மகிமை தரும்! பிரம்ம முகூர்த்த நேரத்தில் குருவாயூரப்பன் வழிபாடு | ஆன்மீக தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம்.[2]
    ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம.
    108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில்
    குருவாயூர் கோவிலில் காணப்படும் இறைவனின் சிற்பம் தனிப்பட்டதாகும். மிகவும் புனிதமானது என கருதப்படும் பாதாளாஞ்சனா சிலையில் இருந்து இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
    மிகவும் திவ்யமாக திகழும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனின் சிலை வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் காணப்படுகின்றன மேலும் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் மேலும் நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிப்பதாகும்.
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

КОМЕНТАРІ • 16