பாமாலை 231 - ஆ, நீதியுள்ள கர்த்தரே

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • பாமாலை 231 - ஆ, நீதியுள்ள கர்த்தரே
    Ach Herre du gerechter Gott
    Tune: Luther
    1. ஆ, நீதியுள்ள கர்த்தரே,
    வயல் வறண்டதாலே
    எஜ்ஜீவனும் வதங்கிற்றே;
    இக்கேடு எங்களாலே
    நடந்த பாவத்தின் பலன்,
    என்றெங்களில் ஒவ்வொருத்தன்
    துக்கித்துச் சொல்வானாக.
    2. ஆ, எங்கள் மீறுதல்களை
    இரக்கமாய் மன்னியும்;
    நீரே அடியார் நம்பிக்கை,
    சகாயத்தை அளியும்;
    கர்த்தாவே, சுத்த தயவால்
    மழையைத் தந்து, அதினால்
    நிலத்தைப் பூரிப்பாக்கும்.
    3. தயாபரா, நீர் உமது
    நல் வாக்கு நிறைவேற,
    காய்ந்து கிடக்கும் பூமிக்குத்
    தண்ணீர் இறைப்பீராக;
    வானுலகாளும் கர்த்தரே,
    மழையை உம்மை அன்றியே
    ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?
    4. மூச்சற்ற விக்ரகங்களால்
    கூடாது; தேவரீரே
    வானத்தைத் திருக்கரத்தால்
    விரித்தீர்; அதில் நீரே
    அளவில்லாமல் ஆள்பவர்,
    நீரே பிதா, நீர் ரட்சகர்,
    உம்மாலே யாவும் ஆகும்.
    ஆமேன்.

КОМЕНТАРІ • 1