உமா ரமணன் புகழை இந்த பாடல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு கொண்டு செல்லும் அவர் இன்று இவ்வுலகை விட்டு நீங்கீனாலும் இந்த பாடல் அவரது புகழை வாழ வைக்கும் அவருக்கு மனமார்ந்த அஞ்சலி
இந்த படம் வெளிவந்த போது என் வயது 13. இந்த படத்தின் நாயகி சாந்தி கிருஷ்ணாவை படத்தில் பார்க்கும் போது இப்படி சுருள் சுருளான கூந்தலுடன், கன்னத்தில் அழகான சில பருக்களுடன், சிரித்த முகத்துடன் நமக்கும் ஒரு தோழி, காதலி கிடைக்க மாட்டாளா என்று பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஏங்கியதுண்டு ‼️அதனால்தான் 53 வயதில் இந்த பாடலை கேட்கும் போது கூட என் மனது அந்த இளமையான, இனிமையான நாட்களை எண்ணி பெருமிதம் கொள்கிறது.அந்த காலத்தில் என் போன்றவர்களுக்கு கனவு கன்னி சாந்தி கிருஷ்ணதான் ‼️இந்த பாடல் படத்தில் சந்தோசமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், பாடலை பாடியவரின் குரலில் ஒரு சோகம் இளையோடி கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. இந்த பாடலை படக் காட்சியோடு பார்க்கும்போது சந்தோஷமான உணர்வுகளுடனும், காட்சி இல்லாமல் பாடலை மட்டும் கேட்கும்போது ஒரு சோகமான உணர்வுகளுடனும் ரசிக்கக்கூடிய ஒரு அற்புதமான பாடல். அதனால்தான் இந்த பாடலை பாடிய உமா ரமணனின் பாடல்களிலேயே இது எவர் க்ரீன் பாடலாக இருக்கிறது.இந்த பெருமையெல்லாம் இசையமைத்த இசைஞானியையே சாரும்.
ஜாஹிர் ஹுசைன்.
காரைக்கால்.
S sir itha paathu ootyla eduthathahu ipa nenacaalum palaiya ooty school days 😭😭😭😭I miss those days
என்னானு தெரியல இந்த பாட்டு கேட்க்கும் போதெல்லாம் உஉள்ளுக்குள்ள என்னென்னமோ பன்னுது........ஏனா இளையராஜா இசை அப்படி.......vera level song semmmmmmmmmma
இந்த பாடலை கேட்கும் போது அருமையான பயணம் செய்வது போல் இருக்கும் என்று என்றும் மிக அருமையான இசை..
Sir please listen tajmahal thevayillai song it was re assembeled by Bala barathy
டைம் மெஷின் தேவை இல்லை....இளையராஜா பாடல்கள் போதும் நாம் நினைக்கும் அந்த இனிமையான ,இளமையான காலத்துக்கு சென்று வந்து விடலாம்...
Maestro Ilayaraja's era is diamond era of village music n combine modern music 🥰♥️💝💯💖💓❤️😄
பாட்டு போலவே சில கமண்ட்களும் படிக்க சூப்பரா இருக்கு....
Ilayaraja rasigargal sirandha isai piriyargal tharamaana isai virumbeegal
எனக்கு வயது 35
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(31/7/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
இந்த படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன்..
எனக்கு இப்போது வயது 53..
இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்..
தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே ஒரு மாடி வீடு எங்களுடையது. அப்பொழுது எனக்கொரு 6-7 வயதிருக்கும். தினமும் நடந்து St. Patricks ஆங்கில பள்ளிக்குச் செல்லும்போது இலங்கை வானொலி ஊடாகப் பலமுறை கேட்ட பாடல். வாழ்க்கை ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த காலமது. இன்று சிட்னி நகரில் பல்வேறு சவால்களுடன் வாழும் நிலை. எப்படியும் இந்நிலை முன்னேறிவிடும் என்ற அற்புதமான நம்பிக்கையும், அந்நாட்களை நினைந்து கண்ணீரும் இப்பாடல் மூலம் ஒருங்கே கொடுத்த நம் இறைத்தூதர் இசைஞானிக்கு நன்றிகள்.
உலகில் எங்கு வாழ்ந்தாலும் நம்ம நாடும் மனிதர்களும் தெருவில் இருக்கும் மனிதர்களையும் மரங்களையும் பாடல்களையும் எங்கும் காண முடியாது பணம் எல்லாம் ஒன்றும் இல்லை இங்கு பிறந்து இங்கு வாழ்ந்து இங்கே முடியும் வாழ்க்கை வரம் சகோ
சில நொடிகளில் வயலின் இசையில் நம்மை ஏற்றி பிரபஞ்சத்தை சுற்றி வந்து விடுகிறார் இளையராஜா, ஒளியை விட ஒலி வேகமாக செல்லும் இளையராஜாவின் இசையில் மட்டும்
இந்த பாடலில் வயலின் வாசித்த அனைவருக்கும் ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும்.. vera level 🎶
@@johnsandy9857 தம்பி இந்த பாட்டுல வயலின் தான் background.. அது கூட தெரியாமல் ஏன் தம்பி காமெடி பன்ற😅
@@user-mf2rz5gd9h nethan pa comedy pannitu irruka poi song composing paru 😂😂
பாட்டு இனிமையாக இருந்தாலும் மனசுக்குள் ஒரு இனம்புரியாத கவலையாக இருக்கிறது..... எவ்வளவு முறை கேட்டு விட்டேன்...
🙏🙏🙏ஓம் சாந்தி உமா ரமணன் அம்மா🙏🙏🙏
என்ன உச்சரிப்பு, குரல் வளம்.. தமிழ் சினிமா உங்களை கொண்டாட தவற விட்டது.
உங்கள் பாடல்கள் மூலம் நீங்கள் என்றும் ரசிகர் உள்ளங்களில் இருப்பீர்கள் 🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அப்போ எதையோ இழந்தது போல ஒரு feel ல உண்டாக்குகிறது
இந்த கமெண்ட் எல்லாமே அவர்களின் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறது இந்தப் பாடலை இப்போதும் கேட்கும்போது
இந்த வயதில் வரும் காதல்...மரணிக்கும் வரை மனதில் இருக்கும்.. அருமையான குரல்.. இசை...அன்பு வளரட்டும் ❤️
இது போன்ற பாடலுக்கு கோடிக்கணக்கான கமெண்ட்ஸ் தர வேண்டும். 200-300 பத்தாது.
Edit 1: நன்றி 529 லைக்ஸ். 1k கிடைக்குமா?
நான் இதை எழுதும்போது, ஏதோ 300 கமெண்ட்ஸ் இருந்தது. இப்போது 1500க்கு மேல்...அருமை
What's the composing by haiya Isaiarasar Isaingani .he is best haiya.god gift for us sir.tears.
pala kodi yennangal nam nenjangalail iruku.... adhan yeludha varthaigal dhan innum kedaikavillai.
மீண்டும் இந்த படத்தை திரையரங்கில் திரையிட்டால் முதலில் சென்று பார்ப்பவன் நானாக இருப்பேன். இந்த படம் வந்த போது எனக்கு வயது 10. இப்போது 50 ஆகிறது. அறியாத வயதில் பார்த்த அற்புதமான திரைப்படம், இல்லை, இல்லை, இசைப்படம், இசைக்காவியம்.
வாழ்க இசை ஞானி..
மனதை உருக்கும் ..
ஆனந்த ராகம்..💓💓💓
Any 2020...
Really a fantastic song with my school life achievement. Srini
இதை போல் ஒரு இசை கோர்பை அமைக்க வேறு ஒருவருக்கு சில யுகங்கள் கூட ஆகலாம்
இது போன்ற ராகங்களை கேட்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும்
இந்த பாடல் கேட்க, காரணம் இல்லாமல் கண்ணீர் வரும்... ஆனந்த இராகம்..
நான் கார் டிரைவிங் சோர்வாக இருக்கும்போது இந்தப் பாடல் ரேடியோவில் வந்தா புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றிகள் பல
இப்பாடலில் ஒரு தலைமுறையின் வலி மிகுந்த நினைவுகள் அடங்கியுள்ளன. மரணத்தின் அந்திமக்காலங்களில் இப்பாடல் மிகசிறந்த வலிநிவாரணி
@@RAMESHRAMESH-un2gp absolutely...well said... I can feel ur comment... and I have experienced it too....👌👌👌👌
அலைகள் ஓய்வதில்லை படமும் இப்படமும் ஓரே சமயத்தில் வந்தது இப்படத்தின் கருத்தும் இசை பாடல்கள் அனைத்தும் அதை விட இது மிகவும் சிறந்தது
இந்த மாதிரி ஆனந்த ராகம் மீட்ட ராஜாவினால் மட்டுமே முடியும் எப்போது கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல்
இந்த மகேஸ்வரன் மணிவேல் அன்புடன் நன்றி வணக்கம்.
நான் இந்த பாடலை கேக்கும் பொது என் மனதுக்குள் ஒரு வித்தியாசமான தென்றல் காற்று வீசும். நான் சுவாசிக்கும் வரை இந்த பாடலுக்கு அடிமை.
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
துள்ளி வரும் உள்ளங்களில், தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை, அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்ததின் பாவங்களே
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ
பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட, தாலங்கள் போட
வானெங்கும் போகதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலலாலா லாலலாலா லாலாலாலா...
வண்ண வண்ண எண்ணங்களும், வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும், சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம், காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலலாலா லாலலாலா லாலாலாலா...
உமா ரமணன் சகோதரிக்கு நன்றி. முழுவதும் உச்ச ஸ்தாயில் பாடப்பட்ட மிக அற்புதமான பாடல்.
இளையராஜ தெய்வம்.
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja ,
I have come to conclusion that IR is not a human being...he is GOD...out
of reach of other mortals....Salutes to the legend IR...
shank n ARR songs are good but they don’t last long in the heart. Just for the pleasure of the time being
இளையராஜா, என்ன மனுஷன்யா நீ (நீங்கள்)? செல்போன் கண்டுபிடிக்காத (பயன்படுத்தாத) காலத்திலேயே ரிங்டோன் போட்டு கொடுத்துட்டியே (கொடுத்து விட்டீர்கள்). பாடல் முழுவதும் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தாலும் முதல் முப்பத்தெட்டு வினாடிகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. வானில் பறப்பது போன்ற உணர்வையே தருகிறது. நீ கடவுள் தான்யா.
பள்ளி பருவ காதலை நினைவூட்டுகின்றன. என்ன ஒரு அருமையான இசை.பள்ளி பருவத்திற்கே நம்மை கொண்டு செல்கின்றன
இந்த பாடல் கேட்டாலே நான் எவ்வளவுதான் சந்தோசமாக இருந்ததாலும் மனம் தானாகவே கண்ணீர் விடும் என் பள்ளி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டுவரும்
இன்றும் அதே இளமை,புத்துணர்ச்சி கிடைக்கும் பாடல்கள்,அதுவே இளையராஜா. இந்த நூற்றாண்டின் இசை அரசன் என்றால் மிகையாகாது
என்னமோ தெரியல இந்தபாடலை கேட்கும் போது என் இளமைக்கால நினைவுகளை என் கண்முன்னே காண்கிறேன் என்னுடன் 1984, வருடத்தில் ´+2படித்த என் காதலி யே போன்று இப்பாடலில் வரும் கதாநாயகியே போல் மிக அழகானவள் அதனால் இப்பாடலை பார்க்கும் போது, கேட்கும் போது அவள் ஞாபகம் என்னை வாட்டும் என்னபண்றது காலத்தின் கோலம் அவள் எங்கேயோ நான்???
Just came to know today only as this song was sung by deceased Smt. Uma Ramanan.
Truly speaking she will be with everyone for her musical melody rendition.
Hats off to Shri Ilayaraja Sir.
Tears for Uma Ramanan Amma. Always lingering ...
காலத்தால் அழியாத காதல் தென்றல்! எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும். 🌹🌷
மழலையாக இருந்த அந்த பருவம் வாலிப பருவமாக இருந்தருக்க கூடாதோ
1981 ல் பிறந்தவன் ஏங்குகிறேன்
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் நினைவில் என் இளமை திரும்பவும் கிடைத்ததுபோல கண்கள் பனிக்கின்றன...என்னால் என் கண்ணீரைகட்டுப்படுத்தவே முடிவதில்லை...ராஜா உண்மைலேய கடவுள்தானோ?
ராஜாவின் ஆனந்த ராகங்களை கேட்பதற்கு நாம் என்ன தவம் செய்தோமோ? தெய்வீக ராகங்களை படைத்த இசைஞானிக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👍👍🌺🌻🌸💐🎸🎶🎵
மனச என்னவோ பண்ணுது இளயராஜா இசை எப்ப கேட்டாலும் சுகம்தான்
என்ன ஒரு இசைக்கோர்வை.எவராலும் எண்ண முடியாத கடினமான மற்றும் உள்ளம் உருகும் இசையராஜாவின் வித்தைகளில் ஒரு சிறுதுளி என்பேன் !👌👌👌
துவக்க இசை....... அப்பப்பா ஆனந்த கண்ணீர் மல்க கேட்கிறேன். உமா ரமணனின் மதுர குரல் மழையில் நனைந்து கிறங்கி கிடக்கிறேன். போட்டி போட்டுக்கொண்டு வரும் இசை, பாடலை கொள்ளை கொள்ளும் விதம், இளையராஜா தவிர வேறு யாரால் முடியும்.
எத்தனை வயதான பிறகும் இந்த பாடலை கேட்கும் போது ஏற்படும் ஒரு சுகம் தனி சிறப்பு....
அன்று vivid bharathi, chennai, trichy, ceylon radio செய்த சேவை உன்னதமானது. இந்த பாடலை உலகம் முழுவதும் பரப்பினார்கள். Hats off to Ilayaiyaraja Sir.
ஆனந்த ராகம். வாவ் என்ன ஒரு இசை. இளயராஜா உமாரமணன் இருவருக்கும் பாராட்டுக்கள். இரவில் கேட்டால் தன்னை மறப்பது திண்ணம்.
ராஜாவின் தெய்வீக இசையின் மணிமுத்தில் ஒன்று இந்தப்பாடல். கேட்கும் போதெல்லாம் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். #இசைக்கடவுள்_இளையராஜா
இந்த பாடல நம்மை எங்கெங்கோ அழைத்து செல்கிறது நம் இளமை நினைவுகளை கவலைகள் இல்லாத காலங்களை பட்டாம்பூச்சிகளை போல திரிந்த அந்த சுகமான பருவங்களை நம் கண் முன் கொண்டு வந்த பாடல் மனதைமயக்கிய ஆணந்த ராகம்
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு மட்டும் ஏன் பிரிவு/அழுகையாக வரும்
இதை கேட்கும் போதெல்லாம் பள்ளிப்பருவ நினைவலைகள். மீண்டும் கிடைக்காத காலகட்டம்.
எங்களின் இசை ஞானியே. படைப்பவன் கடவுள் என்றால் . நீயும் கடவுள்தான் இசையை படைத்ததினால். உன் பாடலை கேட்பதற்க்கு எமக்கு ஒரு ஜென்மம் போதாது
Hard to believe that someone from India can compose a piece like this with violins, cello counters in Simhendra madhyamam, that too in the 80s (almost 30+ years ago)... Outrageously brilliant...I would have heard this song atleast a few dozen times, yet every time I listen I find some new element which makes you say wow, how did he conceive this... There cannot be a parallel to Illaiyaraja...
all your points are right except "Hard to believe that someone from India can compose a piece like this with violins"
Rajesh Menon there can be another Einstein in physics but there can't be another Ilayaraja in music.
Sir what you say is undeniable...I believe he is inhuman...he is the most amazing composer ever
Vasudevan Cv if all of them are greats how is it that I'm lost totally in ilayaraja music without understanding a bit of Tamil ?
ராஜா அய்யா ஏழு தலைமுறை பின் கடந்தும் உம் புகழ் ஒழிக்கும் அப்பொழுது இம் மண்ணில் வாழும் ஒவ்வொரு மனித உள்ளங்களும் உம் புகழ் பாடும்.எனக்கு இப்பொழுது வயது 62. இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் என் இளம் வயது காலங்கள் என் நினைவை அழைக்கிறது. வாழ்க இளைய ராஜா அய்யா. இவன் செல்வராஜ் பாலவாக்கம் இ சி ஆர் சென்னை.
இளய தலைமுறையினரும் வாழ்த்தட்டும் இளையராஐாவை .
இளையராஜா தெய்வம், "இசையின் பிதாமகன்
ஒருவனே! எத்தனை முறை கேட்டாலும் மனம் அலுக்கவில்லை!
என் உயிர் பிரியும்நேரத்தில் உமது இசை என் செவிகளில் பாய வேண்டும், அந்த பாக்கியத்தை இறைவன் எனக்கு அருளவேண்டும். வாழ்க! இளையராஜா அய்யா அவர்கள்.
👏👏 .Thiru. Sathyanarayan what a beautiful song. Ilayaraja rasigan.
உமா அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம். நீங்க நல்லா இருங்க அம்மா...
எழுத்துக்களில் மட்டுமே இருந்த உணர்வுகளுக்கு உயிர் தந்தவர் எங்கள் ராஜா 🎶🎵
This is one of the masterpieces ever produced in the world of Music! Can any one believe this song was composed 40 years ago and the entire compostion was done in just 20 minutes?? Real genius! Long live Maestro Ilayaraja 🙏 🙏..
இளையராஜா சார்க்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை.
If Mozart was alive he would've appreciated this opening violins....
படம் வந்து எத்தனை வருடம் ஆச்சு என்று தெரியவில்லை. ஆனால் இன்னைக்கு கேக்குற மாதிரி இருந்தது
துள்ளி திரிந்த காலங்களின் நெஞ்சில் நிறைய...
கண்களில் வெள்ளபெருக்கு...
இந்த படம் நான் M.Com படிக்கும் போது நா ன் என் ஊரான திருவாரூரில் செங்கம் திரையரங்கில் பார்த்தேன். இனிக்கும் நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது
எனது வயது 18 தான் நான் 2k kid தான் இருந்தாலும் இந்த பாடல் என்னை என்னமோ பண்ணு ᴠᴇʀᴀ 11 ராஜா sir
எத்தனை முறை கேட்டிருப்பேன் ? இனம் தெரியாத வலி உள்ளத்தில்.
மறு பிறப்பு இல்லை . இன்றைய வாழ்வை ரசித்து வாழ வேண்டும்.
அருமையான பாடல் . என் இளமைக்காலங்களை நினைவு படுத்துகிறது.
Fast, complex, rich, soulful, tear-jerking (tears of ecstasy)....Is there any other song in the history of Indian Cinema (or even the world) to match the orchestration of the prelude and the 2 interludes of this song? (though IR has composed SEVERAL such songs). He used UMA Ramanan's unique voice! Genius!! Mismatching picturization. Not as bad as other IR songs picturized shoddily. It stays in our hearts because of the ULTRA-powerful MUSIC....WOW, Sir IR!! Rest in hell, the dislikers.
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் கண்களில் எனோ அடங்காமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. இறைவன் இசைஞானி வழியே பேசியதாகவே நான் அறிகிறேன். இந்த யுகத்தில் ஈடு இணை இல்லாத மகா ஞானி
தூத்துக்குடியில் எதனை முறை 80 களில் இலங்கை வானொலியில் இந்த பாடலை ரசித்திருக்கிறேன்.அந்த சின்ன கோவில் சாலை,பனிமய மாதா தெரு கிறிஸ்தவ நண்பர்கள்,கீழூர் ரயில் நிலையம்,மேலூர் ரயில் நிலையம் பசுமையான நினைவுகள் இந்த பாடல் மூலம்
பாடல்களை surpriseஆக Radioவில் மட்டுமே கேட்ட அந்தக் காலம் அருமையானது..! ஒவ்வொரு பாடலும், கல்லில் எழுதிய எழுத்து போல மனதில் நிற்கும்..! வெறும் பாடல் மட்டுமல்ல, அந்த காலமும் சூழலும்..!!
Immortal Ilayaraja. This music is immortal. What an intelligent singer Uma Ramanan is. Spell binding, I will still listen to the same song after 50 years and it will still sound fresh.
இந்த பாடல்,இசை,ஆனந்த ராகமல்ல அபூர்வமான ராகம் மனதை ஈர்க்கும் குரல்...
இந்த பாட்டுக்கு எவன்டா டிஸ்லைக் பண்ணது. ஞான சூனியங்களா. இதுபோல ஒரு காம்போசிஷன் எப்போடா வரப்போகுது. ஜென்மத்துக்கும் வராது.
I'm agree with you.not anyone can make it.absolutely.Isaingani is most best in the world.
For this one music composition we can award bharat rathna for our isaingnani Illayaraja!!!!!
இளையராஜா பாடல் கேட்டாலே மெய்மறந்து விடுவேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அருமையானா பாடல் 🎼💞🎼na 2k kidsa irunthalum 90s & 80s song romba pudikum 😘🥰👌😍
இந்த பாடல் எழுதியவர் : பஞ்சு அருணாசலம். இசை: ராகதேவன். என் கல்லூரிக்காலம் முதல் ஆண்டு. இனிய நினைவுகள். பாரதிவாசு படம்.அந்தக்காலம் இனி வராது. எவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும்.1970-1985 மாணவப்பருவம் இனிதே இனிது.
மறக்க முடியாத அழகிய நாட்கள் அவை. நாம் எல்லாம் அந்த காலத்தில் பள்ளி பயின்றது புண்ணியம்.
இந்தப் பாடலைக் கேட்கும் போது 90ஸ் நியாபகங்களுடன் அந்த நாட்களுடன் இருந்துவிடக் கூடாதா என்று தோன்றுகிறது
கண்களில் கண்ணீருடன்.......
40 ஆண்டுகள் கடந்த பிறகும் நம்மை அந்த 13 வயதிற்கு அழைத்து செல்லும் அமுத கானம்.......மனோகரன்
Mastro Sir...I met many celebrities in my life so far...but have not met still the GOD and YOU....This song made me to feel like cry..heart melting your magic music sir...U r great great great..
anuradha venkat same but i dont to see god i want see raja sir only
இனிய குரலில் பாடிய பாடல். பாடலின் வரிகள் அதற்கு மேல். 🎶🎶🎶🎶🎶💞💞💞💞⚘⚘⚘💖💖💖💖💓💓💓💓
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் மனம் அழகிறது
pure music...pure symphony....gosh the violins keep flowing right through the song.....amazing amazing composition....mozart of our times...the one and only raja
உமா ரமணன் அவர்களின் குரல், இசைஞானியின் இசை, அகா அருமை அருமை,,,, இந்த பாடல் வந்த நேரம் நான் பிறந்து இருக்க மாட்டேன், ஆனால் 2021 கேட்கிறேன், அருமை...
இளமை கால நினைவுகளை கண் முன்னே கொண்டு வரும் ஆனந்த ராகம் !
இந்த பாடலை எப்போது கேட்டாலும், உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, திடீரென்று ஒரு குளிர்சாதன அறைக்குள் நுழைந்தால், ஒரு ஜில்லென்ற உணர்வு ஏற்படுமோ, அதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி இளையராஜா ஐயா..
இன்னும் பல தலைமுறைகள் கடந்தாலும் இந்தப்பாடல் என்றுமே புதிய ஆனந்தராகம்தான்
இந்தப் பாட்டு உயிரை,மனதை உருக்கும்.
இதை மாதிரி ஒரு பாடல் இசை அமைத்து இன்றைய இசை அமைப்பாளர் எவர் ஆவது இன்னும் 40 வருடம் கழித்தும் அதை ரசிக்க வைத்து விட்டால் நான் அவர் முன் மண்டி இடுகிறேன்.
இசையின் கடவுள் எங்கள் ராஜா
ராஜாதி ராஜா
கண்களில் என்னையறியாமல் கண்ணீர் இப்பாடலை கேட்ட போது,சொல்ல தெரியவில்லை நண்பர்களே தவிக்கிறேன் தமிழில் வார்த்தைகளை தேடி
1981 ல் பிறந்தவனின் பதிவு
Why did he create such a mind blowing song, a simple duet song was the task. The passion, the heart pushing for excellence from a genius...there are many many more..this is just a drop..
That's what puzzling... The start is outrageous. How can someone even think like that!
I had the exact same question! Why will someone do this for a situation that even a director didnt expect much out of ? And I believe he didnt even take money for this movie since it was the director duo's first film. If this isnt a man in love with his art- not sure who else qualifies. He actually elevated the taste of music for Tamils as a whole
என்றும் நினைவில் நீங்காத இடம் பிடித்த பாடல் ❤️
Fantastic song. Born in 1969. Till now hearing lot of times. Ilamai kala ninuvagal..💐💐💐 Lot of thanks to Raja sir.
Our Maestro Raja sir's string section in this song kills everybody, brings me back to childhood days!
No one on this planet, can ever compose a mind boggling song like - Indian classical with western Classical combo like never done before...so romantic and pulls at your heart strings...Only Ilayaraja sir 🙏🙏🙏🙏
BRO...பாட்டு போலவே சில கமண்ட்களும் படிக்க சூப்பரா இருக்கு....
இனிமை வரம் கேட்கிறதே❤❤ உள்ளம் எங்கும் பூவனமே🎉🎉 வாசல் வந்த வசந்தத்தில் சோகம் கரைந்த சொர்க்கத்தின் நாதத்தின் ஒலிகளே மணிமங்கலங்கள்❤❤❤
நேற்றுதான் கேட்டமாதிரி இருக்கிறது, எத்தனையோ ஆண்டுகள் கடந்துவந்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் என்னை பிறக்க செய்த்ததற்கு இறைவா நன்றி.
(இசைப்) புயலின் தாக்கம் சில ஆண்டுகளுக்குப் பின் மறந்து போகலாம்...
ராஜாவின் இசை ஆழிப் பேரலையின் தாக்கம் போன்றது...
கேட்பவர்கள் நெஞ்சை வாரி சுருட்டி தன்னகத்தே இழுத்துக் கொள்கிறது ...
Exactly sir,I'm agree with you,isaiyai varudi edutharvarukuthan isaiyai pathi nangu teriyum,of cause sir Isaingani is very sinonim,no body cant equal his performance ,ovorur viralum,athil ulla ovoru kodum,avuraidaiya isai,entha kombanalum mudiyathu sir,isai endral enggal Isaiarasar Isaingani Ilaiyaraja than,avar oruvar mathum than,valga,haiya palandu
இந்த படம் வெளியான 1981ம் வருடம் நான் 8ம் வகுப்பு. அட்ரினலின் சுரப்பி தன் வேலையை ஆரம்பிக்கும் விடலை பருவத்துக்கு செல்லும் வயது. வானொலியிலும், டேப் ரெக்கார்டரிலும் இசைஜானியின் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்ததில் 10ம் வகுப்பு செல்கையில் பப்பி லவ். இந்த பாடல் சதா சர்வ காலமும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்பொழ்து வயது 53. அன்றும் சரி இன்றும் சரி இதை கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் முட்டும். அந்த காதலும் நினைவு வரும். ஹூம்ம்ம்ம்ம்.
80s love pola 🤣🤣🤣
Endocrine
Super
ஓஹோ ஓஹோ
Me too