நாள் என் செயும் | நீயல்லால் தெய்வம் இல்லை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
    www.dailymotio...
    Rare Live Recording of Doordarshan Prasadh Bharathi.
    Extended Version of Naal Yen Seiyum (Kandhar Alangaram) and Nee Allal Deivam Illai.

КОМЕНТАРІ • 388

  • @nagarasan
    @nagarasan 7 місяців тому +337

    அய்யாவின் இந்த பாடல்களை இது முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட பொதிகை தொலைக்காட்சி இல் கண்டு கேட்டு அக்காலத்தில் vcr இல் பதிவும் செய்து சமீப காலம் வரை அடிக்கடி கேட்டு வந்தேன் இப்போது இணையத்தில் உங்களோடு கேட்டு வருகிறேன் நன்றி

  • @BaluchamyHema
    @BaluchamyHema 7 місяців тому +189

    ❤சேந்தனை ❤கந்தனை❤செங்கோட்டு வெற்ப்பனை❤செஞ்சுடர் வேல் வேந்தனை❤ செந்தமிழ் நூல் விரித்தோனை❤விளங்கு வள்ளி காந்தனை ❤கந்த கடம்பனை ❤கார்மயில் வாகனனை❤ சார்ந்துனை போதும் மறவாதவர்க்கு ❤ஒரு தாழ்வில்லையே❤

  • @chandrasekarsrinivasiah2914
    @chandrasekarsrinivasiah2914 7 місяців тому +176

    பிண்ணனி இசையே இல்லாமல் இவ்வளவு சிறப்பாக பாடுவதற்கு இவருக்கு நிகர் இவர் மட்டுமே!!!

    • @nadesmanickam
      @nadesmanickam 6 місяців тому +7

      ஐயா சீர்காழி அவர்களின் குரலே ஓர் இசை தானே.

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 5 місяців тому +2

      Yes truly. From my childhood I am hearing the soothing voice and I am getting deep solace. I am 72. I am hearing this every day.

    • @loganathank2397
      @loganathank2397 4 місяці тому

      L😊😊 12:25 😊​@@nadesmanickam

    • @Ktm_v_vkm
      @Ktm_v_vkm 3 місяці тому +2

      இவர் குரல் மூலம் முருகனை அழைக்கிறேன்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 місяці тому +2

      இவருக்கு 'வெங்கலக்குரலோன்' என்ற சிறப்பு பெயர் உண்டல்லவா!

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 місяці тому +33

    வாழ்வில் கடினமான காலங்களில் இந்த பாடலை கேட்கும் போது, சீர்காழியார் 'நீயல்லால் தெய்வம் இல்லை ....' என்று தொடங்கும் போது கண்ணீர் சரம் சரமாக கோர்த்துவிடும் அற்புதத்தையும் அந்த கண்ணீரோடு கனத்த இதயமும் கரைந்து லேசாகிடும் அற்புத த்தையும் அடைந்தேன். ஐயாவின் குரல் நடத்திய அற்புதம் என்னவென்பது! பாடலின் இறுதியில் மனம் லேசாகி இதெல்லாம் ஒரு கஷ்டமா என்ற மனநிலைக்கு உயர்த்தும் தமிழின் பெருமையை உணர்த்தும் பாடல் வரிகளும், குரல்வளமும், நம்மை இன்றும் உயர்த்தும் அற்புதம்.

  • @MaharajanBABED
    @MaharajanBABED 4 місяці тому +54

    தெய்வமே நேரில் வந்து பாடுவது போல் உள்ளது ஐயா புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இப்படி நேரிலே பாடுவதைக் கேட்டு பரவசமடைய முடியும்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 місяці тому +28

    இந்த ஒரு பாடல் போதும் தினமும் இவர் குரலால் கேட்டால் முருகன் அருள் கிடைக்கும்

  • @selvanRathinasamy
    @selvanRathinasamy 6 місяців тому +64

    தமிழ் உள்ளவரை சீர்காழி அவர்களின் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். பதிவேற்றியமைக்கு நன்றி

  • @premaramalingam4083
    @premaramalingam4083 6 місяців тому +48

    கேட்டோம் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம் மீண்டும் மீண்டும் கேட்போம் இந்த வெண்கலக் குரல் மன்னனின் பாடல்களை..❤❤❤❤❤

  • @RavindranRavindran-n8e
    @RavindranRavindran-n8e 6 місяців тому +45

    இப்படிபட்ட இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க விழையும் அத்தனை முயற்ச்சிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 4 місяці тому +28

    என்ன ஒரு பாக்கியம் செய்துள்ளோம் .. இந்த வெண்கலக் குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 6 місяців тому +38

    மெய்சிலிர்கிறது!! என்ன தமிழ்.. என்ன குரல் என்ன சுதிசுத்தம் என்ன வயலின். பிறந்த பயனை அடயச்செய்யும் கந்தர்வ பாட்டு.. எங்கு மறைந்தது இந்த தமிழ்..?

  • @anandanram7575
    @anandanram7575 7 місяців тому +50

    தமிழிசையின் தனிப் பெரும் அடையாளமாம் அய்யாவின் தாள் பணிந்து வணங்கி கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 6 місяців тому +39

    தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் ஐயா அவர்கள் தமிழையும் தெய்வீகத்தையும் வளர்த்தவர்

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 6 місяців тому +35

    ஆடி கிருத்திகையன்று ஐயாவின் பாடல் கேட்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முருகா சரணம் கந்தா போற்றி குகனே துணை

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 7 місяців тому +24

    அருமை. சீர்காழி அப்பாவை மிஞ்ச. யாரும் இல்லை

  • @கவிகுயில்
    @கவிகுயில் Місяць тому +6

    என் தந்தை,
    இவரின் தீவிர ரசிகர்...
    பக்தி மான்..
    சீர்காழியின் பாடலை கேட்டால்....
    மறைந்த என் தந்தையின் ஞாபகம் தான் வரும்...😢

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 6 місяців тому +29

    * தெய்வீகக்குரல்...! குரலே இசையாக..! இசையே கானமாக..! அந்த கானமே... கந்தர்வகானமாக... செவிடுக்கிறேன்... சிந்தைக்கினிதாய் !
    கவிதந்த கோவிந்தராசனை பாருளமட்டும்...தமிழ் பாராட்டும் !

  • @KapilKumar-bm1xn
    @KapilKumar-bm1xn 7 місяців тому +28

    என்ன ஒரு குரல்... ஆஹா.
    எம்முருகப்பெருமானை சிந்தையில் எண்ணச்செய்யும் பாடல்.

  • @purusothamansarkunabalan169
    @purusothamansarkunabalan169 6 місяців тому +32

    எங்களது தமிழ் இனத்தின் விடி வெள்ளி அல்லவா எங்களது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு நிகரான பாடகர்கள் இந்த இந்திய ஒன்றியத்தில் எவ்வறும் இல்லை தான் !

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 6 місяців тому +18

    மொழிக்கு அழகு சேர்த்த ஐயா புகழ் ஒங்குக

  • @narasimhana9507
    @narasimhana9507 7 місяців тому +27

    வெங்கலக்குரலோன்‌ ஐயா அவர்கள்.பக்தி பாடல்களை தாளம் போட்டு ரசிக்க வைத்தவர்.

  • @gangadharanr148
    @gangadharanr148 6 місяців тому +13

    இவர் குரல் தனித்தன்மை வாய்ந்தது. வேறு எவருக்கும் இந்த குரல் கிடையாது. அத்துடன் தமிழினிமையும் சேர்ந்துகொள்ளுகிறது. Unique.

  • @ilamaran972
    @ilamaran972 6 місяців тому +18

    என் மனக்கவலை ஆற்றவல்ல அமுதம். நன்றி.

  • @JanakiRaman-k8g
    @JanakiRaman-k8g 7 місяців тому +21

    அய்யா சீர்கழி திரு. கோவிந்தராஜன் அவர்களில் பாடல்கள் என்றாலே அருமையுலும் அருமை 🫶🏿

  • @arumugamnarayanan934
    @arumugamnarayanan934 6 місяців тому +14

    ஐயாவின் குரல் தமிழுக்கு ஒரு மணிமகுடம்🙏🙏🙏

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 6 місяців тому +14

    என்ன ஒரு அருமையான குரல்..... அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j 5 місяців тому +12

    கலை மகளின். இளவரசன்❤❤❤❤சீர்காழி. கோவிந்தன்.... ❤❤❤😂🎉என்றும். மாறாதைய்யா. உன். புகழ்❤🎉❤🎉❤🎉

  • @Skr7222
    @Skr7222 7 місяців тому +37

    அய்யாவை போன்று இனி இந்த மாதிரி அற்புத குரல் நமக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை❤❤❤

    • @Eswara-de4wx
      @Eswara-de4wx 5 місяців тому +2

      உண்மைதான் இப்படி ஒரு பாடகர் கிடைக்கப் போவதில்லை அது இப்பொழுது இருக்கும் பாடகர்களை நினைத்தால் சீர்காழி கோவிந்தராயனின் கால் தூசுக்கும் இல்லை ஒரு அற்புதமான பாடகர் மறக்க முடியாது இலங்கைக்கு வந்தவர் யாழ்ப்பாணம் புன்னாலே கட்டுவேன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலில் பாடியவர்

    • @Skr7222
      @Skr7222 5 місяців тому +1

      @@Eswara-de4wx 🙏🙏🙏🦚🦚🦚

  • @s.thangavelsaravanamuthu9495
    @s.thangavelsaravanamuthu9495 7 місяців тому +18

    ❤குரல் கேட்கும் புண்ணியம் செய்தோம் நாங்கள் 🎉🎉🎉

  • @Subaara08
    @Subaara08 3 місяці тому +9

    Dr. Seerkazhi Govindharajan Avargalin pugazh endrum nilaikkum 🙏

  • @swaminathans59
    @swaminathans59 6 місяців тому +19

    யாம் செய்த பாக்கியம், சீர்காழி❤

  • @RavindranRavindran-n8e
    @RavindranRavindran-n8e 6 місяців тому +13

    அய்யாவின் குரலுக்கு இனிமைசேர்த்த வயலின் வித்வான்கள் சிரம்தாழ்ந்த நமஸ்காரம் ்.

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 6 місяців тому +13

    சீர்காழி கோவிந்தராசன் குரலினிமை அமுதம் போன்றது.

  • @PPrabhu-dt6yk
    @PPrabhu-dt6yk 6 місяців тому +14

    ஐயா அவர்களின் பக்தியையும் , குரல் வளத்தையும் நம்மால் அளவிடமுடியாது ஓம் முருகா

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 3 місяці тому +13

    ❤❤❤... என்..கைபோசிக்கு... கோடி.. நன்றி வணக்கம்....இது.. போன்ற..பதிவுகளை... நான்....எப்படி..பார்ப்போன்...யூ..டிப்பிற்கு..... நன்றி வணக்கம் தமிழ் வளர்க.... தமிழ்..அழகு....கேட்பது...இனிது... முருகா முருகா முருகா.... உன்னை.. நினைத்தால்... மகிழ்ச்சி அளிக்கிறது....

  • @samyp5100
    @samyp5100 4 місяці тому +11

    விதியை வெல்ல வேலவன் காலடி.. அற்புதமான பாடல்.. கணீர் குரல்.. முருகா சரணம்..

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 6 місяців тому +24

    மெய்சிலிர்கிறது!! என்ன தமிழ்.. என்ன குரல் என்ன சுதிசுத்தம் என்ன வயலின். பிறந்த பயனை அடயச்செய்யும் கந்தர்வ பாட்டு.. எங்கு மறைந்தது இந்த தமிழ்..? ்அய்யோ!!!😭😭

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o 4 місяці тому

      😢❤

    • @mathivanankaruppanan7065
      @mathivanankaruppanan7065 2 місяці тому

      ❤❤❤

    • @ChachaMummy-zu3qu
      @ChachaMummy-zu3qu 2 місяці тому

      அவன் கால்பட் டழிந்தது இன்று என் தலை மேல் அயன் கையெழுத்தே. ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @nadesmanickam
    @nadesmanickam 6 місяців тому +31

    கண்களை மூடிக் கொண்டுக் கேட்டால், முருகனே நேரில் வந்து நிற்பது போன்ற ஓர் அற்புத உணர்வு ஏற்படுகிறது. எல்லாம் உன் செயல் முருகா, முருகனுக்கு அரோகரா.

  • @kannadevandurai2037
    @kannadevandurai2037 5 місяців тому +10

    What a divine voice, தமிழ் அமுதம்

  • @natyakalalayamnatanapalli3919
    @natyakalalayamnatanapalli3919 6 місяців тому +10

    தெய்வ குரல் உலகம் இருக்கும் வரை இக்குரல் இருக்கும் மனது நிம்மதி க்கு இப்பாடல் கேட்கவும்

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 3 місяці тому +12

    சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்கள் காலடி வணங்குகிறேன்

  • @Ramesh-qc3rc
    @Ramesh-qc3rc 29 днів тому +2

    முருகனே பாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்ன ஒரு தெய்வீக குரல்

  • @surendharkumar2725
    @surendharkumar2725 6 місяців тому +11

    ஓம் சரவணபவ. சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா என் கந்த தெய்வம்

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq Місяць тому +3

    🙏🙏🙏ஓம் சரவண பவ ஓம் மனச்சுமை குறைய அன்றாடம் அதிகாலையில் முருகனை வணங்கி இந்த தெய்வ கானத்தை கேளுங்கள் முருகப் பெருமானே,,,நீயே துணை🦚🦚🦚🙏🙏🙏

  • @boopathyraj5742
    @boopathyraj5742 6 місяців тому +19

    உள்ளம் உருகுதையா உன் குரல் லில் கேட்க்கும் போது

  • @jaihindramu1989
    @jaihindramu1989 13 днів тому +1

    அடியேனை மெய்மறந்த்து முருகனை உணைர்த்தன் தருணம், ஐயா சீர்காழி கோவிந்தராஜன் வின் இசையில் மட்டுமே!😇😪

  • @jayabalanmarimuthu307
    @jayabalanmarimuthu307 11 днів тому +1

    சீர்காழி கோவிந்தராஜன் அய்யா
    முருகனின் முழுமையான அருளைப் பெற்றவர்கள்....

  • @MurugaVel-o3d
    @MurugaVel-o3d 5 місяців тому +8

    தெய்வகுரல் தெய்வத்திற்க்கே உண்டான குரல் தெய்வீக குரல்

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 6 місяців тому +6

    என்ன ஒரு்அன்பு்பணிவு காதல் தேன் கலந்த குரல் அய்யா்இங்கெல்லாம் உன் குரல் தான் அய்யா....முருகன் அருகில் தான் இருக்கின்றீர் அய்யா....
    அய்யாவின் புகழ் ஓங்குக...

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 8 днів тому +1

    அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி அப்பா நன்றி அப்பா ஓம் சரவணபவ ஓம்.

  • @Four-s-family_
    @Four-s-family_ 5 місяців тому +6

    என் செவலில் சுவாசித்த ராகங்கள் இவரைப் போன்ற உன்னத கலைஞர்கள் அனைவரையும் பார்த்து ரசித்த நான் அதை என் மகனிடம் சொல்ல முடியாத தயக்கம் அன்று என் தந்தை என்னிடம் கூறிய நான் வளரும்போது என் காதில் ஒலித்த சத்தங்கள் இன்று அது கவிதைகளாகவும் ஒருவித சத்தங்கள் ஆகவும் கேட்கிற அதில் உள்ள வார்த்தைகளுக்கு நான் அதில் வரும் சத்தங்களுக்கு மட்டுமே நான அடிமை❤❤❤❤

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j 5 місяців тому +7

    என். குருநாதர்.. ❤❤❤சீர்காழி. சிதம்பரம்🎉🎉பாடலின். சிம்மகுரலோன்

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 6 місяців тому +12

    To listen
    This song
    Early morning
    Is really good and peaceful
    To mind

  • @Kavipriya2402
    @Kavipriya2402 3 місяці тому +8

    ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
    தீது புரியாத தெய்வமே - நீதி
    “நீதி தழைக்கின்ற” போரூர் தனிமுதலே - நாயேன்
    பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…🙏🏻🦚..

  • @ramesht7544
    @ramesht7544 6 місяців тому +6

    மிகவும் அருமையான பாடல். நன்றி

  • @sivalingam2176
    @sivalingam2176 7 місяців тому +14

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🎉🙏🙏🙏
    " நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்! 🎉🎉🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    "நன்றி🙏💕🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @KKamaraja
    @KKamaraja 5 місяців тому +6

    தெய்வீக சிந்தை, தெய்வீக குறல், தெய்வீக செயல், தெய்வீக தேகம் ஐயாவுடன் வாழ்ந்துகொண்டுயிருந்தது, ஐயாவின் அருவத்தோடும் வாழ்ந்துகொண்டுயிருக்கிறது. இவர் தெய்வீகத்துக்கு செய்த தொண்டு என்றும் மக்களின் மனதில் குடிகொண்டு வாழ்ந்துகொண்டுயிருக்கும். இவரின் தெய்வீக பாடல்கள் ஆழயங்களிலும், மக்கள்மனதிலும் என்றும்ஒலித்துக்கொண்டுயிருக்கும்.🙏

  • @dillibabu.c
    @dillibabu.c 3 місяці тому +4

    ஏது பிழை செய்தாலும்
    ஏழையேனுக் கிறங்கி தீது செய்யாத தெய்வம் நம் கருணைக் கடல் திருச் சீரலைவாய் செந்தில் ஆண்டவன் செங்காட்டு வேலவன் சுப்பிரமணிய சுவாமி♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valliraju2684
    @valliraju2684 5 місяців тому +6

    முருகா அப்பா முருகா அரோகரா கேட்க கேட்க இனிமை

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 14 днів тому +2

    “Namathu Seerkaazhi sthalaththil Thiru. Govindarajan migavum inimaiyaana paadalGaLaik kEttu ellaiyilla maghizhchchiyinai adaiyunGaL. Ahaa!!!” - “M.K.Subramanian.”

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 5 місяців тому +5

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் கருணை கடலே கந்தா போற்றி

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 2 місяці тому +5

    இறைவன்/மிக/கொடியவன்/இந்த/மாமேதை/எள்ளாம்/சாகா/வரம்/பெற்று/இருக்க/வேன்டும்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 6 місяців тому +6

    பக்தி இழையோடும் ... குரல் வளம்.. ஐயாவுக்கு. 🙏🙏

  • @muruhavel1234
    @muruhavel1234 7 місяців тому +8

    ஃ ஓம் முருகா ஓம் ஓம் ஓம் முருகா ஓம் ஃ
    நன்றி கள் கோடி குரு வே ஓம் முருகா ஓம்
    ஃ ஓம் வேலும் மயிலும் சேவலும் அடியார்கள் துணை ஓம் ஃ

  • @ariyan6322
    @ariyan6322 7 місяців тому +9

    அடியார்க்கு அடியோன், பக்தரின் பக்தன், அன்பர்கு அன்பன், எங்கும் எதிலும் நிறைந்து நிற்பான், பக்தனுக்கு துன்பம் நேர்ந்தால், நொடிப்பொழுதில் முன் வந்து நிற்பான், அவனே எனது கந்தன்...

  • @drgandhimathim
    @drgandhimathim 2 місяці тому +2

    குமரனை கண் முன்னரே கொண்டு வரும் உங்கள் குரல்...நெஞ்சில் நிறுத்தும் உம் கணீர் குரலின் வரிகள்...முருகா🙏🙏🙏🙏

  • @kanaiyazhi9379
    @kanaiyazhi9379 3 місяці тому +3

    தெய்வீக குரல்.என்ன ஒரு பாக்கியம் இவருக்கு.பக்தி ஊற்றெடுக்க இவர் குரல் போதும்.முருகா எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.

  • @Jana-jv2ct
    @Jana-jv2ct 7 місяців тому +7

    எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.‌.....

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai Місяць тому +1

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏ஐயாவின் பாதம் பணிந்தோம் 💐👏

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 7 місяців тому +12

    போரூர் முருகன் டபுள் கேசட் பாடல்கள் வேண்டும்.கிருபானந்த வாரியர் ஆசியுடன் அமைந்த பாடல்.

  • @srk8360
    @srk8360 6 місяців тому +5

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 மனதை உருக வைக்கும் பாடலும் 🙏
    அற்புதமான குரலும்..🙏💐💐💐💐💐/இனிய பதிவிற்கு நன்றி நன்றி ஐயா 🌺🌺🌺🌺🌺🌺🙏💌

  • @kamarajraj3332
    @kamarajraj3332 3 місяці тому +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா❤❤❤❤❤

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km Місяць тому +1

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கு கூட இந்த குரல் பக்தியை வரவழைத்து விடும் ஐயா வின் புகழ் என்றைக்கும் வாழ்க வாழ்கவே

  • @OmprakashAR
    @OmprakashAR 19 днів тому

    வெண்கல குரலோனே
    சாகாவரம் பெற்றவனே என்றும் வாழ்வோனே 🙏🙏🙏

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 16 днів тому

    அருள்மிகு எங்கள் அன்னை ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் என் அப்பன் ஓம் ஶ்ரீ முருகப்பெருமானே நீயே எங்களுக்கு கதி ஓம் முருகா

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 6 місяців тому +6

    அற்புதமான பாடல்கள் ❤❤❤

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 дні тому

    நீண்டகாலம் தொய்வின்றி
    திரை இசை, மேடை கச்சேரி, பக்தி பாடல் பதிவு என பலவற்றிலும் ஒரே நேரத்தில் ஒளி வீசிய அரிதான கலைஞானி. என்றும் குறையாத, கோவில் மணி போன்ற கணீர் குரல் வளம்.

  • @JagannathanAlpa
    @JagannathanAlpa 7 місяців тому +7

    இனிமை அருமை

  • @srimathisubramaniyam9099
    @srimathisubramaniyam9099 7 місяців тому +6

    What a stunning and attracting voice. Great singer and singing with great soul in it.🎉🎉🎉

  • @ilangiamnagarathinam3806
    @ilangiamnagarathinam3806 Місяць тому +1

    Vazhga valamudan . Nagarathinam Trichy

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Місяць тому +2

    இறைவனுக்காக வாழ்ந்தவர்கள்... 🙏🌹

  • @malar_seenu
    @malar_seenu 7 місяців тому +5

    My favourite Singer. Voice Abaram.Iyya Song nice Song.Thank you Sir.

  • @aswiniarideeshaswiniaridee4703
    @aswiniarideeshaswiniaridee4703 5 місяців тому +4

    Muruga enga family ku neetha thunai muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoeshwar2497
    @manoeshwar2497 6 місяців тому +5

    ஆகா, அருமை

  • @deivanayagamthiraviyam3563
    @deivanayagamthiraviyam3563 3 місяці тому +1

    அய்யா அவர்களின் குரலைக் கேட்ப்பதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @rsudhakar4607
    @rsudhakar4607 5 місяців тому +2

    தெய்வக்குரலோன் அய்யா அவர்களின் புகழ் வாழ்க🙏🙏🙏

  • @SenthilKumar-kq2kx
    @SenthilKumar-kq2kx День тому

    என்னைவாழ
    வைத்த தெய்வம்
    செநதில்ஆண்டவர்

  • @dillibabu.c
    @dillibabu.c 3 місяці тому +1

    கந்தர் அலங்காரம் கேட்க தேன் வந்து பாயுது செவிகளில்❤👌👌👌👌👌👌👌👌 நம் கந்தனை செந்திலாண்டவனை
    தெய்வத்திரு.சீர்காழி அய்யா அவர்களின் தேமதுர குரலில் கேட்க ஆனந்தமே♥️🌹👌👌👌👌👌👌👌👌🙏

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    முருகா முருகா முருகா

  • @rathinamnewnagam4538
    @rathinamnewnagam4538 6 місяців тому +3

    ஐயா அவர்கள் குரல் கேட்டு எனக்கு என் அழகான தமிழ் இலக்கியம் இசை இரண்டும் இணைந்து இனிமை இனிமை. இனிமை ❤❤❤🌹🙏🌼👌

  • @MurugaiahMurugaiah-rm3vo
    @MurugaiahMurugaiah-rm3vo 6 місяців тому +6

    தெய்வ குறள் அய்யயா

  • @venugopal8676
    @venugopal8676 2 місяці тому +1

    இந்த முருகடிமை என்றும் அய்யாவின் குரல்வளத்திற்கு அடிமை

  • @girimuruganandam768
    @girimuruganandam768 6 місяців тому +8

    சாகாவரம் பெற்றவர்.. இவர் வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என நினைத்து பெருமை கொள்கிறேன்..

    • @ramaraorenganathan8508
      @ramaraorenganathan8508 6 місяців тому +1

      நான் நினைத்தேன்.. உங்கள் பதிவு என் பாக்கியம்.. நன்றி.

  • @meenakshi.u8730
    @meenakshi.u8730 18 днів тому

    என்ன ஒரு இசை அறிவு.

  • @Varalakshmi-10
    @Varalakshmi-10 5 місяців тому +2

    Unmaiyai muthal commenter sonnathukku ungalukkum nanry iyyaavin kural kekkum pothu yennaiyaiye nan maranthiduven

  • @UnniKrsna
    @UnniKrsna 5 місяців тому +3

    Muruga Palaniappa Sharanam
    🙏🌸

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 4 дні тому

    வாழும் தெய்வத்தின் குரல்

  • @aadhithyanka9047
    @aadhithyanka9047 7 місяців тому +6

    Murugan Saranam

  • @Venistephen
    @Venistephen 2 місяці тому +1

    இந்த இனிமையான இசைக்கு நான் என்றும் அடிமை

  • @rejirejimon7354
    @rejirejimon7354 Місяць тому

    Iam from Kerala seerkazhi Ayyavode daiveeka kuralukku nan endrum adimai🙏🙏🙏🙏🙏🙏