழ்க ✋
நமச்சிவாய சரியான சொல்லாடலா
இப்பாடலை கேட்டு ஒருவர் உள் வாங்கினால் அவரின் மனம் மிக மிக லேசாகி விடும். இது என் அனுபவம்.
Appa and Amma ellame enaku Annamalai yar unnamalai than . OM NAMASHIVA 🙏🙏🙏🙏🙏
மிகவும் நெஞ்சுருகப்பட்டேன்.இது மெய்யே.சிவாயநம.
அருமையான பாடல் தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன் என் அப்பனை காணும் வரை கேட்பேன் இந்த பாடலை கேட்டு கொண்டே ஈசனடி சேர வேண்டும் என்னப்பனே என்னையும் ஏற்று கொள் ஐயா🙏🙏🙏🙏❤
Same thought
மெய்சிலிர்க்க வைக்கிறது பாடல், கண்ணீர் சிந்தவைத்து விட்டது. 🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏.
நாம்.ஆடுவதும்.பாடுவது.பாடவைப்பது.அதை.கேட்கநினைப்பது.எல்லாம்.அவர்.சேயல். சிவாயநம.ஐயா
பேச வார்த்தையில்லை அய்யனே சரணம் ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
''அழுதால் உனை பெறலாமே''..... வாயார பாடி, மனதார நினைத்து, அழுது புலம்புகின்றேன் ஐயனின் அருளுக்காக... நெஞ்சை உருக்கும் பாடல் .. தெளிவான குரல்.. வாதவூரடிகள் திருவடிகள் போற்றி.. திருசிற்றம்பலம் 🙏🙏🙏
பிறந்த!காரணம்!..அறியமால்
தினம்.அழது.மாய்ந்து,போகிறேன்,.எம்பெருமானே.என்று,அழைத்து.கொண்டு.முக்தியளிக்க.போகிறாய்.!என்.அப்பனே.
என்னை.விழித்துதெழ.வைத்தது.இந்த.பாடல்.பாடியவர்கள்.
சிவனின்.பாதங்களில்.நிச்சயம்
இடம்.உண்டு,ௐநமச்சிவயா
ௐநமச்சியவா.போற்றி!
@@vishnumeenakshiandyazhinim1725 🙏🙏🙏
Ayya😂
Tears are uncontrollable ayya 😂
@@lalithasundari9504 பக்தியின் வெளிபாடுதான் அம்மா கண்ணீர்.. 🙏
மனதை உருகும் பாடி யவர்க்கும் இசை அமைத்தவர் க்கும் என் பணி வான வணக்கமும் வாழ்த்துகளும்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Tq god
😭🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பா நீ நலமாய் இருக்க வேண்டுகிறேன் அப்பா ஐ லவ் யு அப்பா ❤❤❤❤❤❤❤
உன் அன்பு மகள்🙏🙏🙏🙏🙏
இறைவன் அருளால் மட்டுமே இந்த பாடல் பாட முடியும் அவிநாசி யப்பா இந்த பாடல் ஒன்றே உங்களிடம் எனைச்சேர்க்கும்
I am born Muslim..but I love all about Shivan...I love this song sooooooo much and it nv fails to make me cry
Om namashivaya!
❤️
Hi
U r not muslim u r true human being ❤
❤
பிறப்பறுக்கும் பிஞ்ஞகனின் பெய்கழல்களை சேர வழி காட்டும் வாதவூரடிகள் வாழ்க வாழ்க வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க..!!
நமச்சிவாய வாழ்க ✋
முதன் முதலாக இப்பாடலை கேட்கும் போது அழுது விட்டேன்.... ஓம் நமச்சிவாய
ஓம்நமசிவாய சிவாயநம ஒம். வாழ்க்கை தத்துவம் தெளிவித்து எதுவும் நிரந்தரமில்லாத மானிடனுக்கு இறைவன் ஒன்றே நிரந்தரம்.ஓம் நமசிவய சிவாயநம ஓம் சிறப்பு ஓம்🙏🙏🙏
இந்த யாடலை கேட்டு என் பிறவி பயன் அறிந்தேன் அம்பலவானா சிவ சிவபொக்கிஷம்
Ok 👌👌👌👌👌
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏
விழியில் வழியும் கண்ணீரை கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகமாக மனம் புண்பட்டு இருந்தது இப் பாடல் அதற்கு மருந்து. இட்டது, நன்றி
அப்பா என்னால முடியல கூட இருங்க பயமா இருக்கு
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஏற்கனவே ஆட்றதனாலதா உயிர் உடலோடு ஒன்றி இயங்குகிறது..! ஆடும் அம்பலமே தரிசனம் தாராய்...! இப்படி அந்த ஒரு அடியை கவனிக்க...!அன்பரே..!சிவ சிவ..!
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
ஓம் நமசிவாய.
நமச்சிவாய வாழ்க ✋
Om namasivaya
இறைநிலை
பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது.
அத்தா என் ஆருயிரே... அம்பலத்தில் ஆடிட வாராய்.... சோதி சங்கரா... சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ....ஆடும் உன் திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா.........
சோதி சங்கரனே சூட்டீட வாராய்...சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ... ஓம் ஓம் ஓம்...நம சிவாயக. அனைத்து வரிகளும்... அருமையாக உள்ளது ஐயா...
சிவ சிவ அருமையான உண்மை யான வரிகள் சிவத்தின் மேல் அதிக அளவு அன்பு
🙏🙏🙏🙏🙏🌹🌺🌺🌷
❤ஈசனே போற்றி சிவனே போற்றி ஐயனே போற்றி மகேஷ்வரனே போற்றி அம்மையப்பனேபோற்றி ஓம் நமச்சிவாய ❤
இந்த ஜென்மம் இந்த உடலும் உயிரும் அந்த ஆதிபராசக்தி உருவாட்டி தாயிக்கே சொந்தம்
அரூமையா உண்மையான வரிகள் கண்ணீர் விட்டு இறைவனின் அருளை குருவின் திருவருள் இன்று இனிய பலன் தரும்.பாடல் சிவா ய நம நன்றி சிவா நமசிவாய வாழ்க
நமச்சிவாய வாழ்க ✋
அப்பனை அறியும் பாடல் உடலை விட்டு உயிர் பிரியும் பாடல்
ஓம் நமசிவாய
ஓம் குருவே துணை 🙏🏻🌻🙏🏻மெய் உருக்கும் வார்தைகள்...காந்தக்குரலில் பாடிய அன்பருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏🏻🌹🙏🏻
வாதவூர் அடியார்கள் திருவடியைய் வணங்குகிறேன் ஐய்யா. அழகான
பொருள்கொண்ட வரிகள்.பாடியவருக்கும் நன்றி. உருக்கமாகவும் ,இனிமையாகவும்,அழகாகவுமிருக்கிறது.
உண்மையான வரிகள் அருமை இனிய இசை.பாடியகுரல் உண்மை யான நிலை சிவலோகத்தில்
கண்ணில் பெருகும் கண்ணீர் நின் மலரடியை தோடவேண்டும் அப்பனே சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
மனம் உருகி, கண்ணில் கண்ணீர் துவழுகிறது 🥺😣🥺😣🥺😣🌼🌿🍃😣🥺🌿🌼🍃🍃😣🌼🌿🌿🥺😣🍃
🙏🏻
அருமையான பதிவு ஐயாவேண்டும் இன்னும் பல பதிவுகள்🙏🏻
🙏🙏🙏🙏
Jaikind Vandaaa Mathirremmm
ஓம்சிவசிவஓம் ஓம் நமசிவாய
உள்ளம் உருகி மனம் இளகி ஆன்மா என் குரு வை காண ஏங்குகிறதே என் செய்வேன் ஐயா🤘🤘🤘
சிவமே சிவ சிவமே உனை நினைந்தால் உருகுது மனமே...
OM NAMASHIVAYA 🙏🙏🙏🙏🙏
மனதால் சிவனை தொட்டவனும் இல்லை மனமற்ற நிலைக்கு சென்று கெட்டவனும் இல்லை
மெய் சிலிர்க்க வைக்கிறது....