பெருமாளை அடைய லக்ஷ்மியின் சிபாரிசு தேவை..! "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் | Sri Velukudi Krishnan
Вставка
- Опубліковано 25 вер 2022
- பெருமாளை அடைய லக்ஷ்மியின் சிபாரிசு தேவை..! "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி
#velukkudi_krishnan #velukkudi_krishnanSpeech #Sorpozhivu #Perumal #lakshmikataksham
#onlinetamilnews #guru #குரு #slogam #mahalakshmi #velukudikadaksham #srirangam #devotional #spritual #god
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
நமஸ்காரம் ஸ்வாமி. 🙏."லஷ்மி.ஷீரஸமுத்ரராஜதனயாம்".. ஸ்தோத்திரத்தின் அர்த்தங்கள் அற்புதமான அருமையான விளக்கங்கள்..லஷ்மி கடாட்சம்.. சூப்பர்.. Shree ஆச்சாரயன் திருவடிகளே சரணம்.. 🙏🙏
No one can teach bhakthi than this. Om namo Narayana.
Swami alway s through your upanyasam Lakshmi is presence we can experience Dhanyosmi
தாயார் ஸமேத எம்பெருமான் திருவடிகளுக்கும், ஆழ்வார்கள் திருவடிகளுக்கும், ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
Yes sir I am happy....
Send 2 ND day and 3 rd day part swamiji
🙏🙏🌹🌹
Vanakkam gurujii
🌺🌺🙏🙏adiyaen rAmAnuja dhAsun 🙏🙏🌺🌺athyedhBHutham 💐💐
🌺🌺🙏🙏adiyaen namaskAram 🙏🙏🌺🌺
🙏🙏🙏🙏
உயர்திரு ஸ்ரீ வேலுகுடி கிருஷ்ண சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
நமஸ்காரம் குருஜீ
thanks swamy
ஸ்ரீமதே இராமாநுஜாய நம.
ஸ்ரீ(969)
Ayya undu super ayya
🙏🙏🙏🙏🙏
Danyosmi.namaskarangall.
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🐚🐚🐚🐚
🌹🌹🙇🙏🙏
Aurumai ji
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Namaskaram
நிறைவுப் பகுதி
இப்பகுதியில் மஹாலஷ்மியின் வைபவத்தை மேலும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் சிறப்பித்ததிலிருந்து -
ஸ்வாமி தேசிகர் ஸ்ரீஸ்துதியிலிருந்து "வக்ஷபீடீம்மது விஜயந: பூஷயந்தீம் ஸ்வகாந்த யா " என்றபடி தன் திருமேனி ஒளியால் திருமாலின் திருமார்பை திகழ வைப்பவளாம் என சாதித்தார். திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் தன் உந்தித் தாமரையில் ப்ரஹ்மாவுடனும், ஆதி கேசவ பெருமாள் உந்தியில். ப்ரஹ்மாவை விடுத்து,இவ்விருவரும் சயன கோலத்தில் திருமுடி, திருவடி மாறி சயனித்திருக்கும் ப்ரபாவத்தை எடுத்துரைத்து, ஸ்வாமி நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவனுக்கு என்று ப்ரத்யோகமாய் 10 பாசுரங்கள் பாடியதையும் நினைவு கூர்ந்தார். இவ்வாட்டாறு பெருமான் திருவடியை சேவித்துக் கொண்டே இருக்கலாம். "அருள் தரும் " என துவங்கும் ஆழ்வார் பாசுரத்தை விளக்கி இப்பேர்பட்ட பெருமைகள் பொருந்திய திருவடிதாமாரைகள் தலைமேல் இருந்து எனக்கு மோக்ஷத்திற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் திகழ்கின்ற திருமார்பில் நாச்சியார் எழுந்தருளி அவள் தன் பிறந்த கமான திருப்பாற்கடலையும், புக்ககமான ஸ்ரீவைகுண்டத்தையும் விட்டு பெருமாளின் திருமார்பையே வாச ஸ்தலமாய் கொண்ட ப்ரபாவத்தை எடுத்துரைத்தார். தன் திருமேனி காந்தியால் பெருமாளை ப்ரகாசிக்கிறாள். மனோக்ஞே - பரமாத்மா, ஜூவாத்மா இருவரின் உள்ளத்தையும் அறிந்து கொண்டு இருவருக்கும் பாலமாய் செயல்படுகிறார் . மேலும் ஒருவன் அனைத்து வித்யைகள் கற்றிருந்தாலும் அவன் ப்ரஹ்ம ஞானத்தை அறியவில்லை எனில் அவன் கற்றிருந்த ஏனைய வித்யைகளுக்கு மதிப்பு கிடையாது என அறுதியிட்டார். ப்ரஹ்ம ஞானமே ஞானமாய் போற்றப்படுகிறது என்றார். சந்திரனின் சாபத்தை போக்கிய சயனத் திரு கோலத்தில் சங்கு சக்ரத்துடன் சேவை சாதிக்கும் திரு இந்த ளூர் பரிமளரங்கனை திருமங்கை ஆழ்வார் பக்திப்பிழம்பாய் சேவிக்க வரும் போது கோவில் நடை சாத்தியதால் பெருமான் மேல் 10 பாசுரங்கள் பாடி அதில் திரிவிக்ரமானாய் 3 அடி அளந்தது, ராமனாய் இலங்கைக்கு நடந்தது, கிருஷ்ணனாய் பாண்டவ தூதனாய் நடந்த ப்ரபாவங்களை தன் 'நல்லார் அறிவீர் ' எனது வங்கும் பாசுரம் வாயிலாய் தெரிவித்து, எனக்காகவும் எழுந்து நடந்து காண்பிக்க மாட்டீரா என ஆழ்வார் பிரார்த்தித்ததையும் மேலும் 'சிந்தை தன்னில் ' என்ற பாகரம் மூலமாய் ப்ரஹ்லாதன், விபீஷணன் மனம் அறிந்து செயல்பட்ட உனக்கு என் மனம் அறியவில்லையா என ஆழ்வார் உள்ளத்தை ஸ்வாமிகள் வழி மொழிந்தார். திரிபுவன பூதகிரி ப்ரஸீத மஹ்யம் என பிராட்டியே ஜூலாத்மாக்கள் மனதை அறிந்து வைத்திருக்கிறாள் என்றும் லக்ஷ்யதே அணையா - இவளின் கண்பார்வைக்கு லோகத்தார் இலக்காகிறார் என்றும் அவளின் திருநாம சப்தமே லஷ்மி கடாக் ஷத்தை குறிக்கிறது என்றும் இவள் கடாக்ஷம் கிட்டவில்லையெனில் உலகமே பிறக்காது என்றும் கூறினார். மேலும் உலகமே பிறந்தாலும் அது வளராது. வளர்ந்தாலும் அது வாழ்ந்திருக்காது . வாழ்ந்திருந்தாலும் அது புருஷார்த்தத்தை அடைந்திருக்காது என இவ்வாறு லக்ஷ்மி: திருநாம வைபவத்தை விளக்கினார்.
கமலா - கமௌ-லாதீதி - கமலா க- பரமாத்மாவையும் ம -ஜீவாத்மாவையும் ல - பிராட்டி , பரமாத்வாவிற்கு ஜீவாத்மாவையும், ஜீவாத்மாவிற்கு பரமாத்மாவையும் கொடுத்து வாங்குகிறாள் என்றார். லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்ர ராஜ தநயாம் என்றபடி வெண்தாமரையை கையில் பிடித்துக் கொண்டு, அதையே மாலையாக தரித்துத் கொண்டும், அந்த வெண் தாமரையை ஆசனமாய் கொண்டும் பக்தகோடிகளை கடாக்ஷிக்கிறாள் என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏💐💐
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Srimathe Ramanujaya Namah:
நமஸ்தே ஸ்ரீபாண்டே ஜி.
ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்
CORRECT OM NAMONARAYANA
Narayana
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2ம் பகுதி-
கடந்த 'பகுதியின் சதொடர்ச்சியாய் அருமையாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்தலிருந்து - 'சேவா'என்பது பார்வையையும் அன்பையும் குறிக்கும். சங்கநிதி, பதுமநிதியுடன் சேவை சாதிக்கிறாள். அழகிய வெண்தாமரையை கையில் பிடித்துக் கொண்டு அதையே பீடமாகவும் கொண்டு, அம்மாலையையே தரித்துக்கொண்டும் 3
லோகத்திற்கும் செல்வ செழிப்பை கடாக்ஷித்து கொண்டு
பெருமான் திருவுள்ளத்தையும் அடியார்கள் உள்ளத்தையும் அறந்து கொண்டு அவர்கள் இருவருக்கும் பாலமாய் செயல்பட்டு, 'வாலப்யம் ' என்ற பதத்திற்கு ஏற்றார் போல் ப்ரியமானவளாய்' காந்தஸ்தே'.என ஆளவந்தார் சாதித்தது போல் ஸ்ரீ காந்தனாய் - பிராட்டியின் காந்தனாய் இருப்பதால் தான் பெருமான் புருஷோத்தமனாய் போற்றப்படுகிறார் என்றும் ஸ்ரீ வல்லபேதி ..முகுந்த: என
குல சேகர பெருமான் தன் முகுந்த மாலையில் சாதித்தது போல் ஸ்ரீ வல்லபனாய் இருப்பதால் தான் பெருமான் வரங்களை அள்ளித்தரும் வரதராஜனாய் திகழ்கிறார்.பெருமானுக்கு நிகராய் பிராட்டி 6 கல்யாண குணங்கள் முறையே ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் ஞான பலம் ஆகியவற்றை பூரணமாய் கொண்டவள் எனக் கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
I think that is Thenkalai sidanta. But supported by vedas.Sri suktam mentions Saranam to Mahalakshmi.Surrender is not mentioned to vishnu or even shiva.
Iruparhuanji ut porul iyambuval vazhiya oranvazhi thirunamam Anthea variin meaning I understand nanri Krishna veni ramanuza thasiyai
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
I have to Money 💰💸💰💸💰💸💰💸 give me immediately action start time now okay okay okay thanks for all
முதல் பகுதி
ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்தால் "லக்ஷ்மி கடாக்ஷத்தை " அத்புதமாய் உபன்யஸித்த திலிருந்து -
மஹாலக்ஷ்மியின் திருக்கடாக்ஷத்திற்கு அடியார்கள் அனைவரும் பாத்திரமாகும் விருப்பத்தை கொண்டவர்கள். பிராட்டியின் திவ்ய கடாக்ஷம் ஸகல வித செளபாக்கியங்களையும் ஆனந்தத்தையும் அள்ளித்தரும். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் வரும் லக்ஷ்மீம் க்ஷரஸமுத்ர...முகுந்த ப்ரியாம் மஹாலஷ்மியை வணங்கும் ஸ்லோகமாகவும், அவள் வடிவத்தை த்யானிக்கும் ஸ்லோகமாகவும் அமைந்துள்ளது. இப்பேர்பட்ட பெருமை வாய்ந்த தாயார் அடியேனுக்கு ஸகல விதமான கடக்க்ஷத்தையும் அருள வேண்டும் என்றும் அந்த லக்ஷ்மி தேவியே ஸ்ரீரங்கதாமத்தில் ஜகத்துக்கு எல்லாம் ஈஸ்வரியாக வீற்றிருந்து விஷ்ணுவிற்கு பதியாகவும் திகழ்கிறாள். ஈஸாநாம் ஈஸ்வரி - மஹாலஷ்மியை குறிக்கும் திருநாமம். லோகத்தில் - புருஷத் தன்மையுடன் அதிகாரியாக இருப்பவர்கள் விஷ்ணுவின் அம்சம் என்றும், ஸ்தீரித்துவத்துடன் பெண் தன்மையுடன்அதிகாரியாய் விளங்குபவள் மஹாலஷ்மியின் அம்ச
மாகவும் கருதுகிறோம். லஷ்மி க்ஷீரஸமுதரத்தில் - திருப் பாற்கடலில் உதித்தவள். ( ஜனனி ... மோதஸே) என்ற பராசர பட்டரின் ஸ்ரீ குணரத்ன கோசம் ஸ்லோகத்தை ஸ்வாமிகள் உதாஹரித்து,
எந்த ஒரு பெண்ணிற்கும் பிறந்தகம், புக்ககம் என இரண்டு இடங்கள் உள்ளன. லக்ஷ்மிக்கு பிறந்த கம் திருப்பாற்கடல் புக்ககம் - ஸ்ரீவைகுண்டம். பட்டரின் திருவுள்ளப்படி பிராட்டி இவ்விரண்டு இடத்தை விட்டு ஸ்ரீரங்க தாமததில் நித்ய வாஸம் செய்து அடியார்களுக்கு அருள் பாலிப்பவள் என்றார். எங்கனம் ஒரு குத்து விளக்கு எரியும் போது அது தன்னையும் பிரகாசித்துக் கொண்டு, தன்னை சுற்றியுள்ள இடத்தையும் ப்ரகாசிக்கிறதோ அது போல் பிராட்டியும்" லோகைக தீபாங்குராம் " என்றபடி ஸ்வயம்ப்ரகாசமான தாயார் இந்த லோகத்திற்கே மங்களமாய் தீபமாய் ப்ரகாசிக்கிறாள். அவளை அடைய மற்றொரு சிபாரிசு தேவை இருக்காது. ஆனால் பெருமாளின் பூரண அனுக்ரஹம் பெற பிராட்டியின் சிபாரிசு தேவை என அறுதியிட்டார்.அவள்' தண் ' என்ற குளிர்ந்த பார்வையால் மெதுமெதுவாய் திருகடாக்ஷத்தை பொழிகிறாள் என்றாலே பெருமானின் கடாக்ஷம் அதற்கு எதிர்மறையான தன்மையுடன் இருக்கும் என அறிந்து கொள்ளலாம். இதையே ஆண்டாளும் தன் பாசுரத்தில் "செங்கண் சிறி சிறிதே என் மேல் விழியாவோ " எனப் பாடியுள்ளாள். தன்
திருக்கண்களை திறந்து வில்லை என்றால் ஐஸ்வர்யமே கிட்டாது. அவள் மெல்ல மெல்ல தன் திருக்கண்களால் கடாக்ஷிப்பதால் தான் ப்ரஹ்மா ப்ரஹ்மா
வாய் ,இந்திரன் இந்திரனாகவும் நிலை பெற்று இருக்கிறார்கள். 'த்ரைலோக்ய குடும்பினீம்' என்பது போல் 3 லோகத்தையும் கடாக்ஷிக்கும் பஹீ குடும்பினியாக திகழ்கிறாள் என சாதித்தார்.. மேலும் தாமரை போன்ற திருக்கண்களும், தன் திருக்கைகளில் தாமரையை ஏந்திக் கொண்டு தாமரையையே தன் ஆசனமாக இருப்பிடமாகக் கொண்டு பத்மத்திற்கு ப்ரியமானவளாய் இதன் மாலையையே தரித்துக் கொண்டு இந்த விஸ்வத்தையே கடாக்ஷிக்கிறாள். திருச்சானூரில் பத்மாவதியாக இவ்வாறு திவ்ய தேசம் தோறும் ஒவ்வொரு திருநாமத்தைக் கொண்டு ப்ரஸன்ன வதமாய் - சிரித்த முகத்துடன் ஸகல செளபாக்கியங்களை யும் அள்ளித் தருபவளாக பின இரு திருக் கைகளில் தாமரை பத்மம் பிடித்துக் கொண்டு தன் வலது முன்கையில் அபயஹஸ்தத்தையும், தன் இடது கையால் தன் திருவடிகளை தொட்டு காண்பிப்பவளாகவும் பலப்பல திவ்யாபரணங்களை சாற்றிக்கொண்டும், பக்தர்கள் வேண்டுபவதை அருள் பாலித்து அனைத்து ஜீவன்களாலேயே வணங்கத் தத்தவளாய் விளங்குகிறாள்.
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.க்ஷமிக்க
பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏