"விறகுவெட்டியின் மனைவி" - சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணின் சரிதம் ..|| இறையன்பன் குத்தூஸ்.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • சொர்க்கத்தில் முதலில் நுழையும்
    பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்
    கொஞ்சம் கவனம் வையுங்கள்
    அன்னை ஃபாத்திமா காலத்து சம்பவமிது புரிந்து கொள்ளுங்கள்
    பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
    -----------------------------------------------------------------------------------------------------------------
    இறையன்பன் குத்தூஸ் பாடிய, பாத்திமா நாயகியின் காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிடும் "சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்" என்ற பாடல்.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    LYRICS
    சொர்க்கத்தில் முதலில் நுழையும்
    பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்
    கொஞ்சம் கவனம் வையுங்கள்
    அன்னை ஃபாத்திமா காலத்து சம்பவமிது புரிந்து கொள்ளுங்கள்
    பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
    ஒருநாள் நபியிடத்தில் அன்னை பாத்திமா
    கேள்வி கேட்டாராம்
    சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணை பற்றி
    செய்தி கேட்டாராம்
    நபிகள் சிரித்துக் கொண்டாராம்
    உடனே எடுத்துச் சொன்னாராம்
    நபிகள் சிரித்துக் கொண்டாராம்
    உடனே எடுத்துச் சொன்னாராம்
    என் அருமை மகளே
    நீ சொர்க்கத்திற்கு தலைவியே ஆவாய்
    என்றாலும் விறகு வெட்டி மனைவி ஒருத்தி
    முதலிலே போவாள்
    என்றாலும் விறகு வெட்டி மனைவி ஒருத்தி
    முதலிலே போவாள்
    அந்த ஒரு பெண்ணின் வீடு உனது வீட்டிற்கு
    பக்கத்திலே என்றார்
    அன்னையோ அந்த பெண்ணை பார்ப்பதிலே
    ஆவலைக் கொண்டார்
    அலியாரின் அனுமதியை பெற்றுக் கொண்டு
    காணவே சென்றார்
    வாசலில் நின்று அந்த வீட்டுக் கதவை
    அன்னை தட்டினார்
    யாரது என்ற ஒரு குரல் மட்டும்
    காதில் எட்டியது
    நான் தான் நபிமக்களார் பாத்திமா
    உம்மமைக் காணவே வந்தேன்
    நான் உங்கள் வீட்டுக்குள்ளே உங்களிடம்
    பேசவே வந்தேன்
    இவ்விதம் அன்னை சொல்லியும்
    வீட்டுக்கதவு திறந்திடவில்லை
    என் கணவர் இல்லா நேரம் கதவு திறக்க
    அனுமதி இல்லை
    என் கணவர் இல்லா நேரம் கதவு திறக்க
    அனுமதி இல்லை
    அல்லாஹ்வின் தூதர் மகளை காண்பதற்கு
    ஆசை தான் எனக்கு
    என்றாலும் என் கணவர் அனுமதியில்லை
    தெரியுமா உமக்கு
    நாளைக்கு மீண்டும் வந்தால் கணவரிடத்தில்
    கேட்டு வைக்கிறேன்
    நாயகியே வருந்திட வேண்டாம் நான் உங்களை
    கேட்டுக் கொள்கிறேன்
    விறகுவெட்டி சம்சாரத்தை சோதிக்கவே அன்னை நாடினார்
    மறுநாள் புதல்வர்களை அழைத்துக் கொண்டு
    வீடு ஏகினார்
    கதவினை தட்டியதும் யாரது என குரலும் கேட்டது
    ஹாசிம் நபி மகள் வந்துள்ளேன்
    ஹசன் ஹுஸைனும் கூட வந்துள்ளார்
    என்று அன்னை சொன்னதுமே
    விறகு வெட்டி மனைவி கூறினார்
    என்னுடைய கணவரிடம் நீங்க வர அனுமதி பெற்றேன்
    என்னுடைய கணவரிடம் நீங்க வர அனுமதி பெற்றேன்
    என்றாலும் உங்கள் புதல்வர் உள்ளே வர
    அனுமதி இல்லை
    என்றாலும் உங்கள் புதல்வர் உள்ளே வர
    அனுமதி இல்லை
    நாயகியே மறுத்தமைக்கு என்னை நீங்கள்
    மன்னிக்க வேண்டும்
    நான் கூறும் வார்ததைகளை தயவு செய்து
    சிந்திக்க வேண்டும்
    மூன்றாம் நாள் தனிமையிலே அன்னை பாத்திமா
    மறுபடி சென்றார்
    முன்செய்த படியே அந்த வீட்டுக்கதவை
    அன்னை தட்டினார்
    விறகு வெட்டி மனைவி வந்து கதவை திறந்து
    உள்ளே அழைத்தார்
    விறகு வெட்டி மனைவி வந்து கதவை திறந்து
    உள்ளே அழைத்தார்
    என்னுடைய கணவரிடம் வருகை குறித்து
    அனுமதி கேட்டேன்
    எம்பெருமான் குடும்பத்தினர் யார்வந்தாலும்
    தடையில்லை என்றார்
    எம்பெருமான் குடும்பத்தினர் யார்வந்தாலும்
    தடையில்லை என்றார்
    இருவரும் இவ்விதமாய் பேசிக்கொண்டு
    இருந்த போதிலே
    இறைவன் தொழுகைக்காக அஸர் நேரம்
    பாங்கு கேட்டது
    கை கால்கள் ஒழுவெடுத்து
    இருவருமே தொழுதிடலானார்
    கண்களில் நீர் பெறுக
    இறைவனிடம் வருந்திடலானார்
    தொழுகையை முடித்துடுக்கொண்டு வேறொருபுறம்
    அன்னை அமர்ந்தார்
    தன்மையுள்ள விறகுவெட்டி மனைவி
    அஸர் தொழுகைக்குப் பின்னே
    தன்னிரு கைகள் ஏந்தி உருக்கமான
    பிரார்த்தனை கேட்டார்
    அல்லா நான் செய்யும் சேவையிலே
    என் கணவர் மகிழ்ந்திட வேண்டும்
    அவருக்கு ஆயுள்பலம் தேகநலம்
    அளித்திட வேண்டும்
    அவருக்கு ஆயுள்பலம் தேகநலம்
    அளித்திட வேண்டும்
    என்னுடைய பிரார்த்தனையை என் இறைவா
    ஏற்றுக் கொள்வாயே
    என்று துஆ முடித்து விறகு வெட்டி மனைவி எழுந்தார்
    அங்கிருந்த அன்னை பாத்திமா அதனைக் கண்டு
    நெஞ்சம் நெகிழ்ந்தார்
    அல்ஹம்துலில்லா என உணர்ச்சி பொங்க
    கூறி நெகிழ்ந்தார்
    அஸ்லலாமு அலைக்கும் என ஸலாம் கூறி
    விடை பெற்றுக் கொண்டார்
    அடுத்த நாள் தனதருமை தந்தையிடம்
    நடந்ததைச் சொன்னார்
    அடுத்த நாள் தனதருமை தந்தையிடம்
    நடந்ததைச் சொன்னார்
    இறைவனை வணங்காமல் வேறெதுவும்
    வணங்க கட்டளையிருந்தால்
    இனிதான கணவனையே வணங்கும்படி
    அனுமதித்திருப்பேன்
    இனிதான கணவனையே வணங்கும்படி
    அனுமதித்திருப்பேன்
    கணவனின் உடமைகளை கவனமாக காத்துக் கொள்பவள்
    கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள்
    கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள்
    கணவனின் காலடியில் காலமெல்லாம் சேவை செய்பவள்
    கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள்
    கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள்
    கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள்
    நாளைய சொர்க்கத்திலே நல்லிடத்தை பெற்றுக் கொள்வாளே
    நரகத்தின் கொடுமையான தண்டனையின்றி தப்பிக் கொள்வாளே
    நரகத்தின் கொடுமையான தண்டனையின்றி தப்பிக் கொள்வாளே
    என்னருமை பாத்திமாவே ஒட்டகத்தில்
    நீ வரும் பொது
    ஏற்புடைய விறகுவெட்டி மனைவி அந்த
    ஒட்டக கயிற்றை
    கையிலே பிடித்தபடி முதலில் சொர்க்கம் நுழைந்திடுவாளே
    கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாயே
    என்று நபி நாயகமே
    எடுத்துரைத்தார் அருமைத் தாயமாரே
    எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
    ஜெயம் பெருவீரே
    எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
    ஜெயம் பெருவீரே
    எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
    ஜெயம் பெருவீரே
    எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
    ஜெயம் பெருவீரே ...................
    _____________________________________________________________________

КОМЕНТАРІ • 6

  • @Mmb2121
    @Mmb2121 5 місяців тому +3

    மாஷா அல்லாஹ் ...
    நீண்ட நாட்களாக இந்த பாடலை தெளிவாக கேட்கனும் னு ஆசைப்பட்டேன் ....
    கிடைத்துவிட்டது.
    அருமை .
    👌

  • @MohammedmuzzammilMohammed
    @MohammedmuzzammilMohammed Місяць тому +2

    மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையாக இருக்கு

  • @mlellardeen6758
    @mlellardeen6758 5 місяців тому +3

    Masha Allah!!!

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 5 місяців тому +3

    மாஷா அல்லாஹ்

  • @selvamapm9897
    @selvamapm9897 25 днів тому +1

    MASHA ALLAH

  • @AbdulMajeed-nd2tg
    @AbdulMajeed-nd2tg 5 місяців тому +2

    Mashaallah❤❤❤❤❤❤❤❤