நிறைவுப் பகுதி- கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலருந்து - நமக்கு நெருங்கிய உறவினரின் மரணம் சம்பவிக்கும் போது அந்த துக்கத்தின் தாக்கத்தை நாம் அனுபவிப்போம். அத்துக்கத்தை போக்க முயற்சி எடுக்கும் வழியில அவர் விட்டுச் சென்ற கடமைகளை நாம் முடிக்க வேண்டும் என்றார். மேலும், ஜனனம் என்று ஒன்று இருந்தால் மரணம் என்று ஒன்று நடப்பது உலக இயற்கை. இது ஒவ்வொருவருக்கும் கால வித்யாசத்தில் ஏற்படும் . ஒன்றைப் பற்றிய விஷயத்தில் சுகம் அடைந்தால் அவசியம் மற்றொறு விஷயத்தில் துக்கத்தை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டும் பெருமான் ஸித்தப்படி, நம் விதிப்படி உலக இயற்கையில் அனைத்தும் நடந்தே தீரும். நாம் அதை மாற்றவோ ஒத்திவைக்கவோ முடியாது. சுக, துக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நாம் அந்த விஷயத்தில் வைத்திருக்கும் பற்றினாலேயே என்பதை திருஷ்டாந்தத்தோடு அருமையாய் விளக்கினார். சுகதுக்கத்திறகு காரணமே அது எனக்கு ஏற்படுகிறது என்ற அகங்காரம், மமகாரத்தினால் வரும் விளைவு. கண்ணபிரான் யுத்தம் நடத்தியதையும், பகவத்கீதை அருளியதையும் ஸர்வேஸ்வரனான பெருமான் தன் சங்கல்பத்தாலேயே முடித்திருக்கலாம். தானே முன்னோடியாய் நிலைநின்று நடத்திக் காட்டியதன் காரணம் ஆஸ்திரிகர்களான நாம் அதில் இருக்கும் தீயதை விடுத்து, நல்ல விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திற்கே என அறுதியிட்டார். மேலும் இறை சம்பந்தம் உள்ள அனைத்தையும் நாம் சாமான்ய வார்த்தை ப்ரயோகிக்காமல் கவனமாய் அதற்கு உரித்தான அங்கீகாரத்தை கொடுப்போம். எங்கனம் கங்கை மேலிருந்து எறியும் விறகுக் கட்டைகள் நாலாபுறமும் சிதறி, இடம் மாறி தாறுமாறாய் போய் சேருகிறதோ அது போல் வாழ்க்கையிலும் சுக துக்கங்கள் நம் கர்மாவிற்கு ஏற்ப முன்னும் பின்னும் வந்து அமையும் என்றார். ஒரு துக்கம் ஏற்பட்ட வீட்டில் 13ம் நாள் சுபத்தை ஸ்வீகாரம் செய்து கொள்கிறோம் .அது போல் கோயில் உத்சவங்கள் திருவிழாக்கள் என்ற போது அடியார்களுக்கு ஆனந்தத்தையும் அந்த உத்சவ காலம் முடிந்த பின் துக்கமும் படுகிறோம் . ஆக சுகதுக்கம் என்பது ஒரு சுழற்சி முறையில் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று ஆத்மாக்ஷாத்காரத்திற்கு வைக்கும் பற்றை ப்ராப்தமான பெருமான் விஷயத்தில் ஏறபட்டால் அது உத்தேசம். நன்று. ஆழ்வார் பெருமாளை விட்டு பிரிந்த விஸ்லேஷத்தில் பிரிவு ஏற்பட்ட போது கட்டு விச்சியிடம் குறிகேட்டதில் இது ப்ராப்த விஷயத்தில் ஏறபட்ட துக்கம் என்றாள். ஆக பெருமானிடம் பக்தியில் கலங்கி வரும் நோய் உத்தேசம். ஸ்வாமி ராமானுஜர் சாதித்தது போல் பரபக்தி, பரஞானம், பரம பகதி( இதன் பதா பதா அர்த்தங்களை ஸ்வாமிகள சாதித்து) என பக்தியின் நிலைகள் படிக்கட்டுக்களாக பெருமானை அடைவதற்ககாக ஏற்படுவது போற்றப்பட வேண்டிய விஷயம். மேலும் ஸுகஸ்ய அநந்தரம் துக்கம், துக்கஸ்ய அநந்தரம் சுகம் இவைகள் சுழற்சி போல் ஏற்படும். எங்கனம் சாரமான எண்ணெய் அடங்கிய எள் என்றாலே அதை செக்கில் ஆட்டி அதன் ரஸமான எண்ணெயை பிரித்து எடுப்பது இயற்கையோ, அது போல் சுகத்தை ஒன்றில் அடைந்தால், மற்றொன்றில் துக்கம் சந்திப்பது என்பதும் உலகியல் வாழ்க்கையில் இயற்கை என்ற தாத்பர்யத்தை அருமையாய் எடுத்துரைத்து இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
பகுதி - 1 வேதவ்யாசரால் அருளப்பட்ட மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ள மோக்ஷதர்மத்தை அவதாரிகையுடன் அத்புதமாய் ஞானகுருவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் விவரித்ததிலிருந்து - உலகில் புருஷார்த்தங்கள் 4 வகைகளானது அவைகள் தர்மம், அர்த்தம், காமம் மோக்ஷம். உலகத்தில் அறிய வேண்டிய விஷயங்கள் யாவும் மஹா பாரதத்தில் கிட்டும். இந்த மஹாபாரதத்தில் கிட்டாதது வேறு எங்கு தேடினாலும் கிட்டாது என அறுதியிட்டார். வேதத்தின் பூர்வ பாகம் கர்ம பாகம் ஸ்மர்த்தியை பற்றி கூறுவது. வேதத்தின் உத்திரபாகம் - உபநிஷத்து இதில் இதிகாசங்கள் புராணங்கள் அடங்கியது. ஸ்ருதிஸ்ம்ருத்தி இரண்டும் பெருமான் இட்ட வழக்கு - ஆணை. கண்ணன் பாற்கடல் கடைந்து அமுதத்தை திரட்டினார் போல், வேதவியாஸர் மஹாபாரதத்தில உள்ள 18 பர்வாக்களில் யுத்தம் முடிந்த பின் வந்த 12வது பர்வாவில் சாரமாய் வரும் மோக்ஷதர்மத்தை பற்றி எடுத்து உரைக்கிறார். கௌரவர்களுக்கு ஜல, தில தர்ப்பணாதிகளை முடித்து தர்மபுத்திரர் தம்பிகளை கொன்று நாம் ராஜ்யத்தை அனுபவிக் கிறோமே என மன உறுத்தலில் அஞ்சினார். யுதிஷ்டிரன் என்ற சொல்லுக்கு ஸ்வாமிகள் இலக்கணத்தை வகுத்து, அர்ஜுனன் யுத்தம் என்ற போது பயந்து பின்வாங்கியதையும், தர்மர் தன் வர்ணாச்ரமத்திலிருந்து துளியும் வழுவாமல் அதில் நிலை நின்று போரிட்டு வெற்றி கண்டதையும் சாதித்து பி ன் புண்ய நதியான கங்கைக் கரையில் அவர்கள்சில காலம் கழிக்கும் போது, ரிஷிகள் பாண்டவர்களை சந்திக்கநாரதர் வியாசர் போன்றோரிடம் சத்விஷயங்களை உபதேசமாய் பெற்றார் என சாதித்தார். தர்மத்தின் மூன்று வகைகளாவது ராஜதர்மம்,- ராஜாக்களுக்கு உண்டான தர்மம், ஆபத்தர்மம் - ஆபத்து காலத்தில் பயன்படும் தர்மம். , மோக்ஷத்திற்கு உண்டான தர்மம் மோக்ஷதர்மம் என்று கூறி , முமுக்ஷீ வாய் இருக்க வயதுவரம்பு கிடையாது என்றும் முதல் இரண்டையும் தவிர்த்து மோக்ஷதர்மத்தை பற்றி விரிவாக உரைத்தார் . வாமண அவதாரத்தில், பெருமான் 3 அடி நிலத்தை தன் சிறிய காலால் மஹாபலியிடம் யாசிக்க, அதற்கு மஹாபலி வெறும் 3 அடி நிலம் மட்டுமே யாசிப்பதா என கேலியாய் பேச, பெருமான் இம் 3 அடி நிலத்தில் த்ருப்தி அடையாதவன் 3 லோகத்தை கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான் என்றார். மன்னவராய் உலகை ஆண்டு பின் விண்ணவராய் மகிழ எய்துவோம் இதற்கே மோக்ஷதர்மம் பிறந்தது. மேலும் ஆசாரம், அனுஷ்டானங்களை அவரவர் இருக்கும் இடத்தில் நம்மால் முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும் .சிறிதளவாவது அதை நடைமுறை படுத்த முயற்சிக்க வேண்டும். நம்மிடத்தில் சத்வகுணம் மிகுந்து காணப்படும் சமயத்தில் அதுவே ஒழுக்கமான பழக்கமாய் நாளடைவில் அதுவே வழக்கமாய் ஆகிவிடும் என்பதை திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். பின் தர்மத்தை பற்றி பீஷ்மாச்சாரியாரிடத்தில் பிரார்த்திக்கிறார். தர்மம் யாதென்று பீஷ்மர் விளக்கும் விதத்தில் நாம் சிறிய அளவில் நாம் தர்மம் செய்தாலும் அதன் பலன் நிச்சயம் கிட்டும். இது சாஸ்திரம் விதித்த தர்மம். இத்தர்மத்தை கண்டிப்பாய் பின்பற்றுவோம் என மன உறுதியுடன் துவங்கினால், அத்தர்மம் தர தீதீ தர்ம: என லோகத்தையும் காக்கும். நாம் தர்மத்தை தாங்கினால் அது நம்மை தாங்கும். மனிதனின் இயல்பே ஒரு வஸ்துவிட மோ அல்லது ஒரு நபரிடமோ ஒரு அபிப்ராயத்தை வைத்து விட்டால், அந்த உறுதித்தன்மையிலிருந்து துளியும் வழுவாமல் நிலைநிற்போம். ஏனெனில், அது ஆழ்மனதில் பதிவதால் அது மாற்றிக் கொள்வது கடினமாகும். அந்த அபிப்ராயத்தில் நம் கணிப்பு தவறாக இருந்தாலும் அதை மாற்றிக் கொள்வது சிரமமாகி விடும். ஆதலால் ஒன்றை பற்றிய அபிப்ராயத்தில் நாம் சரியான முடிவு எடுப்பது அவசியம். ஒன்று கிட்டினால் மகிழ்ச்சி, கிட்டாவிட்டால் துன்பம் என சுகதுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதை பெருமானின் திருவடி பலத்தில் அதை எதிர்த்து, சில காலம் நாம் யாரையும் நிந்திக்காமல், கோபப்படாமல், ஸத் விஷயத்தில் மனதை ஈடுபடுத்தி ஏதாவது ஒரு சுபமோ துக்கமோ நிகழ்ந்தால் அதை பற்றிய வ்யத்த வாதத்தை விடுத்து, சத்விஷயத்தில் ஒரு முகமாய் மனதை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
அடியேன் எத்தகைய முறை கேட்டாலும் அறிவுக்கு போவ து சிறிது
து
Very good to hear your discourse
வேலுக்குடி சுவாமிகளுக்கு மிக்க நன்றி 🙏🙏
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
Beverly nice
ஸ்வாமி அவர்களுக்கு அடியேன் நமஸ்காரம்.🙏🙏
My favourite topic adiyen swamy i listen all episode fullymore than three times
சுவாமி களுக்கு பலகோடி நன்றி.வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு.
🎉தங்கள் சேவைதோடர பகவானைவேண்டமுடியும்...ஃ
Among Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Namaskarams Swami..Srimathae Ramanujaya Namaha.. 🙏🙏
Adiyen 👌🏻
அடியேன் சுவாமி 🙏
Humble Namaskarams Swamiji 👏👏👏👏👏
அடியேன் இராமானுசர் தாசன் ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🥀🌼🌼🥀🏵️🌼🌸💐💐🌹
நிறைவுப் பகுதி-
கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலருந்து -
நமக்கு நெருங்கிய உறவினரின் மரணம் சம்பவிக்கும் போது அந்த துக்கத்தின் தாக்கத்தை நாம் அனுபவிப்போம். அத்துக்கத்தை போக்க முயற்சி எடுக்கும் வழியில அவர் விட்டுச் சென்ற கடமைகளை நாம் முடிக்க வேண்டும் என்றார். மேலும், ஜனனம் என்று ஒன்று இருந்தால் மரணம் என்று ஒன்று நடப்பது உலக இயற்கை. இது ஒவ்வொருவருக்கும் கால வித்யாசத்தில் ஏற்படும் . ஒன்றைப் பற்றிய விஷயத்தில் சுகம் அடைந்தால் அவசியம் மற்றொறு விஷயத்தில் துக்கத்தை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டும் பெருமான் ஸித்தப்படி, நம் விதிப்படி உலக இயற்கையில் அனைத்தும் நடந்தே தீரும். நாம் அதை மாற்றவோ ஒத்திவைக்கவோ முடியாது. சுக, துக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நாம் அந்த விஷயத்தில் வைத்திருக்கும் பற்றினாலேயே என்பதை திருஷ்டாந்தத்தோடு அருமையாய் விளக்கினார். சுகதுக்கத்திறகு காரணமே அது எனக்கு ஏற்படுகிறது என்ற அகங்காரம், மமகாரத்தினால் வரும் விளைவு. கண்ணபிரான் யுத்தம் நடத்தியதையும், பகவத்கீதை அருளியதையும் ஸர்வேஸ்வரனான பெருமான் தன் சங்கல்பத்தாலேயே முடித்திருக்கலாம். தானே முன்னோடியாய் நிலைநின்று நடத்திக் காட்டியதன் காரணம் ஆஸ்திரிகர்களான நாம் அதில் இருக்கும் தீயதை விடுத்து, நல்ல விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திற்கே என அறுதியிட்டார். மேலும் இறை சம்பந்தம் உள்ள அனைத்தையும் நாம் சாமான்ய வார்த்தை ப்ரயோகிக்காமல் கவனமாய் அதற்கு உரித்தான அங்கீகாரத்தை கொடுப்போம். எங்கனம் கங்கை மேலிருந்து எறியும் விறகுக் கட்டைகள் நாலாபுறமும் சிதறி, இடம் மாறி தாறுமாறாய் போய் சேருகிறதோ அது போல் வாழ்க்கையிலும் சுக துக்கங்கள் நம் கர்மாவிற்கு ஏற்ப முன்னும் பின்னும் வந்து அமையும் என்றார். ஒரு துக்கம் ஏற்பட்ட வீட்டில் 13ம் நாள் சுபத்தை ஸ்வீகாரம் செய்து கொள்கிறோம் .அது போல் கோயில் உத்சவங்கள் திருவிழாக்கள் என்ற போது அடியார்களுக்கு ஆனந்தத்தையும் அந்த உத்சவ காலம் முடிந்த பின் துக்கமும் படுகிறோம் . ஆக சுகதுக்கம் என்பது ஒரு சுழற்சி முறையில் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று
ஆத்மாக்ஷாத்காரத்திற்கு வைக்கும் பற்றை ப்ராப்தமான பெருமான் விஷயத்தில் ஏறபட்டால் அது உத்தேசம். நன்று. ஆழ்வார் பெருமாளை விட்டு பிரிந்த விஸ்லேஷத்தில் பிரிவு ஏற்பட்ட போது கட்டு விச்சியிடம் குறிகேட்டதில் இது ப்ராப்த விஷயத்தில் ஏறபட்ட துக்கம் என்றாள். ஆக பெருமானிடம் பக்தியில் கலங்கி வரும் நோய் உத்தேசம். ஸ்வாமி ராமானுஜர் சாதித்தது போல் பரபக்தி, பரஞானம், பரம பகதி( இதன் பதா பதா அர்த்தங்களை ஸ்வாமிகள சாதித்து) என பக்தியின் நிலைகள் படிக்கட்டுக்களாக பெருமானை அடைவதற்ககாக ஏற்படுவது போற்றப்பட வேண்டிய விஷயம். மேலும் ஸுகஸ்ய அநந்தரம் துக்கம், துக்கஸ்ய அநந்தரம் சுகம் இவைகள் சுழற்சி போல் ஏற்படும். எங்கனம் சாரமான எண்ணெய் அடங்கிய எள் என்றாலே அதை செக்கில் ஆட்டி அதன் ரஸமான எண்ணெயை பிரித்து எடுப்பது இயற்கையோ, அது போல் சுகத்தை ஒன்றில் அடைந்தால், மற்றொன்றில் துக்கம் சந்திப்பது என்பதும் உலகியல் வாழ்க்கையில் இயற்கை என்ற தாத்பர்யத்தை அருமையாய் எடுத்துரைத்து இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Om Naarayanaya namaha
Om Namo Narayanaa
Sree Gurubhyo namaha
🙏🦸♀️
Om namo Narayana, Om namo Narayana
Very very interesting upanyasam Swamy The way Devareer explains is awesome A law man like me also can understand Danyosmy Swamy
Sorry ley man
பகுதி - 1
வேதவ்யாசரால் அருளப்பட்ட மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ள மோக்ஷதர்மத்தை அவதாரிகையுடன் அத்புதமாய் ஞானகுருவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் விவரித்ததிலிருந்து -
உலகில் புருஷார்த்தங்கள் 4 வகைகளானது அவைகள் தர்மம், அர்த்தம், காமம் மோக்ஷம். உலகத்தில் அறிய வேண்டிய விஷயங்கள் யாவும் மஹா பாரதத்தில் கிட்டும். இந்த மஹாபாரதத்தில் கிட்டாதது வேறு எங்கு தேடினாலும் கிட்டாது என அறுதியிட்டார். வேதத்தின் பூர்வ பாகம் கர்ம பாகம் ஸ்மர்த்தியை பற்றி கூறுவது. வேதத்தின் உத்திரபாகம் - உபநிஷத்து இதில் இதிகாசங்கள் புராணங்கள் அடங்கியது. ஸ்ருதிஸ்ம்ருத்தி இரண்டும் பெருமான் இட்ட வழக்கு - ஆணை. கண்ணன் பாற்கடல் கடைந்து அமுதத்தை திரட்டினார் போல், வேதவியாஸர் மஹாபாரதத்தில உள்ள 18 பர்வாக்களில் யுத்தம் முடிந்த பின் வந்த 12வது பர்வாவில் சாரமாய் வரும் மோக்ஷதர்மத்தை பற்றி எடுத்து உரைக்கிறார். கௌரவர்களுக்கு ஜல, தில தர்ப்பணாதிகளை முடித்து தர்மபுத்திரர் தம்பிகளை கொன்று நாம் ராஜ்யத்தை அனுபவிக் கிறோமே என மன உறுத்தலில் அஞ்சினார். யுதிஷ்டிரன் என்ற சொல்லுக்கு ஸ்வாமிகள் இலக்கணத்தை வகுத்து, அர்ஜுனன் யுத்தம் என்ற போது பயந்து பின்வாங்கியதையும், தர்மர் தன் வர்ணாச்ரமத்திலிருந்து துளியும் வழுவாமல் அதில் நிலை நின்று போரிட்டு வெற்றி கண்டதையும் சாதித்து பி ன் புண்ய நதியான கங்கைக் கரையில் அவர்கள்சில காலம் கழிக்கும் போது, ரிஷிகள் பாண்டவர்களை சந்திக்கநாரதர் வியாசர் போன்றோரிடம் சத்விஷயங்களை உபதேசமாய் பெற்றார் என சாதித்தார். தர்மத்தின் மூன்று வகைகளாவது ராஜதர்மம்,- ராஜாக்களுக்கு உண்டான தர்மம், ஆபத்தர்மம் - ஆபத்து காலத்தில் பயன்படும் தர்மம். , மோக்ஷத்திற்கு உண்டான தர்மம் மோக்ஷதர்மம் என்று கூறி , முமுக்ஷீ வாய் இருக்க வயதுவரம்பு கிடையாது என்றும் முதல் இரண்டையும் தவிர்த்து மோக்ஷதர்மத்தை பற்றி விரிவாக உரைத்தார் . வாமண அவதாரத்தில், பெருமான் 3 அடி நிலத்தை தன் சிறிய காலால் மஹாபலியிடம் யாசிக்க, அதற்கு மஹாபலி வெறும் 3 அடி நிலம் மட்டுமே யாசிப்பதா என கேலியாய் பேச, பெருமான் இம் 3 அடி நிலத்தில் த்ருப்தி அடையாதவன் 3 லோகத்தை கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான் என்றார். மன்னவராய் உலகை ஆண்டு பின் விண்ணவராய் மகிழ எய்துவோம் இதற்கே மோக்ஷதர்மம் பிறந்தது. மேலும் ஆசாரம், அனுஷ்டானங்களை அவரவர் இருக்கும் இடத்தில் நம்மால் முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும் .சிறிதளவாவது அதை நடைமுறை படுத்த முயற்சிக்க வேண்டும். நம்மிடத்தில் சத்வகுணம் மிகுந்து காணப்படும் சமயத்தில் அதுவே ஒழுக்கமான பழக்கமாய் நாளடைவில் அதுவே வழக்கமாய் ஆகிவிடும் என்பதை திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். பின் தர்மத்தை பற்றி பீஷ்மாச்சாரியாரிடத்தில் பிரார்த்திக்கிறார். தர்மம் யாதென்று பீஷ்மர் விளக்கும் விதத்தில் நாம் சிறிய அளவில் நாம் தர்மம் செய்தாலும் அதன் பலன் நிச்சயம் கிட்டும். இது சாஸ்திரம் விதித்த தர்மம். இத்தர்மத்தை கண்டிப்பாய் பின்பற்றுவோம் என மன உறுதியுடன் துவங்கினால், அத்தர்மம் தர தீதீ தர்ம: என லோகத்தையும் காக்கும். நாம் தர்மத்தை தாங்கினால் அது நம்மை தாங்கும். மனிதனின் இயல்பே ஒரு வஸ்துவிட மோ அல்லது ஒரு நபரிடமோ ஒரு அபிப்ராயத்தை வைத்து விட்டால், அந்த உறுதித்தன்மையிலிருந்து துளியும் வழுவாமல் நிலைநிற்போம். ஏனெனில், அது ஆழ்மனதில் பதிவதால் அது மாற்றிக் கொள்வது கடினமாகும். அந்த அபிப்ராயத்தில் நம் கணிப்பு தவறாக இருந்தாலும் அதை மாற்றிக் கொள்வது சிரமமாகி விடும். ஆதலால் ஒன்றை பற்றிய அபிப்ராயத்தில் நாம் சரியான முடிவு எடுப்பது அவசியம். ஒன்று கிட்டினால் மகிழ்ச்சி, கிட்டாவிட்டால் துன்பம் என சுகதுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதை பெருமானின் திருவடி பலத்தில் அதை எதிர்த்து, சில காலம் நாம் யாரையும் நிந்திக்காமல், கோபப்படாமல், ஸத் விஷயத்தில் மனதை ஈடுபடுத்தி ஏதாவது ஒரு சுபமோ துக்கமோ நிகழ்ந்தால் அதை பற்றிய வ்யத்த வாதத்தை விடுத்து, சத்விஷயத்தில் ஒரு முகமாய் மனதை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி
धन्योस्मि 🙏
நமஸ்காரம் 🙏🙏🙏🙏
Lakshmi nrusimjar thiruvadigale saranam
Soulful
Namaskaram to my Guru🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். நமோ பகவதே
வாசுதேவாய.
குருவே சரணம்
Thiribala
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் . 🙏🏾🙏🏾💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
Adiyen Ramanujar dasi
🙏🙏🙏🙏
0
Adiyen Ramanujar dasi
🙏🙏🙏🙏
🙏🙏🙏