148 கீர்த்தனை | தேவா இரக்கம் இல்லையோ | Dheva Irakkam illaiyo | michael samraj | composer thought

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • michaelsamraj@gmail.com
    நண்பர்களே!
    நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
    மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
    சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
    பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
    கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
    தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    Michael Samraj
    பல்லவி
    தேவா, இரக்கம் இல்லையோ?-இயேசு
    தேவா, இரக்கம் இல்லையோ?
    அனுபல்லவி
    ஜீவா, பரப்ரம[1] ஏ கோவா, திரித்துவத்தின்
    மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன், ஒரே - தேவா
    சரணங்கள்
    1. எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்
    இல்லாமை நீக்கும் அருளே,-கொடும்
    பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
    கொல்லா தருள் புரியும் நல்லாயன் யேசு நாதா! - தேவா
    2. எங்கும் நிறைந்த ஜோதியே,-ஏழைப்
    பங்கில் உறைந்த நீதியே,-எங்கள்
    சங்கடமான பாவ சங்கதங்களை[2] நீக்கும்
    துங்க இஸ்ரவேலின் வங்கிஷ க்ரீடாபதி! - தேவா
    3. வேதாந்த வேத முடிவே,-ஜெக
    ஆதாரம் ஆன வடிவே,-ஐயா,
    தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே; யேசு
    நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை. - தேவா
    - வே. சாஸ்திரியார்
    148 கீர்த்தனை | தேவா இரக்கம் இல்லையோ | Dheva Irakkam illaiyo | michael samraj | composer thought

КОМЕНТАРІ • 11