💕அற்புதமான வாசிப்பு😍🙏15/07/23🙏சனி பிரதோஷம்😲🙏திருவ(ல்)லம்🙏 அடியார்கள்😲ph.9629504743.🙏.ph.9500857662🙏

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 🙏முதல் திருமுறை🙏
    🙏திருஞானசம்பந்தர்🙏
    எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
    தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
    தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1🙏
    தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
    தூயவன் தூமதி சூடியெல்லாம்
    ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
    சேயவன் உறைவிடந் திருவல்லமே.2🙏
    பார்த்தவன் காமனைப் பண்பழியப்
    போர்த்தவன் போதகத் தின்னுவை
    ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே. 3🙏
    கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
    மைதவழ்திருமகள் வணங்கவைத்துப்
    பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
    செய்தவன் உறைவிடந் திருவல்லமே. 4🙏
    சார்ந்தவர்க் கின்பங்கள்
    தழைக்கும்வண்ணம்
    நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
    தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
    சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே 5🙏
    பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 6🙏
    இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
    நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
    திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 8🙏
    பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
    அரியவன் அருமறை யங்கமானான்
    கரியவன் நான்முகன் காணவொண்ணாத் தெரியவன் உறைவிடந் திருவல்லமே, 9🙏
    அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
    குன்றிய அறவுரை கூறாவண்ணம்
    வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
    சென்றவன் உறைவிடந் திருவல்லமே.10 🙏
    கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
    நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
    குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
    பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.11 🙏

КОМЕНТАРІ • 17