Brahmapureeswarar Temple, Tirupattur | உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர்
Вставка
- Опубліковано 29 вер 2024
- உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி.
புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.
இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள்.
இத்தலத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கயிலாசநாதர் திருக்கோயில் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் அமைந்துள்ளன.
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😢
நேற்று சென்று வந்தேன் மிகப்பெரும் மாற்றம் கிடைத்தது
Anna enaku marriage set agavae mattanguthu poitu vantha set aguma anna ?
Jathagam kudutha vachi archanai senji kudupangala
@@gokilaselvam4380 kandippa sister nengal சென்று வாருங்கள் ஜாதகம் சாமி முன் வைத்து அர்ச்சனை செய்வார்கள்
@@aravindrajaravindraj2153 thanks anna
Tursday poonga அன்னைக்கு நல்ல பூஜை செய்து அலங்காரத்தில் சிவபெருமானும் பிரம்ம தேவரும் இருப்பர்
@@gokilaselvam4380 unga age enna nanga matrymony tha vatchurukom nenga entha ஊர்
Night stam panalam
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் மனைவி கர்ப்பம் தரித்துள்ளார்
மிக்க மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாயம்
இன்று பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வந்தோம். ஓம் நமச்சிவாய
Today I went to temple so happy
முக்கிய குறிப்புகள் :
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ர் பாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். வியாழக்கிழமை அன்று சென்றால் நல்லது. மற்ற சாதாரண நாட்களிலும் செல்லலாம். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் அன்று சென்றால் இன்னும் சிறப்பு. குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும்.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். இங்கு சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள்.
பிரம்மா சன்னதியில் தங்கள் ஜாதகம் கொடுக்கும் போது அவரவர் சக்திக்கேற்ப மஞ்சள் (கொம்பு மஞ்சள் / விரலி மஞ்சள்) வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. கோவில் ஐயரிடம் கேட்டு விட்டு பிறகு வாங்கிக் கொடுக்கவும்.
மற்றொரு சிறப்பு இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு உள்ளது. பிரம்மா பிரதிஷ்டை செய்த ஜோதிர்லிங்கங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
இந்த ஆலயம் வழிபட்ட பின்னர் விதியை மாற்றும் வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இது ஒருவருடைய விதியை (ஆயுள்) மாற்றும் ஆலயம். இங்கும் ஜாதகங்கள் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு பின்னால் உள்ளது.
அய்யனார் கோவில் -
இங்கும் ஜாதகம் கொடுத்து அர்ச்சனை பண்ணலாம். கோவில் வெளியே யானை சிலை உள்ளது. அங்கு தேங்காய் உடைப்பது நல்லது.
வழிமுறைகள்:
1. காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம். (இங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொள்ளவும்)
2. தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆலய தரிசனம்.
(இங்கு முதலில் ஈசன் வழிபாடு, பின்னர் பிரம்மா, மூன்றாவது பதஞ்சலி முனிவர் தரிசனம் , இறுதியாக அம்மன் தரிசனம் மற்றும் ஜோதிர்லிங்க தரிசனம்)
3. விதியை மாற்றும் வரதராஜப் பெருமாள் ஆலய தரிசனம்.
4. அய்யனார் கோவில்
5. காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் முன்பு அங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் இந்த குளத்தில் உள்ள நீர் ஒருவருக்கு அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும்.
இந்த கோவிலுக்கு போகும் வழி:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் (25 Kilometers from Trichy) என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு என் கைப்பேசி எண்கள் 7358234746 / 9884742019
Rompa thanks anna 🙏🙏🙏. Unga information eklarukkum rompa usefull ah irukkum.
@@MalathiS-x7u Thank you
🙏🙏🙏🙏🙏
பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் பால் எடுத்து செல்ல வேண்டுமா .சந்தேகம் உள்ளது. நிவர்த்தி செய்யுங்கள்
Medam Anna Wife Veyndhum nu Court la Diverse poithu eirukku..Anna ooda Jathagham vaithu Aarchanai panna Tambhathighal onnu servanghala?? Please answer pannugha Sir
ஓம் நமச்சிவாய நம ஓம்
அருள்மிகு பிரம்மநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரரே போற்றி ஓம்
Akilamamanagnkasaranum
Thiruchi bus standla irunthu epadi poganum address ple
Trichi to thirupattur morning 9'o,' clock bus irrukku
🙏🙏🙏 OHM BRAMHA🙏🙏🙏
Great subject given by you sister... vaalthukkal
Friday senruvathom
Nangalum ponom oru chinna maatram nadanthuruky
🙏
Yaralum madiyatghu, nee uzhaithaal thaan mudiyum.,
Very nice temple
ஓம் நமசிவாய ஓம் பிரம்மதேவர் போற்றி 🙏🙏🙏
very informative... mikka nandri
Om sivaya namaga
Thanks madam ur email
நான் அடிக்கடி செல்வேன்
@@sellvaduraisellvadurai3959sir anga kulichu refresh aga Edam Iruka.. then direct bus Iruka from railway station.. kindly help
Na pona yathum akala,..na nachathu
Om nama sivaya 🙏🙏🙏🌷🌷🌷