Sorgathil Mudhalil Nulayum Pennai Patri Saritham Kelungal | Iraiyanban Khuddhus | Islamic Song
Вставка
- Опубліковано 20 сер 2024
- Song: Sorkathil Mudalil Nulayum Pennai Patri Saritham Kelungal
Singer: Iraiyanban Khuddhus
Lyrics: Nagoor Saleem
Designs & Edits: DGbird Media - +91 95001 45102
பாடல்: சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணைப்பற்றி சரிதம் கேளுங்கள்
பாடியவர்: கலைமாமணி இறையன்பன் குத்தூஸ்
பாடல்: கலைமாமணி கவிஞர். நாகூர் சலீம்
#IraiyanbanKhuddhus #KalaignarEnbathuorusollalla #KalaignarKarunanidhi #UdhayanithiStalin #BirthdaySong #ThalapathyStalin #Vairamuthu
Official UA-cam Channel of Singer Iraiyanban Khuddhus, I am a devotional & political singer & have sung in around 4500 orchestras & have recorded around 500 songs. I am also the STATE SECRATARY of DMK Party's 'Kalai Ilakkiya Pagutharivu Peravai'
#IraiyanbanKhuddhus #ThalapathyStalin #Vidiyalpera
Subscribe our channel for more updates..
www.youtube.co....
For More Updates:
Follow us On
Facebook : / iraiyanban
Instagram : / iraiyanban
அஸ்ஸலாமுஅலைக்கும் . தாங்களின் பழையபாடல்கள் அனைத்தையும் புதுபித்து புதியவெளியிடகா தாங்கள் வெளியிட தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).
Alhamdhulilha....
Masha Allah ..... Rasoolallah Daughter Fathima Story 😍😍😍
Jazakh Allah hairan...one of my favorite song
Mashallah ❤️
Meaning full song ❤
MashaAllaah Thabarakallaah. Fabulous
BEST
சிறப்பு
Allhamdrila♥️ meaning full song...💯😍
Super ❤️❤️❤️
சுபான அல்லா
Assalamu alaikum
Chakkarathu nerathil manithar oruvarukku kalima Vara villai song upload pannunga please
Zee Pulivalam
Ya allah entha aafiyathyota vaala arul purivayaha 🤲
அருமை
Masha allah ❤
Masha Allah ❤
மதினா வாழும் யாரசூலுல்லாஹ் பாடல் பதிவிடுங்கள்
In sha Allah
B
Nice song sir plz sir i need ur dmk track cds sir
?
+/?
சொர்க்கத்தில் முதலில் நுழையும் அன்னையை பற்றி செய்தி கேளுங்கள் கொஞ்சம் கவனம் வையுங்கள்
அன்னை பாத்திமா காலத்து சம்பவம் இது புரிந்து கொள்ளுங்கள்
பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு நாள் நபி இடத்தில் அன்னை ஃபாத்திமா கேள்வி கேட்டாராம்
சுவர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணை பற்றி செய்தி கேட்டாராம் (2)
நபிகள் சிரித்து கொண்டாராம்....
உடனே எடுத்து சொன்னாராம்... (2)
என்னருமை மகளே நீ...
சுவர்க்கத்திற்க்கு தலைவியாவாய்....
என்றாலும் விறகு வெட்டி மனைவி ஒருத்தி முதலிலே போவாள்..(2)
அந்த ஒரு பெண்ணின் வீடு உனது வீட்டுக்கு பக்கத்திலே என்றார்
அண்ணையோ அந்தப் பெண்ணை பார்ப்பதிலே ஆவலைக்கொண்டார்..
அலியாரின் அனுமதியை பெற்றுக்கொண்டு காணவே சென்றார்
வாசலில் நின்று அந்த வீட்டு கதவை அன்னைத் தட்டினார்
யாரது என்ற ஒரு குரல் மட்டும் காதில் எட்டியது
நான்தான் நபி மகளார் ஃபாத்திமா உமை காணவே வந்தேன்
நான் உங்களிடம் வீட்டுக்குள்ளே உங்களிடம் பேசவே வந்தேன்...(2)
இவ்விதம் அன்னை சொல்லியும் வீட்டுக்கதவு திறந்திடவில்லை
என் கணவர் இல்லா நேரம் கதவு திறக்க அனுமதி இல்லை..(2)
அல்லாஹ்வின் தூதர் மகளை காண்பதற்கு ஆசைதான் எனக்கு
என்றாலும் என் கணவர் அனுமதி இல்லை தெரியுமா உமக்கு...
நாளைக்கு மீண்டும் வந்தால் கணவிரடத்தில் கேட்டுவைக்கிரேன்..
நாயகியே வருந்திட வேண்டாம் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்..
விரகு வெட்டி சம்சாரத்தை சோதிக்கவே அன்னை நாடினார்
மறுநாள் புதல்வர்களை அழைத்துக்கொண்டு வீடு ஏகினார்..
கதவினை தட்டியதும் யாரது என் குரலும் கேட்டது
ஹாசன் நபி மகள் வந்துள்ளேன் ஹசன் ஹுசைன் உம் கூட வந்துள்ளார்..
என்று அன்னை சொன்னதுமே விறகு வெட்டி மனைவி கூறினார்
என்னுடைய கணவரிடம் நீங்கள் வர அனுமதி பெற்றேன் ...(2)
என்றாலும் உங்கள் புதல்வர் உள்ளே வர அனுமதியில்லை..(2)
நாயகியே மருத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்
நான் சொல்லும் வார்த்தைகளை தயவுசெய்து சிந்திக்க வேண்டும்
மூன்றாம் நாள் தனிமையிலே அன்னை ஃபாத்திமா மறுபடி சென்றார்
முன் செய்தபடியே அந்த வீட்டு கதவை அண்ணைத்தட்டினார்
விறகு வெட்டி மனைவி வந்து கதவை திறந்து உள்ளே அழைத்தார்..(2)
என்னுடைய கணவரிடம் வருகை குறித்து அனுமதி கேட்டேன்
எம்பெருமான் குடும்பத்தினர் யார் வந்தாலும் தடை இல்லை என்றார்..(2)
இருவரும் இவ்விதமாய் பேசிக்கொண்டு இருந்த போதிலே
இறைவன் தொழுகைக்காக அஸர் நேரம் வாங்கு கேட்டது
கைகால்கள் வுளுவெடுத்து இருவருமே தொழுதிடலானார்
கண்களில் நீர் பெறுக இறைவனிடம் வருந்திடலானார்
தொழுகையை முடித்துக்கொண்டு வேறொரு புறம் அன்னை அமர்ந்தார்
தன்மையுள்ள விறகு வெட்டி மனைவி அஸர் தொழுகைக்கு பின்னே
தன் இரு கைகளை ஏந்தி உருக்கமான பிரார்த்தனை கேட்டார்...(2)
அல்லாஹ் நான் செய்யும் சேவையிலே என் கணவர் மகிழ்ந்திட வேண்டும்
அவருக்கு ஆயுள் நலம் தேக நலம் அளித்திட வேண்டும்..(2)
என்னுடைய பிரார்த்தனையை என் இறைவா ஏற்றுக்கொள்வாயே
என்று துவா முடிந்து விறகு வெட்டி மனைவி எழுந்தார்
அங்கிருந்த ஃபாத்திமா அதனை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தார்
அல்ஹம்துலில்லாஹ் என் உணர்ச்சி பொங்க கூறி நெகிழ்ந்தார்
அஸ்ஸலாமு அலைக்கும் என கூறி விடைபெற்றுக்கொண்டார்
அடுத்தநாள் தனதருமை தந்தையிடம் நடந்ததை சொன்னார்..(2)
இறைவனை வணங்காமல் வேறெதுவும் வணங்க கட்டளை இருந்தால்
இனிதான கணவனையே வணங்கும் படி அனுமதித்திருப்பேன்..(2)
கணவனின் உடைமைகளை கவனமாக காத்துக்கொல்பவள்
கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்துக்கொல்பவள்
கணவனின் குணம் அறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள்
கணவனின் காலடியில் காலம் எல்லாம் சேவை செய்பவள்
கணவனின் ஆணை இன்றி வீட்டில் பிறரை சேர்திடாதவள்
கணவனின் எதிரில் கையை தரைக்குரவாய் நீட்டிடாதவல்..(2)
நாளைய சுவர்க்கத்திலே நல்லிடத்தை பெற்றுக்கொள்வாலே
நரகத்தின் கொடுமையான தண்டனையின்றி தப்பிக்கொள்வாலே...(2)
என்னருமை ஃபாத்திமா ஒட்டகத்தில் நீ வரும்போது
ஏற்புடைய விறகு வெட்டி மனைவி அந்த ஒட்டக கயிற்றை...(2)
கையிலே பிடித்தபடி முதலில் சொர்க்கம் நுழைந்திடுவாளே
கண்ணான என் மகளே அடுத்த படி நீ நுழைவாயே
என்று நபி நாயகமே..(2)
எடுத்துரைத்தார் அருமை தாய் மாரே
எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக்கொண்டால் ஜெயெம் பெருவீரே ...(2)