🔴LIVE : நடிகர் திலகம் Sivaji Ganesan-னின் 97-வது பிறந்தநாள்..முதலமைச்சர் மரியாதை | Newstamil24x7
Вставка
- Опубліковано 30 вер 2024
- 🔴LIVE : நடிகர் திலகம் Sivaji Ganesan-னின் 97-வது பிறந்தநாள்..முதலமைச்சர் மரியாதை | Newstamil24x7
#Newstamil24x7 #sivajiganesanborthday #Cmstalin #NewsTamil #Tamilnadu #தமிழ்நாடு #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c...
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : • HEADLINES
SPOT LIGHT : • SPOT LIGHT
AR VR STORIES: • AR-VR Stories
CINEMA: • CINEMA
LIVE: • NewsTamil 24x7 Live St...
ROUND UP: • ROUND UP
TOP STORIES: • TOP STORIES
Thirudangalukum porukki naaigalukum birthday vandhal chennai yum merina vum naari poidum paavam oru nalla uyardha manidharuku 10, 15 peroda mudiyudhu
என்ன உளறல் பதிவு
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
எப்பதோ சிவாஜிக்கு மீண்டும் மெரினாவில் சிலை வைத்து இருக்கலாம், ஆனால் நான்கு ஆண்டு ஆகி சிலை வைத்தபாடில்லை, சிவாஜிக்கு இல்லை என்றாலும் அவங்க அப்பாவுக்காக அந்த சிலையை மீண்டும் மெரினாவில் வைத்து இருக்கலாம், அட்லீஸ்ட் மெரினாவில் காமராஜ் சிலைக்கு பக்கதிலாவது வைத்து இருக்கலாம், என்ன இருந்தாலும் ஒருவனுக்கும் அந்த அக்கறை இல்லை, வீராமா முனிவர், இன்னும் எத்தனையோ வெளிநாட்டவருக்கு எல்லாமே மெரினாவில் சிலை, ஆனால் ஒரு தேசிய நடிகனுக்கு அதுவும் நடிபுலக மன்னனுக்கு , பச்சை தமிழனுக்கு மெரினாவில் இடமில்லை என்பது மானகேடு, தேச துரோகி, இன துரோகிகள் உள்ள தமிழ்நாடு. உண்மையை சொல்லும் தீவிர சிவாஜி கணேசன் ரசிகன். சிவாகிகண்ணன்,வேலூர்.
நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
In 34:00, see how this Ram Kumar beats a poor old guy. Adappaavigalaa
Sound
64
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குரல் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடற சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
'சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகம்
உமை என்றும் புகழுமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
திரையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரைவெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
சிங்கை ஜெகன்i