இவ்வளவு comment ற்க்கு மேல் என்னால் புதுசா ஏதும் சொல்லிவிட முடியாது ... அதனால் தான் என்னால் முடிந்த வரை எல்லா comments ஐயும் like செய்தேன் (எழுத்தை மட்டும் பார்த்து திருத்தும் ஆசிரியர் போல்) மாண்புமிகு இயக்குநர் அவர்களே சிறக்கட்டும் உம் பணி
வருமையின் வலி மரணத்தினும் கொடியது...எத்தனை போருக்குத் தெரியும் ஒவ்வொரு சவடாலுக்குப் பின்னும் அடையமுடியாத ஆசையை எண்ணி தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் உத்தி உள்ளது என்று.....great attempt ya nice film...👏👏👏Background music is really superb...it's help to feel the situation as much as possible....👍
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤ 90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்!❤🙌😍
Harrys Hari ஆமாம் நன்பரே கிராமத்தானின் உழைப்பையும் வருமாணத்தையும் மற்றும் அவனது வாழ்கையும் திருடும் சோம்பேரி நகரத்து கூட்டம் இருக்கும்வரை இதே காட்சி அவர்களைவிட்டு அகலாது.
இன்று நாம் உண்டு கொழுக்கிறோம்... இன்றுவரை தன் பேரபுள்ளைகளுக்காக தன்வயிறை பட்டினிபோட்டு வாழும் மகான்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம். இந்த குறும்படத்தை பார்க்கும்போது எனது அய்யா-அப்பத்தா நினைவுகள்தான் வருகிறது...
மகள் பணமெல்லாம் வேண்டாமென அழுதுகொண்டே சொல்லும் போது நானும் அழுதுவிட்டேன். அந்த பெண் சிறிது நேரமானாலும் மிக இயற்கையாக அந்த அப்பாவிற்கு இணையாக நடித்திருக்கிறார். இயக்குனர் யாரையும் ஓவர் ஆக்ட் பண்ண வைக்க வில்லை.
என் அன்பு தாத்தாவை நினைவு படுத்துகிறது. எனக்கு பிடித்த பால்கோவா வை தன் இடுப்பு வேஸ்டி யில் மடித்து குக்க்கூ என்று எனக்கு சைகு செய்து குடுபார். இன்றும் பால்கோவா என்றால் அவர் நினைவு தான் எனக்கு வரும். இன்று அவர் இல்லை ஆனால் பால்கோவா என்று எங்காவது கேட்டால் அவர் என் அருகில் இருப்பது போல் மகிழ்வேன். தாத்தா பாட்டி பாசம் என்பது அப்பா அம்மா வை விட பெரியது. அதை அனுபவித்தவரகளுக்கு மடுமே புரியும்.
என்னோட அப்பாவும் இப்படி தான்.. தினமும் காலையில சைக்கிள் எடுத்துகிட்டு வேலைக்கு போவாரு, கால சாப்பாடு மதியம் வீட்டுக்கு வந்து தான் சாப்புடுவாரு.. ஏனோ தெரியல இந்த short film பார்த்த உடனே அவரோட நினைவு வந்துடுச்சி... உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...
அருமையான கதை இவர்கள் எதார்தமாக நடித்துள்ளார்கள் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.நான் தாத்தாவின் அன்பை அனுபவித்தது இல்லை அப்பாவின் அன்பும் பாதியிலே முடிந்து விட்டது. இப்படத்தை பார்த்தவுடன் கண்ணீர் கண்களில் ததும்புகின்றன என் அப்பாவின் நியாபம் ஒரு நிமிடம் என் அப்பா மறுபடியும் திரும்பி வந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி.
என் தாத்தாவை பார்க்க வரும் உறவினர்கள் கொடுத்து விட்டு செல்லும் செந்தொழுவன் பழங்களை சாப்பிடாமல் பள்ளியில் இருந்து வரும் எனக்கு வருந்தி அழைத்துக் கொடுப்பார். விளையாடச் செல்லும் மும்முரத்தில் அவர் அழைப்பை அலட்சியம் செய்து விட்டு ஓடி விடுவேன்..... இரவும் கண் விழித்து காத்திருந்து தின்பண்டத்தை திங்க வைக்காமல் உறங்கமாட்டார்.. ...என் ஐயா (தாத்தா) கொல்லாம்பழத்தில்(முந்திரிபழம்)சாறு எடுத்து பீர் தயாரித்து கொடுப்பார்.... அந்த ஞாபகம் 20 வருடங்களுக்கு பிறகும் பசுமையான நினைவு... அம்மாவினுடன் இருந்ததைக்காட்டிலும் ஐயாவோடு அலைந்து திரிந்த நாட்கள் அதிகம்..சோறு பெரிய உருண்டை பிடித்து நடுவில் முட்டை மீன் வைத்து ஒரு பருக்கைகூட சிந்தாமல் ஊட்டி விடுவார்.. அன்று நிறைந்த மனது இன்று வரை பசிக்கவில்லை.... ஐயா நீ என் தாய்... உன் நினைவு என்னைவிட்டு உயிர் பிரிந்தாலும் நீங்காது.. அந்த அன்பிற்கு கைமாறு ஒன்றும் செய்ய விடாமல் காலன் அபகரித்து விட்டான். ஐ லவ் ஐயா ஐயா உன்ன எப்போது கூப்பிடப்போறேன்.மக்கா என நீ அழைக்கும் சப்தம் கேட்டு நிறைய நாளாயிட்டு... ஐயா ஃபேன் இல்லா காலத்தில் தூங்கும் வரை உன் நேரியலால்(மேல் துண்டு) விசிறி விடுவாய்.. 100 ஏ. சி அதற்கு சமமாக வைத்தாலும் ஈடல்ல.. உன் தளர்ந்த கைகளில் தூங்கிய நாட்கள்.. பஞ்சணை வைத்து உறங்கினாலும் இப்போது அன்று போல் தூக்கம் வரவில்லை.. என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா... உன் போல் கைமாறு கருதா அன்பு செலுத்த முடியாமல் வாழ்கிறேன் இந்நாகரீக உலகத்தில்... நல்ல வேளை நீ இப்போது இல்லை. ।சுயநலம் பிடித்த உலகம் ஐயா.... உன் உடலுக்கு விடை கொடுத்து விட்டு நினைவுகளுக்கு விடை கொடுக்க முடியாமல் தவிக்கும்.... பேத்தி
மனசு கணக்குது.... அரிதாரம்(முகப்பூச்சு) அற்ற யதார்த்தமான வாழ்வியலை படம்பிடித்து, அதற்கு உயிர்கொடுத்த இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.!!💐 வாழ்கவளமுடன்.!!!🙏
I accidentally come across this short film. Excellent short film; how as a grand father who carefully keeps every money for his beloved daughter; how he avoids every spending under the pretext of arrogance which is actually his emotional attachment for daughter and grand son. Really superb
பாசமுள்ள அப்பாவை பெற்ற பெண்கள் தாங்கள் இறக்கும் வரை அப்பாவை மறக்க மாட்டார்கள். பிறந்ததிலிருந்து கணவன் வீட்டிற்கு. செல்லும் வரை தான் ஒரு பெண்ணிற்கு வசந்த காலம்.
Naan Vellore la oru village than..now in Pondicherry.... parka en ooru village mariye iruku....en thatha paati pasathuku yengi iruken.,..so sweet film🤩🤩🤩🤩
வறுமையின் வலி தெரிகிறது, பணத்தின் சிக்கனம் தெரிகிறது பாசத்தின் ஆழம் புரிகிறது நன்றாக இவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்த்துக்கள் என்பது கூட சாதாரண வாக்கியம் என்று எண்ண தொண்றுகிறது இக்காவியத்தை பார்க்கும் பொழுது நன்றி
I am from Australia - been living here for more than 30 years. My tamil is not good and hence the comments in English. What a wonderful creation.Hats off to the director and the actors. Grandparents all over the world will appreciate this.
Wow what a great Creation , weldone director and team.all the characters have done their part nicely. How many sacrifice, avoids, how many fake stories, blames to satisfaction his daughter family.even his wife could not have chance to see their daughter family, because of the finance situation, and how she worried and what a great hearty satisfaction by his wife too.He loves all the foods, fruits and drinks that he faced on his journey, but he kept quiet and control him mind with his own.THE PAALGOVA AND KOLIGUNDU IS REALLY HIGH LEVEL VALUE AFTER HE GIFTED TO RAMESH. Thanking to having this on my mind.
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤ 90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்.... அருமை உங்களின் இது போன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
தன் வயிற்றை காய வைத்து தான் மகளின் வாழ்க்கையை வள படுத்த நினைக்கும் தந்தயின் கதாப்பத்திறதுக்கு உயிர் குடுத்திறுக்கிறார் அந்த பெரியவர் ....அருமையான நடிப்பு அய்யா ....இந்த குழு மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.....
சிறந்த படம். பெரியவரின் நடிப்பு அற்புதம். அன்னமாக(மகளாக) நடித்தவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதயம் பாசத்தில் நனைந்தது. என்னை மேலும் அன்புடையவனாய் ஆக்கியது.
இந்த தாெலைகாட்சி தாெடா் நாடகங்கள் வராமலிருந்திருந்தால் எங்க தாத்தா பாட்டியும் எங்கள் மேல் அன்பாயிருந்திருப்பாா்கள்.சிறப்பான கதை நடிப்பு தயாாிப்பு வாழ்த்துக்கள்.
In response to those who were asking who the director is.SR.Nareshkumar....He is the student of late Mr.Balumahendra and worked with Director Seenu Ramasamy on "Neerparavai","idam porul eaval" and "kanney kalai maaney".Waiting to see his name on the big screen as a director.👍
இன்றைய தமிழகத்தின் இயல்பு நிலை இந்த கதை போல் இன்னும் எத்தனை தாத்தா இருக்கின்றனர் இந்த இயலமை இருக்கும் இந்தியாவில் இந்த படத்தை உருவக்கிய இயக்குனா்க்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்
👌👌👌👌👌👌Nice story. Congratulations entire team💐💐💐👍👍👍👏👏 I born and brought up from Gudiyatham. Now It's feel great to see this short film from Dubai. Thank you. Feeling happy.
இவ்வளவு comment ற்க்கு மேல் என்னால் புதுசா ஏதும் சொல்லிவிட முடியாது ... அதனால் தான் என்னால் முடிந்த வரை எல்லா comments ஐயும் like செய்தேன் (எழுத்தை மட்டும் பார்த்து திருத்தும் ஆசிரியர் போல்) மாண்புமிகு இயக்குநர் அவர்களே சிறக்கட்டும் உம் பணி
நான் ரோம்ப சந்தோஷம இருக்கன் காரணம் கீழே உள்ள மக்களோட கருத்துக்களை பாருங்க எல்லோரும் தமிழில் பதிவிட்டிருக்காங்க..
பிரமிப்பு வாழ்க தமிழ்🙏
sorry bro en kita Tamil keyboard illa
Iya mannikanum nan vachirukura ponla tamila eppadi type pandradhnu theriyala
😄😄😄
உணர்வுப்பெருக்கில் தானாக வருவது தாய் மொழி மட்டுமே... வேறு எந்த மொழி நம்மை நாமாக காட்ட முடியும்!
Indic key Board download பண்ணுங்க.....
இயக்குனர் இவங்கல நடிக்க வச்சாரா இல்ல ஓலிஞ்சு இருந்து படம் பிடிச்சாரானு தெறியல
அவ்வலவு எதார்த்த தன்மை இந்த படத்தில்
Suuuper Commend ........ Ha Ha Ha
@@02.adhithiya.p.r40 ààa
உன்னை வாழத்தாமல் போனால் என் இதயம் மண்ணை போகும் இயக்குனர் அவர்களே .. என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ..
😘😘
💯❣️
True sir hats off to you 🥺🥺🙂
அந்த இருபது ரூபா நோட்டு வேர்வையில் நனைந்திருப்பதை காத்தாடி மூலம் சொல்லவருவது அருமை
Yes nice la...😖
தொண்டைக்குழியில் காலை வைத்து அமுக்குவதுபோல் ஒரு வலி. கலங்க வைத்துவிட்டது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
எனக்கும் அதேதான்
Fact
Me too bro
For me also
வருமையின் வலி மரணத்தினும் கொடியது...எத்தனை போருக்குத் தெரியும் ஒவ்வொரு சவடாலுக்குப் பின்னும் அடையமுடியாத ஆசையை எண்ணி தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் உத்தி உள்ளது என்று.....great attempt ya nice film...👏👏👏Background music is really superb...it's help to feel the situation as much as possible....👍
யோகா செல்வி amam nengal solvadu mutrilum marukka mudiyada unmay aday unarndavanukku tan Adan vali purium
Super comment
TQ
really superb comment, yes those who born between 70 to 80's had so much in their feeling. a nice and very good short film. congrates
Vera leve sir
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤
90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்!❤🙌😍
Nice great 😎😎geathu en noda thathava na rembha miss pandren
Harrys Hari CMaVc
Dirty fellows VMC
Harrys Hari Krishna
Harrys Hari ஆமாம் நன்பரே கிராமத்தானின் உழைப்பையும் வருமாணத்தையும் மற்றும் அவனது வாழ்கையும் திருடும் சோம்பேரி நகரத்து கூட்டம் இருக்கும்வரை இதே காட்சி அவர்களைவிட்டு அகலாது.
இந்த தாத்தாவ வெள்ளித்திரைல விட்டீங்கனா வக்காளி எல்லா நடிகரோட மார்க்கெட்டும் காலிடா...அவ்ளோ எதார்த்தமான நடிப்பு...
He acted in thane le kandam movie
With mota rajandrean take count of assignment
ஒடுக்கத்தூர் பஸ்
மனதை வருடிய படம்
இன்று நாம் உண்டு கொழுக்கிறோம்... இன்றுவரை தன் பேரபுள்ளைகளுக்காக தன்வயிறை பட்டினிபோட்டு வாழும் மகான்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம்.
இந்த குறும்படத்தை பார்க்கும்போது எனது அய்யா-அப்பத்தா நினைவுகள்தான் வருகிறது...
மகள் பணமெல்லாம் வேண்டாமென அழுதுகொண்டே சொல்லும் போது நானும் அழுதுவிட்டேன். அந்த பெண் சிறிது நேரமானாலும் மிக இயற்கையாக அந்த அப்பாவிற்கு இணையாக நடித்திருக்கிறார். இயக்குனர் யாரையும் ஓவர் ஆக்ட் பண்ண வைக்க வில்லை.
சரியாக சொன்னீர் சகோதரா... மிகச் சாதாரணமாக, இயல்பாக நடித்திருக்கிறார்கள்
நம்ம தாத்தா பாட்டி இருக்கும் போது அவர்களின் அருமை புரிவதில்லை. போன பிறகு ஏங்கி தவிக்கிறோம்.
என் அன்பு தாத்தாவை நினைவு படுத்துகிறது. எனக்கு பிடித்த பால்கோவா வை தன் இடுப்பு வேஸ்டி யில் மடித்து குக்க்கூ என்று எனக்கு சைகு செய்து குடுபார். இன்றும் பால்கோவா என்றால் அவர் நினைவு தான் எனக்கு வரும். இன்று அவர் இல்லை ஆனால் பால்கோவா என்று எங்காவது கேட்டால் அவர் என் அருகில் இருப்பது போல் மகிழ்வேன். தாத்தா பாட்டி பாசம் என்பது அப்பா அம்மா வை விட பெரியது. அதை அனுபவித்தவரகளுக்கு மடுமே புரியும்.
Super , it really true
very true
Njmlayyy Like my Thathaaa pattiii greater then my parents 😍😍Loveee u patti and thathaaa😘
பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👏இதில் அப்பா கதாபாத்திரம் வாழ்ந்து இருக்கிறார் நடிக்கவில்லை அருமை என் தந்தையை நினைவு படுத்துகிறார் i miss my Dad 😭😭😭😭
என்னோட அப்பாவும் இப்படி தான்.. தினமும் காலையில சைக்கிள் எடுத்துகிட்டு வேலைக்கு போவாரு, கால சாப்பாடு மதியம் வீட்டுக்கு வந்து தான் சாப்புடுவாரு..
ஏனோ தெரியல இந்த short film பார்த்த உடனே அவரோட நினைவு வந்துடுச்சி...
உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
மிகவும் அருமையான கதை 👌👌👌👌👌👌👌👌👌😥👌 90 KIDS 90 kids thanya .... , எங்களது பிடித்த காலம் 😍 Miss that Days
அருமையான படைப்பு. ஒருவரின் பசிக்கு பின் இருக்கும் பல காரணங்களை தெளிவாக உணர்த்துகிறது உங்கள் படைப்பு. மேலும் வளர வாழ்த்துக்கள்
Super
வறுமையில் பசியை மறைத்து பாசத்தை காட்டும் அப்பா.அருமையான படைப்பு கண் கலங்க வைத்த இயக்குனர்.மிக சிறந்த குறும்படம் 👌👌வாழ்த்துக்கள்.
அப்படியே எதார்த்தமான படம் அருமை பதிவு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என் அப்பாவை நினைத்து💔💔💔
ஒரு நாவலை உள் வாங்கி படித்தால் மட்டுமே. இப்படிப்பட்ட அருமையான படைப்பை கொடுக்க முடியும். சிறப்பு நன்றி. வார்த்தைகள் இல்லை....🌹🌹🌹
எவ்வளவு எளிமையான கதைக்களம். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு மனதை பறித்து விட்டது கண்களை குளமாக்கி விட்டது
என் மறைந்த தந்தையை கண் முன் நிறுத்தி கண் கலங்க வைத்துவிடீர்கள்... அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.
Arulmozhi Saravanan
16:33 மனம் உருக வைத்த காட்சி,மெய்மறந்து கண்ணீர் வரவைத்த குறும்படம்....எனது தாத்தாவை நினைவுட்டியதற்கு கோடான கோடி நன்றிகள்...
பாராட்ட வார்த்தைகளே இல்லை... நான் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த குறும்படம் இதுதான்! இதில் பணிபுரிந்த அத்துனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
உண்மை
Ppp
அருமையான கதை இவர்கள் எதார்தமாக நடித்துள்ளார்கள் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.நான் தாத்தாவின் அன்பை அனுபவித்தது இல்லை அப்பாவின் அன்பும் பாதியிலே முடிந்து விட்டது. இப்படத்தை பார்த்தவுடன் கண்ணீர் கண்களில் ததும்புகின்றன என் அப்பாவின் நியாபம் ஒரு நிமிடம் என் அப்பா மறுபடியும் திரும்பி வந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி.
இதி்ல் யாரு நடித்தார்கள்? உண்மை சம்பவத்தை தொடர்ந்து படம் எடுத்த மாரி இருந்தது........ உண்மை கதை
பட இயக்குனர் மற்றும் அனைவருக்கும் என் மனமார வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
அருமையான நடிப்பு!!! வறுமை கொண்ட கிராமத்து தகப்பனின் நிலை இன்றும்!!!
தமிழரசு சாந்தகுமார் amam manaday thottu vittadu
பெற்ற பிள்ளையையும் பேரனையும் பார்த்தபின் சவடால் சத்தம் அடங்கி பாேகிறது. குறும்படம் அருமை
எதார்த்த மானா நடிப்பு இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இதுவே இப்படத்தின் வெற்றி வகுத்தது மேலும் இதுபோன்ற படம்களை தயாரிக்க வேண்டும்♥️✌️
என் தாத்தாவை பார்க்க வரும் உறவினர்கள் கொடுத்து விட்டு செல்லும் செந்தொழுவன் பழங்களை சாப்பிடாமல் பள்ளியில் இருந்து வரும் எனக்கு வருந்தி அழைத்துக் கொடுப்பார். விளையாடச் செல்லும் மும்முரத்தில் அவர் அழைப்பை அலட்சியம் செய்து விட்டு ஓடி விடுவேன்..... இரவும் கண் விழித்து காத்திருந்து தின்பண்டத்தை திங்க வைக்காமல் உறங்கமாட்டார்.. ...என் ஐயா (தாத்தா) கொல்லாம்பழத்தில்(முந்திரிபழம்)சாறு எடுத்து பீர் தயாரித்து கொடுப்பார்.... அந்த ஞாபகம் 20 வருடங்களுக்கு பிறகும் பசுமையான நினைவு... அம்மாவினுடன் இருந்ததைக்காட்டிலும் ஐயாவோடு அலைந்து திரிந்த நாட்கள் அதிகம்..சோறு பெரிய உருண்டை பிடித்து நடுவில் முட்டை மீன் வைத்து ஒரு பருக்கைகூட சிந்தாமல் ஊட்டி விடுவார்.. அன்று நிறைந்த மனது இன்று வரை பசிக்கவில்லை.... ஐயா நீ என் தாய்... உன் நினைவு என்னைவிட்டு உயிர் பிரிந்தாலும் நீங்காது.. அந்த அன்பிற்கு கைமாறு ஒன்றும் செய்ய விடாமல் காலன் அபகரித்து விட்டான். ஐ லவ் ஐயா ஐயா உன்ன எப்போது கூப்பிடப்போறேன்.மக்கா என நீ அழைக்கும் சப்தம் கேட்டு நிறைய நாளாயிட்டு... ஐயா ஃபேன் இல்லா காலத்தில் தூங்கும் வரை உன் நேரியலால்(மேல் துண்டு) விசிறி விடுவாய்.. 100 ஏ. சி அதற்கு சமமாக வைத்தாலும் ஈடல்ல.. உன் தளர்ந்த கைகளில் தூங்கிய நாட்கள்.. பஞ்சணை வைத்து உறங்கினாலும் இப்போது அன்று போல் தூக்கம் வரவில்லை.. என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா... உன் போல் கைமாறு கருதா அன்பு செலுத்த முடியாமல் வாழ்கிறேன் இந்நாகரீக உலகத்தில்... நல்ல வேளை நீ இப்போது இல்லை. ।சுயநலம் பிடித்த உலகம் ஐயா.... உன் உடலுக்கு விடை கொடுத்து விட்டு நினைவுகளுக்கு விடை கொடுக்க முடியாமல் தவிக்கும்.... பேத்தி
உங்களின் நிஐ வரிகள் என்னை அழ வைக்கின்றது.
@@kanagut2723 🙏
Real life is our oldendays with grand parenrs
A. Delphine lafee nallarukku ya nijama
@@vigneshbanker5055 நன்றி நண்பரே
ஐயா பிலிம் மேக்கருங்களா... நல்லா கேட்டுக்கங்க... உலகத்தரம் உலகத்தரம்னு சொல்றோமே... அது இதுதான்.
Definitely
Nice. Vvvnice good hero
John poul antony Exactly bro
என்ன சொல்லனு தெரியல ஆனா (சவடால்)பார்த்த பிறகு மனசு என்னமோ பண்ணுது,அருமையான படம் வாழ்க
Me to
Kannu kalanguthu boss
மனசு கணக்குது.... அரிதாரம்(முகப்பூச்சு) அற்ற யதார்த்தமான வாழ்வியலை படம்பிடித்து, அதற்கு உயிர்கொடுத்த இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.!!💐 வாழ்கவளமுடன்.!!!🙏
அருமையான கதை ♥️ எல்லாரும் கருத்த தமிழ் ல பதிவிட்டு இருக்கிறத பாக்குறபோ ...... இந்த படத்தோட வெற்றி இது தான் எண்டு தோணுது ♥️🥰 வாழ்த்துக்கள் 💓
வறுமையை வீராப்பால் மறைக்கும் தியாகி....மீசைக்காரன்....
கண்கள் பனித்தன......
@@savethebharat7141 ♥️♥️
அருமையான குறும்படம், முதியவரின் நடிப்பு அருமை👌
20 நிமிடத்தில் கண் கலங்க வைத்த ஒரு அற்புதமான படைப்பு 🙏🙏🙏🙏🙏
யோவ்...நிஜமாவே பஸ்ஸுல நானும் குடியாத்தம் போன மாறியே இருக்குயா...செம்ம feel... வாழ்த்துக்கள் 🌹😘
Sir naanum nallah nadipenn enakum any chancee kodunga
Bro....athu vellore route bro
அன்னையரின் பாசம் பாய்ந்தோடும் அருவி போல். தந்தையரின் பாசம் கல்லுக்குள் ஈரம் போல். மிகச்சிறப்பு.
தாத்தாவின் நடிப்பு அருமை❤
மனதில் ஒரு தாக்கம்
கண்ணில் நீர்
ஏன்னு தெரியல!
நன்றி
super very nice
I accidentally come across this short film. Excellent short film; how as a grand father who carefully keeps every money for his beloved daughter; how he avoids every spending under the pretext of arrogance which is actually his emotional attachment for daughter and grand son.
Really superb
பாசமுள்ள அப்பாவை பெற்ற பெண்கள் தாங்கள் இறக்கும் வரை அப்பாவை மறக்க மாட்டார்கள். பிறந்ததிலிருந்து கணவன் வீட்டிற்கு. செல்லும் வரை தான் ஒரு பெண்ணிற்கு வசந்த காலம்.
Unmai 200 percentage unmai....😫😫😕
True
2019 இன்றும் பலரின் நிலை இதுவே.......
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி.....🤗
Naan Vellore la oru village than..now in Pondicherry.... parka en ooru village mariye iruku....en thatha paati pasathuku yengi iruken.,..so sweet film🤩🤩🤩🤩
மிக அருமையான படைப்பு... கண் கலங்க வைத்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி... 😍
வறுமையின் வலி தெரிகிறது,
பணத்தின் சிக்கனம் தெரிகிறது
பாசத்தின் ஆழம் புரிகிறது
நன்றாக இவர்கள் வாழ்ந்தார்கள்
வாழ்த்துக்கள் என்பது கூட சாதாரண வாக்கியம் என்று எண்ண தொண்றுகிறது இக்காவியத்தை பார்க்கும் பொழுது
நன்றி
என்ன நானே திட்டிகிட்டேன் ரொம்ப நாளாக நோட்டிபிகேஷன் காட்டியும் பாக்காம இருந்ததுக்கு... நம்ம ஊரசுத்தி எடுத்து இருக்கிங்க அழகா காட்டி இருக்கிங்க.. மிக அருமை வாழ்த்துக்கள் சகோ 😍💐🤙👏🤝 அப்பாவை நேசிக்கும் மகள்களுக்காக, மகளைநேசிக்கும் அப்பாகளுக்காக .... நல்ல குறும்படங்களை தேடும் என்னைபோன்ற ரசிகர்களுக்காக..🙏
அருமை. யதார்த்தம் மிளிரும் கதை,கதைமாந்தர். இன்னொரு மகேந்திர ,பாலுமகேந்திரா யுகத்தை துவங்கியிருக்கும் நரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்.மீசை செம்மையான நடிப்பு.
TheSurya9397 நன்றி
அறுமை கண்களில் நீர்
படம் செம..கண்ணீர் வர வைக்கும்..👌👌
அருமையான பாசம் நிறைந்த கதை 😍😍அழகு 😍😍 தந்தைக்கு நிகர் தந்தை மட்டுமே 😘😘😘
அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் . அந்தச்சின்னப்பையன் கலக்கிட்டான்.
இந்த படம் அனேக தந்தைகளின் தியாகம், பாசம், தவிப்பு, உணர்வு,...இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த வாழ்க்கை...இயக்குநர்க்கு வாழ்த்துகள்....
👌👌👌👏👏👏😘😘எப்பா மற்ற short film டைரக்டர்களா இதைப்பார்த்து short film எடுக்க கத்துக்கங்கப்பா
அருமை👏!!!! யதார்த்தமான காட்சிகள்....தரமான படைப்பு👌
இக்கதையை பாா்க்கிறப்ப என் சியா ஞாபகம் வருது எங்க ஊா்ல நாங்க தாத்தாவ சியானு தான் கூப்பிடுவோம். அருமையான பதிவு👏👏👏
.
எந்த ஊரில்" சியா " என்பீர்கள்
உசிலம்பட்டி , கருமத்தூர், தேனீ ( தாயின் தகப்பன் சியான்)
மிகவும் அருமையான குறும்படம் வறுமையான குடும்பத்தின் உண்மையான நிழல்
கேமரவா ஒளிச்சி வச்சி எடுதுருக்கங்க...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐
K76o
Jeeva anatham ne vanthu edupa😘😘😘
மிக மிக மிக தந்துருபமான காட்சி அமைப்பு... ஒரு நாள் சவடால் பெரியவருடன் பயணிக்க வைத்த உங்கள் குழுவிற்கு நன்றிகள்
கமெண்ட் பண்ணக் கூடாது என்று தான் பார்த்தேன்..
பண்ண வேண்டும்
நான் இது வரை எந்த படத்திற்கும் கருத்து கூறியது கிடையாது. படம் மிக மிக யதார்த்தம். நடிப்பு அபாரம். கதையின் போக்கு அருமை.
அப்பா மகள் பாசம்,தாத்தா பேரன் பாசம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது
I am from Australia - been living here for more than 30 years. My tamil is not good and hence the comments in English. What a wonderful creation.Hats off to the director and the actors. Grandparents all over the world will appreciate this.
This Film Made me Cry.... The Old man remember my Grand pa.
எத்தனை முறை பார்த்தாலும் அழ வைக்கும் அருமையான குறும்படம்...
elakkiya thiagarajan நன்றி
Wow what a great Creation , weldone director and team.all the characters have done their part nicely. How many sacrifice, avoids, how many fake stories, blames to satisfaction his daughter family.even his wife could not have chance to see their daughter family, because of the finance situation, and how she worried and what a great hearty satisfaction by his wife too.He loves all the foods, fruits and drinks that he faced on his journey, but he kept quiet and control him mind with his own.THE PAALGOVA AND KOLIGUNDU IS REALLY HIGH LEVEL VALUE AFTER HE GIFTED TO RAMESH. Thanking to having this on my mind.
சிறந்த படைப்பு , இயக்குனா் அவா்களுக்கு நன்றி.
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤
90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்.... அருமை உங்களின் இது போன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
kamala systems
தரமான சிறப்பான படம். இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்
மீசை நடிக்கல அந்த மனுசன் வாழ்ந்து இருக்காரு. இப்படிலாம் நாங்கலும் அலப்பர பன்னிருக்கோம்
தன் வயிற்றை காய வைத்து தான் மகளின் வாழ்க்கையை வள படுத்த நினைக்கும் தந்தயின் கதாப்பத்திறதுக்கு உயிர் குடுத்திறுக்கிறார் அந்த பெரியவர்
....அருமையான நடிப்பு அய்யா ....இந்த குழு மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.....
சிறந்த படம்.
பெரியவரின் நடிப்பு அற்புதம்.
அன்னமாக(மகளாக)
நடித்தவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இதயம் பாசத்தில் நனைந்தது.
என்னை மேலும் அன்புடையவனாய் ஆக்கியது.
நன்றி 🙏
@@ksemmalarannam3567 unga nadipu arumai ungaloda subscriber agiten 😁
அருமையான படம்.......
ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது...
மறு நிமிடம் கண்ணீல் நீர்...
இயக்குனர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களின் இந்த படைப்பு மிகவும் அருமை....
அருமையான படம் நிஜ மனிதர்களை கண்முன்னே நிறுத்தியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் 👏👏👏
ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வு வருகிறது அருமை யான இயக்கம்
இந்த தாெலைகாட்சி தாெடா் நாடகங்கள் வராமலிருந்திருந்தால் எங்க தாத்தா பாட்டியும் எங்கள் மேல் அன்பாயிருந்திருப்பாா்கள்.சிறப்பான கதை நடிப்பு தயாாிப்பு வாழ்த்துக்கள்.
M Sobitha நன்றி
என்னோட தாத்தாவ உறிச்சி வச்சிருக்கியேயா.....அருமை
No words to say....simplyy awesome superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrtttrrt
படம் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது 😭😭👌👌👏👏
தங்களின் குறும்படம் பார்க்கும் போது,,உள்ளுக்குள்ள ஏதோ சென்று மனச தொட்டு அரைஞ்ச மாதிரி இருக்கு.. மிக அருமை சகோ👌
In response to those who were asking who the director is.SR.Nareshkumar....He is the student of late Mr.Balumahendra and worked with Director Seenu Ramasamy on "Neerparavai","idam porul eaval" and "kanney kalai maaney".Waiting to see his name on the big screen as a director.👍
Sagishna Xavier was that you behind the music ???
@MR gaming Yt Thank you.😊
@@user-db2kd8bi5q Yes bro.👍
அருமையான படைப்பு கண்ணில் நீர் தான் வருகிறது
നന്നായിട്ടുണ്ട്..
மனதில் ஒரு தாக்கம் எனை குழந்தை பருவத்துக்கு கொண்டு சென்றது...
அருமை 👌👏👏😍
I cried. Nice. Poverty...... Only people who faced these situations will understand the emotions. Lovely movie. Hats off.
நான் இந்த குறும்படம் இன்று 28.10.22 பார்த்து மகிழ்ந்தேன். இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1991 to 2006 - I lived with my grandparents, I'm remembering those days......now they are seeing me from the heaven...
Peace fully they live in Haven
அருமையான திரைகதை..பெரியவர் நல்ல நடித்துள்ளார்....Nalla team work...All the best friends ...
Semma short film I really cried !!!hats off to director and script writers superb I proved as daughter to my father
அப்பா அப்பாதா.....❤️❤️❤️அருமை.....இத்தனை காலம் இந்த படத்தை பார்க்காமல் தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது....
இன்றைய தமிழகத்தின்
இயல்பு நிலை
இந்த கதை போல்
இன்னும் எத்தனை தாத்தா
இருக்கின்றனர்
இந்த
இயலமை இருக்கும்
இந்தியாவில்
இந்த படத்தை உருவக்கிய
இயக்குனா்க்கு என்
இதயம்கனிந்த வாழ்த்துகள்
👌👌👌👌👌👌Nice story. Congratulations entire team💐💐💐👍👍👍👏👏 I born and brought up from Gudiyatham. Now It's feel great to see this short film from Dubai. Thank you. Feeling happy.
True father love... They will sacrifices many for their daughter and grand children.
Shruthi T thank you
இயல்பான முகங்கள், யதார்த்தமான நடிப்பு. வாழ்த்துகள்.
kanneeer vara vachutaar. appa yendrumey appa thaan. thaan varundhi pillaigalai sandhosa paduthuradhey appavin gunam. innum kooda alugaiya nirutha mudiyala. rombha touching short film. miss u appa.
கவித்துவமான நடையில்...... ஓர் உயிரோட்டமான படைப்பு...
ஆகா ஆகா அருமையான இயக்கம் மணிப்படம் இன்றுவரும் திரைப்படங்களை காட்டிலும் அருமை உயர்வு இதை நீட்டி முழுநீள திரைப்படமாக எடுங்கள்.
அருமை உங்களின் இது போன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்...💐
everyone did well.. grandpa did a grt act.. i liked that girl.. she s too beautiful..
இத பாத்து தான் அசுரன் தனுஷ் நடிச்சு இருப்பாரோ
ஒவ்வொரு சவடாலுக்கு பின்னாலும்...பேரத்துக்கு முன்னாலும்..அதை வாங்க முடியாத வறுமையும்...ஆதங்கமும்...அருமையான படம்...