Ilangai Jeyaraj - Vaan Sirappu - PARMEL AZHAGAR URAI - FULL VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2022
  • பாயிரவியல்- அதிகாரம் 2. வான்சிறப்பு
    அதிகார முன்னுரை:
    அஃதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும், நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
    திருக்குறள்: 11
    வானின் றுலகம் வழங்கி வருதலாற் வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
    றானமிழ்த மென்றுணரற் பாற்று. தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று.
    வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
    தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் உலகத்திற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது.
    உரை விளக்கம்:
    நிற்ப என்பது, நின்று எனத்திரிந்து நின்றது.
    உலகம் என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது, பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்.
    அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.
    திருக்குறள்: 12
    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉமழை.
    துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத்
    துப்பு ஆயதூஉம் மழை.
    பரிமேலழகர் உரை:
    துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
    துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
    பரிமேலழகர் உரைவிளக்கம்:
    தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
    சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின் அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.
    திருக்குறள்: 13
    விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
    துண்ணின் றுடற்றும் பசி.
    விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
    உள் நின்று உடற்றும் பசி.
    பரிமேலழகர் உரை:
    விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்;
    விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
    நின்று உடற்றும் பசி = நிலைபெற்று உயிர்களை வருத்தும் பசி.
    'பரிமேலழகர் உரைவிளக்கம்:
    கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார் 'விரிநீர் வியனுலகத்'தென்றார்; உணவின்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.
    திருக்குறள்: 14
    "ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்." (04) வாரி வளம் குன்றிக்கால்.
    பரிமேலழகர் உரை:
    உழவர் ஏரின் உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;
    புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் தன்பயன் குன்றின்.
    பரிமேலழகர் உரைவிளக்கம்:
    'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது.
    உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு.
    திருக்குறள்: 15
    "கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    யெடுப்பதூஉ மெல்லா மழை
    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    பரிமேலழகர் உரை:
    கெடுப்பதூஉம் = பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;
    கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்;
    எல்லாம் மழை = இவை எல்லாம் வல்லது மழை.
    பரிமேலழகர் உரை விளக்கம்:
    `மற்று` வினைமாற்றின்கண் வந்தது.
    `ஆங்கு` என்பது மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல்.
    கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார்.
    `எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி.
    வல்லது என்பது அவாய்நிலையான் வந்தது.
    மழையினது ஆற்றல் கூறியவாறு.
    திருக்குறள்: 16
    "விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
    பசும்புற் றலைகாண் பரிது."
    விசும்பின்துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
    பசும்புல் தலை காண்பு அரிது.
    பரிமேலழகர் உரை:
    (இதன் பொருள்)விசும்பின் துளி வீழின் அல்லால் = மேகத்தின் துளி வீழின் காண்பதல்லது;
    மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது = வீழாதாயின், அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.
    பரிமேலழகர் உரைவிளக்கம்:
    'விசும்பு' ஆகுபெயர்.
    'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.
    இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்.

КОМЕНТАРІ •