அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • திருச்செந்தூர் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்ற ஊரில் செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.
    குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், ‘தாழையடி அய்யனார்’, ‘தாழைமுத்து அய்யனார்’ என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த பகுதியில் இவர் வீற்றிருப்பதால், ‘வாழையப்பன்’, ‘நாவற்கனியான்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு.
    இத்திருத்தலத்தில் பங்குனி உத்திர பெருந்திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் சாமி வீதி உலா நடைபெறும்.
    பக்தர்களுக்கு குழந்தை வரம், தொழிலில் மேன்மை, வேலைவாய்ப்பு, திருமண யோகம் வழங்கி அருஞ்சுனை காத்த அய்யனார் அருள் பாலித்து வருகிறார். கோவில் நுழைவு வாசலின் இடது பக்கம் அரசமரத்தடியில் 50-க்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை கற்சிலைகள் உள்ளன. அருகில் விநாயகருக்கு தனி சன்னிதி உள்ளது. வலதுபுறம் மருதமரம், தாழை செடிகள் சூழ்ந்த அருஞ்சுனை உள்ளது. கருவறையில் ‘என் மக்கள் எங்கிருந்தாலும் குறைவில்லா வாழ்வளிப்பேன்’ என அருளும் முகத்துடன் அருஞ்சுனை காத்த அய்யனார் பூரண, புஷ்கலா தேவியருடன் கருணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
    அமைவிடம் :
    திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அம்மன்புரம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். அம்மன்புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.
    #thamirabarani
    #ArunjunaiKathaAyyanar
    #குலதெய்வம்
    மேலபுதுக்குடி
    #பங்குனிஉத்திரதிருவிழா
    #அய்யனார் #அய்யன்
    fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email or leave us a personal message here and we will remove your material right away... Checkout Our recent Videos 👇
    🔴 Scariest God Ever? Periyachi Amman! | அளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன்!
    • Scariest God Ever? Per...
    🔴 உலகுக்கே சவால் விடும் மர்ம கோவில் | mystery temples • உலகுக்கே சவால் விடும் ...
    🔴 அனைத்து விதமான பிரச்சனைகளிலிருந்தும் தீர்வு பெற தினமும் கேளுங்கள்
    bit.ly/3EH72B8
    🔴 முருகனை நேரில் அழைத்து வரும் முருகனின் மூல மந்திரம்
    • கோடி நாமங்களை உச்சரித்...
    🔴 கோடி நாமங்களை உச்சரித்த பலன்களைக் கொடுக்கும் நான்கு வரி முருக மந்திரம்
    • முருகனை நேரில் அழைத்து...
    🔴 மூன்றே நிமிடத்தில் சுந்தரகாண்ட பாராயணம்
    • மூன்றே நிமிடத்தில் சுந...
    🔴 9 வரியில் 30 நொடியில் முழு இராமாயணம்- ஏகஸ்லோக இராமாயணம்-காஞ்சி மஹாபெரியவர் அருளியது
    • 9 வரியில் 30 நொடியில் ...
    🔴 கெட்ட கனவுகளால் தூக்கம் தடை படுகிறதா?
    • கெட்ட கனவுகளால் தூக்கம...

КОМЕНТАРІ • 3

  • @iqbaul2230
    @iqbaul2230 Рік тому

    குரலே, வரலாறு தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது 👌👍

  • @JEYANTHIR-w6i
    @JEYANTHIR-w6i Рік тому

    🎉🎉

  • @VinothKumar-xt2sj
    @VinothKumar-xt2sj Рік тому

    🙏🙏🙏