திருப்புகழ் 1 | கைத்தல நிறைகனி | Thiruppugazh 1 | Kaithala niraikani | வயலூர்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • கைத்தல நிறைகனி (வயலூர்) | திருப்புகழ் 1
    ராகம்: நாட்டை
    கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
    கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
    கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
    கற்பக மெனவினை ...... கடிதேகும்
    மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
    மற்பொரு திரள்புய ...... மதயானை
    மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
    மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
    முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய ...... முதல்வோனே
    முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
    அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
    அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை ...... இபமாகி
    அக்குற மகளுட னச்சிறு முருகனை
    அக்கண மணமருள் ...... பெருமாளே.

КОМЕНТАРІ • 4