எனக்கு விசுவாசம் இருக்கு நான் எப்படியும் பரலோகம் போயிடுவேன் / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 80

  • @TheosGospelHall
    @TheosGospelHall  Рік тому +5

    அன்பு சகோதரர்களுக்கு விசுவாசத்தால் மட்டுமே நாம் நீதிமானாக்கபப்டுகிறோம், அப்படி நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகள் நற்கிரியை செய்ய ஜாக்கிரதையாக இருக்கச்சொல்லி வேதம் போதிக்கிறது, ஆக இரட்சிக்கப்பட்ட விசுவாசி நற்கிரியை செய்ய வேண்டும், அது அவன் நீதிமானாக மாறுவதற்கு அல்ல நீதிமானாக மாறியதால் செய்ய வேண்டும் என்று போதிக்கிறோம், ஆனால் இதைத் தெரிந்தும், மீண்டும்.மீண்டும் நான் ஏதோ நீதிமானாக மாறுவதற்கு கிரியை செய்ய சொன்னதாக சிலர் பதிவிடுகிறார்கள், பல முறை சொன்னாலும் அவர்களுக்கு இது புரியாது அல்லது புரியாதது போல நடிப்பார்கள் அவர்களை விட்டுவிடுவது நல்லது...
    தீத்து 2
    14. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
    15. இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
    யாக்கோபு 2
    26. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +3

      உங்கள் கடந்த வீடியோவுக்கு பதில் கொடுக்கும் விதமாக Tamil Bible Ministry லெனின் ஒரு வீடியோ நேற்று வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் நியாயப்பிரமாணத்தால் நாம் நீதிமானாக முடியாது என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசி, நீங்கள் இந்த வீடியோவில் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக முடியும் என்று போதித்ததாக பாவம் கதை கட்டியுள்ளார், ஆனால் உங்களது இந்த வீடியோவில் பாவத்தை மேற்கொள்ளுவது எப்படி என்பதற்கு நீங்கள் ஆலோசனை கொடுத்துள்ளீர்கள் ஆனா லெனினோ கதையை திரித்து வீடியோ வெளியிட்டுள்ளார், வழக்கம்போல அவரிடம் கேட்டேன் பதில் இல்லை... கமெண்ட்டை நீக்கிவிட்டார் 😢
      அவரின் போதனை சரியோ தவறோ ஆனால் அவரின் நோக்கம் உங்களை கேவலப்படுத்துவது... நீங்கள் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோ வெளியிடுவது.
      நீங்கள் போதிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அனலாக ஒரு இரட்சிக்கப்பட்ட விசுவாசியின் கடமையை வெளிக்கொண்டுவருவதாக உள்ளது, சில நய வஞ்சகர்களிம் சூதுக்கும், துரோகத்திற்கும், நீங்கள் கவலைப்படாதீர்கள்...
      லெனின் மீண்டும் மீண்டும் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக முடியும் என்று நீங்கள் போதிப்பதாக எல்லா வீடியோக்களிலும் சொல்லிவருவது அவரின் கீழ்த்தரமான குணத்தை காண்பித்துவிட்டது, இனியாவது அவரை பின்பற்றும் கூட்டம் விழித்துக்கொள்ள வேண்டும் 😢

    • @விசுவாசம்நீதிமான்
      @விசுவாசம்நீதிமான் Рік тому

      Lenin அவர்களுக்கு நான் போட்ட ஒரு கமெண்ட்
      நானும் சகோ. சாலமன் அவர்களின் வீடியோ பார்த்தேன், நீங்கள் சொன்னதுபோல அவர் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக முடியும் என அந்த வீடியோவில் சொல்ல வில்லையே! பாவத்தை மேற்கொள்ள அதை இதயத்தில் வைத்து பழக்கமாக மாற்றுங்கள் என்று ஒரு இரட்சிக்கப்பட்ட விசுவாசிக்கு உபதேசம் செய்துள்ளார். உங்கள் வீடியோவில் தவறு இல்லை உங்கள் போதனை சரி, ஆனால் அவர் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக மாற முடியும் என்றோ, கிரியை நம்மை இரட்சிக்கும் என்றோ எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை முக்கியமாக நீங்கள் சுட்டிக்காண்பித்த வீடியோவில் பேசவே இல்லையே! மிக கேவலமான துர் உபதேசத்தை பேசிக்கொண்டுவரும் நபர்களை விட்டு விட்டு முன்மாதிரியாக நடக்கும் ஒரு சிலரை தாங்கள் அவமானப்படுத்த கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பு.... வழக்கம் போல இந்த கமெண்ட்டையும் தாங்கள் வெளியிட மாட்டீர்கள் என தெரியும்... உங்களின் உண்மை தன்மைக்கு அது ஒரு நற்சான்று... எற்கனவே இந்த கமெண்ட்டை என் சகோதரன் உங்களுக்கு வெளியிட்டுவிட்டு எங்கள் telegram குழுவில் சவால் விட்டார், நீங்களும் சொன்னதுபோல கமெண்ட் வெளியிடவில்லை உங்களை பின்பற்றிய பலர் அக்குழுவில் இருந்தார்கள், அவர்களுக்கு அதிர்ச்சி, 😂 இப்போது உங்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்...

    • @விசுவாசம்நீதிமான்
      @விசுவாசம்நீதிமான் Рік тому

      இந்த லெனினுக்கு வேற வேலையே இல்லை போலும் பிரதர் இந்த வீடியோவையும் எதிர்த்துள்ளார், அதுவும் நீங்கள்ன்கொடுத்த 3 ஆதாரங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் ஒரே ஒரு வசனத்துக்கு மட்டும் பதில் கொடுக்கிறேன் என்று கண்டதை உளறியிருக்கிறார்... 😂😂😂 மற்ற இரண்டு காரணங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கமுக்கமாக அமைதியாகிவிட்டார்... 😅😅 2:02

    • @stephanraj6584
      @stephanraj6584 Рік тому +2

      அண்ணா மன்னிக்கவும, ஆனால் உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கும் போது தேவன் முன்னாடி நீதிமானாக மாற விசுவாசம் மட்டும் போதாது கிரியையும் அவசியம் என்று போதிப்பதாக உங்கள் பதிவு காணப்படுகிறது, நீங்களே உங்கள் பதிவை திரும்ப திரும்ப கவனியுங்கள் எதில் தவருகிறோம் என்று புரிந்து கொள்ளலாம்,
      அது மட்டும் அல்ல உங்கள் பதிவு வெளியாகின உடனே, உங்களை சார்ந்தவர்கள் சாலமன் அண்ணாவே நீதிமானக மாற விசுவாசம் மட்டும் போதாது கிரியையும் அவசியம் என்று போதிக்கிறார் என்று நினைத்து அந்த காரியத்தை பெரிதாக்கி கொண்டு போகிறார்கள், அது தவறு என்பதை தடுப்பதற்காகத்தான் லெனின் அண்ணா இன்னும் அதை புரியும் படி விளக்கமாக பதிவிடுகிறார்கள், எல்லவரற்றயும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்து கொள்வோம் நன்றி அண்ணா

    • @விசுவாசம்நீதிமான்
      @விசுவாசம்நீதிமான் Рік тому

      @@stephanraj6584 எந்த கண்ணாடி போட்டு பார்க்கிறோம் என்பது முக்கியம்... நீங்கள் பதிவை திரும்ப பாருங்கள் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது... என்பதை வலியுறுத்தாமல் பேசுகிற எவரும் பொய்யர்களே

  • @melvin29aug
    @melvin29aug Рік тому +6

    Excellent brother. Keep on preaching the unadulterated truth and whole counsel of God. May God bless you and use for His glory.

  • @1969bharath
    @1969bharath Рік тому

    Clear & wonderful explanation by you Dear Brother, may our God's name be Glorified, Amen & Amen

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +5

    நம்மை நாமே சோதித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம்.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் தேவ ஆவியானவரே உதவி செய்வாராக ஆமென்

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 8 місяців тому

    Amen

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +4

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @appollocruze
    @appollocruze Рік тому +4

    Praise the lord TGH family, pray for Manipur ,from chengalpattu.

  • @chittibabuchitti8253
    @chittibabuchitti8253 5 місяців тому

    Very nice post brother 🎉

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia Рік тому +2

    Praise the lord pastor.
    அடிக்கடி நான் தியானம் பண்ணுகிற வசனம் இது தான்.‌

  • @ijohngabriel8302
    @ijohngabriel8302 Рік тому +2

    2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
    1 கொரிந்தியர் 15:2

  • @vijayalakshmikm8189
    @vijayalakshmikm8189 Рік тому +2

    Yes brother .glory to Jesus

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 4 місяці тому

    ❤..

  • @SureshKumar-pu1zk
    @SureshKumar-pu1zk 8 місяців тому

    👌👌👍

  • @arulrajarul2181
    @arulrajarul2181 Рік тому +1

    நல்ல விளக்கம் அளித்து உள்ளீர்கள், மிக்க நன்றி.

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Рік тому +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @davids3871
    @davids3871 Рік тому +1

    மிக சரியான விளக்கம்...May God bless you brother.

  • @yogibogi2427
    @yogibogi2427 Рік тому +2

    Super annaya

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому +1

    Praise The Lord Jesus Amen

  • @lillydean7069
    @lillydean7069 Рік тому +1

    Praise God thank you very much brother 🙏

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 7 місяців тому

    ❤🎉

  • @abbymartin831
    @abbymartin831 Рік тому +1

    Praise the lord Pastor, thank u so much for a detail teaching blessing to u ✝️

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 Рік тому +1

    Thank god good preacher

  • @helenjames6016
    @helenjames6016 Рік тому +1

    GOD Bless you in Jesus name

  • @Rajkumar-xb8eu
    @Rajkumar-xb8eu Рік тому +1

    Awesome brother...

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs Рік тому

    Amen Amen Amen thank you so much for sharing this message Pastor

  • @robinrobin8566
    @robinrobin8566 Рік тому

    எனக்கு மிகவும் பயனுள்ள போதனை

  • @joshuvasamuel5651
    @joshuvasamuel5651 Рік тому +1

    Great brother. Praise the Lord

  • @aarondushaaaron3356
    @aarondushaaaron3356 Рік тому +4

    தீத்து 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது தேவனிடத்தில் விசுமானவர்கள் நற்கிரியைகளை செய்ய ஜாக்கிரதையயி௫க்கும்படி நீ இவைகளை குறித்துத் திட்டமாய் போதிக்கவேண்டுமென்று வி௫ம்புகிறேன் இவைகளே நன்மையும் மமனுஷ௫க்கு பிரயோஜனமுமானவைகள்.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Рік тому +1

    Wonderful this is true ❤❤ வேத புரட்டர்களுக்கு சவுக்கடி.... ஆம் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின சத்தியம் இதுவே சகோ.🙏🙏

  • @T.Ravikumar
    @T.Ravikumar Рік тому +1

    💥யோவான்17:3💥
    "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்"
    💥1யோவான்5:10-13💥
    10) தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
    11) தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
    12) குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
    13) உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +3

      1 யோவான் 3
      14. நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
      15. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
      1 யோவான் 3
      17. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
      18. என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
      19. இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
      20. நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

    • @T.Ravikumar
      @T.Ravikumar Рік тому

      @@repentministry1234
      தேவன் முன் நிற்கும் பொழுது நீங்கள் உங்கள் சகோதரர் மேல் வைத்த அன்பின் அளவை வைத்து நியாயம் தீர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு, உங்கள் சகோதர அன்பின் 100% பூரணத்தை பொறுத்து luck அடிக்குதா என்று பார்க்கலாம்.
      எனக்கோ, 100/100 நிச்சயமாக தெரியும் எனக்கு நியாயத்தீர்ப்பு கிடையாது என்று. ஏனென்றால் நான் என் குறைகள் உள்ள சகோதர நேசிப்பை நம்பி இல்லை. தேவனையும் அவர் வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். இதில் எந்த luck'உம் கிடையாது, இது மாறாதது.
      💥யோவான் 5:24💥
      "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +1

      ​​@@T.Ravikumarான் வசனத்தை சொன்னேன் நீங்கள் உங்கள அனுபவத்தை சொல்லுகிறீர்கள் உங்கள் அனுபவத்தின்ன்மூலம் பாபரியத்தின் மூலம் தேவனுடைய வசனத்தை பொய்யாக்குகிறீர்கள்😂😂
      அவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு ஆனால் அவரை விசுவாசிக்கிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.... 😂 விசுவாசம் உண்டு கிரியை இல்லை உங்கள் செத்த விசுவாசம் கடைசி நாளில் என்ன ஆகும் என பார்க்கலாம்😅

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому +1

      அன்பு சகோதரர்களுக்கு விசுவாசத்தால் மட்டுமே நாம் நீதிமானாக்கபப்டுகிறோம், அப்படி நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகள் நற்கிரியை செய்ய ஜாக்கிரதையாக இருக்கச்சொல்லி வேதம் போதிக்கிறது, ஆக இரட்சிக்கப்பட்ட விசுவாசி நற்கிரியை செய்ய வேண்டும், அது அவன் நீதிமானாக மாறுவதற்கு அல்ல நீதிமானாக மாறியதால் செய்ய வேண்டும் என்று போதிக்கிறோம், ஆனால் இதைத் தெரிந்தும், மீண்டும்.மீண்டும் நான் ஏதோ நீதிமானாக மாறுவதற்கு கிரியை செய்ய சொன்னதாக சிலர் பதிவிடுகிறார்கள், பல முறை சொன்னாலும் அவர்களுக்கு இது புரியாது அல்லது புரியாதது போல நடிப்பார்கள் அவர்களை விட்டுவிடுவது நல்லது...
      தீத்து 2
      14. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
      15. இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

    • @T.Ravikumar
      @T.Ravikumar Рік тому +1

      @@repentministry1234
      கிரியை இல்லாத என் விசுவாசம் என்ன ஆகும் என்று வேதம் சொல்கிறது:
      👉1கொரி 3:15👈
      ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.

  • @stephanraj6584
    @stephanraj6584 Рік тому +3

    Bro மனுஷர் முன் நான் நீதிமான் என்று காமிக்க கிரியை அவசியம், ஆனால் தேவன் முன் நான் நீதிமான் என்று காமிக்க இயேசுவின் சிலுவைபாட்டின் விசுவாசம் மட்டுமே, இதைதான் யாக்கோபு வெளிப்படுத்துகிறார்.

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +4

      இத்தனை நாளும் தாங்கள் மனிதர்கள் பார்ப்பதற்காக மட்டும் கிரியை செய்து வந்துள்ளீர்கள் என தெரிகிறதே

    • @stephanraj6584
      @stephanraj6584 Рік тому

      @@repentministry1234 /// ஆம் என்று வைத்து கொள்வோம், மனுஷருக்கு முன் என் கிரியை நீதிமானாக வெளிப்படுகிறது, ஆனால் தேவனுக்கு முன்னாடி என் நீதி கந்தலாக காணப்படுகிறது, so நான் தேவன் முன்னாடி நீதிமான் என்று வெளிப்படுத்துவது இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாட்டின் விசுவாசம் மட்டுமே.

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +2

      ​@@stephanraj6584யாக்கோபு 2
      21. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
      22. விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
      23. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
      24. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
      25. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
      26. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

    • @stephanraj6584
      @stephanraj6584 Рік тому

      @@repentministry1234 /// bro நான் சொல்ல வரும் கருத்து உங்களுக்கு புரிய வில்லையா, மீண்டும் சொல்கிறேன் யாக்கோபு மனுஷர் முன்னாடி நீதிமானாக வாழ விசுவாசம் மட்டும் போதாது கிரியை வேண்டும் என்று போதிக்கிறார்.தவிர, தேவன் முன்னாடி நீதிமானாக மாற விசுவாசம் மட்டும் போதாது கிரியையும் அவசியம் என்று போதிக்க வில்லை, திரும்ப திரும்ப அந்த அதிகாரத்தை வாசியுங்கள் தெளிவடையலாம் நன்றி🙏

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +3

      ​@@stephanraj6584உங்களுக்குத்தான் புரியவில்லை நாம் இரட்சிக்கப்பட கிரியை அவசியம் இல்லை ஆனால் இரட்சிக்கபப்ட்ட நாம் நற்கிரியை செய்ய வேண்டும், அப்படி உங்களால் செய்ய முடியாவிட்டால் நீங்கள் இரட்சிக்கப்படவே இல்லை என்பதே உண்மை... மனிதர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ என் விசுவாசம் கிரியையில் அது வெளிப்படும் வெளிப்படாத விசுவாசம் செத்து போச்சு😊... செத்துப்போன விசுவாசத்தை எப்படி கண்டுபிடிப்பீங்க?? கொஞ்சம் சொல்லுங்க??

  • @agayavanam-sj4ws
    @agayavanam-sj4ws Рік тому +2

    பிரதர், என் அம்மாவுக்கு ஒரு வியாதி இருக்கு. ஜெபம் செய்கிறோம், 6 வருடம் எவ்வளவு மருந்து எடுத்தாலும் சுகமாகவில்லை.
    நாங்கள் என்ன செய்யவேண்டும்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому +3

      கொஞ்சம் வருத்தமாக உண்டு, நாங்களும் ஜெபிக்கிறோம், தேவனது சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுப்போம்

    • @agayavanam-sj4ws
      @agayavanam-sj4ws Рік тому +3

      @@TheosGospelHall நன்றி பிரதர்🙏 கர்த்தர் சித்தம் நிறைவேறும்.

  • @robinsamuel8367
    @robinsamuel8367 Рік тому

    How can anyone will prove? It's highly impossible to say I'm upto the mark as God expects. On daily basis r weekely basis r monthly basis can we keep on questioning ourselves? It's a bit confusing right, till our death no can prove that he/she had lead a life as God expected

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +1

      1 யோவான் 3
      18. என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
      19. இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
      20. நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
      இதை உங்களால் செய்ய முடியாதா?? வசனத்தில் உள்ளதைப் பேசுகிறார் முடியாவிட்டால் விட்டுவிடுங்கள்

    • @robinsamuel8367
      @robinsamuel8367 Рік тому

      @@repentministry1234 do u follow the above verse n abide to it?

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +1

      ​​@@robinsamuel8367o you said the apostle John made a mistake... He should not have written this word?? 😂😂😂😂 So you are interpret God's word by your experience. 😂😂

  • @bharathit4970
    @bharathit4970 Рік тому

    பிறதர்..சாதன். என்று .ஒருவ்ன் . இருக்கக் கான

  • @repentministry1234
    @repentministry1234 Рік тому +2

    உங்கள் கடந்த வீடியோவுக்கு பதில் கொடுக்கும் விதமாக Tamil Bible Ministry லெனின் ஒரு வீடியோ நேற்று வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் நியாயப்பிரமாணத்தால் நாம் நீதிமானாக முடியாது என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசி, நீங்கள் இந்த வீடியோவில் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக முடியும் என்று போதித்ததாக பாவம் கதை கட்டியுள்ளார், ஆனால் உங்களது இந்த வீடியோவில் பாவத்தை மேற்கொள்ளுவது எப்படி என்பதற்கு நீங்கள் ஆலோசனை கொடுத்துள்ளீர்கள் ஆனா லெனினோ கதையை திரித்து வீடியோ வெளியிட்டுள்ளார், வழக்கம்போல அவரிடம் கேட்டேன் பதில் இல்லை... கமெண்ட்டை நீக்கிவிட்டார் 😢
    அவரின் போதனை சரியோ தவறோ ஆனால் அவரின் நோக்கம் உங்களை கேவலப்படுத்துவது... நீங்கள் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோ வெளியிடுவது.
    நீங்கள் போதிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அனலாக ஒரு இரட்சிக்கப்பட்ட விசுவாசியின் கடமையை வெளிக்கொண்டுவருவதாக உள்ளது, சில நய வஞ்சகர்களிம் சூதுக்கும், துரோகத்திற்கும், நீங்கள் கவலைப்படாதீர்கள்...
    லெனின் மீண்டும் மீண்டும் நியாயப்பிரமாணத்தால் நீதிமானாக முடியும் என்று நீங்கள் போதிப்பதாக எல்லா வீடியோக்களிலும் சொல்லிவருவது அவரின் கீழ்த்தரமான குணத்தை காண்பித்துவிட்டது, இனியாவது அவரை பின்பற்றும் கூட்டம் விழித்துக்கொள்ள 😢

  • @விசுவாசம்நீதிமான்

    இந்த லெனினுக்கு வேற வேலையே இல்லை போலும் பிரதர் இந்த வீடியோவையும் எதிர்த்துள்ளார், அதுவும் நீங்கள்ன்கொடுத்த 3 ஆதாரங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் ஒரே ஒரு வசனத்துக்கு மட்டும் பதில் கொடுக்கிறேன் என்று கண்டதை உளறியிருக்கிறார்... 😂😂😂 மற்ற இரண்டு காரணங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கமுக்கமாக அமைதியாகிவிட்டார்... 😅😅

    • @விசுவாசம்நீதிமான்
      @விசுவாசம்நீதிமான் Рік тому +1

      @AmudhanJeyasi அட இந்த அளவிற்கு முட்டுக்கொடுக்கும் சகோதரா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வீடியோ போட்டிருக்கிறார்... திருப்பூர் போதகரின் மற்றொரு தாக்கு என தலைப்பு வைத்து சீண்டியுள்ளார் அதுவும் அரை குறையாக வீடியோ பாவம் அவரை நினைத்தால் வருத்தமாக உள்ளது....

  • @mannachannel4564
    @mannachannel4564 Рік тому +1

    Amen