சிறகின் நிழலில் அபயம் தேடி இதயம் அமர்கின்றதே..........

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • சிறகின் நிழலில் அபயம் தேடி இதயம் அமர்கின்றதே
    அருளின் மழையில் நனைந்து நனைந்து நதியாய்
    மாறுகின்றேன் நான் நதியாய் மாறுகின்றேன்
    அன்பின் தணலில் அணைப்பைத் தேடி உள்ளம் விரைகின்றதே
    கதிரோன் ஒளியிலே நனைந்து நனைந்து ஒளியாய்
    மாறுகின்றேன் நான் ஒளியாய் மாறுகின்றேன்
    கோடி மின்னல் தேடிவந்து சூழ்ந்து கொண்ட பரவசம்
    உந்தன் அன்பின் அலைகளில் விழுந்து கரைந்து
    அன்பாய் மாறிடும் அனுபவம்
    வாசல் திறந்தேன் தலைவனே வா வா என் இறைவனே
    கரைகள் தேடும் அலைகள் போலவே கண்கள் உனை தேடும்
    உழைப்பின் களைப்பில் உவகை கழிப்பில் உள்ளம் உனைப் பாடும்
    கண்கள் மூடி திருமுன் அமர்ந்ததும் இதயம் உனை தொடும் அனுபவம்
    உன் அருகில் வந்து கதைகள் பேசும் இனிய அன்பின் சங்கமம்
    உன் பாதம் தழுவிய பரவசம்
    என்ன தவம் செய்தேன் இறைவா உன்னில் மனம் கலந்தேன்
    கணமேயாகினும் யுகமாய் மாறும் இறையே உனை நினைந்தால்
    நுகமும் இனிதாய் சுமையும் எளிதாய் அகமே நீ நிறைந்தாய்
    முடிவே இல்லா ஜீவ ஊற்றில் பாவம் கழுவிய பரவசம்
    நான் எல்லாம் மறந்து தெய்வம் தொழில் சாய்ந்து கொள்ளும் அனுபவம்
    என்னை தந்தேன் உன்வசம்
    என்ன தவம் செய்தேன் இறைவா உன்னில் மனம் கலந்தேன்

КОМЕНТАРІ • 6